Wednesday, November 28, 2007

கட்டாய கிராமப்புற சேவை திட்டம்!

இந்த விஷயம் ஒரு வாரமா பரபரப்பா தமிழ் நாட்டுல நடந்துக்கிட்டிருக்கு. மருத்துவ படிப்பு காலத்தை 51/2 ஆண்டில் இருந்து 61/2 ஆண்டாக உயர்த்துவதை எதிர்த்து தமிழ் நாட்டுல இருக்க எல்லா அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்திட்டு இருக்காங்க. இந்த விஷயத்தை சில பேர் அரசியலாக்கி ஆதாயம் தேடுறாங்க.

ஆனா உண்மையிலேயே மாணவர்களுக்கு என்ன பிரச்சனை? மருத்துவ படிப்பு காலம் 51/2 ஆண்டில் இருந்து 61/2 ஆண்டாக உயர்த்தப்படுவதாக இருந்தால் அவர்களின் போராட்டம் சரியே. ஆனால் உண்மை இதுவல்ல என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையானால், 51/2 ஆண்டு படிப்பு முடிந்த பின் 1 வருடம் அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் திட்டமே இது. அதுவும் முதல் 4 மாதம் கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அடுத்த 4 மாதம் தாலுகா மருத்துவமனையிலும், கடைசி 4 மாதம் மாவட்ட மருத்துவமனையிலும் பணியாற்ற வேண்டும் என்று 'அறிக்கை' தாஸ் (டாக்டர் ராமதாஸ்) சொல்கிறார். இதுல 4 மாதம் மட்டும் தான் கிராமத்தில் பணி புரிய வேண்டுமாம். இத செய்ய இவங்களுக்கு என்னவாம்? இவங்களுக்கு கிராமத்துல கிடைக்கிற அனுபவம் வேற எங்க கிடைக்கும்!

அது மட்டும் இல்லாம ரூ. 8,000 ஊக்கத் தொகையாக வேற தராங்களாம். அப்புறம் என்னங்க பிரச்சனை இவங்களுக்கு? எனக்கு தெரிஞ்சு நிறைய எம்.பி.பி.எஸ் படிச்ச டாக்டருங்க வேலை கிடைக்காம சுத்திட்டு இருக்காங்க. இன்னும் நிறைய பேர் ரொம்ப கம்மியான சம்பளத்துல சின்ன சின்ன வேலை பார்த்துட்டு இருக்காங்க. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, மெரிட்ல சீட் வாங்கி படிக்க வந்த எந்த மாணவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எம்.பி.பி.எஸ் படிக்க பல லட்சம் பணம் செலவு செய்து விட்டு, படித்து முடித்தவுடன் மேல் படிப்பிற்காக மேலை நாடுகள் செல்ல திட்ட மிட்டிருக்கும் மாணவர்கள் தான் இதை எதிர்ப்பவர்கள் என்று நினைக்கிறேன். எம்.பி.ஏ படிக்க இரண்டு வருடம் வேலை அனுபவம் கேட்கிறார்களே, அது போல இவங்களுக்கு ஒன்னும் கிடையாதா? இதை விசாரிக்க சாம்பசிவராவ் குழுன்னு ஒன்னு அமைச்சு இருக்காங்களாம். அவங்க பல ஊர்ல கருத்து கேட்டுட்டு இங்க வந்து, தமிழ் நாட்ட தவிர வேற எங்கேயும் இந்த மாதிரி எதிர்ப்பு தெரிவிக்கலைன்னு சொல்றாங்க.

இந்த திட்டம் இன்னும் சட்டமாக கொண்டு வரலை, அதுக்குள்ள எதுக்கு இந்த போராட்டம்? அப்படியே வந்தாலும், அது இனிமே எம்.பி.பி.எஸ் படிக்க வரவங்களுக்கு தானே பொருந்தும்? இதை எல்லாம் முதல்ல அரசாங்கம் தெளிவுப் படுத்தனும். அப்படி தெளிவு படுத்துன பிறகும் இந்த போராட்டம் தொடர்ந்துச்சுனா இந்த பய புள்ளைங்க வேலைக்கு ஆக மாட்டாய்ங்க! இதுல எனக்குத் தெரியாத மறைந்து கிடக்கும் ரகசியம் ஏதாவது இருந்தால் சொல்லுங்க. கேட்டுக்கறேன்!

Friday, November 23, 2007

அரைத்த மாவு!

100 ஆண்டு கால இந்திய சினிமாவில் நிறைய சாதனைகள் உள்ளன. இந்திய சினிமா ஜூலை 7, 1896 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ் சினிமா ஆரம்பித்து 75 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதில் தனி மனித சாதனைகள் ஏராளம். அதை எல்லாம் பற்றி நான் இங்கு பேசப் போவதில்லை.

இத்தனை வருட காலத்திலும் ஒரு சில விஷயங்களை காட்சிகளை பல படங்களில் ஒரே மாதிரி தான் எடுக்கிறார்கள். இதில் சில இன்றும் தொடர்கிறது. இது போல காட்சிகள் வரும்போது அடுத்து என்ன நடக்கும்னு சின்ன பசங்களுக்கு கூட தெரியும். அவற்றை பற்றி தான் நான் இங்கு சொல்லப் போகிறேன். இதுல நிறைய 70-80 களில் வந்தவையே.

காட்சி 1: யாராச்சும் ஒருத்தர் படுத்த படுக்கையா இருப்பார். ஏதோ உண்மைய சொல்ல பல நாளா முயற்சி பண்ணுவார். கடைசியா பாதி மட்டேற சொல்லிட்டு உயிரை விட்டுருவார். ஹய்யோ ஹய்யோ!

காட்சி 2: இது ரொம்ப பிரபலம். சின்ன வயசுல இந்த மாதிரி படம் ஆரமிச்சுதுனா ரொம்ப ஆவலா குந்திகின்னு பார்ப்போம். எதுத்த உடனேயே ஒரு கொள்ளை கார கும்பல் வந்து ஒரு வீட்டுல இருக்கற எல்லாரையும் போட்டு தள்ளிடுவாங்க. அதுல ஒரே ஒரு சின்ன பயனோ பொன்னோ மட்டும் தப்பிச்சு போயிடுவாங்க. இவங்க தான் படத்தோட கதாநாயகன் அல்லது கதாநாயகி. இன்னும் சில படத்துல தப்பிச்சி போனவங்க கூட ஏதாச்சும் வீட்டு அல்லது காட்டு விலங்கும் சேர்ந்துக்கும். ஹ்ம்ம்... ஆத்தாளுக்கு ஒரு மாத்தாளு, அடுப்பு கட்டைக்கு ஒரு தொடப்ப கட்ட! இந்த பழ மொழிய எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. இத ரொம்ப நாளா உபயோகிக்கனும்னு பார்த்தேன்...அதான்;)

காட்சி 3: அப்புறம் இந்த இரட்டை வேடம் போட்டு ஹீரோ நடிக்கும் படத்துல பார்த்தீங்கனா, அவங்க சகோதரர்களா வந்தா படம் ஆரமிக்கும் போதே பிரிஞ்சுடுவாங்க. அப்புறம் கடைசியில ரொம்ப கஷ்டப்பட்டு ஒன்னு சேருவாங்க. அப்ப கூட யாருக்காச்சும் ஜோடி இல்லனா அவங்கள கொன்னுடுவாங்க. அவ்வ்வ்வுங்!

காட்சி 4: ஒரு பயங்கர வில்லன காட்டுவாங்க. அவன எதிர்த்து யார் பேசினாலும் அவங்கள உடனே பேச்சே இல்லாம கொன்னுடுவான் வில்லன். ஆனா நம்ம ஹீரோ பேசினா மட்டும் முதல மாத்தி மாத்தி டயலாக் தான். அப்புறம் எப்படியாவது ஹீரோவ பிடிசிடுவான் வில்லன். ஆனா உடனே சாகடிக்க மாட்டான். ஹீரோவ ஒரு ரூம்ல வச்சு கட்டி(ரொம்ப ஈசியா அவுக்குற மாதிரி) ஒரு குண்டு வச்சுட்டு(அதுக்கும் வெடிக்க நேரம் ஜாஸ்தியா வச்சு ட்டு) போயிடுவான். ஹீரோ தப்பிச்சு வந்து வில்லன கொன்னுடுவாரு. இஸ்ஸ்ஸப்பா! இப்பவே கண்ண கட்டுதே!


காட்சி 5: ஒரு படத்துல ஹீரோ நல்லா பொண்ணுகள கிண்டல் பண்ணி பாட்டு எல்லாம் பாடுவாரு. இத ரொம்ப ஜாலியா காட்டுவாய்ங்க. இன்னொரு படம். அதே காட்சி. ஆனா இப்போ ஹீரோக்கு பதில் வில்லன். அப்புறம் என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும். என்ன கொடுமை இது?

காட்சி 6: இது காலா காலத்துக்கும் நடந்துட்டு வருது. ஹீரோயின்னுக்கும் வேறு ஒருத்தருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆயிடும். ஆனா கடைசியில நம்ம ஹீரோ பொண்ண தட்டிட்டு போயிடுவாரு. இதுக்காக நல்லவரா இருந்த முதல்ல நிச்சயமானவர கெட்டவரா மாத்திடுவாங்க. ரைட்டு விடு!

காட்சி 7: இதான் எனக்கு தெரிந்த காட்சிகள்லயே டாப்புங்க. படத்துல யாராச்சும் ரெண்டு பேரு ரொம்ப நல்லா அன்யோன்யமா இருப்பாங்க. திடீல்னு அவங்களுக்குள்ள ஒரு பெரிய பிரச்சனை வரும். ஆனா மெய்யாலுமே என்ன நடந்ததுன்னு ஒருத்தருக்கு தெரியாது. இன்னொருத்தர் அதை சொல்ல வருவார். அப்ப இவரு:

"வேண்டாம்! நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். உன்ன பார்க்கவே எனக்கு பிடிக்கல. இங்க இருந்து போயிடு"

"நீ என்ன சொல்லப்போறேன்னு எனக்கு தெரியும். வேண்டாம்! போயிடு!"

இப்படி இல்லனா, பக்கத்துல இருக்க ஒருத்தர பார்த்து, "அவன இங்க இருந்து போகச் சொல்லு. இல்ல நான் மனுஷனா இருக்க மாட்டேன்", இப்படி எல்லாம் சொல்லி அனுப்பிடுவாரு.

இதுல இன்னும் கொடுமை என்னன்னா, உண்மைய சொல்ல முயற்சி பண்றவர், கடைசி வரைக்கும் "நான் என்ன சொல்ல வரன்னா, நான் என்ன சொல்ல வரன்னா" இப்படி சொல்லியே நேரத்த ஓட்டிடுவார். அவரு சொல்ல வர உண்மை "நான் என்ன சொல்ல வரன்னா"வை விட சின்னதா தான் இருக்கும்!

அப்புறம் படத்தோட கடைசியில ஒரு சின்ன குழந்தையோ அல்லது சம்பந்தமே இல்லாத ஒருத்தரோ உண்மைய சொல்ல இவங்க ஒன்னு சேர்ந்துடுவாங்க. சொல்ல போனா இந்த மேட்டர வச்சு தான் முழு கதையே! லைட்டா வலிக்குதா?

இஸ்ஸப்பாடா......என் மனசுல இருந்தத எல்லாம் கொட்டிட்டேன்!

Wednesday, November 21, 2007

நான் சமீபத்தில் எடுத்ததில் எனக்கு பிடித்த சில படங்கள்...

















Monday, November 19, 2007

சாவரியா...

இல்லீங்கோ நான் உங்கள சாக சொல்லலீங்கோ...இது இப்போ வந்து இருக்குற ஹிந்தி படத்தோட டைட்டில். ஆனா இந்த படத்தை பார்த்தா நீங்க அந்த முடிவுக்கு தான் வருவீங்கன்னு பயலுக சொல்றாய்ங்க. அத கேட்டுட்டு தான் நான் என் முடிவ மாத்திகிட்டு ஷாருக்கான் படத்துக்கு போனேன்.

இன்னைக்கு என் கூட வேலை பாக்குற வட இந்திய பையன் ஒருத்தன் சாவரியா படத்தோட கதைய சொன்னான். அவன் கதைய சொல்ல சொல்ல அது எனக்கு ஏற்கனவே பரிட்சியமான கதை மாதிரி இருந்துது.

படத்தோட முடிவ கேட்டவுடனே தான் தெரிஞ்சிது அது நம்ம தமிழ் படம் "இயற்கை". அடப்பாவீங்களா...இதுக்கா இவ்வளவு பில்ட்-அப்? யய்யாடி! இத நான் சஞ்சய் லீலா பான்சாலி கிட்ட இருந்து எதிர் பாக்கல. ஒரு விஷயம் தான் எனக்கு புரியல. இத நம்ம ஆளுங்க கிட்ட கேட்டு வாங்கி எதுத்தாங்களா இல்ல சுட்டுடாங்கலானு! ஏன்னா நம்ம ஆளுங்க கிட்ட இருந்து இன்னும் ஒரு ரியாக்க்ஷனும் காணோம்!

Saturday, November 10, 2007

ஓம் சாந்தி ஓம் திரைப்பட விமர்சனம்

மசாலா கலவை!

தயாரிப்பு: கௌரி கான் (ஷாருக்கான் துணைவி)
இயக்குனர்: பாரா கான் (Farah Khan)
நடிகர்கள்: ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஸ்ரேயாஸ் தல்படே
இசை: விஷால்-சேகர்
ஒளிப்பதிவு: வி. மணிகண்டன்

இது ஒரு முழு நீள மசாலா திரைப்படம். இப்படம் நம் கமல் நடித்த எனக்குள் ஒருவன் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. ஆம் மறுஜென்மம் பற்றிய கதை தான். அதே மாதிரியான பழி வாங்கும் கதை, ஆனால் நகைச்சுவையாக எதுத்திருக்கிறார்கள். லாஜிக் பார்க்காம படத்தை பார்த்தால் நல்லா என்ஜாய் பண்ணலாம்.


ஷாருக்கான் இந்த படத்தில் ஒரு ஜன்மத்தில் சாதிக்க முடியாததை அடுத்த ஜன்மத்தில் சாதித்து காட்டுகிறார். இடைவெளிக்கு முன் வரை 1970களில் நடப்பது போன்று கதையை காட்டி இருக்கிறார்கள். ஷாருக்கானும் அவரது நண்பரும் துணை நடிகர்கள். ஷாருக்கான் தான் ஓம். ஆனால் ஷாருக்கான் ஒரு பெரிய கதாநாயகனாக விரும்புகிறார். அப்போதைய பாலிவுட் டாப் நடிகையாக வருகிறார் இப்படத்தினுடைய நாயகி தீபிகா படுகோனே. இவர் தான் சாந்தி. மிகவும் அழகாக இருக்கிறார், இப்படத்திற்கு பொருத்தமான தேர்வு. அனைவருக்கும் கனவு தேவதையாக திகழும் இவரை ஷாருக்கான் ஒரு தலையாக காதலிக்கிறார், இந்த படத்துல தான், இல்லனா தோணி கொவிச்சுக்குவார். படப்பிடிப்பில் நடக்கும் எதிர்பாராத விபத்து ஒன்றில் இருந்து தீபிகாவை காப்பாற்றி அவரின் நட்பை பெறுகிறார் ஷாருக்கான். பின்னர் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை அறிந்து மனம் ஒடிந்து போகிறார். இவருக்கு எல்லா படத்துலயும் இதே பொழப்பு தான்.

தீபிகாவை வைத்து ஒரு மிகப்பெரிய படத்தை "ஓம் சாந்தி ஓம்" தயாரிக்கிறார் ஒரு பெரிய தயாரிப்பாளர். இவர்தான் அர்ஜுன் ராம்பால், இப்படத்தின் வில்லன். இவர்தான் தீபிகாவை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால் தீபிகா திருமணம் ஆனவர் என்று தெரிந்தால் அவர் எடுக்கும் படம் ஓடாது என்பதால் அவர்களுக்கு நடந்த திருமணத்தை மறைமுகமாக வைத்து இருக்கிறார்கள். அதை ஷாருக்கான் தற்செயலாக தெரிந்து கொள்கிறார். பின்னர் தீபிகா தான் கர்பமாக இருப்பதாகவும் தான் மேலும் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்றும் அர்ஜுனிடம் சொல்கிறார். இதனால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் தீபிகாவை அர்ஜுன் தனது ஓம் சாந்தி ஓம் பட செட்டுக்கு கூட்டி சென்று அங்கேயே அவரை வைத்து அடைத்து செட்டை எரித்து விடுகிறார். அர்ஜுன் அவ்விடத்தை விட்டு சென்ற பிறகு இதை பார்க்கிற ஷாருக், தீபிகாவை காப்பாற்றும் முயற்சியில் தனது உயிரை விடுகிறார்.

உயிரை விடும் ஷாருக் ஒரு பெரிய நடிகருக்கு மகனாய் வந்து பிறக்கிறார். பிறகு அவர் பெரிய நடிராகி, எப்படி அர்ஜுன் ராம்பாலை பழி வாங்குகிறார் என்பது தான் பிற்பாதி கதை. படத்தில் ஒரு பாட்டில் அனைத்து பாலிவுட் ஸ்டார்களும் வந்து போகிறார்கள். ஏகப்பட்ட ஸ்டார் கூட்டம். நல்ல மார்க்கெட்டிங் உத்தி. முதல் பாதியில் ஷாருக் தீபிகாவை கவர தான் ஒரு தென் இந்தியா ஹீரோ என்று கதை விட்டு தமிழில் டயலாக் பேசுகிறார் இல்ல இல்ல கொலை செய்கிறார். பாதி படம் கலக்க போவது யாரு மாதிரி இருக்குது. 1970களில் வந்த படங்களையும், அதில் வரும் டயலாக்குகளையும் நக்கல் விதுவது போல் உள்ளது. படத்தில் செட்டிங்கும், உடைகளும் மிக அருமை. இறந்து போன தீபிகா படுகோனேவும் மறுபடியும் வருகிறார், ஆனால் இவர் மறுஜென்மம் இல்லை. என்ன கொடுமை சார் இது? கதையில் பல காட்சிகளை சுலபமாக யூகித்து விட முடிகிறது.

ஆக மொத்தத்தில் ஒரு மசாலா படத்தை நகைச்சுவையாக அனைவரும் ரசிக்கும் படியும் கொடுத்து இருக்கிறார்கள். இப்படத்தை ஷாருக்கை தவிர வேறு யார் செய்து இருந்தாலும் சுமாராகத்தான் ஓடி இருக்கும். இப்படத்திற்கு rediff 3.5 ரேடிங் கொடுத்தது கொஞ்சம் ஓவர் தான். ஷாருக்கான் படம் எப்படி இருந்தாலும் புகழ்றாங்கப்பா!

Wednesday, November 7, 2007

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி வால் தனம் பண்ணாம...




இந்த மாதிரி அழகா பத்திரமா கொண்டாடுங்க!!!

Saturday, November 3, 2007

கனா காணும் காலங்கள்

இந்த விஜய் டிவி வந்ததுக்கப்புறம் சன் டிவி பக்கமே இப்போவெல்லாம் போறது இல்ல. சன் டிவில போடற அழுகாச்சி மெகா சீரியல்ல இருந்து ஒரு வழியா வெளிய வந்தாச்சு, வந்து ஒரு ஆறு மாசம் இருக்கும். ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் சிங்கப்பூர்ல விஜய் டிவி ஒளிபரப்ப ஆரமிச்சாங்க. இந்த கால யூத், குழந்தைகள், பெரியவர்கள் எல்லாரும் ரசித்து பார்க்குற மாதிரி எல்லாமே நல்ல நல்ல ப்ரோக்றாம்ஸ்.


இதுல என்ன ரொம்ப கவர்ந்த ஒரு ப்ரோக்ராம்னா அது கனா காணும் காலங்கள் தான். நம்மளுடைய பள்ளி பருவத்த அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்து காட்றாங்க. ஆபீஸ் விட்டு வந்ததுக்கப்புறம் ஒரு அரை மணி நேரம் நல்லா சிரிக்க முடியுது. இந்த மாதிரி ஒரு சீரியல தான் நான் இவ்வளவு நாள் எதிர் பார்த்துக்கிட்டு இருந்தேன். இந்த கனா காணும் காலங்களோட இயக்குனர உண்மையிலேயே பாராட்டனும். நல்லா ரசிச்சி, அனுபவிச்சு எடுக்கறாரு. ஒவ்வொரு கேரக்டருக்கும் பொருத்தமா ஆளை பிடிச்சி போட்டுருக்காரு. எல்லாருமே நல்லா யதார்த்தமா நடிக்கிறாங்க.

சரி ஆறு மாசம் ஆச்சே நம்ம சன் டிவி சீரியல் எல்லாம் எந்த நிலைமைல இருக்குன்னு பார்க்கலாம்னு கொஞ்சம் சேனல மாத்தி பார்த்தேன். ஆனந்தம்ல நம்ம சுகன்யா ஆன்டி அவங்க மாமியார் சவத்த வச்சு வில்லியோட ஏதோ மத்தியஸ்தம் பண்ணி கிட்டு இருந்தாங்க. கொடுமைடானு மாத்திட்டேன். அப்புறம் கோலங்கள். ஒரு வழியா இரண்டு வருஷ எபிசோடுக்கப்புறம் நம்ம தேவயானிக்கு அவங்க அப்பா யாருன்னு தெரிஞ்சிடுச்சி போல. ஆனா இதுல பார்த்தீங்கனா ஒருத்தியும் அவ புருஷனோட இருக்க மாட்டா. இத பார்த்தா எப்படீங்க குடும்பம் உருப்படும்? அடுத்து நம்ம ராதிகாவோட அரசி. ராதிகாக்கு எதுக்கு இந்த வயசுல இதெல்லாம்? அதுவும் டபுள் ஆக்ஷன் வேற. அரசி என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்னு மாத்தி ஒரு இரண்டு நிமிஷம் தான் இருக்கும், அதுக்குள்ள ஒரு பாம் வெடிச்சு அம்மா ராதிகா ஹாஸ்பிடல்ல இருக்காங்க. என்ன கொடுமை சார் இது? அந்த சினிமாக்காரங்க தான் அப்படீன்னா இங்கயுமா? ஆனா ஒரு விஷயங்க. இந்த சீரியல் எல்லாம் எத்தனை நாள் கழிச்சு பார்த்தாலும் எங்க விட்டமோ அங்கயேதான் இருக்கு.

இதெல்லாம் பார்த்துட்டு கனா காணும் காலங்கள் மாதிரி ஒரு நல்ல சீரியல பார்த்தவுடனே பாராட்டணும்னு தோணுச்சு. அதான் இந்த பதிவு. இதுல வெறும் சிரிக்க மட்டும் வைக்காம எப்படி கடமைக்காக படிக்காம காதலிச்சு படிக்கனும்னு அழகா சொல்லி தராங்க. ஆனா அந்த வயசுல யாருங்க படிப்ப காதலிப்பா;)