Wednesday, August 29, 2007

மழலைப் பட்டாளம்!

ஒரு நாள் எங்க வீட்டுக்கு சில விருந்தாளிங்க வந்திருந்தாங்க. அதுல சில பொடிசுகளும் உண்டு. எனக்கு கொஞ்சம் போர் அடிச்சதுனால ஒரு பொடியன கூப்பிட்டு பேச்சு கொடுத்தேன்.

நான், "டேய், இங்க வாடா!"

பொடியன், "என்ன?"

நான், "இங்க வாடா சொல்றேன்"

அவனும் கிட்ட வந்தான். கொஞ்ச நேரம் அவன் கிட்ட வழக்கம் போல, பேரு என்ன, என்ன படிக்கிற, நல்லா படிப்பியான்னு மொக்கைய பொட்டுட்டு...சரி, ஒரு கதை சொல்லுடானு கேட்டேன். அவனும் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, கதை சொல்ல ஆரமி்ச்சான்.

நான், "நல்ல காமடி கதையா சொல்லு"

பொடியன், "சரி...ஒரு ஊர்ல ஒரு ஆளு இருந்தானா. அவன் ஒரு நாள் ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தானா..."

திடீல்னு கதைய நிறுத்திட்டு பொடியன் என்கிட்ட, "'ஹும்' சொல்லுங்க..."
நான், "'ஹும்' சொல்லனுமா? எதுக்கு?"

பொடியன், "என் பாட்டி அப்படி சொல்ல சொல்லி தான் கதை சொல்லுவாங்க"
நான், "உன் பாட்டி நீ எங்க தூங்கிடப் போறியோன்னு அப்படி சொல்லி இருப்பாங்க"

பொடியன், "அதெல்லாம் இல்ல...நீங்க ஹும் சொன்னா தான் நான் கதை சொல்லுவேன்"

நான், "சரி, ஹும்"

பொடியன், "எங்க விட்டேன்?"

நான், "அதான் அந்த ஆளு ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தானே"

பொடியன், "ஆமா...அவன் ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தானா..."

நான், "ஹும்"

பொடியன், "அப்படியே நடந்துகிட்டே இருந்தானா..."

நான், "ஹும்"

பொடியன், "ரொம்ப தூரமா நடந்து போயிட்டு இருந்தானா"

நான், "சரி எவ்வளவு நேரம் தான் நடப்பான்...அப்புறம் சொல்லு?"

பொடியன், "அப்போ திடீல்னு ஒரு வாழபயம் தோல் மேல கால வச்சி வழுக்கி விழுந்துட்டான்" அப்படின்னு சொல்லிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறான் அந்த பொடியன்.

நான், "ஹும் அப்புறம்?"

பொடியன், "அவ்வளோதான்! நீங்களும் சிரீங்க!"

நான், "அடப்பாவி இதுக்காடா இத்தன கிலோ மீட்டர் அந்த ஆள நடக்க வச்ச?"

நான் மனசுக்குள், "உனக்கு வேனும்டா...உனக்கு வேனும். கதையா கேக்குற கதை?"


**********

என் பிரண்ட் வீட்டு மாடில ஒரு டியுஷண் சென்டர் இருந்தது. அங்க முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள பசங்களுக்கு டியுஷன் எடுப்பாய்ங்க.

ஒரு நாள் அங்க டியுஷன் படிக்க வந்த இரண்டு குட்டி பசங்க, அவங்க கிலாஸ் மி்ஸ்ஸ பத்தி பெருமையா பேசிக்கிட்டு...இல்ல சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. என் மி்ஸ் தான் சூப்பர், என் மி்ஸ் அடிக்கவே மாட்டாங்கனு...அப்படி இப்படின்னு! என் பிரண்டு அதுல ஒரு பயன கூப்பிட்டான்.

பிரண்ட்: உன் பேரு என்னடா?

பையன்: சந்திரமொவ்லி

பிரண்ட்: எந்த ஸ்கூல்?

பையன்: அலகப்பா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல்

பிரண்ட்: எந்த கிலாஸ் படிக்குற?

பையன்: 1ஸ்ட் ஸ்டாண்டர்ட்

பிரண்ட்: உங்க கிலாஸ் மி்ஸ் பேரு என்ன?

பையன்: லதா

பிரண்ட்: உங்க மி்ஸ் அழகா இருப்பாங்களா?

பையன்: ஹும்...நல்ல இருப்பாங்க!...நான் போகனும்!

பிரண்ட்: இருடா...உங்க மி்ஸ்ஸுக்கு கல்யாணம் அயிடுச்சா?

பையன்: தெரியாது!

பிரண்ட்: என்னாடா நீ...இது கூட தெரியாம இருக்க...சரி நாளைக்கு கேட்டுட்டு வறியா?

பையன்: சரி!

பிரண்ட்: என்ன போட்டு கொடுத்துடாதே உங்க மி்ஸ் கிட்ட...நான் உனக்கு சாக்லேட் வாங்கி தர்றேன். சரியா?

பையன்: ஆங்...சரி!

பிரண்ட்: ஆமா...எப்படி மி்ஸ்ஸுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு தெரிஞ்சிப்ப?

பையன்: அதுவா...எங்க மி்ஸ்ஸோட பையன் என்கூட தான் படிக்கிறான் . . . அவன் கிட்ட கேட்டு சொல்றேன். சரி...நான் போயிட்டு வரேன் அங்கிள்!

பிரண்ட் என்கிட்ட: ஹவ்வ்வ்வ்....சாய்ச்சி புட்டாங்க மச்சான்!


***********

ஒரு நாள் என் பிரண்ட் அவன் பையன பிளே ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர போயிட்டு இருந்தான். என்ன வழியில பார்த்துட்டு என்னையும் கூட வர சொன்னான். இல்லடா நான் வரலன்னு சொன்னாலும் அவன் கேக்கவே இல்ல. சரின்னு நானும் கூட போனேன்.

ஸ்கூல் உள்ள போனோம். அப்ப தான் ஸ்கூல் விட்டு எல்லாம் வீட்டுக்கு போயிட்டிருந்தாங்க. என் பிரண்டோட பையன் வந்தான். என் பிரண்ட் உடனே அவனுக்கு 'கிவ் பைவ்' கொடுத்தான். இப்போ எல்லா சின்ன பசங்களும் இதைத்தான் செய்றாங்க. ஒன்னும் இல்ல, நம்ம இரண்டு கைய நீட்டுனா, மற்றவர் அவங்க இரண்டு கையால நம்ம கைய தட்டுவாய்ங்க. அவ்வளோதான்!

என் பிரண்டு என்னையும் 'கிவ் பைவ்' கொடுக்க சொன்னான். நானும் அப்படியே உட்காந்து, அவனுக்கு 'கிவ் பைவ்' கொடுத்தேன். கொடுத்துட்டு எழுந்து பார்த்தா, ஒரு இருபது இருபத்தைந்து பசங்க வேகமா என்ன பார்த்து ஓடி வராங்க. எனக்கு ஒன்னுமே புரியல. எல்லாரும் கிட்ட வந்த உடனே என்னன்னு கேட்டா, எல்லாருக்கும் 'கிவ் பைவ்' கொடுக்கனுமாம் நான். எல்லாம் என் பிரண்ட் பையனோட கிலாஸ் மேட்ஸாம். ஒரு பதினைந்து நிமி்ஷம், உக்காந்து எல்லாருக்கும் என் கை சிவக்க சிவக்க 'கிவ் பைவ்' கொடுத்தேன்:(

சரி எல்லாம் முடிச்சுதுன்னு நம்பி எழுந்தா, இன்னு ஒரு அஞ்சி பேரு...அவங்க ஆச தீர எங்கிட்ட 'கிவ் பைவ்' வாங்கிட்டாங்க!

இதெல்லாம் பக்கத்துல நின்னு பார்த்து என் பிரண்ட் ரசிச்சிக்கிட்டிருக்கான்! நான், "டேய் நான் தான் அப்பவே வர மாட்டேன்னு சொன்னனேடா . . . கேட்டியா? ஒரு சிங்கத்த கூட்டியாந்து, சின்னாபின்னமாக்கிட்டியேடா"

Monday, August 27, 2007

அஞ்சலி!

இது போன்ற சம்பவங்கள் சில அடிஅடிக்கடி நடந்து நமக்கு மரணம் தவிற்கமுடியாதது என்பதை நினைவூட்டுகிறது. இது வரை வடக்கில் தான் இது போன்ற குண்டு வெடிப்புகள் நடைபெரும் என்று நினைத்திருந்தவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி ஆகும். நமது தமி்ழ் நாட்டிலும் இது நடைபெறக்கூடும்.

நான் சுற்றித்திறிந்த இடத்தில் குண்டு வெடித்ததை அறிந்து அடைந்த பீதியை விட, அதில் சிக்கி மாண்டவரின் விதியை நினைக்கும் பொழுது ஏற்படும் மனத்துயரம் மேலோங்கி நிற்கிறது!


எதுவும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது சரிதான். இது போன்று பற்பலச் சம்பவங்கள் இன்றும் கேஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அவை எல்லாம் நமக்கு வெறும் செய்தியாகத்தான் இருக்கின்றன. மரணம் நம்மை எப்பொழுதும் சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது. அது எக்கணமும் நம்மை வந்து கவ்விக்கொள்ளும், ஆகையால் சற்று கவனமாக இருப்பீர்களாக!

புனிதப்போர் என்று சொல்லி இப்படி பொது மக்களை கொன்று குவிக்கும் இவர்கள் எப்பொழுது தான் திருந்துவார்களோ?

ஹைதராபாத்தில் நேற்று நடந்த இந்த குண்டுவெடிப்பில் தங்களின் இன்னுயிரை நீத்து இறைவனடி சேர்ந்த அனைவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். அவர் தம் குடும்பத்திற்கு ஆண்டவன் ஆறுதலை வழங்கட்டும்.

Saturday, August 25, 2007

எனது ஐயப்பாடுகள்!

1. பாவம் செய்தவர்கள் தான் இந்த பூமி்யில் மனிதனாய் வந்து பிறக்கிறார்களா? அப்படியானால் அவ்வையார் சொன்ன, "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்பது தவறா?

2. நாம் உயிர் நீத்த பின் நமது ஆத்மா எங்கு செல்கிறது? நிறைவேறாத ஆசைகளோடு இறப்பவர்களின் ஆத்மா ஆவியாக அலைவது உண்மையா? அப்படியானால் நாட்டில் முக்கால் வாசி பேர் ஆவியாகத்தான் அலைவார்கள் இல்லையா? மேலும் மற்ற உயிரினங்களின் ஆத்மாக்கள் எங்கு செல்கிறது?

3. வாயாடி, விதவை, மலடி, வேசி இதற்கெல்லாம் ஆன்பால் என்ன?

4. ஆண்டவனின் படைப்பில் அனைத்திற்கும் ஓர் அர்த்தமுண்டு. ஆயினும், மனிதனைத் தவிர மற்ற அனைத்து (பெரும்பாலும்) உயிரினங்களுக்கும் பிறவியிலேயே நீந்தத் தெரிகிறதே, ஏன்?

5. இராமாயணம் உண்மையா? அப்படியானால் இராவணனுக்கு பத்து தலை இருந்தது உண்மையா? அல்லது பத்து கிரீடமா? பத்து தலை இருந்தது உண்மையானால், அவரால் ஒரே நேரத்தில் பத்து பேரிடம் வெவ்வேறு விஷயத்தை பேச முடியுமா? அவர் தினமும் பத்து தலையில் இருக்கும் பற்களையும் துலக்குவாரா? நான் இராமாயணம் படித்ததில்லை ... தொலைக்காட்சியில் பார்த்ததுதான்;)

இப்போதைக்கு இவ்வளவுதான். இது ஒன்றும் கடினமான கேள்விகள் இல்லை என்று நினைக்கிறேன். யாராவது எனது சந்தேகங்களை கண்டிப்பாக தீர்த்து வைப்பார்கள் என்று நம்புகிறேன்.

என்ன? இதுல சில கேள்விகளை பார்த்தா சிறிப்பு வருதில்ல? ஆனா சில கேள்விகள் யோசிக்க வைக்குதில்ல? இதுக்கு பேரு தான் சிரிக்க வச்சு, சிந்திக்க வைக்கிறது;)

Wednesday, August 22, 2007

அரசியல் கூத்து!

நம்ம ஊரு அரசியல்வாதீங்க எல்லாம் சேர்ந்து பேசிகிட்டா எப்படி இருக்கும்? அதுவும் தமி்ழ் சினிமாவுல வர பன்ச் டைலாக்ஸ் யூஸ் பண்ணி பேசினா எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை. இது வெறும் நகைச்சுவைக்காக செய்த கற்பனை தான்.

கலைஞர்: சமீபத்துல லயோலா கல்லூரி நடத்துன கருத்து கணிப்புல எங்க தி.மு.கழகம் தான் முதல் இடத்துல இருக்கு!

ஜெயலலிதா: ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான். நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கை விட மாட்டான்

கலைஞர்: அப்ப, நீங்க நல்லவரா கெட்டவரா? ஹா ஹா ஹா!

ஜெயலலிதா: லூசாப்பா நீ? இது எப்படி இருக்கு? ஹி ஹி ஹி!

விஜயகாந்த்: நிறுத்துங்க! அரசியலுக்கு வந்தவுடனே பழச மறக்கறீங்க, ஜெயிசிட்டா மக்கள மறந்துட்டு இப்படி சண்டை போட்டுக்கறீங்க!

கலைஞர்: கேக்கறவன் கேனப்பயலா இருந்தா கே.பி. சுந்தராம்பாள் ஆர்.பி.சவுத்ரி படத்துல ஹிரோயினா நடிக்குதுனு சொல்லுவியே!

விஜயகாந்த்: அப்படீன்னா?

கலைஞர்: பழமொழி சொன்னா அனுபவிக்கனும்...ஆராயக்கூடாது...

(ராமதாஸ் உள்ளே வருகிறார்)

ராமதாஸ்: ஷாமீ! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!

விஜயகாந்த்: என்ன? நீங்க வெறும் தாஸா இல்ல லார்ட் லபக் தாஸான்னா?

ராமதாஸ்: ஏய்ய்...வேண்டாம்! புயல் அடிச்சி கூட எழுந்துடலாம், ஆனா இந்த தாஸ் அடிச்சு எழுந்ததா சரித்திரமே இல்ல!

விஜயகாந்த்: நீ அடிச்சா பீஸு, நான் அடிச்சா மாஸு!

ராமதாஸ்: ஏய் மாஸு! உயிருக்கு பயப்படாத என் முன்னாடி நீ தூசு!

விஜயகாந்த்: நான் பார்க்க தான் தூசு! சூடானேன் சுளுக்கெடுத்துடுவேன்!

(கார்த்திக் உள்ளே வருகிறார்)

கார்த்திக்: ஹாய்! ஹாய்! ஹாய்! ஹாய்! ஹாய்!

ஜெயலலிதா: நீ எங்கே வந்த? பட்டது போதாதா?

கார்த்திக்: ஹாய் செல்லம்! அதெல்லாம் நீ ஏன் பேசர? அதெல்லாம் நீ பேச கூடாது!

கலைஞர்: அது!

கார்த்திக்: ஆமாம் விஜய், நீங்க கூட்டணி வைக்க மாட்டேன், வைக்க மாட்டேன்னு அடிக்கடி சொல்றீங்களே, நிஜமாகவா?

விஜயகாந்த்: துளசி கூட வாசம் மாறலாம், ஆனா இந்த விஜய்காந்த் வார்த்தை மாறமட்டான்

ஜெயலலிதா: இப்போ தான கொஞ்ச நாள் முன்னாடி வேற மாதிரி சொன்னீங்க?

விஜயகாந்த்: அது போன மாசம்! அய்ங்!

கார்த்திக்: பனம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு, அதுக்கு ஏன்யா இந்த புனிதமான அரசியல பயன் படுத்தறீங்க?

விஜயகாந்த்: ஹி ஹி ஹி! கார்த்திக் நீ ஒன்னும் காமடி கீமடி பண்ணலயே?

கலைஞர்: ஆட்சி முடியிற நாள் தெரிஞ்சிட்டா, ஆட்சி நடத்துற நாள் நரகமாயிடும். ஸுருட்டரது தாங்க முக்கியம்!

ராமதாஸ்: கார்த்திக், நீங்க எங்க கூட்டணி கட்சியில சேர்ந்துக்கறீங்களா?

கார்த்திக்: என்னது? கூட்டணியா? அய்யோ, ஆளை விடுங்க!

ராமதாஸ்: ஏன்?

கார்த்திக்: கட்சி போனா வரும், உயிர் போனா வருமாங்க?

ஜெயலலிதா ராமதாஸிடம்: நீங்க இப்ப எல்லாம் என் எதிரி கிட்ட நேர்ல பேசறத விட பத்திரிக்கை மூலமா தான் நிறைய பேசறீங்க போல?

ராமதாஸ்: அவங்க ஒரு அறிக்கை விட்டா, நாங்க நூறு அறிக்கை விடுவோம்!

ஜெயலலிதா: அப்போ எதுக்கு அந்த பக்கம் போனீங்க? இங்க வந்து இருக்கலாம்ல?

ராமதாஸ்: நீங்க விரும்புற கட்சிய விட, உங்கள விரும்பற கட்சியில சேர்ந்தா உங்க கட்சி நல்லா இருக்கும்னு ஒருத்தர் சொன்னாரு...

ஜெயலலிதா: சரி இப்போ வாங்க?

ராமதாஸ்: புலி பசிச்சாலும் புள்ள திண்ணாது!

(திருமா உள்ளே வருகிறார்)

திருமா: யாரு அது எங்க கட்சி பேர இழுக்கறது?

ராமதாஸ்: எவன் அவன்?

திருமா: யாரு அடிச்சா பொறி கிளம்பி பூமி் அதிர்றது ஒடம்புல தெரியுமோ அவன்....

கலைஞர்: எந்த மி்ருகத்து பேர சொன்னாலும் நான் தான் நான் தான்னு வந்துடறியே பா, அவரு சொன்னது புலி, சிறுத்தை இல்ல!

ராமதாஸ்: வாங்க திருமா!

கார்த்திக்: ஆமாம் தாஸன்னே, இப்போவெல்லாம் நீங்க இவங்களோட பழைய மாதிரி நட்பா இல்லையே?

ராமதாஸ்: அவரு சினிமாவுல நடிக்க போயிட்டாரு...அதான் கொஞ்சம் ஒதுங்கி இருக்கேன். இல்லனா அப்புறம் சினிமாவ விமர்சனம் பண்ண முடியாதுல்ல?

திருமா: அவருக்கு முன்னாடியே சினிமாவ விமர்சனம் பண்ணி, தமி்ழ காப்பாத்த போராட்டம் பண்ணவங்க நாங்க.

ராமதாஸ்: யாரு முதல்ல ஆரமி்க்கறாங்க என்பது முக்கியம் இல்ல, கடைசியா யாரு முடிக்கறாங்கன்றது தான் முக்கியம்.

கார்த்திக்: எல்லாரும் மக்களுக்கு என்ன நல்லது செய்லாம்னு யோசிச்சா, நீங்க மட்டும் தினமும் ஒரு படம் பார்த்து...அத விமர்சன பண்றதையே பொழப்பா வச்சு இருக்கீங்களே இது சரியா?

ராமதாஸ்: என் வழி தனி வழி!

கார்த்திக்: நீங்க மாறவே மாட்டீங்களா?

ராமதாஸ்: ஆண்டவன் சொல்றான், ராமதாஸ் செய்றான்!

கார்த்திக் கலைஞரிடம்: பார்த்தீங்களா? இவங்க பேச்செல்லாம் கேட்டு நீங்க உங்க பேரனையே வெளிய அனுப்பிட்டீங்களே? தப்பில்லையா?

கலைஞர்: நாலு பேரு நல்லா இருக்கனும்னா, எதுவுமே தப்பில்லை!

கார்த்திக்: யாரு அந்த நாலு பேரு?

(இதை கேட்டுக் கொண்டே வைகோ உள்ளே வருகிறார்)

வைகோ: வேற யாரு? அவரு, அவரோட மகன் ஸ்டாலின், பொன்னு கனிமொழி, இன்னொரு மகன் அழகிரி

கார்த்திக்: இது யாருப்பா?

வைகோ: சொல்லி அடிச்சா கில்லி, சொல்லாம அடிச்சா திருப்பாச்சி, சொல்லியும் சொல்லாம அடிச்சா சிவகாசி...அதான் இந்த வைகோ!

கலைஞர்: தோற்று விட்டு இருக்கற இடமே தெரியாம இருக்க, அப்பவும் புத்தி வரல்லையா?

வைகோ: வாழ்க்கை ஒரு வட்டம், அதுல ஜெயிக்கறவன் தோப்பான் தோக்குறவன் ஜெயிப்பான்.

கார்த்திக்: ஆமாம், ஏன் கலைஞர விட்டுட்டு திடீல்னு போயிட்டீங்க?

கலைஞர்: கிளிக்கு இறக்கை முலைச்சிடுச்சு, அதான் விட்டுட்டு பறந்து போயிடுச்சு!

வைகோ: என்னோட அரசியல் வாழ்க்கையில நான் செஞ்ச பெரிய தப்பே இவங்களோட கூட்டணி வச்சுகிட்டதுதான்...

கார்த்திக்: ஆமா ஆமா, நீங்க ஒழுங்கா ஜெயில்ல இருந்தப்பவே தினமும் உங்க செய்தி பேப்பர்ல வரும்...இப்ப ஒன்னுத்தயும் காணோம்!

கார்த்திக் கலைஞரிடம்: இவரு மனசு மாறி வந்தா, உங்க கட்சியில சேர்த்துக்குவீங்களா?

கலைஞர்: கதம், கதம்!

ஜெயலலிதா: ஹா ஹா ஹா! என்ன விட்டா இப்போ வேற கதி இல்ல அவருக்கு!

கார்த்திக்: நீங்க ஏன், கலைஞர் பேர கேட்டாலே கோவப்படறீங்க? தமி்ழ் நாட்ட தவிர மத்த ஊர்ல எல்லாம், ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் இப்படியா இருக்காங்க?

ஜெயலலிதா: கலைஞர், தமி்ழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த!

கலைஞர்: அதிகமா ஆச படற ஆம்பலையும், அளவுக்கு மீறி கோவப்படற பொம்பலையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல!

கார்த்திக்: சும்மா அதிருதில்ல!

ஜெயலலிதா: ரொம்ப பேசாதீங்க! இன்னைக்கு தோற்றா, நாளைக்கு பால்...சாரி ஆப்பு!

கார்த்திக்: ஆமா ப்ரெசிடென்ட் எலக்ஷன்ல எல்லாரயும் ஓட்டு போட சொல்லிட்டு நீங்க மட்டும் ஏன் போடல?

ஜெயலலிதா: நான் ஒரு வாட்டி முடிவு பன்னிட்டா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்!

விஜயகாந்த்: அவங்க அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

கலைஞர்: என்ன கொடும சேர் இது? இந்த மாதிரி கத்து குட்டிங்களோட அரசியல் பண்றது என் தலை எழுத்து!

விஜயகாந்த்: பிள்ளையாரே பெருச்சாலில போறாராம், பூசாரிக்கு புள்ளட் கேட்குதாம்!

ஜெயலலிதா: ஏன் இப்படி சம்பந்தமே இல்லாம உலர்றீங்க? தண்ணி அடிச்சிட்டு வந்து இருக்கீங்களா?

விஜயகாந்த்: வீனா என் வம்புக்கு வராதீங்க. நான் பிரச்சனை பன்னா தாங்க மாட்டீங்க.

ஜெயலலிதா: நாங்க எல்லாம் பிரச்சனையே பெட்சீட்டா போட்டு படுக்கறவங்க!

கார்த்திக்: விஜய், நீங்க உங்க வரவு செலவு எல்லாம் கணக்கே வச்சுக்கறது இல்லையாமே?

விஜயகாந்த்: கூட்டி கழிச்சு பாரு, கணக்கு சரியா வரும்!

கார்த்திக்: அடங்கப்பா! நீங்க கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல மாட்டீங்களா?

விஜயகாந்த்: நான் கேட்டதயும் சொல்லுவேன், கேக்காததயும் சொல்லுவேன்! நான் என்ன சொல்வேன், எப்படி சொல்வேனு யாருக்கும் தெரியாது. ஆனா சொல்ல வேண்டிய நேரத்துல...

கார்த்திக்: கரெக்டா சொதப்புவீங்க!

விஜயகாந்த்: என்னையே கலாய்க்காதீங்க...பாருங்க ராம்தாஸ் சும்மா தான் இருக்காரு!

ராமதாஸ்: என்ன ஏன் இதுல இழுக்கறீங்க? நீங்க அடங்கவே மாட்டீங்களா?

விஜயகாந்த்: நான் அடங்கிப் போறவன் இல்ல, அடக்கிட்டு போறவன்!

கார்த்திக்: அய்யயோ! அதெல்லாம் வேண்டாம்...பாத்ரூம் ப்ரீயாதான் இருக்கு...உடனே போங்க!

விஜயகாந்த் வெளியே போகிறார். இதான் சாக்குனு அனைவரும் எஸ்கேப் ஆகிறார்கள்!

Tuesday, August 21, 2007

Movie Dialogues

இவர்கள் இப்படி சொல்லி இருந்தால்?
(Movie: Nayagan)

கமல் தன் மகளிடம்: நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவுமே தப்பில்லை டா!

கமலின் மகள்: இப்படி சொல்லி சொல்லியே 40 பேருக்கு மேல போட்டு தள்ளியாச்சு. யாருபா அந்த நாலு பேரு?

கமல்: நான், நீ, உன் அண்ணண் அப்புறம்......ஜனகராஜ்!

(Movie: Kreedom)

வில்லன் ராஜ்கிரனிடம்:
ஒரு சாதாரன போலீஸ், நீ என் மேல கைய வசுட்டியா?

ராஜ்கிரன்:
டேய் நாயே! உன் மேல கைய வைக்க ஒரு டாக்டர் இல்ல என்ஜினியரா வருவாங்க?

(Movie: Ramana)

விஜயகாந்த்: தமி்ழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த, மண்ணிப்பு!

வில்லன்: தமி்ழ்ல உனக்கு வராத ஒரே எழுத்து, "ழ"

(Movie: Dhalapathi)

ரஜினி: ஏன்?

வில்லன்: தேவா!

ரஜினி: அவருக்கு தான் இந்த படத்துல சான்ஸ் தரலியே...அப்புறம் ஏன்?

வில்லன்: போயா லூசு!

(Movie: Pokkiri)

விஜய்: நான் ஒரு தடவை முடிவு பன்னிட்டா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்!

வில்லன்: உன் பேச்ச ஒரு நாயும் கேக்காதுன்னு சொன்னாங்க...அது சரி தான் போல!

(Movie: Dharmapuri)

விஜயகாந்த்: நான் அடங்கி போறவன் இல்ல, அடக்கிட்டு போறவன்!

வில்லன்: இப்படி சொல்லி சொல்லியே எங்க காஸ்ட்யும்ஸ்ஸ எல்லாம் நாறடிச்சிட்ட!

Thursday, August 16, 2007

கொட்லு கோபால்...


அது என்னமோ தெரியல, சிறு வயதிலிருந்தே நமக்கு சண்டை என்றால் மி்கவும் பிடித்துவிடுகிறது. நான் கூட எனது பள்ளிப் பருவத்தில் படம் பார்க்கும் பொழுது, முதலில் "சன்டைப் பயிற்சி" என்று டைட்டிலில் வருகிறதா என்று பார்த்துவிட்டு தான் படத்தையே பார்ப்பேன். அதிலும் தேவர் பிலிம்ஸ் என்றால் சொல்லவே வேண்டாம்.

படம் பார்த்து விட்டு என் அப்பாவிடம் சென்று, எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் சண்டை வச்சா யாருப்பா ஜெயிப்பான்னு கேட்டு வாங்கி கட்டிப்பேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் நமக்கு இந்த சண்டை பிடிக்கிறதா? கண்டிப்பாக இல்லை. நிஜ வாழ்க்கையில் நாம் எல்லாம் கைப்புள்ள(வின்னர் பட வடிவேலு) மாதிரி தான். ஒரு சண்டை நடந்தால் அதை நின்று பார்க்கும் பொழுதே நமக்கு அல்லு விட்ரும்(பயம் வந்துவிடும்). இருந்தாலும் அந்த பயத்தை வெளியே காட்டிக்கொள்ள மாட்டோம். ஒத்துக்கறேன், பயத்தை வெளியே காட்டாதவன் தான் வீரன் ஆனால் களத்தில் இறங்க மாவீரனாக இருக்க வேண்டும்.

இப்படித்தான் எங்களுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் கோபால். அப்படியே கைப்புள்ள வடிவேலு மாதிரி. ஏதாச்சும் சண்டையைப் பார்த்தால் உடனே எங்களிடம் சப்ப பஸங்க டா மச்சி, சும்மானா பிலிம் காட்டுராய்ங்கனு சொல்லுவான். அடிக்கடி எங்களிடம் இது மாதிரி அடிதடி கதையா சொல்லுவான். எனக்கு அவன தெரியும் இவன தெரியும், பசங்க கிட்ட சொன்னா அவன பிரிச்சி மேய்ந்துடுவாங்கனு ஒரே பந்தா பண்ணுவான். நாங்களும் இத நம்பி அவன் கூட ஸ்கூல்ல சுத்தும் போது எல்லாம் கொஞ்சம் தெணாவெட்டா சுத்துவோம்.

ஒரு நாள் ஸ்கூல் முடிந்து நானும் எனது மற்றொரு நண்பனும் டியுஷன் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது மணி சுமார் ஏழு இருக்கும். சற்று இருட்டி இருந்தது. டியுஷன் சென்டருக்கு சற்று அருகில் இருவர் எங்களை வழி மறித்தனர். அதில் ஒருவன் எங்களுடன் டியுஷன் படிப்பவன் வேற ஸ்கூல், ஆனால் எங்களை விட சீனியர். அவனுடன் வந்திருந்தவன் அந்த ஏரியா சிறிய ரவுடிகளில் ஒருவன்.

சீனியர்: என்னங்கடா தீபாவ ரொம்ப கலாய்க்கிறீங்க போல?
நான்: எந்த தீபாங்க?
சீனியர்: தெரியாத மாதிரி நடிக்காத டா. அதான் உங்க கிலாஸ் படிக்குதே, அந்த தீபா.
என் நண்பன்: அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க!
ரவுடி: என்னடா இல்ல? அவ கிட்ட கொஞ்சம் அளவோட வச்சுக்குங்க, ஏன்னா தீபா இவன் ஆளு.
நான்: இது தீபாக்கு தெரியுமுங்களா?
சீனியர்: டேய்! நீ ரொன்ப பேசற. சொல்லறத மட்டும் செய்டா.
என் நண்பன்: இல்லீங்க, நாங்க பார்த்துக்கறோம். நீங்க கவலைப் படாதீங்க.
ரவுடி: அதான்டா எங்க கவலையே. ஒழுங்கா அவகிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பன்னுங்க. இல்லைன்னா ஒரு வழி ஆயிடுவீங்க.

இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் கோபால் அங்கு வருகிறான். நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு நேராக எங்களை நோக்கி வருகிறான். அவனை பார்த்தவுடன் எங்களுக்கும் கொஞ்சம் தைரியம் தலை தூக்கியது. வேகமாக வந்த கோபால் எங்களைப் பார்த்து...

கோபால்: மச்சி, என்ன ஆச்சுடா?

அப்பொழுது சற்றும் எதிர்பாராத விதமாக, அந்த ரவுடி கோபாலின் கண்ணத்தில் பளார் என்று ஒரு அரை விடுகிறான். (என்ன கோபமோ தெரியல ஆனா சரியான அடி) அடி வாங்கிய அதிர்ச்சியில் விழிக்கிறான் கோபால்!

ரவுடி: யாருடா நீ? பெரிய பருப்பா?
கோபால்(பரிதாபமாக): இல்ல.....ப்ரெண்ட்ஸ்...
ரவுடி: ப்ரெண்ட்ஸா இருந்தா? நாங்க பேசிகிட்டு இருக்கோம்ல? போடா அங்கிட்டு!

கோபால் வந்த வேகத்தில் கண்ணத்தில் கையை வைத்து தடவிக்கொண்டு திரும்பி செல்வதைக் கண்டு, எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இருப்பினும் முகத்தை சீரியஸாகவும், அப்பவித்தனமாகவும் வைத்துக்கொண்டு அவர்களிடம் பேசி அனுப்பிவிட்டோம்.

பிறகு நாங்கள் கோபாலை கலாய்த்ததை அவன் இன்றும் மறந்திருக்க மாட்டான். அன்றையில் இருந்து கோபால், "கொட்லு கோபால்" (கதை விடுபவன்) என்று எங்களால் செல்லமாக அழைக்கப்பட்டான்;)

Wednesday, August 15, 2007

Evolution of Indian Flag!








இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Remembering the Independence (1947 to 1950)

On 3 June 1947, Viscount Lord Louis Mountbatten, the last British Governor-General of India, announced the partitioning of the British Indian Empire into a secular India and a Muslim Pakistan. On 14 August 1947, Pakistan was declared a separate nation. At midnight, on 15 August 1947, India became an independent nation. Violent clashes between Hindus, Muslims, and Sikhs followed. Prime Minister Nehru and Deputy Prime Minister Sardar Vallabhbhai Patel invited Lord Mountbatten to continue as Governor General of India. He was replaced in June 1948 by Chakravarti Rajagopalachari. Patel took on the responsibility of unifying 565 princely states, steering efforts by his “iron fist in a velvet glove” policies, exemplified by the use of military force to integrate Junagadh, Jammu and Kashmir, and Hyderabad state into India.

The Constituent Assembly completed the work of drafting the constitution on 26 November 1949; on 26 January 1950 the Republic of India was officially proclaimed. The Constituent Assembly elected Dr. Rajendra Prasad as the first President of India, taking over from Governor General Rajgopalachari. Subsequently, a free and sovereign India absorbed two other territories: Goa (from Portuguese control in 1961) and Pondicherry (which the French ceded in 1953–1954). In 1952, India held its first general elections, with a voter turnout exceeding 62%; this made it the world’s largest democracy.
(source: wikipedia)

Sunday, August 12, 2007

திராவிடன்?


இது வெட்டிப்பயல் வலைப்பதிவில் வெளியானது. என் மனதிலும் இந்த சந்தேகங்கள் இருந்தன. அதற்கான அருமையான விளக்கத்தை ஒரு நண்பர் அளித்திருக்கிறார். எனவே அதை இங்கே உங்களுக்காக பதிக்கிறேன்.

(source: http://vettipaiyal.blogspot.com)

1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா?அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள் கிடையாதா?

திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை வணங்குவதற்கு திராவிடர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. திராவிட இயக்க சிந்தனை உள்ளவர்களில் கடவுள் நம்பிக்கையை மறைப்பவர்கள் உண்டு. அதற்கு காரணமும் உண்டு. திராவிட இயக்கத்தில் உள்ளவர்கள் அல்லது திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே திராவிடர்களல்ல.தன்மதம் தான் உயர்ந்தது என்ற மூடநம்பிக்கை கொண்டிருப்பவன் தன்மதம் சார்ந்தவன் வேறொரு மதத்தை பின்பற்றினால் ஆத்திரமடைகிறான். இந்திய மதங்களைப் பின்பற்றி இந்தியக்கடவுளை வணங்கும் திராவிடர்களுக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் கடவுள்களிடத்திலும் வெறுப்பு இல்லை. எனவே மதமாற்றத்தில் கூட அவர்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் மதங்களை உருவாக்கி அதில் பிழைப்பு நடத்தும் ஆரியர்களுக்கு ஆத்திரம் வருகிறது.ஆரிய அடிவருடிகள் என்ன செய்கிறார்கள்? பிற மதங்களைப் பழிப்பதையே முதன்மையாக செயல்படுத்தி வருகிறார்கள். தங்கள் மதத்தின் தவறுகளை கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அந்தத் தவறுகள் அவர்களால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டவை என்பதால் அதை மறைக்க பிற மதங்களின் மீது சேற்றை வாரி இறைப்பதைத் தவிர வேறு வழியில்லை.திராவிடர்கள் ஏன் இந்து மதத்தையே குறை கூறுகிறார்கள் என்பது வழக்கமாக முன்வைக்கப்படும் இன்னொரு கேள்வி. ஏனென்றால் அவர்களும் அதே கடவுள்களை வணங்குபவர்கள் தான். தன் வீட்டை சுத்தம் செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அழுக்காக இருக்கும் தன்வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய கடமையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்து மத பிரச்சினைகளை திராவிடர்கள் அலசுகிறார்கள். ஏன்பிற மத பிரச்சினைகளை பேசுவதில்லை என்பதற்கும் இதுவே பதில். அடுத்தவன் வீட்டை சுத்தம் செய்ய அவன் அழைக்காமல் நாமாகப் போக முடியுமா?ஆரியர்கள் அதைத்தான் செய்கிறார்கள். அடுத்தவன் வீடு அழுக்காக இருக்கிறதே என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

2) ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டது சரியா? உங்களுக்கு நம்பிக்கை இல்லனா யாரும் நம்ப கூடாதா? இது கொள்கை திணிப்பு அல்லவா?இந்தி திணிப்பு எந்த அளவிற்கு தவறோ அதே அளவிற்கு கொள்கை திணிப்பும் தவறல்லவா?

பெரியார் ஏன் கடவுள் இல்லை என்றார். கடவுள் சிலைகளை அவமரியாதை செய்தார்.இது ஒரு உளவியல் செயல்பாடு. பெரியாரே கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதை நான் நம்பவில்லை. பின்னாளில் பெரியார் ரகசியமாக கடவுள் வழிபாடு செய்தார் என்று சிலர் சொல்வதில் கூட உண்மை இருக்கலாம். பெரியாரின் செயல்பாடுகளைப் பார்த்தால் அதன் காரணமும் விளங்கும். தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை இல்லை என்பதால் அவர்களுக்காக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியவர் பெரியார். ஆனால் அதில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் மனதில் கடவுளை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் கடவுள் அருள் தங்களுக்குக் கிடைக்க வழியில்லையே என்ற கலக்கமும் இருப்பதை உணர்ந்தார். அவர்களை மனத்தளவில் தளர்விலிருந்து மீட்க அவர் செய்த உளவியல் சிகிட்சையே கடவுள் மறுப்புப் போராட்டம்.மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது அவ்வை சொன்னது. கடவுளின் வாசல் திறக்கவில்லையா. கடவுளே இல்லை என்று சொல். இல்லாத கடவுளிடத்தில் நீ ஏன் போகிறாய். உன்னையே நீ நம்பு என்பது அவர் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த உளவியல் பாடம்.இந்தப்பாடம் சரியாக சென்று சேர, சேர்ப்பிக்க ஒரு இளைஞர்படையை இந்த நம்பிக்கையோடு அவர் தயார் செய்ய வேண்டியிருந்தது. அதுதான் திராவிட இயக்கம். இதை சாதிக்க சில புனித நம்பிக்கைகளை உடைக்க வேண்டியிருந்தது. அதுதான் செருப்பு மாலை உள்ளிட்ட ஷாக் டிரீட்மென்ட். அவரது நோக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டதால் பிற இந்(திய)து தமிழர்களுக்கு கோபம் வரவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை உணர்ந்து கொண்டால் யார் பாதிக்கப்படுவார்களோ அந்த ஆரியர்களுக்குத்தான் கோபம் வந்தது. இப்போதும் வருகிறது.

3) காமராஜர் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன?

காமராஜர் தோல்வி அடைந்ததற்கான காரணம் அவர் அரசியல் மாற்றங்களை சரியாகப் புரிந்து கொள்ளாதது தான். ஆடம்பரமும் சொல்லலங்காரமும் மிக்க அரசியல் சூழல் வளர்ந்து வருவதை உணர்ந்து கொள்ளாமல் அவர் உண்மையான மக்கள் சேவை மட்டும் போதும் என்று நினைத்ததால் தோல்விகண்டார்.

திராவிட இயக்கம் ஒரு இலட்சியத்துக்காக உருவானது. திராவிட முன்னேற்றக்கழகமோ அரசியல் ஆதாயத்துக்காகவே உருவானது. எனவே இரண்டையும் குழப்பிக்கொள்ள தேவையில்லை.

Friday, August 10, 2007

Chak De India - Movie Review

Banner: Yash Raj Films
Cast: Shahrukh Khan, Vidya Malvade
Direction: Shimit Amin
Production: Aditya Chopra
Music: Salim Merchant, Sulaiman Merchant



Right Movie at the Right Time!

Not everyone of us had come out of the shocking worldcup exit of India. I still hear many people say that they stopped watching cricket and this is the right time for the release of this movie. I feel it's high time that we stop focussing only on cricket in India and let's promote other games as well, especially our national game Hockey which is all this movie is about.

I'm sure many people wouldn't even know that Hockey is our national game. We used to be the world champions in Hockey once and now we're in 4th or 5th position. Chuk De India is not the usual Sharukh Khan type of movie. For those who would want to see a Triangular love story or Sharukh stealing other's fiancee or wife, then this movie is not for you;) There are no big star cast other than Sharukh in this movie and he doesn't even have a pair. Sharukh, as usual has given a brilliant performance but this would have been more challenging for him. The character selection was good and it looked like a real hockey team. Everyone performed well.

The movie starts with a Worldcup Hockey match final between India and Pakistan. Sharukh is the captain of the Indian team and he is one of the best centre forward player for India. Unfortunately, India loses the worldcup to Pakistan due to a penalty stroke missed by Sharukh which is projected by the media as if Sharukh has made a deal with Pakistan and it goes out of control. This keeps him out of Hockey for 7 years. Then he returns as a Coach for the Indian Women Hockey team. He takes up the challenge of coaching them for the world cup though the board is not very keen to concentrate on Women's team. Whether Sharukh succeeds as a coach and regains his fame is the rest of the story.

This movie has a message for everyone,
Senior players: who tries to form groups or dominate others
Board/Management: who doesn't provide the right kind of support and is not concerned about women's sport
People: who simply worship their favorite players and will attack their houses if they fail to succeed. I personally hate those people. If they really have the guts, they should attack the sports minister and the selectio committee.
Media: which creates unncessary hype for players and creates stories to sell their products
Parents: who doesn't support their daughters who are interested in sports

It's a 3 hr movie and there was no break in between(in the theatre where I saw) but I still didn't see people getting out of their seats except 1 or 2 until the movie was over. Since I was seated at the center, I had to control myself for full 3 hrs to go and Walk the Dog;)

It's a must watch movie for all those who love sports. After seeing this movie, I can feel how difficult it is being a coach for an Indian team. It's really a tough job.

Cinematography was extremely good but music wasn't that impressive. I don't remember even one song as opposed to the other Sharukh movies. I really appreciate Sharukh for doing this movie as he can pull out mass audience to the theatre. This movie is not going to change everything upside down but it's a good initiative. If this movie fails in box office, I really pity Sharukh.

Thursday, August 9, 2007

வாழ்க்கை

வாழ்க்கையில் பணமும் புகழும் கடலைப் போன்றது

யார் எவ்வளவு எடுத்தாலும் என்றும் வற்றாதது

ஆகையால் மற்றவர் அடையும் புகழையும் செல்வத்தையும் கண்டு பொறாமைக் கொள்வதை விடுத்து

உண்மையாக உழைத்தால் நாம் நிணைத்ததை அடைய வழியுண்டு!

கவிதை எழுதலாம்னு முயற்சி செய்து...இந்த மாதிரி ஏதோ வந்துச்சு...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வய்யகம்;)

என்னத்த சொல்ல?

வேண்டும் என்று தேடி அலைகின்ற பொழுது அது நமக்கு கிட்டாது

எங்கே, எப்பொழுது, யார் மீது வரும் என்று யாருக்கும் தெரியாது

நமக்குள் அது வந்து விட்டால் சாகும் வரை நம்மை விட்டு போகாது

அது என்ன? (ரொம்ப சுலபம்...பத்து படம் ரிலீஸ் ஆனா அதுல எட்டு படம் இத பத்தி தான் இருக்கும்;)

கண்டுபிடிச்சிட்டீங்களா? ஆமாம் அதே தான். நான் கூட டி ராஜேந்தர் படம், நம்ம விஜயோட பூவே உனக்காக இந்த படத்த எல்லாம் பார்த்துட்டு இப்படி தான் நினைச்சி கிட்டு இருந்தேன். ஆனா இப்ப கரன் ஜோஹர் படத்த பார்த்து பார்த்து இதெல்லாம் பொய்யோன்னு தோனுது? நீங்க என்ன நினைக்கிறீங்க?

Tuesday, August 7, 2007

Pressure Cooker!


இது என் குலோஸ் ப்ரென்ட் என் கிட்ட சொன்னது. என் ப்ரென்ட் அப்போ ஹைட்ராபாட்ல ஒரு கம்பனில வொர்க் பன்னி கிட்டு இருந்தான். அவன் கூட வொர்க் பன்ற ஒரு 3 ப்ரென்ட்ஸோட சேர்ந்து ரூம் எடுத்து தங்கி இருந்தான். அது ஒரு ப்லாட். என் ப்ரென்ட்ஸ தவிர அவங்க ரூம சுத்தி எல்லாரும் பேமி்லியொட இருந்தாங்க.

ஒரு நாள் மதியம் என் ப்ரென்டும் இன்னும் 2 பேரும் சேர்ந்து சமையல் பன்னிகிட்டு இருந்தாங்க. அன்றைக்கு எல்லோருக்கும் நைட் ஷிப்ட். பாசெலர் பசங்க ரூம்ல எப்படி இருப்பாங்கனு உங்களுக்கே தெரியும். ஒருத்தன் வெரும் டவல் கட்டி கிட்டு இருந்தான். இன்னொருத்தன் ஒரு சின்ன ஜட்டி போட்டுகிட்டு எக்ஸர்சைஸ் பன்னிகிட்டு இருந்தான். என் ப்ரென்ட் ஷார்ட்ஸ் போட்டுகிட்டு இருந்தான். இதுல வேற அவங்க கதவ எப்பவும் லாக் பன்னி வக்க மாட்டாங்க.

ஸ்டவ்ல ப்ரெஷ்ஷர் குக்கர்ல பருப்பு வேகிட்டு இருந்தது. அப்போ டிடீல்னு ஒரு பயங்கர சத்ததோட ஸ்டவ்ல இருந்த குக்கர் எகிரி கீழ வந்து விழுந்திடுச்சு. வீடெல்லாம் ஒரே புகை மன்டலமா இருந்துச்சு. நல்ல வேலையா யாருக்கும் ஒன்னும் ஆகல. இந்த சத்தம் கேட்டவுடனே அக்கம் பக்கத்து வீட்டுல இருந்து ஒரு நாலு அஞ்சு ஆண்டீஸும் அவங்க பொன்னுங்க ரெண்டு பேரும் திடு திப்புனு இவங்க வீட்டுக்குல்ல வந்துட்டாங்க. வந்தவங்க என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு கேட்டுக்கிட்டே நேரா கிட்செனுக்கு போயிட்டாங்க. பசங்களுக்கு குக்கர் இப்படி ஆனத விட இவங்க எல்லோரயும் பார்த்தவுடனே பயங்கர ஷாக். பசங்க ஜட்டி/டவலோட நிக்கறத பார்த்து அந்த ரெண்டு பொன்னுங்க மட்டும் நைசா நழுவிட்டாங்க. ஆண்டீஸ் மட்டும் அங்கயே நின்னு பேசிகிட்டு இருந்தாங்க.

ஒவ்வொரு பசங்களா அப்படியே அசடு வழிஞ்ஜுகிட்டே நைசா நழுவி ரூமுக்கு போறதுக்குல்ல போதும் போதும்னு ஆகிடுச்சாம்! எல்லாம் அந்த குக்கரால வந்த வினை!

Monday, August 6, 2007

The French Teacher!


This is one of the incident during my school days that I would never forget!

After our 10th school holidays, the school just reopened. We were really happy to come back to school after the long holidays and were happy to see our friends back.


Till that year we had only Tamil, Hindi and Sanskrit as second language but that year they introduced French in our school. They appointed a new teacher for teaching French. There were only a few to take up French since they were hesitant whether they could score good marks.

The French teacher looked very modern and students(especially boys;) were trying to impress her. On the second day evening after the French teacher joined our school, I was walking towards my home with my friends. There was this guy whose house was just nearby our school and he was in commerce group. He came up to us in his cycle and asked us how to wish 'Good Evening' in French as one my friend has taken French. His second language was Hindi but he still wanted to speak to the French teacher and show-off.

My friend suddenly told him that 'Good Evening' means 'Gowri' in French. We saw the French teacher coming out of the school after her work and we started moving. He said thanks to us and started driving towards the school. He was driving the cycle like Siddarth used to drive in the Movie 'Boys' to impress Genelia. As he went near the French teacher, he smiled at her and then slightly bent his head down and said 'Gowri' at the top of his voice and moved on. The French teacher showed a confused and angry look at him but didn't say a word. Seeing her angry look this guy was perplexed.

He took a round and came back to us again. He asked us innocently why the French teacher didn't say anything and showed angry face. By this time all of us burst into laughter for atleast 5 mins and slowly one of us told him that the French teacher's name was 'Gowri'! You should have seen his face that time;) (he scolded us for atleast 10 mins continuously with all the bad words he know).


Why Rajnikanth is a Superstar?

These Pictures speak a thousand words....hence no comments from me!