Saturday, November 1, 2008

இவங்க இன்னும் திருந்தலையா?

ஆபீஸ்ல ஆணி புடுங்கற வேலை ஜாஸ்தியா போச்சு! அதான் வலைப்பூ பக்கம் வர முடியல. தினமும் இந்த பேங்க் ஊத்திகிச்சு, அந்த பேங்க் ஊத்திகிச்சுன்னு சொல்லி பீதிய வேற கிளப்பறாங்க. அடுத்த வருஷம் இதை விட மோசமா இருக்கும்னு வேற சொல்றாங்க. இந்த மாதிரி நிலமையில ஓபாமா வந்து என்ன செய்ய போறாரோ?


இப்போவெல்லாம் டிவி கூட அவ்வளவோ பார்க்கறது இல்ல. அப்படியே பார்த்தாலும் விஜய் டிவி தான். சரி, சன் டிவி பார்த்து ரொம்ப நாள் ஆச்சே, எப்படி போயிட்டிருக்குன்னு பார்ப்போம்னு ஒரு நாள் சும்மா சேனலை மாத்தி பார்த்தேன். ஏதோ ஒரு மெகா சீரியல் போயிட்டிருந்துது. ஒரு அம்மா கீழ ஒக்காந்துட்டு அழுதுகிட்டு இருந்தாங்க. அவங்க பையன் அவங்களை சாப்பிட கூப்பிடறான். அதுக்கு அந்த அம்மா, "அக்கா ஜெயில்ல இருக்கும் போது எப்படிடா சாப்பிட முடியும்?னு" சொன்னாங்களோ இல்லையோ, வுடுங்கடா சாமின்னு சேனலை மாத்திட்டேன்!


அடப்பாவீங்களா....இன்னும் இந்த மாதிரி தான் ஓட்டிட்டு இருக்கீங்களா? கீழ இருக்க இந்த வீடியோ காட்சியை பாருங்க. இதுல பேசிட்டு இருக்கறது ஒரு பாட்டியும் அவங்க பேத்தியும். இரண்டு பேறும் கணவனை இழந்தவர்கள். ஆனா இரண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியுதா? இதுவும் இன்னும் மாறலைங்க;)


Monday, September 15, 2008

PiT மெகாப் போட்டி 2008 ~ இறுதிச் சுற்று!

போட்டிக்கான தலைப்பு: Architecture / கட்டமைப்பு

இன்றோடு பிட் மெகா போட்டியில் பங்கு பெற கடைசி தினம் என்பதால், நினைத்ததை எடுக்க முடியாமல், எடுத்ததை பதித்து விட்டேன்.

முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.


Seoul Palace



London Westminster

Pagodas

Petronas Tower

மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.

Wednesday, August 13, 2008

குசேலன் - ஒரு திருவிளையாடல்

திருவிளையாடலுக்கும், குசேலனுக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கிறீங்களா? அது வேற ஒன்னும் இல்ல. சூப்பர் ஸ்டாருக்கு நெருங்கிய வட்டாரத்தில் இருந்து, எனக்கு கிடைத்த நம்பத்தகுந்த செய்தி இது. அதாவது இந்த குசேலன் படம் சூப்பர் ஸ்டாரின் திருவிளையாடல்களுள் ஒன்றாம்.

எல்லா சக நடிகர்களும்(தேவர்களும்), சில அல்லக்கைகளும் சென்று சூப்பர் ஸ்டாரிடத்தில் முறையிட்டுள்ளனர். தங்கள் படங்கள் சூப்பராக இருந்தும் சுமாராகவே ஓடுகிறதாகவும், டீ ஆத்தறவனெல்லாம் திரை விமர்சனம் பண்ணி படத்தை ஓட விடாம பண்ணிடரதாகவும், இதற்கு சூப்பர் ஸ்டார் தான் ஒரு வழி பண்ண வேண்டும் என்றும் முறையிட்டுள்ளனர். குருவி, இந்திரலோகத்தில் ந அழகப்பன், அரசாங்கம் போன்ற பல படங்கள் இதனால் பாதிப்படைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சிவாஜி, தசாவதாரம் படம் கூட நல்லா இல்லைன்னு பலர் எழுதி இருப்பதை அவரிடத்தில் காட்டி இருக்கிறார்கள்.

வெகுண்டு எழுந்த ரஜினியும் உண்மையிலேயே ஒரு மட்டமான படம்னா அது எப்படி இருக்கும்னு மக்களுக்கு புரிய வைக்க தீர்மானித்தார். இப்படி தீர்மானித்தவுடனே அவரின் மனதில் தோன்றிய முதல் இயக்குனர் பி.வாசு தான். இருப்பினும் பேரரசுவும் பி.வாசுவுக்கு ஒரு நல்ல போட்டியாக இருந்திருக்கிறார். ஆனால் பேரரசு தன் கதைக்கு கண்டிப்பாக 'பெங்களூரு' என்று தான் பெயர் வைப்பேன் என்று அடம் பிடித்ததால் அடித்தது யோகம் பி.வாசுவிற்கு. பி.வாசுவும் தன் கையில் கிடைத்த பூ மாலையை சும்மா பிரிச்சி மேய்ந்திருக்கார். நடிப்பிற்கு பசுபதியும், எரிச்சலுக்கு வடிவேலுவும், கடுப்பிற்கு மீனாவும், அறுவைக்கு மற்ற எடுபிடிகளும், ஆறுதலுக்கு சூப்பர் ஸ்டாரும், கிளு கிளுப்பிற்கு நயன்தாராவும், ஒப்புக்கு சப்பாவிற்கு பிரபுவும் இருக்க மொக்கையான இசையுடன் படு மொக்கையா எடுத்த படம் தான் குசேலன்.

இப்படி ஒரு படம் எடுக்க செய்து, தனது இந்த திருவிளையாடல் முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளார் சூப்பர் ஸ்டார். படத்தை பார்த்திருந்தீங்கனா உங்களுக்கு அது புரியும். பலர் இந்த படத்தை பார்த்து விட்டு குருவியை கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்று சொல்வதே இதற்கு சான்று.

இதை எல்லாம் தெரியாமல் அப்பாவியாக சென்று படத்தை பார்த்து விட்டு வந்தவன் நான். இதற்கு காரணம் இந்த விமர்சனம் தான். நான் முதன் முதலாக குசேலனை பற்றி படித்த விமர்சனம்:

Stupendous! Marvelous! Wordless! It’s so surprising to see that Director Vasu has churned out a best movie in his entire career.......
Verdict: Strictly recommended to watch

எந்த புண்ணியவானோ படத்தை பார்த்துட்டு, வேணும்னே இப்படி எழுதி பல பேரை சிக்க வச்சிருக்கார். நல்லா இருங்கையா! "First impression is the best impression" இல்லையா! நானும் இதுக்கு அப்புறம் சில நேர்மாறான விமர்சனங்களை படித்தும் மனம் ஒத்துகொள்ள முடியாமல்(தலைவர் படமாச்சே) படத்துக்கு போயிட்டேன். கடைசியில் பட்டால் தான் தெரியும் என்பது நிஜமாகி விட்டது.

படத்துக்கு எனது நண்பர்களையும் அழைத்து சென்றிருந்தேன். நண்பர் ஒருவரின் ஐந்து வயது மகனை முதல் முறையாக திரையரங்கிற்கு அழைத்து சென்றோம். அவன் 'சிவாஜி' படத்தை நல்லா ரசித்து பார்த்தான் என்று சொன்னார்கள். சரி என்று அவனை தைரியமாக அழைத்து சென்றோம். படம் ஆரமிச்சு ஒரு அறை மணி நேரம்தான் இருக்கும், பையன் தூங்கிட்டான். இனிமே அவன் படம் பார்க்க கூட்டிகிட்டு போனா வருவானா?

படம் முடிஞ்சி நைட் வெளிய வரும்போது மணி பத்து. வெளியில அடுத்த ஷோ பார்க்க ஆவலா நின்னுகிட்டு இருந்தவங்களை எல்லாம் பார்க்க பாவமா இருந்துச்சு. பின்ன, நாங்களாச்சும் ஏழு மணி ஷோ, அதுக்கே எங்களால முடியல.

இது வரை இப்படி ஒரு மொக்கை படத்தை நான் தியேட்டர் சென்று பார்த்ததே இல்லை. ஒரு டாகுமெண்டரி படம் கூட இன்னும் நல்லா இருந்திருக்கும். பி.வாசு வாழ்க! நான் தலைவர் படத்தை பற்றி இப்படி எழுதுவேன் என்று நினைக்கவேயில்லை:( மொத்தத்தில், குசேலன் = இரண்டு வீராசாமி!

Saturday, July 26, 2008

1992ல் ஒரு நாள்

அம்மா காலைல ஏழு மணிக்கு சரியா எழுப்பிடுங்கனு சொல்லிட்டு தூங்க சென்றான் ராமு. அவன் சென்ற அடுத்த நிமிடம், அவன் சொன்னதை டிவி பார்த்து கொண்டே கேட்டு கொண்டிருந்த அவனது அண்ணன் சோமு தன் அம்மாவிடம் ஓடி வந்து, "அம்மா என்னையும் ஏழு மணிக்கு எழுப்பிடுங்க" என்று சொல்லிவிட்டு தூங்க சென்றான்.

மறுநாள் காலை தனது உள்ளுணர்வு எழுப்பி விட 6.45 மணிக்கே எழுந்து விட்டான் சோமு. பின்னர் அம்மா வந்து எழுப்பியதும் எழுந்த ராமு, சோமு ஏற்கனவே எழுந்து விட்டதை பார்த்து கடுப்பாகி போனான். இவர்களை காம்பிளான் குடிப்பதற்காக பல் துலக்க சொல்லி அம்மா எவ்வளோ சொல்லியும் கேட்காமல் மிகவும் பரபரப்பாக அங்கும் இங்கும் உலாத்தி கொண்டிருந்தார்கள்.

கடிகாரத்தையும் வீட்டு வாசலையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்ல செல்ல அவர்களின் முகத்தில் தெரியும் பரபரப்பும் அதிகரித்து கொண்டே இருந்தது.

ராமு சற்று வேகமாக இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தான். அடிக்கடி தனது இறந்து கால்களையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பின்னி கொண்டு நின்றிருந்தான். ஆத்திரத்தை அடக்க முடியும் ஆனால் அவசரத்தை(புரியுதில்ல?) அடக்க முடியாதுன்னு சொல்வாங்க இல்ல, ஆனால் ராமு அவனது இந்த உத்தியின் மூலம் அதையும் அடக்கி கொண்டு நின்றிருந்தான்.

சிறிது நேரம் கழித்து வாசலில் சைக்கிள் மணியோசை அடிக்கும் சப்தம் கேட்டு இருவரும் விழுந்ததித்து கொண்டு கேட்டை நோக்கி ஓடுகிறார்கள். முட்டி மோதிக்கொண்டு, ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கொண்டு ஓடி சென்றவர்கள் அதே வேகத்தில் உள்ளே ஓடி வருகிறார்கள். முதலில் வந்த சோமு(பெரியவன் ஆயிற்றே) ஒரு ரூமுக்குள் சென்று கதவை தாளிட்டு கொள்கிறான்.

தனக்கிருந்த முழு கடுப்பில் அழுது கொண்டே அம்மாவிடம் சென்று முறையிட்டான் ராமு, "அம்மா! பாரும்மா சிறுவர் மலரை சோமு எடுத்துகிட்டு ரூமுக்குள்ள போயிட்டாமா. தர சொல்லுங்கம்மா!"

(பி.கு. இதுல வர அந்த சோமு நான்தாங்க. இந்த சிறுவர் மலருக்காகவே எங்க அப்பா கிட்ட கேட்டு, அந்த ஒரு நாள் மட்டும் தின மலர் வாங்குவோம். அதுக்கு அப்படி ஒரு சண்டை போடுவோம்;)

Thursday, July 24, 2008

சிங் இஸ் கிங்

இது அக்ஷய் குமார் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'சிங் இஸ் கிங்' படத்தின் விமர்சனம் இல்லைங்க, நம்ம மன்மோகன் சிங்கை தான் இப்போ நிறைய பத்திரிகைகள்ல இப்படி போட்டிருக்காங்க.


சும்மா சொல்ல கூடாது மனுஷன் சாதிச்சு காட்டி இருக்கார். தன்னை பலவீனமான பிரதமர் என்று கூறியவர்கள் முகத்தில் கரியை பூசி இருக்கார். ஆனால் இனிமேல் தான் அவர் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். கம்யூனிஸ்ட்களின் தொல்லை இனிமேலும் தொடரும். அதை எல்லாம் எதிர்த்து அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி, அதனால் இந்தியாவிற்கு கிடைக்கும் பயன்பாட்டை நிரூபிக்க கடமை பட்டிருக்கிறார். அவர் நாட்டிற்கு நல்லது செய்வார் என்று நம்புகிறேன்.


அவரை பாராளுமன்றத்தில் பேச விடாமல் கூச்சலிட்டதால் அவரது தனது உரையை படிக்காமல் சமர்ப்பித்து விட்டார். ரொம்ப வலிமையான உரை. அதை படிக்க இங்கே கிளிக்கவும்.


மன்மோகன் சிங்கை பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு உபரி தகவல். இப்பொழுது இந்தியா இந்தளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேறி, நாமெல்லாம் கணினி துறையில் இந்தளவுக்கு சம்பாரித்து கொண்டிருக்கிறோம் என்றால், அது '1991'ல் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்த பொழுது, நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளியல் சீர்திருத்தமே(Economic Reforms) காரணம்.

**********

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று விடுவோம் என்று தெரிந்ததோ என்னவோ, பாராளுமன்றதிற்குள் பணத்தை எல்லாம் கொண்டு வந்து திசை திருப்ப பார்த்தார்கள். இப்போ யாரை பார்த்தாலும் குதிரை பேரம், குதிரை பேரம் என்று அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார்கள். இது இரு தரப்பிலும் நடந்த விஷயம் என்றே நான் நினைக்கிறேன். இன்னும் சொல்ல போனால் எதிர் கட்சியினருக்கே இதன் அவசியம் அதிகம்.


இதெல்லாம் இருக்கட்டும்! எனக்கு ஒரு சந்தேகம். லஞ்சம் கொடுத்தவரை விட வாங்கினவரை தானே எப்பொழுதும் குறை கூறுவார்கள். இங்கே மட்டும் ஏன் தலை கீழாக நடக்குது? நாட்டை பற்றியும் கவலை இல்லாமல், தனது கட்சியை பற்றியும் கவலை இல்லாமல் இப்படி பணம் வாங்கும் மந்திரிகளை குறை சொல்வதை விடுத்து மற்றவரை குறை சொல்வதில் என்ன ஞயாயம்?

**********

இவ்வளவு தீவிரமாக எல்லாம் நடந்து கொண்டிருக்கையில், தனியாக தமாஷ் பண்ணி கொண்டிருக்கிறார் அத்வானி அவர்கள். இவர் நேருஜியும், மொரார்ஜி தேசாயும் '' ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று சொல்ல போக, அதற்கு பிரணாப் முகர்ஜி நேரு இறந்து போனது ''ல் '' ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது ''ல் தான், இறந்து போன நேரு எப்படி இந்த ஒப்பந்தத்தை எதிர்த்திருக்க முடியும் என்று கேட்டு மூக்கை உடைத்திருக்கிறார். வாஜ்பாய் கிட்ட இருந்த கொஞ்சமாவது இவர் கற்று கொண்டிருக்கலாம்.

**********

இன்னொரு பக்கம் லாலு 'இடது சாரிகள் மரக்கிளை நுனியில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிபாகத்தை வெட்டுகிறார்கள்' என்று ஜோக் அடித்து காமெடி பண்ணி இருக்கார். யார் எவ்வளோ கூச்சல் போட்டாலும் இந்த மனுஷன் பேசும்போது மட்டும் எல்லாரும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு பேச்சை கேட்டு சிரித்து ரசிக்கிறார்கள். உண்மையிலேயே திறமையான மனுஷன் தான்.

**********

இப்போ இடது சாரிகள், மாயாவதி என்று ஒரு பத்து கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஒரு மூனாவது அணியை உருவாக்கி இருக்கிறார்கள். இதெல்லாம் எவ்வளோ நாள் தாக்கு பிடிக்கும் தெரியுமா? யார் பிரதமந்திரி வேட்பாளர் என்று முடிவாகும் போது பாதி பேரு பிச்சிகிட்டு போய்டுவாங்க. சீனா இந்த அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கையெழுத்திட்டு விட்டார்கள். நாம் கையெழுத்திடுவதற்கு மட்டும் இந்த இடது சாரிகள் எதற்கு இப்படி பிரச்சனை செய்கிறார்கள்?

**********

இன்னொரு விஷயத்தை பற்றி இப்போ தான் நான் கேள்வி பட்டேன். இதுவும் லாலு பாராளு மன்றத்தில் கூறியது தான். கிருஷ்ணர் தூக்கிய கோவர்தன மலை தெரியுமல்லவா? அதை அந்த ஊரில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா அதில் கிடைக்கும் கணிமங்களுக்காக குடைந்து கொண்டிருக்கிறதாம். நம்ம ஊரில் சேது பாலத்துக்கு இராமர் பெயரை இழுத்து பிரச்சனை பண்ணியவர்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்?

**********

அப்புறம் இன்னொரு காமெடி என்னவென்றால், சமாஜ்வாடி மந்திரி(அதீக் அகமது) ஒருத்தர் அணுசக்தி ஒப்பந்தம் தலையும் புரியலை, வாழும் புரியலை என்று கூறி உள்ளார். இப்படி இருக்கும் பொழுது நாட்டு மக்களுக்கு எப்படி புரியும் என்று கேட்டுள்ளார். நாட்டு மக்கள் இருக்கட்டும். இவருக்கு புரியலைன்னு சொல்றார் பாருங்க, அடங்கப்பா! இங்க இவ்வளோ பிரச்சனை நடந்துட்டிருக்கு, ஏதோ ஒரு ஊர்ல ஆணி புடிங்கிட்டிருக்க நாமலே அது என்ன ஏதுன்னு தேடி கண்டு பிடிச்சி தெரிஞ்சிக்கிறோம், இவர் இவ்வளோ நாள் என்ன செஞ்சிட்டிருந்தாரோ? இவரும் ஒரு மத்திய மந்திரி.

Monday, July 21, 2008

ஒரு சமூக சேவகரின் டைரி குறிப்பில்...

ஒரு நல்ல கிரிக்கெட் பிளேயரின் திறமையும் சரி, ஒரு நல்ல நடிகர் அல்லது பாடகரின் திறமையும் சரி, அவர்களின் சிறு வயதிலேயே வெளிப்படும். அது போல் ஊருக்கு உழைக்கும் ஒரு சமூக சேவகரின் சமூக சேவையும் அவரது சிறு வயதில் இருந்தே தொடங்கிவிடும். அப்படி பட்ட ஒரு சமூக சேவகரின் சிறு வயதில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வினை பற்றி இப்போது பார்ப்போம்.

இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சிங்கார சென்னையில் தான். இவரது ஊருக்கு உழைக்கும் பணி சிறு வயதில் இருந்தே தொடங்கிற்று. இவர் வசித்து வந்த தெருவில் யாருக்கு என்ன வேலை ஆக வேண்டி இருந்தாலும் இவரை கூப்பிட்டு தான் செய்ய சொல்லுவார்கள்.

காய்கறி அங்காடிக்கு சென்று கை கறிகள் வாங்க வேண்டுமா, மாவு மில்லுக்கு சென்று மாவு அரைத்து கொண்டு வரவேண்டுமா, ரேஷன் கடைக்கு சென்று பொருகள் வாங்க வேண்டுமா, இவை அனைத்திற்கும் அத்தெருவில் இருப்பவர்களின் நினைவிற்கு முதலில் வருபவர் இவர் தான். தான் விளையாடிக்கொண்டிருந்தாலும் அவர்கள் பேச்சை தட்ட முடியாமல் விளையாட்டை நிறுத்தி விட்டு சென்று அந்த வேலைகளை முடிப்பார். அவர்கள் புகழ்ந்து கூறும் இரு வார்த்தைகளே இவருக்கு டானிக். தன் அம்மாவே எத்தனையோ முறை கண்டித்தும் இவரது இந்த பணி தொடர்ந்து கொண்டிருந்தது.

இவர் இவ்வளவு உதவிகள் செய்தும், மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்த உதவி இது தான்:

ஒரு நாள் இவரது வீட்டிற்கு பக்கத்து தெருவில் உள்ள நண்பர் ஒருவர் அனுப்பிய ஆள், இவர் வீட்டிற்கு வந்து இவரது அம்மாவிடம் நூறு ரூபாய் கொடுத்தால் ரேஷன் கடையில் இருந்து அட்டை இல்லாமல் சர்க்கரையும், மண்ணெண்ணையும் வாங்கி தருவதாக சொன்னார். அவர் அந்த ரேஷன் கடையில் வேலை பார்ப்பவர் ஒருவரின் சொந்தக்காரர் என்பதால் அது சாத்தியம் என்றார். அப்பொழுதெல்லாம் ரேஷன் கடையில் சர்க்கரையும், மண்ணெண்ணையும் தான் ரொம்ப டிமான்ட். எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி வச்சுக்குவாங்க.

சரி என்று இவரது அம்மாவும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அந்த நபரிடம் நூறு ரூபாய் பணம் கொடுத்து, ஒரு மஞ்சா பை மற்றும் கிருஷ்ணாயில் கேனுடன் தன் மகனையும் உடன் அனுப்பி வைத்தார். சிறிது தூரம் சென்றதும் அந்த நபர் அச்சிறுவனிடம் வேறு யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் கூட அவர்களுக்கும் வாங்கி கொடுக்கலாம் என்றார். நம்ம ஆள் தான் ஊருக்கு உழைப்பவர் ஆயிற்றே. அக்கம் பக்கத்தில் இருக்கும் தெரிந்தவர்களின் வீட்டிற்கு எல்லாம் அழைத்து சென்று அனைவரிடமும் பணமும், கிருஷ்ணாயில் கேனும், பையும் வாங்கி கொண்டார்கள். அனைவருக்கும் உதவி செய்வதை நினைத்து பெருமையுடன் ரேஷன் கடையை நோக்கி நடை போட்டார்.

ரேஷன் கடை நெருங்கியதும், அந்த நபர் இவரிடம் உள்ள கேன் மற்றும் பைகளை வாங்கி கொண்டு இவரை வீட்டிற்கு செல்லுமாறு கூறினான். இவர் உடன் வந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்பதால் அவ்வாறு கூறினான். அனைவருக்கும் உதவிய மன நிறைவில் இவர் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டார்.

விளையாடி முடித்து ஆறு மணிக்கு மேல் வீட்டிற்கு கிளம்பினார். வீட்டில் இன்று தனக்கு தனி மரியாதை கிடைக்கும் என்ற பெருமிதத்துடன் சென்றார். அப்பாவும், அம்மாவும் இவருக்காக கேட்டின் அருகிலேயே காத்து கொண்டிருந்தனர். இவரை கண்டதும், இவரின் அப்பா "எங்கடா போன இவ்வளோ நேரமா?" என்று கேட்டார். இவரும் கிரிக்கெட் விளையாடி விட்டு வருவதாக சொன்னார். பின் உள்ளே வாடா என்று சொல்லி விட்டு போன தந்தையை பின் தொடர்ந்தார்.

இவர் உதவி செய்த யாரோ ஒருவர் இவரை பார்க்க உள்ளே இருக்கார் போல என்று ஆவலாக சென்றார். உள்ளே சென்று தன் தந்தையிடம் அறை மணி நேரம் ரிவிட் வாங்கிய பின் தான் இவருக்கு அந்த ரேஷன் கடை நபர் ஒரு ஏமாத்து பேர் வழி என்று தெரிந்தது. அம்பையே இந்த வாங்கு வாங்குறாரே அப்பா, எய்த வில்லை என்னா வாங்கு வாங்கி இருப்பார் என்று பரிதாபமாக பக்கத்தில் நின்று கொண்டிருந்த தன் அம்மாவை நினைத்து மனதை தேற்றி கொண்டார்.

இதுக்கப்புறமாவது இவரிடம் வேலை வாங்குவதை நிறுத்தினார்களா? இல்லை. இவரால் ஏமாந்து போனதால் அதை சரி கட்டுவது போல் இன்னும் அதிகமாக வேலை வாங்க ஆரமித்து விட்டார்கள். இப்படி தன் சிறு வயதிலேயே தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்தி கொண்ட அந்த தியாகி வேறு யாரும் இல்லை, அடியேன் தாங்க!

பி.கு. மொக்கைக்கு மன்னிக்கவும்;)

Friday, July 11, 2008

இரவு நேரம் - ஜூலை 2008 PIT புகைப்படப் போட்டி

போட்டி தலைப்பு: இரவு நேரம்
முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.

இந்த ஐந்தில் எதை தேர்வு செய்வது என்று ஒரே குழப்பம். கடைசியாக இந்த கீழே உள்ள படத்தையே தேர்வு செய்து விட்டேன். சரியா?
இந்த படத்தில் இருப்பது நட்சத்திரம் அல்ல. சந்திரன் தான்!
Moon by Night

Tokyo Tower

Anderson Bridge

Night Shot

The Devil's Tree

மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.

Saturday, July 5, 2008

அணுசக்தி ஒப்பந்தம் நல்லதுதான் - திரு அப்துல் கலாம்

அணுசக்தி ஒப்பந்தம் சரியா தவறா என்று ரொம்ப நாளா எனக்கு குழப்பமாகவே இருந்தது. அதுக்கு தான் என் வலைப்பூவில் கூட ஒரு ஓட்டு எடுப்பை போட்டு பார்த்தேன். ஆனால் இப்போ எனக்கு அது தெளிவாகி விட்டது.

இது வரை அணுசக்தி பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட இதைப்பற்றி நிறைய அறிக்கைகள் விட்டுள்ளார்கள். அதை எல்லாம் என்னால் முழுமையாக நம்ப முடியவில்லை. இப்பொழுது நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே அணுசக்தி ஒப்பந்தம் சரிதான் என்று சொல்லியுள்ளார். இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்களில் நான் பெருதும் மதிப்பவர் திரு அப்துல் கலாம் அவர்கள். அவர் ஜனாதிபதியாக இருக்கும் பொழுது தனது உறவினர்கள் வந்து தன்னுடன் ஜனாதிபதி மாளிகையில் தங்கியதற்கு வாடகை கொடுத்தவர் அவர். எல்லாவற்றிற்கும் மேல், இந்தியாவின் அணுசக்தி தொழில்நுட்பத்தின் தந்தை அவர்.

அவரே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை தான் படித்து பார்த்ததாகவும், அது தேசிய நலனுக்கு நல்லது என்றும் கூறியுள்ளார். மேலும் இதை பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் திரு முலாயம் சிங்க் மிகவும் நல்ல காரியத்தை செய்துள்ளார். இதை வேறு யாரவது முன்னமே செய்திருக்கலாம். முலாயம் சிங்க் தனக்கு தெரியாத விவரங்களை, விவரம் தெரிந்த ஒருவரிடம் கேட்டு அறிந்துள்ளார். விஷயமே தெரியாவிட்டாலும் தெரிந்த மாதிரி காட்டி கொள்ளும் அரசியல் வாதிகளின் மத்தியில், இவர் செய்திருப்பது பாராட்டத்தக்கது.

இதற்கு இடது சாரிகள் என்ன சொல்ல போகிறார்களோ?

Friday, July 4, 2008

ஆஹா! இவர்களும் பெண்கள் தானா?


(Picture Courtesy: Daily Thanthi)
விஷ்வ ஹிந்து பரிஷத் நேற்று நடத்திய பந்த்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

இந்த படத்தை பார்க்கும் பொழுதே நன்றாக தெரிகிறது, அந்த வாகனத்தில் உள்ளவருக்கும் பந்த்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று. அவர் போது மக்களில் ஒருவர். அவரை போட்டு அடிப்பதாலும், கடைகளை வலுக்கட்டாயமாக அடைப்பதாலும் இவர்கள் நடத்தும் பந்த் வெற்றி அடைந்து விடுமா?

இப்படி பட்ட காரியங்களினால் மக்களிடத்தில் அவர்கள் மதிப்பு இறங்கிவிடுமே தவிர வேறு எந்த பயனும் கிடைக்காது. சரி தானே? இவர்கள் கடையை அடைக்க சொன்னதால் ஒரு கடைக்காரர் தீக்குளித்து வேறு இருக்கிறார்.

பெண்களே இப்படி வன்முறையில் ஈடுபட்டால், அப்பப்பா! நம்ம நாட்டை நினைச்சா பயமா இருக்குதுங்க!

Wednesday, July 2, 2008

நடிகர் சங்கமும், திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரும்

இதை பற்றி நான் ஒரு மாதம் முன்னரே எழுத வேண்டும் என்றிருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. இப்போ தினமும் சன் டிவியில் 75 ஆண்டு தமிழ் சினிமா கொண்டாட்டம் என்று தினமும் ஒரு பழைய படத்தை இரவில் ஒளிபரப்பி வருகிறார்கள். அதை பார்த்ததும் எனக்கு இந்த பதிவை போட வேண்டும் என்று தோனியது.


எம்.கே.தியாகராஜ பாகவதர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார். இவர் நடித்த ஹரிதாஸ் படம் தொடர்ந்து மூன்று வருடம் ஓடி சாதனை பண்ணியது. இவரை பற்றி படிக்கும் போதே எனக்கு பிரமிப்பாக இருக்கும். அவர் பாடிய பாடல்களை இன்றும் மறக்க முடியாது. அப்பேற்பட்டவரின் மனைவி ராஜாம்பாள் இன்று வறுமை நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு கூட வழியின்றி அவதிப்பட்டு வருகிறார். இந்த செய்தி கடந்த மாதம் பத்திரிக்கைகளில் வந்தது.

இதை அறிந்து மருத்துவ செலவிற்காக அரசின் சார்பில் ரூ. 1 லட்சம் நிதியை முதல்வர் கருணாநிதி வழங்கினார். 1999ம் ஆண்டே அவருக்கு ரூ. 50,000 நிதியுதவி வழங்கியதும் கலைஞர் கருணாநிதி அவர்களே. ராஜாம்பாள் இன்று சென்னை சூளைமேட்டில், தெருக் கோடியில் ஒரு பழைய வீட்டின் மாடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் போர்ஷனில்தான் குடியிருக்கிறார். ராஜம்மாளின் வயதான தம்பி மணியும், பாகவதரின் பெண் வயிற்றுப் பேரன் கணேஷும் அருகிலிருந்து பார்த்துக் கொள்கிறார்கள்.

லட்சுமி காந்தன் கொலைவழக்கில் சிக்கியதிலும்(பிறகு நிரபராதி என்று வெளியே வந்தார்), சொந்த படம் எடுத்ததிலும் தன் பணம் அனைத்தையும் இழந்தார். 1959ல் பாகவதர் இறுதிச் சடங்கிற்கு திரையுலகிலிருந்து வந்தவர் எம்.ஆர்.ராதா மட்டும்தானாம்!

இப்போது இவர்கள் நடிகர் சிவகுமார் மாதந்தோறும் தரும் ஆயிரம் ரூபாயை கொண்டு வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளோ நடந்தும் நடிகர் சங்கம் என்று ஒன்று இருக்கிறதே, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இதெல்லாம் அவர்கள் செய்ய வேண்டிய கடமை அல்லவா?

75 ஆண்டு கால தமிழ் சினிமா என்று கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். அப்படி நடத்தும் பொழுது முதலில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பெயரையை பெருமையாக சொல்லும் பொழுது, அவர்களின் குடும்பத்தை பற்றி யோசிக்க மாட்டார்களா? இது போதாதென்று அடிக்கடி நலிவுற்ற கலைஞர்களுக்கான கலை நிகழ்ச்சி என்று வேறு நடத்துகிறார்கள். அப்படி சேர்க்கும் பணத்தை எல்லாம் என்னதான் செய்கிறார்கள்? சூப்பர் ஸ்டாராக இருந்த ஒருவரின் குடும்பத்துக்கே இந்த நிலைமை என்றால், திரைக்கு பின் வேலை செய்பவர்களின் நிலை என்னவாக இருக்கும்? இப்பொழுதெல்லாம் அரசியலில் உள்ள அரசியலை விட நடிகர் சங்கத்தில் அரசியல் அதிகமாக உள்ளது. இது போதாதென்று அரசியல் கட்சி ஆரமிக்க நடிகர் சங்க தலைவர் பதவியை வைத்து ஒத்திகை பார்த்து கொள்கிறார்கள்.

கலைஞருக்கு முன்னாடி இவங்க தான முதல ராஜாம்பாள் அம்மாளுக்கு ஓடி சென்று உதவி செய்திருக்க வேண்டும்? நடிகர் சங்கத்திலேயே இந்த அழகுல இருக்காங்களே, இவங்க அரசியலுக்கு வந்தா எப்படி ஆட்சி செய்வாங்கனு நீங்களே யோசிச்சி பாருங்க.

Tuesday, July 1, 2008

அரசியல் பயிற்சி பள்ளி

சினிமா, கணினி, பேஷன் என எல்லா துறைக்கும் தனி தனியா பல பயிற்சி பள்ளிகள் இருக்கும் போது, இந்த அரசியலுக்கு மட்டும் ஏன் ஒரு பயிற்சி பள்ளி கிடையாது? ஒரு வேலை நம்ம ஊருல எல்லா விஷயத்துலயும் அரசியல கொண்டாந்து நுழைக்கிறதால அதுக்கு தனியா பயிற்சி வேண்டாம்னு நெனசிட்டாங்களோ?

அப்படியே இந்த மாதிரி யாராச்சும் ஒரு அரசியல் பயிற்சி பள்ளியை ஆரமிசாங்கனா அதுல என்ன சொல்லி தருவாய்ங்கன்னு வெட்டியா யோசிச்சு பார்த்தேன். அந்த கற்பனை தாங்க இந்த பதிவு.

இந்த பள்ளியில் சேர குறைந்த பட்சம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அவசியம்:

1. கண்டிப்பாக எட்டாம் வகுப்புக்கு மேல் பதித்திருக்க கூடாது. அதற்கு மேல் படித்திருப்போர் அரசியல் வாதிகளின் கார் டிரைவர், எடுபுடி போன்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டால் தபால் மூலம் தெரிவிக்கப்படும்.

2. குறைந்த பட்சம் ஒரு பத்து கெட்ட வார்த்தைகளாவது தெரிந்திருக்க வேண்டும். இது பெண்களுக்கும் பொருந்தும்.

3. இளைஞர் அணியில் சேர பயிற்சி பெற விரும்புவோர் குறைந்த பட்சம் ஐன்பது வயதை கடந்தவராக இருக்க வேண்டும்.

4. அனைவரும் கண்டிப்பாக ஏதாவது ஜாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.

5. மேலே உள்ள அனைத்தும் சரியாக இருந்தால், ஒரு நேர்காணல் மூலம் தேர்ந்தேடுக்கப்படுவர். ஏதாவது கிரிமினல் வழக்குகளில் சம்பந்தம் உள்ளோர் அந்த F.I.R காபியுடன் வந்தால் நேர்காணல் இல்லாமலேயே சேர்த்து கொள்ளப்படுவர்.

சரி இப்போ இந்த பள்ளியில் என்னன்ன பயிற்சி தருவோம்னு பார்ப்போம்.

1. அரசியலில் சேர விரும்புவோருக்கு வெ.மா.சு.சொ. அறவே இருக்க கூடாது. (அதாவது வெற்றியின்மையால் சோர்வடைவது, மாநாட்டுக்கு லேட்டா வருவது, சுங்க வரி ஏய்ப்பு, சொத்து குவிப்பு...அப்பாடா!). இதற்காக தீவிர பயிற்சி அளிக்கப்படும். அனைவருக்கும் சாப்பாட்டில் உப்பையும், காரத்தையும் குறைத்து விடுவோம்.

2. தினமும் ஒரு பத்து பேரை சுற்றி நிக்க வைத்து தூய சென்னை பாஷையில் எவ்வளோ முடியுமோ அவ்வளோ அசிங்கமா திட்ட விடுவோம். ஆனா கொஞ்சம் கூட அசராமல் சிரித்து கொண்டே இருக்க வேண்டும். "மனதை திருடிவிட்டாய்" படத்தில் பிரபு தேவா திட்டு வாங்கிட்டு சிரிச்சி கிட்டே இருப்பாரே அந்த மாதிரி. மக்கள் எல்லாரும் 'இவன் எவ்வளோ திட்டுனாலும் வாங்கிக்கராண்டா, இவன் ரொம்ப நல்லவண்டான்னு' சொல்லணும். இதான் இந்த பயிற்சியினுடைய குறிக்கோள்.

3. அனைவரையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவரை நியமித்து, இருவருக்கும் இடையே சண்டை மூட்டி விடுவோம். அவர்கள் இடையே கைகலப்பு உண்டாகும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்குவோம். பிறகு ஒரு பிரிவில் இருந்து யாராச்சும் வேறு ஒருத்தரை தேர்ந்தெடுத்து மூன்றாவது பிரிவை உண்டாக்குவோம். இப்போ அந்த முதல் இரண்டு பிரிவின் தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து இந்த மூன்றாவது அணியினை எதிர்க்க வேண்டும். இப்படியே பயிற்சி முடியிற வரை தினமும் போயிட்டிருக்கும். கடைசியா நிலைச்சு நிக்கிற ரெண்டு அணியின் தலைவர்கள் தான் திறமையான அரசியல்வாதிகள்னு ஒரு சிறப்பு பரிசு கொடுப்போம். ஸ்ஸப்பா!

4. தினமும் ஒரு பட்டிமன்றம் நடத்துவோம். அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு தலைப்பை கொடுப்போம். அவர்கள் அந்த தலைப்பை வைத்து இன்னைக்கு ஒன்று பேசணும், நாளைக்கு ஒன்று பேசணும். (இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா!)

5. அனைவருக்கும் நடிப்பு பயிற்சி வழங்கப்படும். இதனால் இவர்கள் சினிமாவுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். சினிமாவில் நடித்து விட்டால் ஒன்னாவது வாய்ப்பாடல் தெரியாவிட்டால் கூட அரசியலில் நுழைந்து விடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ராமநாராயணன் படத்தில் நடித்த குரங்கு, நாய், யானை, பாம்பு இவைகள் வந்து தேர்தல்ல நின்னா கூட நம்ம மக்கள் ஜெயிக்க வச்சுடுவாங்க. அவ்வளோ நல்லவங்க!

6. அரசியல் வாதீங்களுக்கு கெட்ட வார்த்தை தெரிஞ்சிருக்கறது எவ்வளோ முக்கியம்னு உங்களுக்கே தெரியும். தெரியலைன்னா ஒரு பொது கூட்டத்துக்கு போய் பாருங்க. (ஒரு தடவை அப்படிதான் இரவு ஒரு பத்து மணிக்கு நான் வேலை விட்டு வீட்டுக்கு திரும்பும் போது ஒரு பெண் வேட்பாளர் பேசறதை கேட்டு என் காதுல 'சேம் பிளட்'). ஆகையால் அனைவருக்கும் திரு. ஆடு வெட்டி ஆறுமுகம் எழுதிய "கம்ப்ளீட் கெட்ட வார்த்தை அகராதி" மற்றும் "ஒரே வாரத்தில் பத்தாயிரம் கெட்ட வார்த்தைகள்" என்னும் நூல்களை கொடுத்து படிக்க செய்வோம்.

7. அடுத்து சட்டசபை பயிற்சி. இதில் கையில் கிடைக்கும் பொருளை எடுத்து எப்படி சரியாக குறி வைத்து எதிரியை தாக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி தருகிறோம். சீனாவில் இருந்து ஜெட் லீயிடம் பணிபுரிந்த ஒருவரை இதற்கான பயிற்சி அளிக்க இங்கு வரவழைக்க இருக்கிறோம். இதற்காக பல வகையான நாற்காலிகளை வரவழைத்திருக்கிறோம்.

8. பிறகு சட்ட சபையில் இருந்து எப்படி எல்லாம் நொண்டி சாக்கு சொல்லி விட்டு வெளிநடப்பு செய்யலாம் என்பதற்கான பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஒரு மூத்த அரசியல் வாதியை நியமித்திருக்கிறோம். இவர் இதுவரை கலந்து கொண்ட எட்டு சட்ட சபை கூட்டங்களில், ஏழு தடவை வெளி நடப்பு செய்திருக்கிறாராம். (அந்த ஒரு தடவை, அசதியாக இருந்ததால் கண் அயர்ந்து விட்டாராம்).

9. அனைவரும் தினமும் காலில்விழாசனம் என்ற ஆசனத்தை செய்ய வேண்டும். இது பின்னாளில் அரசியலில் இறங்கியவுடன் பெரிதும் பயன்படும். இந்த ஆசனத்தை இருபது வருடங்களாக செய்து வரும் ஒரு எதிர் கட்சி தலைவரை இதற்கான பயிற்சி அளிக்க வரவழைக்க இருக்கிறோம். இது பிரம்மாஸ்திரத்தை விட வலிமையானதாம். இந்த ஒன்னை மட்டும் கற்று கொண்டாலே அரசியலில் சாதித்து விடலாம் என்கிறார்கள்.

10. விடுமுறை நாட்களில் பல ஊர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்வோம். அப்போது எப்படி ஜாதி கலவரம் செய்ய வேண்டும் என்பதை நேரில் செய்து காண்பிப்போம். இதற்காக நாலு ஜாதி கட்சி தலைவர்கள் உடன் வருவார்கள்.

11. அடுத்து ஒரு சின்ன விஷயத்தை எப்படி ஊதி பெருசாக்க வேண்டும், ஒரு பெரிய விஷயத்தை எப்படி தூசி மாதிரி ஊதி தள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படும். இதற்காக சட்ட நுணுக்கங்கள் தெரிந்த சில திறமையான வக்கீல்களை நாங்கள் நியமித்திருக்கிறோம். திரு சு. சுவாமி அவர்கள் எப்படி சம்பந்தமே இல்லாம ஒரு அறிக்கையை விட்டு பிரபலமாவது என்பதை இங்கு வந்து மாணவர்களுக்கு விளக்குவார்.

12. கடைசியாக கட்சி நடத்துவதே தனது லட்சியமாக கொண்டிருக்கும் அந்த தாடி நடிகர் மாணவர்களுக்காக ஒரு சிறப்புரை ஆற்றுவார். இதை கேட்ட பின் மாணவர்களுக்கு (இவர் எல்லாம் கட்சி நடத்தும் போது நாம் ஏன் அரசியலில் இறங்க கூடாது என்று) ஒரு தன்னம்பிக்கை உருவாகும் என்று நம்புகிறோம்.

இன்னும் எதுக்கு காத்துகிட்டு இருக்கீங்க? உடனே கிளம்பி வாங்க! விண்ணப்பத்தாளை வாங்கிட்டு போங்க!

Wednesday, June 25, 2008

மெகா சீரியல் வோட்டு!

(பெப்சி உமா தோரணையில்)என்னை ரொம்ப ஆச்சர்ய பட வைக்கிற விஷயம், எப்படி எல்லாருக்கும் ஒரே விஷயம் பிடிசிருக்குன்றது தான். இந்த மெகா சீரியல் விஷயத்துல நாமெல்லாம் ரொம்ப தெளிவாதான் இருக்கோம்! மேலே படத்தில் உள்ள வோட்டுகளை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

என்பத்தேழு ஓட்டுல எழுபத்தோரு பேர் 'இது எல்லாமே கொடுமைதான்'னு வோட்டு போட்டிருக்காங்க. எவ்வளோ பீல் பண்ணி இதை போட்டிருப்பாங்கன்னு எனக்கு புரியுது. ஆனா வீட்டுல இருக்க நம்ம அப்பா, அம்மாக்களுக்கு தான் இது புரிய மாட்டேங்குது. கேட்டா, "நாங்க என்ன உங்கள மாதிரி சினிமா கினிமானா சுத்தறோம். எங்களுக்கு இருக்குற ஒரே பொழுது போக்கு இதான"னு நம்மளையே மடக்கிடறாங்க. இவங்களோட சேர்ந்து வேற வழி இல்லாம இந்த கொடுமையை அனுபவிக்கிறவர்கள் இங்கு பல பேர் உண்டு. சினிமாவாவது இரண்டரை மணி நேரத்துல முடிஞ்சிடும் ஆனா இந்த மெகா சீரியல்ஸ் இரண்டரை வருஷம் ஆனாலும் முடிய மாட்டேங்குது.

முன்னாடி எல்லாம் கடைசி சீரியல் ஒன்பதரை மணிக்கு இருந்தது. இப்போ பதினோரு மணி வரைக்கும் போயிடுச்சு! இவ்வளோ இருந்தும் "இது எல்லாமே சூப்பர்"னு வோட்டு பண்ண அந்த தெய்வங்கள் யாருன்னு தெரியல. நீங்க எங்க இருந்தாலும் உங்களோட அந்த மன தைரியத்தை நான் பாராட்டுறேன்! அவ்வ்!

Saturday, June 21, 2008

அவார்ட்ஸ்

"Nice Matters Award is for those bloggers who are nice people; good blog friends and those who inspire good feelings and inspiration. Also for those who are a positive influence on our blogging world.”
இந்த அவார்டை எனக்கு கொடுத்த இல்லத்தரசிக்கு மிக்க நன்றி. இல்லத்தரசி ப்ளாக் ஆரமிக்க என்னுடைய ப்ளாக்கும் ஒரு தூண்டுதலாக இருந்ததாக இதை எடுத்து கொள்கிறேன்;) என்னை பொறுத்தவரை நீங்கள் போடும் ஒவ்வொரு கமெண்ட்டும் எனக்கு அவார்ட் மாதிரி தான். இந்த அவார்டை நான் என் சகோதரி தமிழினிக்கு தருகிறேன்.


மேலே உள்ள அவார்ட் கிடைத்த அதே நாள் எனக்கு கிடைத்த இன்னொரு அவார்ட் இந்த 'குட் சாட் ப்ளாக் அவார்ட்' . இதை எனக்கு கொடுத்தது, தமிழினி.
மிக்க நன்றி தமிழினி. வலைப்பூ மூலம் எனக்கு கிடைத்த முதல் நண்பி தாங்கள் தான்.(இப்போ சகோதரி;) தாங்கள் மேலும் பல அவார்ட் பெற எனது வாழ்த்துக்கள். இந்த அவார்டை நான், இந்திய சமையல் கலையை தன் வலைப்பூ மூலம் பரப்பும் இல்லத்தரசிக்கு அளிக்கிறேன்.

Thursday, June 19, 2008

செய்தித்தாளின் முதல் பக்கத்தில் நல்ல செய்தி வருவது சாத்தியமா?

ஆறாம் வகுப்பு படிக்கிற பையன் ஒருவன் அப்துல் கலாமை பார்த்து கேட்டான், "நம்ம ஊர் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் எப்பொழுதும் கெட்ட செய்திகளையே போடுகிறார்கள். நல்ல செய்திகள் எல்லாம் எங்காவது மூலையில் சிறியதாக போடுகிறார்கள். ஏன் இப்படி?" என்று.


அதற்கு அப்துல் கலாம், "கெட்ட செய்தி என்பது மிகவும் பரபரப்பானது. அதே பரபரப்பு நல்ல செய்திகளில் இருப்பதில்லை" என்று கூறினார். (Bad news is sensational, whereas good news does not bring about sensational.) ஆனால் இந்நிலைமை மாறி வருவதாக கலாம் தெரிவித்தார்.

எனக்கு என்னமோ இது மாறும் என்று தோணவில்லை. உதாரணத்திற்கு ஒரு நிகழ்ச்சியை சொல்கிறேன். நானும் என் அலுவலக நண்பரும் வேலை முடிந்து அலுவலகத்தை விட்டு வெளியேறி கொண்டிருந்தோம். அப்பொழுது அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சியில் ஏதோ செய்தி ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு பேர் நின்று பார்த்து கொண்டிருந்தனர். ஏதோ விமானத்தை பற்றிய செய்தி அது. அதை கவனித்த என் நண்பர் அருகே சென்று என்ன செய்தி என்று கவனித்தார். கவனித்தவர், உடனே என்னிடம் திரும்பி வந்து, "ச்சே! ஏதோ புது விமானம் விட்டிருக்கிறார்களாம். நான் ஏதோ விபத்து என்று நினைத்தேன். வா போலாம்" என்று சொன்னார். அதற்கு நான், ஏன்யா! யாராச்சும் செத்தா தான் நின்னு பாப்பீங்களானு? கேட்டதுக்கு தன் சிரிப்பை மட்டுமே பதிலாக்கி விட்டு சென்றார்.

இப்படி இருக்குற நம்ம கிட்ட, நல்ல செய்திய முதல் பக்கத்துல போட்டா எப்படிங்க விற்க முடியும்? இது நம்ம நாட்டுல மட்டும் இல்லைங்க. எல்லா நாட்டுலையும் இதே தான் நடக்குது. அதே போல் இது இன்னைக்கு நேத்து ஆரமித்ததில்லை, அந்த காலத்துல இருந்தே நடந்துட்டு வர்றது தான். இங்கே நான் போட்டிருக்குற படத்துல உள்ள எடுத்துகாட்டு கொஞ்சம் அதிகம் தான், ஏன்னா அந்த சமயத்துல செய்தித்தாள் முழுவதுமே அதை பற்றி தான் இருந்திருக்கும்.

அந்த மாதிரி நாட்டுக்கு முக்கியமான செய்தின்னா கூட பரவா இல்லைங்க. இப்போ வர தலைப்பு செய்திகள் சில:

1. கணவனை தேன்நிலவுக்கு அழைத்து சென்று தன் காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி.

2. சொந்த மனைவியையே வெட்டி கொன்ற கணவன்.

இப்படி எல்லாம் வருதுங்க. அதுவும் இரத்தம் படிந்த புகைப்படத்துடன். சொன்னா நம்ப மாட்டீங்க, மேல நான் சொல்லி இருக்குற எடுத்துகாட்டில் முதல் செய்தி எல்லாருக்கும் தெரிந்திருக்கும். இந்த செய்தி வந்த சமயத்துல எங்க ஏரியாவில் செய்திதாள்களுக்கு தட்டுப்பாடு. வந்த கொஞ்ச நேரத்துலையே எல்லா கடையிலையும் செய்தித்தாள்கள் தீர்ந்துவிட்டது. இப்போ சொல்லுங்க முதல் பக்கத்தில் நல்ல செய்தி வருவது சாத்தியமா?

Monday, June 16, 2008

தசாவதாரத்தின் டாப் 10 அவதாரங்கள்


தசாவதாரத்தின் விமர்சனத்தை அனைவரும் எழுதிவிட்டதால், நானும் எதற்கு அதையே எழுதனும்னு நினைத்தேன். அதனால் தான், சரி படத்தில் வரும் எல்லா அவதாரங்களை பற்றியும் ஒரு விமர்சனம் போடுவோம்னு முடிவு செய்தேன். இதை பற்றியும் ஏற்கனவே போட்டுட்டாங்கனு சொல்றீங்களா? போட்டிருந்தா என்னங்க? வந்துட்டீங்கள்ள? மறுவாதையா படிச்சுட்டு போங்க. இல்லனா அழுதுடுவேன்!

படத்தில் கதை இல்லை என்று குறை கூறுபவர்கள் சற்று இதை படியுங்கள். பிரமிக்க வைக்கும் கமல் சாரின் நடிப்பை மட்டுமே எதிர் பார்த்து போங்க. ஒரு ஏமாற்றமும் இருக்காது.

ஒரு புதிய முயற்சியை செய்ய அவர் எடுத்துக்கொண்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை. நோவாம நோம்பு கும்முடுற நடிகர்கள் இருக்குற இந்த காலத்துல, இந்த வயசுலயும் இவ்வளவு சிரம பட்டிருக்கார் என்று நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. அவர் தமிழன் என்பதில் பெருமிதமாவும் இருக்கு! அவருக்காக இந்த படத்த கண்டிப்பா பார்க்கலாம். இதை சொல்லும் நான் ஒரு ரஜினி ரசிகன்.

சரி, இப்போ அந்த பத்து அவதாரகளையும் கொஞ்சம் அலசுவோம், எனக்கு பிடித்த வரிசையில்!

1. ரங்கராஜ நம்பி

படத்தில் என்னை மிகவும் கவர்ந்த அவதாரம் இது தான். கமல் இதே தோற்றத்தில் ஒரு முழு நீல சரித்திர படம் எடுத்தால் ரொம்ப நல்லா வரும். அந்த அளவுக்கு பொருந்தி இருப்பார். ரங்கராஜ நம்பியாய் அவர் தன் கண்களால் வெளிப்படுத்தும் கோவமும், இயலாமையும், அவரின் உடற் கட்டும், புத்திசாலித்தனமான வசனமும் டாப். கமலை முழு கமலாக கான முடிந்தது இந்த அவதாரத்தில் தான். சிறிது நேரமே வந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தவர்.

2. பல்ராம் நாயுடு

படம் முழுவதும் வரும் இன்னொரு பாத்திரம் இது. இதில் கமலை அடிச்சுக்க ஆளே இல்லை. இவர் ஒரு தமிழ் பேசும் தெலுங்கர். படத்தின் முதல் காமெடியன் இவர்தான். இருப்பினும் இவர் தன்னிடம் ஆங்கிலம் பேசும் கமலிடம், "தெலுங்கு ஆளான நானே தமிழ் கத்துகிட்டு பேசறேன். தமிழ் ஆளு நீ இங்கிலீஷ்ல பேசற. இப்படி இருந்தா எப்படியா தமிழ் வளரும்னு" கேக்கற இடத்தில் சில பேருக்கு கண்டிப்பா அறை விட்ட மாதிரி இருந்திருக்கும். எந்த தெலுங்கு பெயரை கேட்டாலும் சந்தோஷத்தில் இவர் முகம் மலர்ந்து 'தெலுங்கு வாடானு' கேப்பார் பாருங்க, சான்ஸ்ஸே இல்லை. இவரின் உதவியாளர், இவரை பற்றி பெருமையாக 'Sir can speak in five languages of Telugu' என்று சொல்லும் இடத்தில் சிரிப்பை அடக்க முடியாது. இது மாதிரி இன்னும் நிறைய.

3. வின்சென்ட் பூவராகன்

இந்த பாத்திரத்தில் கமலின் குரல் மட்டும் இல்லையென்றால் இவரை அடையாளமே கான முடியாது. படத்தில் இவர் போட்ட மற்ற அனைத்து வேஷங்களையும் விட இது தான் சற்று இயற்கையாக தெரிந்தது. இதில் இவர் பேசும் தோரணை சூப்பர். அசத்தி விட்டார். பாத்திர படைப்பும் அருமை. ஒருவர் இந்த கமலை பார்த்து, "நீ என்ன உலக நாயகனா" என்று கேட்க, அதற்கு கமல், 'ஆமாம். நான் மட்டும் இல்லை. இருநூறு லட்சம் விந்துக்களிடம் தான் ஒன்று மட்டும் போட்டி போட்டு ஜெயித்து மனிதனாக வெளியே வரும் ஒவ்வொருவரும் உலக நாயகன் தான்'(வசனம் சரியாக நினைவில்லை) என்று சொல்லும் இடத்தில் வசனகர்த்தா கமல் நிற்கிறார்.

4. கிருஷ்ணவேணி

இந்த பாத்திரம் நாம் அனைவரும் ஏற்கனவே அவ்வை ஷன்முகியில் பார்த்த ஒன்றாக இருந்தாலும், இதில் இவர் எடுத்து கொண்ட சிரத்தை அபாரம். இதில் பாட்டியாக நடித்தது மட்டும் இல்லாமல், உயரம் கம்மியாகவும் இருப்பார். பார்க்க ஆச்சரியமாக இருந்தது. 'முகுந்தா முகுந்தா' பாட்டில் கமலே இந்த பாட்டி பாடுவது போல் பாடியிருப்பரே, அது அவரால் எப்படி தான் முடிந்ததோ. இந்த பாட்டி தான் பிராமினராக இருந்தாலும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனை தன் மகனாக நினைத்து கட்டி அழுவும் போது, அவரை தடுப்பவரை பார்த்து, "போடா ஜாதி பிசாசே' என்று திட்டும் போது நெஞ்சில் நிற்கிறார்.

5. கிறிஸ்டியன் ஃபிலெட்சர்

இவரும் படம் முழுவதும் வருவார். ஆரம்பத்தில் இவரது வேஷம் சற்று செயற்கையாக தெரிந்தாலும், போக போக அதில் கமல் தெரிய மாட்டார். யாரோ ஒரு நிஜமான ஹாலிவுட் வில்லன் போல தான் தோன்றும். அந்த அளவுக்கு அருமையாக பண்ணி இருப்பார் கமல். அவரது ஆங்கில ஸ்லாங் ரொம்ப நல்லா இருக்கும்.

6. ஜார்ஜ் புஷ்

இந்த படத்தின் இரண்டாவது காமெடியன் இவர்தாங்க. சான்ஸ்ஸே இல்லை. இவரது காட்சிகள் அனைத்தும் சிரிப்பை வரவழைக்கும். இதை எப்படி தைரியமாக புஷுக்கே போட்டு காமிக்க முயற்சி பண்ணுகிறார்களோ தெரியல. ரொம்ப தைரியம் தான். உதாரணத்துக்கு ஒன்றை சொல்லுகிறேன். புஷ் தன் உதவியாளரை பார்த்து ஒரு விளக்கத்தை கேப்பார். அதற்கு அவர், "It's so complicated. Let me explain" என்று கூறுவர். உடனே புஷ், "If it's so complicated, then no need to explain" என்று சொல்லிவிட்டு ஒரு ரியாக்சன் கொடுப்பார். இன்னொரு இடத்தில், அந்த பயோகெமிக்கல் கிருமியை அழிக்க அவர் தன் உதவியாளரிடம், "Can we do something about this with Nuclear weapons?" என்று கேட்கும் இடத்தில் ங்கொக்கா, மக்கா அடக்க முடியல. சிரிப்பை தாங்க. கமலுக்கு எவ்வளோ குசும்பு பாருங்க.

7. கோவிந்தராஜன் ராமசுவாமி

இவர் தான் ஒரு விஞ்ஞானி. படம் பூராவும் இவர்தான் ஓடிக்கொண்டே இருப்பார். இந்த பாத்திரம் நமக்கு மிகவும் பரிட்சயமானது. அதனால் அவ்வளவாக ஈர்க்கவில்லை. இவர், "கடவுள் இல்லைன்னு எங்கே சொன்னேன், இருந்திருந்தா நல்லா இருக்கும்னு தானே சொன்னேன்" என்று சொல்லும் வசனம் இன்னும் மனதில் நிற்கிறது.

8. ஷிங்கென் நரஹசி

இந்த கமல் ஒரு ஜப்பானிய கராத்தே மாஸ்டர் பாத்திரம். இதில் இவர் முக அமைப்பே வேறு மாதிரியாக இருக்கும். கண்களும் சற்று வித்யாசமாக தெரியும். ஆனால் கூடவே அந்த செயற்கை தனமும் தெரியும். இதையும் மிக சிறப்பாக செய்திருக்கிறார் கமல். கடைசியில் போடும் சண்டை காட்சி அற்புதம். அப்போது இவரை பார்த்து ஃபிலெட்சர் கமல் "Remember Hiroshima" என்று சொல்ல, பதிலுக்கு இவர் "Remember Pearl Harbour" என்று சொல்வது அபாரம்.

9. அவதார் சிங்

இந்த கமல் ஒரு தமிழ் தெரிந்த பாட்டு பாடும் சிங். இதில் இவரது வேஷம் ரொம்பவே செயற்கையாக தெரிந்தது எனக்கு. இதில் இவரது நடிப்பும் சற்று பரிட்சயமாகவே இருந்தது. அதனால் இந்த பாத்திரம் என்னை அவ்வளவாக கவரவில்லை.

10. கலிஃபுல்லா முக்தார்

இது ஒரு ஏழு அடி உள்ள உயரமான முஸ்லீம் இளைஞன் பாத்திரம். இந்த வேஷமும் ரொம்பவே செயற்கையாக தெரிந்தது. ஆனால் கமலின் நடிப்பால் அதை கொஞ்சம் மறைத்து விட்டார். இதில் இவர் பேசும் தோரணையும் ரொம்ப நல்லா இருக்கும்.

சரி இப்போ படத்தின் நிறைகளையும், குறைகளையும் பார்ப்போம்.


நிறைகள்:

1. கமலின் அபார நடிப்பும், புதுமையான முயற்சியும். கண்ணை மூடிக்கொண்டு வெறும் வசனத்தை கேட்டாலே எது எந்த கமல் என்று சுலபமாக சொல்லிவிட முடியும்.

2. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட காட்சி.

3. படத்தின் வசனமும், அருமையான பின்னணி இசையும்.

4. அருமையான ஒளிப்பதிவு.


குறைகள்:

1. பாடல்கள். முதல் பாடல் 'கல்லை மட்டும்' நல்லா இருக்குன்னு பார்த்தால் அது காப்பி அடித்த பாடலாம். அந்த பாடலை பார்க்கும் பொழுது நான் பின்னணியில் தான் வருகிறது என்று நினைத்தேன். பிறகு பார்த்தால் அதை கமல் பாடுகிறார். அவருக்கு அந்த குரல் சற்றும் பொருந்தவில்லை. என்னை மிகவும் கவர்ந்த பாடல் 'முகுந்தா' பாடல் தான். இதற்கு ரேஷ்மையா தான் இசையமைத்தாரா என்று நம்ப முடியவில்லை.

2. அஸின் பாத்திரம் கொஞ்சம் எரிச்சலை மூட்டுகிறது. உயிரும், மானமும் போகும் நேரத்திலும் சும்மா பெருமாள், பெருமாள் என்று சுற்றி கொண்டிருப்பது கொஞ்சம் ஓவர்.

3. வன்முறை காட்சிகள். கொலைகளும், இரத்தமும் நிறைய இருக்கிறது படத்தில்.

4. புரிந்து கொள்ள சற்று கடினமான திரைக்கதை. கமலிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் அவர் தன் லெவெலுக்கே யோசித்து படத்தை எடுத்து விடுவார். சாதாரண மக்களுக்கும் புரியிற மாதிரி எடுக்க மாட்டார். உதாரணத்திற்கு "Jurassic Park" படத்தை எடுத்து கொண்டால் அதில் Dinosaursசை எப்படி ஒரு கொசுவில் இருந்து உருவாக்கினார்கள் என்பதை தெளிவாக காண்பித்திருப்பார்கள். அதே போல் கமலும் இந்த "Chaos", "Butterfly effect", இதை எல்லாம் கொஞ்சம் விளக்கி இருக்கலாம்.

5. படத்தில் இன்னொரு நெருடலான விஷயம் கடைசியில் சுனாமி வந்துட்டு போனதுக்கப்புறம் ஊரே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு, அலறிக்கொண்டு இருக்கும் போது, கமலும் அசினும் நின்று ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருப்பது. இதை தவிர்த்திருக்கலாம்.

Sunday, June 15, 2008

அன்றாட வேலையினூடே ஒரு நாள் - ஜூன் 2008 PIT புகைப்படப் போட்டி

முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.



மேலே உள்ள படங்கள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.

Tuesday, June 10, 2008

சர்வதேச இந்திய திரைப்பட விழாவில், இந்தியா என்பது பாலிவுட்டை குறிக்கும்

IIFA என்பது சர்வதேச இந்திய திரைப்பட விழா(International Indian Film Academy) ஆகும். 2008க்கான இந்த விழா தற்போது பாங்காக்கில் நடை பெற்று கொண்டிருக்கிறது. சென்ற வருடம் துபாயில் நடைபெற்றது. சர்வதேச விழா என்பதால் வெளிநாடுகளில் நடத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால் இதில் மிகவும் நெருடலாக இருப்பது அந்த 'இந்தியா' என்பது தான். ஏன் இப்படி சொல்கிறேன் என்று புரியவில்லையா? கீழே உள்ள பட்டியலை பாருங்கள்:


Best Picture: Guru, Chak De India, Jab We Met, Om Shanti Om, Life In A Metro
Best Actor: Abishek Bachchan - Guru, Akshay Kumar - Bhool Bhulaiyaa, Salman Khan - Partner, Shah Rukh Khan - Chak De India, Shahid Kapoor - Jab We Met
Best Actress: Aishwarya Rai - Guru, Deepika Padukone - Om Shanti Om, Kareena Kapoor - Jab We Met, Tabu - Cheeni Kum, Vidya Balan - Bhool Bhulaiyaa

முழு பட்டியலையும் கான இங்கே கிளிக்கவும்.

பட்டியலை பார்த்ததும் உங்களுக்கு நான் சொல்ல வர்றது புரிஞ்சி இருக்கனுமே? இதில் இருப்பது எல்லாம் வெறும் பாலிவுட் படங்கள் மட்டும் தான். இந்தியால இவங்க மட்டும் தான் படம் எடுக்கராங்களா? இவங்க எடுக்குற பத்து படத்துல எட்டு படம் ஏதாவது ஒரு ஆங்கில படத்த பார்த்து காப்பி அடிச்சதா இருக்கும். அது மட்டும் இல்லாம அந்த பத்துல ஒன்னு மட்டும் தான் ஹிட் ஆகும். இவங்க எப்படி இதை 'சர்வதேச இந்திய திரைப்பட விழா' என்று சொல்லலாம்? இதில் இருப்பது வெறும் பாலிவுட் படங்கள் தானே?

இப்போ இங்கயும் கொஞ்ச போயி பாருங்க. ஒசியன் சினிபேன் பெஸ்டிவல் ஆப் ஆசியான் அண்ட் அராப் சினிமா(Osian Cinefan, Festival of Asian & Arab Cinema), இந்திய படங்களின் பிரிவில் பருத்திவீரனை சிறந்த படமாகவும், அதில் நடித்த ப்ரியாமணியை சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்திருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் பெர்லின் திரைப்பட விழாவில் கூட பருத்தி வீரனுக்கு சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு கொடுத்திருக்கிறார்கள். இவங்களுக்கு தெரிவது நம்மூர் காரர்களுக்கு ஏன் தெரிய மாட்டேங்குது? தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய எந்த மொழி படத்தையும் இவர்கள் மதிப்பதில்லை. இவர்கள் இப்படி செய்வதால் சர்வதேச அரங்கில் இந்திய படங்கள் என்றாலே பாலிவுட் படங்கள் தான் என்றாகி விட்டது.

போன முறை துபாயில் இந்த விழா நடந்த பொழுது கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இதை எதிர்த்து அந்த விழாவிலேயே குறை கூறி பேசினார். அந்த தைரியம் வேறு யாருக்கும் வராது. அதற்காக அவரை பாராட்டுகிறேன். இதனால் தான் என்னவோ இம்முறை தென்னிந்தியாவில் இருந்து யாரையும் கூப்பிடவில்லை என்று நினைக்கிறேன். அந்த விழாவில் மம்மூட்டி பேசியது இது தான்: "Indian cinema is not just Bollywood, and Hindi is not the only language. Why should our films be called South Indian cinema instead of being under the banner of Indian films?"

இவ்வளோ சொல்லியும் இவங்க இன்னும் திருந்தல. இதுல இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா? தாரே ஜமீன் பர்(Taare Zameen Par) என்ற அருமையான படம் ஆமிர் கான் இயக்கத்தில் வெளி வந்ததே ஞாபகம் இருக்கா? அந்த படமும் இந்த பட்டியலில் இல்லை. ஷாருக்கான் படத்துக்கு(Chak De India) மட்டும் ஒன்பது விருதுகள். இதுலயுமா அரசியல்? ஒரு வேலை இந்த படம் டிசம்பர் மாதம் வெளி வந்ததால் அடுத்த வருடத்திற்கு எடுத்து கொள்வார்களோ? சரி, நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. ஆனா தயவு செய்து மம்மூட்டி சார் சொன்னது போல் 'சர்வதேச இந்திய திரைப்பட விழா' என்பதை 'சர்வதேச இந்திய பாலிவுட் திரைப்பட விழா' என்று மாற்றி கொள்ளுங்கள்.

Monday, June 9, 2008

குங்ஃபூ பாண்டா - கண்டிப்பா பாருங்க!


சென்ற சனிக்கிழமை ஏதாவது ஒரு படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணோம். என்ன படம் போறதுன்னு ஒரே குழப்பம். கடந்த இரண்டு மாதமாய் வந்த எந்த படங்களும் திரையரங்கு சென்று பார்க்கும் அளவுக்கு என்னை தூண்டவில்லை.

கடைசியாக தங்கமணிக்கு அனிமேஷன் படங்கள் பிடிக்கும் என்பதால் இந்த 'குங்ஃபூ பாண்டா' படத்துக்கு டிக்கெட் புக் செய்தேன். இப்படத்தின் விளம்பரங்கள் பல நாட்களாக சிங்கப்பூர் ரயில் நிலையங்களில் ஒளிபரப்ப பட்டு வருகின்றன. அதை பார்த்த பொழுது கூட எனக்கு இப்படத்தை பார்க்க வேண்டும் என்று தோனியதில்லை. காரணம் படத்தின் தலைப்பு. இது ஏதோ சீனா குங்ஃபூ சம்பந்த பட்ட சண்டை படம் என்று நினைத்தேன்.

படம் பார்க்க சென்று அமர்ந்து விட்டோம். படம் ஆரம்பித்தது. முதல் காட்சியே சில கார்டூன் கதாபாத்திரங்கள் வந்து கன்னா பின்னாவென்று சண்டை போட்டுக்கொண்டது. எனக்கோ சரியான கடுப்பு. ஆஹா இதை பார்க்கவா வந்தோம்? இது அனிமேஷன் படம் இல்லையா? கார்ட்டூன் படமா? அப்பாடா! அது வெறும் கனவு காட்சி. இப்படத்தின் நாயகன் பொ'வின் (பாண்டா கரடி) கனவு அது. பொ'வை(Po) பார்த்தவுடன் எனக்கு அதை மிகவும் பிடித்துவிட்டது.

சரி இப்போ கதையை பார்ப்போம். பொவின் அப்பா ஒரு நூடுல்ஸ் கடை வைத்து நடத்துவார். அவருக்கு பொவிற்கும் தனது நூடுல்ஸ் செய்யும் ரகசியத்தை சொல்லிகொடுத்து அந்த கடையை பொவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் பொவிற்கோ குங்ஃபூ மீது அலாதி பிரியம். இருப்பினும் பொ சற்று சோம்பேறி. சாப்பாடு என்றால் பொவிற்கு கொள்ளை பிரியம்.

இது இப்படி இருக்கையில் பொ இருக்கும் ஊரின் குங்ஃபூ மாஸ்டர் ஊக்வே(Oogway), டாய் லுங்(Tai Lung) என்னும் தீய சிறுத்தையை எதிர்த்து சண்டையிட ஒரு டிராகன் வாரியரை (Dragon Warrior) தேர்ந்தெடுக்கப்போவதாக அறிவிக்கிறார். இதை பார்க்க செல்லும் பொவை மாஸ்டர் ஊக்வே தற்செயலாக டிராகன் வரியராக தேர்ந்தெடுக்கிறார். இது மாஸ்டர் ஷிபுவிற்கும்(Shifu) அவரின் ஐந்து சீடர்களுக்கும் பிடிக்கவில்லை. மாஸ்டர் ஊக்வேவிற்கு பிறகு அப்பதவியை ஏற்க போவது மாஸ்டர் ஷிபு தான். டாய் லுங்கை சிறுவயதில் எடுத்து வளர்த்து குங்ஃபூ கற்று கொடுத்ததும் மாஸ்டர் ஷிபு தான். ஆனால் மாஸ்டர் ஊக்வே டாய் லுங்கின் மனதில் தீய எண்ணங்கள் இருப்பதால் அதை டிராகன் வாரியராக தேர்ந்தெடுக்க மறுத்து விடுகிறார். மேலும் அதை சிறையும் வைத்து விடுகின்றனர்.

அதன் பிறகு தான் மாஸ்டர் ஷிபு இந்த ஐந்து சீடர்களையும் தேர்ந்தெடுத்து குங்ஃபூ கற்று கொடுக்கிறார். தற்போது அவர்களுக்கும் அந்த டிராகன் வாரியர் பதவி கிடைக்கவில்லை. அதான் இந்த கோவம். இதன் பிறகு பொ எப்படி ஷிபு மாஸ்டரின் நம்பிக்கையையும், ஐந்து சீடர்களின் நட்பையும் பெற்று, குங்ஃபூ கற்று கொண்டு டாய் லுங்கை வெல்கிறது என்பது தான் கதை. அந்த ஐந்து சீடர்களில் ஒன்றான குரங்குக்கு குரல் கொடுத்திருப்பது ஜாக்கி சான்(Jackie Chan), இன்னொரு சீடரான புலிக்கு குரல் கொடுத்திருப்பது ஏஞ்சலினா ஜோலி(Angelina Jolie). விரியன் பாம்பிற்கு குரல் கொடுத்திருப்பது லூஸி லியு(Lucy Liu).

இதில் பொ அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. அது அடிக்கும் ஒவ்வொரு லூட்டியும் உங்கள் வயிற்றை பதம் பார்ப்பது நிச்சயம். பண்டைய சீனாவை மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். வசனங்கள் அனைத்தும் மிக நகைச்சுவையாக எழுதப்பட்டு படம் முழுவதையும் ஒரு நகைச்சுவை படமாக எடுத்து இருக்கிறார்கள். இந்த மாதிரி முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை கலந்த அனிமேஷன் படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை.

ஸ்ரேக்(Shrek) படம் போல இதன் தொடர்ச்சி படங்களும் வரும் என்று எதிர்பார்கிறேன். இவ்வருடத்தின் மிக பெரிய ஹிட் படங்களின் வரிசையில் இதுவும் கண்டிப்பாக இருக்கும் என்பது நிச்சயம். ஆகமொத்தத்தில் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய படம் இது. இப்படத்தின் வலைப்பூவை காண இங்கே சொடுக்கவும்.

பப்பு கான்ட் டான்ஸ் பட் டி.ஆர் கேன்

ஏ.ஆர். ரஹ்மானுடைய சமீபத்திய பாட்டு கேட்டீங்களா? ஒரு ஹிந்தி படத்துக்கு போட்டிருக்கார். பாட்டெல்லாம் சும்மா டக்கரா இருக்கு. அதுல ஒரு பாட்டு தான் 'பப்பு கான்ட் டான்ஸ் சாலா' என்கிற பாட்டு. சரியான பார்ட்டி(Party) சாங் இது. பாட்டுகளை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

அமீர் கான் தயாரிச்ச படம் இது. ஜெனிலியா தான் ஹீரோயின். ஹீரோ இம்ரான் கான் அமீர்கானுடைய சொந்தம். படத்தின் பெயரை சொல்லவே இல்லையே. படத்தின் பெயர் 'ஜானே து யா ஜானே நா'(Jaane Tu Ya Jaane Na), அப்படீனா 'உனக்கு தெரியுமோ தெரியாதோ'.

படம் எப்படி இருக்கும்னுலாம் தெரியல. இதுல வர அந்த 'பப்பு கான்ட் டான்ஸ்' பாட்டுக்கு நம்ம டி.ஆர் டான்ஸ் ஆடுனா எப்படி இருக்கும்னு நெனச்சி பார்த்தேன். அதை அப்படியே எடிட்டும் பண்ணிட்டேன். சும்மா சொல்ல கூடாது, இந்த வயசுலயும் மனுஷன் என்னமா டான்ஸ் ஆடறார். அதான் குட்டி முப்பத்திரெண்டு அடி பாயுது போல. பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.


Thursday, June 5, 2008

டி.ஆரும் என் சண்டையும்

கடந்த ஞாயிற்று கிழமை காலையில் இருந்து கால்பந்து போட்டி(ஜெயித்தும் விட்டோம்), பார்ட்டி என பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து ஒரு நாலு மணிக்கு வீடு திரும்பினோம். சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டு நானும் தங்கமணியும் பேசத் தொடங்கினோம். இந்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே சண்டையில் வந்து முடிந்தது.

அதன் பின் இருவரும் எதுவும் பேசாமல் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தோம். நல்ல வேளையாக டிவி ரிமோட் என்னிடம் இருந்தது. இந்த மாதிரி ஏற்கனவே சண்டையில் இருக்கும் போது நாங்கள் இருவரும் ரிமோட்டுக்காக சண்டை போடுவதில்லை. நானும் சன் டிவி, விஜய் டிவி என மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தேன், நிகழவிருக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை பற்றி சற்றும் அறியாதவனாய். அப்போ தாங்க அந்த சம்பவம் நடந்தது. சன் டிவியில் ஏதோ படம் ஆரம்பித்தது. சரி, இதையாவது பார்ப்போமே என்று ஆவலாக ஒலியை ஏற்றி வைத்தால், அது நம்ம டிஆரின் 'வீராசாமி'யாம். எனக்கு தூக்கி வாரி போட்டது. தமிழ்மணத்தில் ஒருவர் விட்டிருந்த எச்சரிக்கை எனக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது.

சரி மாற்றி விடலாம்னு நினைத்த போது எனக்கு திபீர்னு ஒரு வில்லத்தனமான யோசனை தோன்றியது. அப்பாவியான என்னிடம் சண்டை போட்ட தங்கமணியை பழி வாங்க இது தான் சரியான சந்தர்ப்பம். உடனே இன்னும் சற்று ஒலியை ஏற்றி வைத்து அதே படத்தை வைத்தேன். இந்த படத்தை பற்றி தெரியாத தங்கமணியும் ஏதோ புதிய படம் என்று ஆவலாக பார்த்துக்கொண்டிருக்க, அப்போது தான் டி.ஆரின் அறிமுகக் காட்சி. ஓர கண்ணால் தங்கமணியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை கவனித்தேன். "முழுசா சந்திரமுகியாக மாறி இருக்கும் உன் மனைவி கங்காவை பார்" என்று தலைவர் சொன்ன வசனம் நினைவில் வந்து கொஞ்சம் பயமுறுத்தியது.

இதுதாங்க அந்த அறிமுக பாடல்:



மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி ஒரு நிலைமையில் இருந்த தங்கமணிக்கு மேலும் சில அதிர்ச்சிகள். என்னன்னு கேக்கறீங்களா? அதையும் நீங்களே பாருங்கள்:

இந்த பாட்டுல என்னமா டான்ஸ் ஆடி இருக்கார் பாருங்க. விரைவில் இவர் ஜோடி நம்பர் 1னில் நடுவரா கூட வரலாம். எதுக்கும் தயாராகிக்கோங்க.



இந்த பாட்டுல அவருடைய ஸ்டைலும், அழகும் வெளிப்படும். பில்லா படத்த அஜித்துக்கு பதில் இவர் பண்ணி இருந்தா, இன்னும் டக்கரா இருந்திருக்கும் இல்ல? அதை நெனச்சாலே எனக்கு வார்த்தை வரமாட்டேங்குது.



படையப்பா படத்துல ரஜினி, ரம்யா கிருஷ்ணன் முன்னாடி ஊஞ்சல இழுத்து போட்டு ஒக்காருவாறே, அந்த காட்சி ஞாபகம் இருக்கா? இப்போ இந்த காட்சிய பாருங்க, அதை விட எவ்வளவு பிரமாதமா செஞ்சி இருக்கார் பாருங்க டி.ஆர்.


இதுல டி.ஆரின் தங்கச்சியை காதலிக்கும் இன்னொரு ஹீரோ படம் பூராவும் காதில் ஒரு சாம்பிராணி பத்தியை சொருகி கொண்டிருப்பார். படம் முடியறதுக்குள்ள அதை யாராவது கொளுத்துவாங்கனு எதிர்பார்த்தேன். கடைசி வரை யாரும் அதை கொளுத்தவே இல்லை:( எங்க இருந்து தான் இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் பிடிப்பாரோ?

படத்துல உண்மையிலேயே ரொம்ப கஷ்ட பட்டு நடிச்சது மும்தாஜா தான் இருக்கும் போல. பின்ன இவர லவ் பண்ற மாதிரி இல்ல நடிக்கணும். அவங்க பேசுன ஒரு வசனம் இன்னும் என் நெஞ்சில அப்படியே நிக்குது:

"நீ என் மனச தான்யா திருடுன, ஆனா நான் நீ குளிச்சிட்டு வச்ச சோப்ப திருடி அத தேச்சி தான்யா குளிக்கிறேன்."

இதை நெனச்சி பார்க்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கே, அவங்களுக்கு எப்படி இருந்துதோ?

இப்போ நம்ம கதைக்கு வருவோம். இந்த மாதிரி தங்கமணியோட சண்டைல இருக்கும் போது, எப்பவுமே கஷ்டப்பட்டு முகத்த இறுக்கமாகவே வச்சுக்கிட்டு இருக்கணும். இல்லைனா நான் சண்டைல தோத்தது போல ஆகிவிடும். இதுக்காகவே எவ்வளவோ கஷ்டப்பட்டு என் சிரிப்பை எல்லாம் அடக்கி கொண்டு இந்த படத்தை பார்த்துகிட்டிருந்தேன். ஆனால் இந்த காட்சிகளை பார்த்துவிட்டு என்னால் தாங்க முடியாமல் சிரித்து விட்டேன். உங்களால சிரிக்காம இருக்க முடியுதானு முயற்சி பண்ணி பாருங்க.

நல்ல வேளை, பாஸ்கர் இவர பிடிச்சிருக்காரு, இல்லனா....யய்யாடி!


இந்த படத்தோட சேர்த்து இவர் மொத்தம் நாற்பதொன்பது தங்கச்சிகளை மார்மேலையும், தோள்மேலையும் போட்டு வளர்த்திருக்கார். அடுத்த படத்தோட அரை சதம் அடித்து விடுவார்.



இதை பார்த்து விட்டு தங்கமணியின் கைகள் தலைவலி தைலத்தை நோக்கி எட்டியது. நான் சிரித்ததை பார்த்த தங்கமணி, ஜெயித்து விட்ட தோரணையோடு என்னை பார்த்து "மரியாதையா சேனலை மாத்துரியானு" அன்பு கட்டளை இட்டார். நானும் படம் முடியபோவுது, கிளைமாக்ஸ் பார்த்துட்டு மாத்திடறேனு சொல்லிட்டு அந்த கொடுமையையும் பார்த்தேன். இதுக்கு மேலயும் தாங்க முடியாதுன்னு தங்கமணி எழுந்து சமயகட்டுக்குள்ள காபி போட போயிட்டாங்க. அப்பாடா எப்படியோ சண்டை தீர்ந்தது, ஆனா ஒரு சண்டே இப்படி வீணாகி போச்சே!

நீங்க எங்க போறீங்க. இருங்க, தயவு செய்து இதையு பார்த்துட்டு போங்க. இவ்வளோ கொடுமையையும் பார்த்த நீங்க, இத பார்க்க மாட்டீங்களா? படத்துல ஒருவிதத்துல ரொம்ப ஆருதாலான காட்சியே இதுதாங்க. ஏன்னா அவரு அபீட் ஆயிடுவாரு. எவ்வளவு வித்தியாசமா எடுத்திருக்கார்னு பாருங்க. இதுவரை தமிழ் சினிமாவில் இது மாதிரி துணிச்சலான கிளைமாக்ஸ் யாரும் வச்சு இருக்க மாட்டாங்க. வழக்கமா படத்துல கணவர் இறந்ததும், மனைவி அப்படியே கணவர் மேல விழுந்து உசுர விட்டுடுவாங்க. ஆனா இந்த படத்துல டி.ஆர் இறந்ததும், அவருடைய எதிர் வீட்டு காரரோட பொண்டாட்டி, அதாங்க மும்தாஜ் உசுர விடறாங்க. ச்சே, 'அந்த ஏழு நாட்கள்' படத்தோட கிளைமாக்ஸ் எல்லாம் ஒரு கிளைமாக்ஸ்ஸா?




விகி(wiki)லையும் போயி இவர கலாய்ச்சது யாருன்னு தெரியலைங்க. விகிய படிச்சுட்டு என்னால நம்பவே முடியல. நீங்களே பாருங்களேன்.

Tuesday, June 3, 2008

அவங்களும் திருந்த மாட்டாங்க, இவங்களும் திருந்த மாட்டாங்க

"ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சனையில் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை"னு கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா திட்டவட்டமாக அறிவிச்சிருக்காராம். இன்னும் விரிவாக படிக்க இங்கே சொடுக்குங்கள்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துல இவங்க விட்டு கொடுக்க என்ன இருக்கு? அதை இவ்வளோ நாள் தள்ளி வச்சு நாம தான் விட்டு கொடுத்து இருக்கோம். இதை கேக்கவா கருணாநிதி இவ்வளோ நாள் இந்த திட்டத்தை தள்ளி வச்சார்? இந்த பிரச்சனையும் தீராது போல!

இதை படித்து கொண்டிருக்கும் போதே, இந்த செய்தியும் படித்தேன்:

பெங்களூரில் தமிழ் படக் குழு மீது கன்னட அமைப்பு தாக்குதல்

இதை படித்த நீங்கள், இதையும் படியுங்கள்:

"பெங்களூரில் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடா, பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரத்தை திடீரென சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் இனிமேல் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம், சகோதரர்களாக இருப்போம் என கெளடா அறிவித்துள்ளார்."

இது தானா சார் உங்க டக்கு ஸாரி வாக்கு? நம்ம ஆளுங்களையும் சொல்லணும். இவங்களுக்கு படப்பிடிப்பு நடத்த வேற இடமே கிடைக்கலியா? நம்ம ஊருல இல்லாத அப்படி என்னத்த கண்டாங்க அங்க? எப்படியும் எடுக்க போறது மொக்க படம் தான். மதியாதார் வாசலையே மிதியாதேனு சொல்லுவாங்க. இவங்க என்னடானா, போட்டு மிதிப்போர் வாசலையே திரும்ப திரும்ப மிதிக்கறாங்க. திருந்துங்கடா. இல்ல சத்யராஜ் அண்ணாச்சி கிட்ட போட்டு கொடுத்துடுவேன்.

Monday, May 26, 2008

புலாவ் தியோமன் - ஓர் அழகிய தீவு

நான் ரொம்ப நாளா பயண கட்டுரை எழுதனும்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். இப்போ தான் அதுக்கு நேரம் கை கூடி வந்திருக்குன்னு நினைக்கிறேன்(எழுத இப்போதைக்கு வேற ஒண்ணும் தோனலைங்க அதான்;). என்னுடைய முதல் பயண கட்டுரையா இதுவரை நான் பயணித்ததிலேயே என்னை மிகவும் கவர்ந்த இடமான 'புலாவ் தியோமன்'னை பற்றி எழுதுகிறேன்.


சிங்கப்பூருக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு சொர்க்கம் இது எனலாம். ஏன், மலேசியா நாட்டில் உள்ள சொர்கம்னு சொல்ல கூடாதான்னு குண்டக்க மண்டக்க கேள்வி கேக்க கூடாது. நான் சிங்கப்பூரில் வசிப்பதால் அப்படி எழுதினேன். புலாவ் தியோமன் மலேசியா நாட்டில் உள்ள ஒரு அழகிய தீவு ஆகும். புலாவ் என்றால் மலாய் பாஷையில் தீவு என்று அர்த்தம். இங்குள்ள பல தீவின் பேர்களுக்கு முன்னால் இந்த 'புலாவ்' என்ற வார்த்தை இருக்கும். தியோமன் உலகின் முதல் பத்து அழகிய தீவுகளில் ஒன்றாக விளங்கிற்று. இப்பவுமானு தெரியல. இதை பற்றி இன்னும் விலாவாரியாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்.


நான் தாய்லாந்து நாட்டில் இருக்கும் 'புக்கெட்' தீவுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் இங்கு கிடைக்கும் தனிமையும், அமைதியும் அங்கு இல்லை. ஒரு இரண்டு தெருவை சேர்த்து வைத்தா எவ்வளவு பெருசா இருக்குமோ அந்த அளவுக்கு ஒரு சிறிய இடம், அதில் ஒரே ஒரு ரிசோர்ட்(resort), அதற்கு சொந்தமான ஒரு இருபது, முப்பது குடில்கள், குடிலின் முன் பக்கத்தில் ஒரு இருபதே மீட்டர் தொலைவில் கடல், பின் புறம் பெரிய மலையில் அடர்ந்த காடு, இது தாங்க புலாவ் தியோமன்.


நாங்கள் அங்கு சென்ற நேரமும் மிகச்சரியான நேரம் போல. மொத்தமே ஒரு நாப்பது பேர் தான் இருந்திருப்பார்கள். மூன்று நாள், இரண்டு இரவு அங்கு தங்கி இருந்தோம். மார்ச் முதல் அக்டோபர் வரை இங்கு பயணம் செய்ய தகுந்த நேரமாகும். நவம்பர் முதல் பிப்ரவரி வரை இந்த தீவு மோசமான காற்று மற்றும் தட்பவெப்ப நிலையால் மூடப்பட்டிருக்கும்.

இங்கு செல்வதற்கு மெர்சிங்(Mersing) என்னும் இடத்தில் இருந்து பயணப்படகு மூலம் செல்ல வேண்டும். இந்த பயணத்திற்கு ஒரு மணி நேரம் ஆகும். சிங்கப்பூரில் இருந்து மெர்சிங் செல்வதற்கு பேருந்தில் ஒரு ஆறு மணி நேரம் ஆகும். பெர்ஜாயா ஏர்(Berjaya Air) என்னும் விமானம் மூலம் கூட இங்கு செல்லலாம். இது பெர்ஜாய ரிசோர்ட்டில் இருக்கும் விமான தளத்தில் வந்து இறங்கும். அங்கிருந்து மற்ற ரிசோர்ட்களுக்கு செல்ல பயணப்படகு மூலம் செல்ல வேண்டும்.

கீழே உள்ள படத்தில் நாங்கள் மேர்சிங்கில் இருந்து தியோமனுக்கு பயணப்படகில் புறப்பட்டு கொண்டிருக்கிறோம்.


தியோமனில் ஒவ்வொரு ரிசோர்டும் இப்படி தான் தனித்தனியாக இருக்கும்.

ஒரு ரிசோர்ட்டில் இருந்து பக்கத்தில் இருக்கும் ரிசோர்டிற்கு செல்ல பயணப்படகு மூலம் தான் செல்ல முடியும். நீச்சல் தெரிந்தால் நீந்தி செல்லலாம்.

இங்கு கடல் நீர் மிக தெள்ளத்தெளிவாக இருக்கும். தண்ணீருக்கு அடியில் அனைத்தும் மிகத்தெளிவாக தெரியும். கரையில் இருந்தே இங்கு பவழப்பாறைகள் ஏராளமாக இருக்கும். கடற்கரையில் இருக்கும் பவழப்பாறைகள் பெரும்பாலானவை இறந்து போனவைகளாக இருக்கும். சற்று உள்ளே சென்றால் கண்ணை கவரும் வகையில் மீன்களும், பவழப்பாறைகளும் இருக்கும்.


நாங்கள் தங்கி இருந்த விடுதி இது தான். இதில் மொத்தம் நாலு அறைகள் இருக்கும். மேலே உள்ள இரண்டில் நானும் என் கூட வந்த நண்பரும் தங்கி இருந்தோம். இரண்டையும் உள்ளே உள்ள இரு கதவுகளை திறந்து இணைத்து கொள்ளலாம். இதிலிருந்து ஒரு முப்பது மீட்டர் தொலைவில் கடற்கரை. பின்னாடி அடர்ந்த காட்டுடன் மலை. காலையில் எழுந்தவுடன் அந்த மாடி முகப்பில் குந்திக்கிட்டு, கடற்கரையை பார்த்து கொண்டே தேநீர் அருந்துவதில் உள்ள சுகம் இருக்கே, அது சொல்லி தெரியாது.


இந்த விடுதியை பாருங்கள். இது கடற்கரைக்கு மிக அருகில் உள்ளது. கதவை திறந்தால் நேரா கடல் தான். இரவு வந்தால் இங்கு கடல் சற்று உள் வாங்குவதை கண்டு சற்றே பயம் எட்டிப் பார்த்தது. எல்லாம் சுனாமி பயம்தான். இங்கு ஓடி ஒளிய கூட முடியாது. விடிய விடிய அது தானாக பழையபடி மேலே வந்துவிடும்.



இந்த படத்தில் தெரிவது பக்கத்தில் உள்ள ஒரு நீர் வீழ்ச்சி. இங்கு செல்ல எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. இங்கிருந்து பார்ப்பதற்கே மிக அழகாக இருந்தது.



இருந்தாலும் நாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே ராக் பால்ஸ் என்ற இந்த நீர் விழுச்சி இருந்தது. காட்டுக்குள் ஒரு கிலோமீட்டர் உள்ளே செல்ல வேண்டும். சுத்திலும் அடர்ந்த காடு. ஆள் நடமாட்டமே இல்லை. கொஞ்சம் பயமாக இருந்தது. கையில் கிடைத்த இரண்டு குச்சியை எடுத்து கொண்டு நடந்தோம். கொஞ்ச தூரம் சென்றதும் வழி தெரிய வில்லை. திரும்பி விடலாம் என்று எண்ணிய போது ஒரு அழகிய சீன ஜோடிகள் குளித்து விட்டு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்பாடா என்று அவர்கள் வந்த வழியே சென்று அந்த நீர்வீழ்ச்சியை அடைந்தோம். ஒரு பத்து பேர் அங்கு இருந்தனர். தண்ணீர் சுத்தமாகவும், இனிப்பாகவும், சில்லென்று இருந்தது. ஒரு குளியலை போட்டு விட்டு திரும்பினோம்.
இந்த படத்தில் நீங்கள் பார்ப்பது கடல் கரையிலேயே தெரியும் பவழப்பாறைகள். தண்ணீருக்குள் நடந்தே சென்றால் இன்னும் அழகான கண்ணை கவரும் வகையில் பவழப்பாறைகளை காணலாம். மிகக் குறைந்த விலைக்கு அங்கு கிடைக்கும் காப்புச்சட்டையும்(Life Jacket), முகமூடியும்(Mask) வாங்கி கொண்டால் ஸ்நோர்கெல்லிங்(Snorkelling) செய்து இன்னும் நன்றாக பார்க்கலாம்.

ஸ்குபா டைவிங், ஸ்நோர்கெல்லிங், வாட்டர் பைக், கநோயிங்(Canoeing) போன்ற தண்ணீர் விளையாட்டுகளும் இங்கு இருக்கிறது. ஸ்குபா டைவிங்கிற்கு இங்கு முறையான பயிற்சியும் அளிக்கிறார்கள். பல வெளிநாட்டினர் இங்கு ஸ்குபா டைவிங் கற்று கொள்ள வருகிறார்கள். பயிற்சி முடிவில் அதற்கான சான்றிதழும் தருகிறார்கள்.


மரைன் பார்க்(Marine Park) என்றொரு இடத்திற்கு சென்றால் பலவகையான வண்ண வண்ண மீன்களை காணலாம். அவற்றுடன் சேர்ந்து நீங்களும் நீந்தலாம். கடலின் கரையில் இருந்து ஒரு பெரும் பகுதியை அடி வரை வலை போட்டு தனியாக பிரித்திருப்பார்கள். மீன்களால் அதை மீறி கடலுக்குள் செல்ல முடியாது. கீழே உள்ள படத்தில் நான் மீன்களுக்கு உணவு அளிப்பதை காணலாம்.


இது தான் நாங்கள் தங்கி இருந்த ரிசோர்ட்டின் பீச் பார். இங்குள்ள உணவகத்தில் உணவு வகைகள் எல்லாம் மிகவும் ருசியாக இருக்கும். குறிப்பாக கடல் வகை உணவுகள். அதனால் எங்களுக்கு சாப்பாட்டு குறையே தெரியவில்லை. கொஞ்சம் பணக்குறை தான் தெரிந்தது. ஏனென்றால் இங்கு உணவு கொஞ்சம் விலை கூட.



நீச்சல் குளம், மேசைக் கோல் பந்தாட்டம்(Snooker), ஸ்பா(Spa) போன்றவைகளும் இங்கு உள்ளன. ஸ்நூக்கர் மட்டும் ஆடினோம். மற்ற இரண்டும் முயற்சி செய்து பார்க்கவில்லை. நாங்கள் தங்கி இருந்த இடத்தின் கடற்கரை நீளம் இது தான். அந்த கடைசியில் ஒரு குட்டி தீவு தெரிகிறதா? அதற்கும் சென்று பார்த்தோம். ரொம்ப அழகான தீவு அது. சுற்றிலும் தெள்ளத்தெளிவான தண்ணீர். கொஞ்சம் சாகசமானதாகவும் இருந்தது.
போகும் வழியில் இந்த பழைய படகுகளை கண்டதும் அனகோண்டா படம் ஞாபகத்துக்கு வந்து பயமுறுத்தியது.

இந்த படத்தில் எனக்கு வலது பக்கத்தில் தான் அந்த குட்டி தீவு. என் பின் புறத்தில் தெரிவது பெர்ஜாயா ரிசோர்ட். அப்படியே தண்ணிரில் நீந்தி சென்றால் அந்த ரிசோர்ட்டுக்கு சென்று விடலாம். தண்ணீரை பார்த்தீர்களா? எவ்வளவு சுத்தமாக இருக்கிறது. இங்கே ஒரு இரண்டு மணி நேரம் செலவழித்தோம்.

இந்த இடத்தில் தான் நான் எனது கால் தடுக்கி என் புகைப்படக்கருவியை தண்ணீரில் நனைத்து விட்டேன். அதுக்கப்புறம் அது வேலை செய்யவில்லை. அதை கொடுத்து விட்டு வேறு புகைப்பட கருவியை வாங்குவதாக ஆயிற்று. ரொம்ப வருத்தமாக இருந்தது. நல்ல வேளையாக நான் அதில் பிடித்த படங்கள் ஒண்ணும் ஆகவில்லை. உப்பு தண்ணீர் புகைப்பட கருவிக்கு பயங்கரமான எதிரி. ஜாக்கிரதையாக இருங்கள்!

அவ்வளோதாங்க! நாங்கள் தியோமன்னை விட்டு கிளம்பும் போது அந்த வானமே கண்ணீர்விட்டு அழ தயாராகி விட்டது. கிளம்பும் போது படகில் இருந்து எடுத்த படத்தை நீங்களே பாருங்கள். அதை கான மனம் இல்லாமல் நாங்கள் பிரியா விடை பெற்று கொண்டு கிளம்பி விட்டோம்.

Thursday, May 15, 2008

ஜோடி - மே 2008 PIT புகைப்படப் போட்டி

ஒரு இருபது, முப்பது படத்தை தேடி எடுத்து வச்சுக்கிட்டு எதை போட்டிக்கு தேர்வு செய்யறதுன்னு ரொம்ப கொழம்பி போயிட்டேன். இன்னும் கொழப்பம் தீரலை. வந்து பார்த்தீங்கனா என் தேர்வு சரியான்னு சொல்லிட்டு போங்க.

முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.







மேலே உள்ள படம் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.