Saturday, December 22, 2007

ரீரீமிக்ஸ்...

இப்போ டிவில எல்லாரும் பழைய நடிகர்கள் புதிய பாடல்களுக்கு ஆடி இருந்தால் எப்படி இருக்கும்னு கற்பனை செஞ்சி அவங்களே ஆடி காட்டறாங்க. பார்க்க நகைச்சுவையாக இருக்கும். நான் நிஜமாவே பழைய நடிகர் ஒருத்தர் ஒரு லேட்டஸ்ட் பாட்டுக்கு ஆடி இருந்தால் எப்படி இருக்கும்னு ரீமிக்ஸ் செய்து பார்த்தேன். நல்லாத்தான் இருக்குனு நினைக்கிறேன். நீங்களும் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இதுல 'உங்கள்' பாக்யராஜ் இப்போ வந்த விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்துல வர 'பொன்மகள் வந்தால்' ரீமிக்ஸ் பாட்டுக்கு ஆடி இருக்கார். மறக்காம ஸ்பீக்கர ஆன் பண்ணிட்டு பாருங்க. இதனுடைய youtube லிங்க்: http://www.youtube.com/watch?v=eaN_GJZo6ck

Tuesday, December 18, 2007

விதி!

காலையில் காப்பீடு முகவர்(இன்சூரன்ஸ் ஏஜென்ட்) வந்து பேசிவிட்டு போனதில் இருந்து ராஜனுக்கு மனது என்னவோ போல் இருந்தது. அலுவலகத்தில் ஒழுங்காக வேலை கூட செய்ய முடியவில்லை அவனால். அவன் மனதில் பல சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.

ராஜனுக்கு வயது ஐம்பது ஆகிறது. அவன் ஒவ்வொரு மாதமும் வாங்குற சம்பளத்தில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் போக அவனால் இதுவரை வேறு எதுவும் செய்ய முடிந்ததில்லை. அவனுக்கு பதினைந்து வயதில் ஒரே ஒரு மகள். அவளை நன்றாக படிக்க வைத்து ஒரு டாக்டராக ஆக்க வேண்டும் என்பதே ராஜனுக்கும் அவனது மனைவிக்கும் கனவாக இருந்தது. அதற்காக தங்களுக்கென இவர்கள் எதுவும் செய்து கொண்டதே இல்லை. சினிமா, சுற்றுலா என இவர்கள் வெளியில் சென்று பல வருடங்கள் ஓடிவிட்டன. தங்கள் மகளை அவளது பள்ளியில் எங்காவது சுற்றுலா கூட்டி சென்றால் மறுக்காமல் அனுப்பி விடுவார்கள். இதனாலேயே ராஜன் காப்பீடு முகவர்கள் யார் அவனிடம் வந்தாலும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி நழுவி விடுவான். இம்முறை நண்பர் ஒருவர் அனுப்பியதால் அவனால் மறுக்க முடியவில்லை. அவர் வந்து சென்ற பின் அந்த முகவர் கூறிய சில வார்த்தைகள் ராஜனின் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.

"என்ன சார் நீங்க. ஐம்பது வயசாகுது. இன்னும் ஒரு இன்சூரன்ஸ் கூட எடுக்கலைன்னு சொல்றீங்க. திடீல்னு உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா உங்க மனைவி மகளை யார் காப்பாற்றுவார்கள்?" இதான் ராஜனின் மனதை உறுத்திக்கொண்டிருந்தது.

தன் மகளை விட தனது மனைவியைப் பற்றியே, அவன் முழு சிந்தனையும் இருந்தது. "எனக்காகவே வாழ்ந்து கிட்டு இருக்காளே? நான் இல்லைன்னா என்ன செய்வா? அவளுக்குன்னு நான் பெருசா ஒண்ணுமே பண்ணதில்லை. இருந்தாலும் எவ்வளவு அழகா குடும்பத்த நடத்துறா. எனக்கு என் உயிர் மீது ஆசை இல்லைன்னாலும், என் சீதாவுக்கு நான் தானே உயிர். அவளுக்கு ஒண்ணுமே செய்யாம நான் போயிட்டா அவ என்ன கஷ்டபடுவா? என்னை விட என் சீதாவ யார் நல்லா பார்த்துக்குவா? என்னால நெனச்சி கூட பார்க்க முடியலே!" இப்படி நினைத்து கொண்டிருக்கும் போதே அவனது கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது. அன்று மதியம் சாப்பிடக்கூட செல்லவில்லை ராஜன்.

ஒரு வழியாக அன்று வேலை முடிந்து தன் சக ஊழியர்களுடன் வீடு நோக்கி நடை போடுகிறான். அவனுக்குள் அந்த சிந்தனைகள் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. "இத்தனை நாள் இல்லாமல் ஏன் நமக்கு திடீல் என்று இந்த பயம்? உடல் முதுமை அடைய அடைய மனம் தானாக தளர்ச்சி அடைகிறது என்பது உண்மை தான். என்னால் என் முதுமையை உணர முடிகிறது. அந்த முகவர் சொன்னது போல் ஏதாவது ஆகிவிட்டால்? இல்லை அதற்குள் கண்டிப்பாக என் சீதாவிற்கு ஏதாவது செய்ய வேண்டும். நான் இல்லைனா பாவம் அவ என்ன செய்வா? அவளுக்கு என்னையும் மகளையும் தவிர வேறு ஒண்ணுமே தெரியாதே. அவளுக்கு அம்மா அப்பா அல்லது கூட பிறந்தவர்கள் யாராச்சும் இருந்தாலும் பரவா இல்லை. அவளுக்கு உலகமே நாங்க இரண்டு பேரும் தானே. இப்போ தான் புரிகிறது எதற்கு அவள் அடிக்கடி எனக்கு முன்னால் சுமங்கலியாக சென்று விட வேண்டும் என்று கூறுவாள் என்று. வீட்டுக்கு போனதும் முதல் வேலையா அந்த முகவரிடம் பேச வேண்டும்" என்று நினைத்துக்கொண்டே வீட்டை அடைகிறான்.

வீட்டினுள்ளே அடி எடுத்து வைக்கும் நேரம் தொலைபேசி மணி அடிக்கிறது. அவன் சென்று எடுப்பதற்குள் அவனது மகள் ஓடி வந்து பேசுகிறாள். எதையோ கேட்டவள், திடீர் என்று தொலைபேசியை அப்படியே போட்டு விட்டு தன் தந்தை அருகில் நிற்பது சற்றும் தெரியாதவளாய் அழுதுகொண்டே அலறுகிறாள், "அம்மா! அப்பா ஆபீஸ்ல இருந்து வர வழில நெஞ்சு வலி வந்து சூர்யா ஹாஸ்பிடல்ல ICUல இருக்காராம் மா!"

(சின்னதா ஒரு நப்பாசை! அதான் சர்வேசன் போட்டிக்காக என் வாழ்கையில எழுதுன முதல் கதை!)

Monday, December 17, 2007

பில்லா 2007 திரைப்பட விமர்சனம்

பில்லா ரொம்ப சூப்பர் லா!

நடிகர்கள்: அஜித், நயன்தாரா, பிரபு, நமீதா, ரஹ்மான், ரோஸ் டான்

இயக்குனர்:
விஷ்ணுவர்தன்

இசை:
யுவன் ஷங்கர் ராஜா

கதை:
சலீம் கான், ஜாவேத் அக்தர்

எடிட்டிங்:
ஸ்ரீகர் பிரசாத்

ஒளிப்பதிவு:
நிரவ் ஷா

தயாரிப்பு: சுரேஷ்

பில்லா ரஜினி படத்தை அஜித்த வச்சு ரீமேக் செய்யறாங்கனு கேள்வி பட்ட உடனே இது சரி பட்டு வருமானு யோசிச்சேன். அப்புறம் பில்லா படங்களை(stills) பார்த்ததும் பரவா இல்லைன்னு தோணுச்சு. இப்போ படத்தை பார்த்ததுக்கப்புறம் இந்த படத்தை அஜித்தை தவிர வேறு யாரும் இவ்வளவு நல்லா செய்திருக்க முடியாதுன்னு தோணுது. (நான் ஷாருக்கான் நடித்த ஹிந்தி டான் ரீமேக் படமும் பார்த்திருக்கேன். ஆனா நான் தூங்கி வழிஞ்சிகிட்டு பார்த்த முதல் ஷாருக்கான் படம் இதான். இந்த ரோல் ஷாருக்கானுக்கு சுத்தமா பொருந்தவே இல்லை. இதை சல்மான்கான் இல்ல ஹ்ரித்திக் ரோஷன் பண்ணி இருந்தால் நல்லா இருந்திருக்கும்னு தோணுச்சு. இல்ல சஞ்சய்தத் மிகவும் பொருந்தி இருப்பார்.)

படத்துல என்னை ரொம்ப கவர்ந்தவை தல அஜித், பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு. தலைய பார்த்த உடனே நான் மேர்சில் ஆயிட்டேன். சும்மா கலக்கலா இருக்காரு. செரியான ஸ்டைல் காட்டியிருக்கார்! வாலிக்கு அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு இந்த மாதிரி அஜித்த பார்க்க ரொம்ப நல்லா இருந்தது. அஜித் இதுல ஒரு கேரக்டர்ல அடிக்கடி புகை பிடிக்கிறார். அதை பார்த்த உடனே எனக்கு நம்ம ராமதாஸ் தான் ஞாபகம் வந்தாரு. அவர் கிட்ட இருந்து கூடிய சிக்கிரம் ஒரு அறிக்கை எதிர்பார்க்கலாம். சொல்ல மறந்துட்டேன். தலைக்கு கொஞ்சம் தொப்பை மட்டும் நல்லா தெரியுது. அத மட்டும் கொரச்சா இன்னும் நல்லா இருக்கும்.

பின்னணி இசைல யுவன் சும்மா பிச்சு ஒதரி இருக்காரு. படத்தை பார்த்து நான் பேஜார் ஆயிட்டேன். அதிலும் அந்த பில்லா தீம் மியூசிக்க அடிச்சிக்க முடியாது. இதை நீங்க திரை அரங்கில் பார்த்தால் தான் முழுவதுமாக அனுபவிக்க முடியும். அதே போல் ஒளிப்பதிவு. ரொம்ப நல்லா இருந்தது. ஒரு தமிழ் படம் பார்க்குற மாதிரியே இல்ல. படத்த பார்த்துட்டு வந்ததுக்கப்புறம் யார் ஒளிப்பதிவுன்னு வலைல தேடி பார்த்தா நிரவ் ஷாவாம். இவர் தான் தூம் 2, போக்கிரி படங்களின் ஒளிப்பதிவாளர். அதான்!

திரைஅரங்குல அஜித்க்கு இணையா நயன்தாராவுக்கும் விழில் பறக்குது. உடம்ப குறைத்து ரொம்ப ஸ்லிம்மா இருக்காங்க. படம் பூராவும் நடக்கறாங்க, நிக்கறாங்க இல்ல ஓடறாங்க. கொஞ்சம் கவர்ச்சியா நடிச்சி இருக்காங்க. மத்தபடி நயன்தாரா, நமீதா, சந்தானம் இவங்களுக்கு பெருசா ஒண்ணும் ரோலே இல்ல. படத்துல முக்கியமா வர்றது அஜித், பிரபு மற்றும் ரஹ்மான்.பிரபு எப்பவுமே ஹீரோவா நடிக்கரத விட இந்த மாதிரி சின்ன சின்ன வேஷத்துல தான் நல்லா அசத்துவாறு. உதாரணத்துக்கு அஞ்சலி படம். இதுலையும் ரொம்ப நல்லா பண்ணி இருக்காரு. இவரது குரல் சில இடத்துல நடிகர் திலகம் பேசுவது போலவே இருக்குது. இன்னும் சொல்ல போனால் விடுதலை படத்துல சிவாஜி பண்ணி இருப்பாரே அதே மாதிரி பண்ணி இருக்கார். தல இவர வச்சு சில காட்சிகள்ல காமெடி எல்லாம் பண்ணி இருக்கார். தலைக்கு இது போல காமெடி எல்லாம் வருமானு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. உண்மையிலேயே ரொம்ப நல்லா பண்ணி இருந்தார். இயக்குனருக்கு பாராட்டுக்கள்!

ரஹ்மானும் நல்லா நடிச்சிருக்கார். அவருக்கு இந்த போலீஸ் வேடம் நல்லா பொருந்துது. பழைய படத்தோட ரீமேக் என்பதால சில விஷயங்கள் லாஜிக்கலா இடிக்குது. ஆனா அதெல்லாம் பார்க்கப்பிடாது. படம் கண்டிப்பா நல்லா ஓடும். இன்னும் நிறைய பழைய படங்கள் ரீமேக் ஆகி வரும். அதுல நிறைய ரஜினி படமாத்தான் இருக்கும் (விஜய் முரட்டு காளை பண்ணுவார்னு நினைக்கிறேன்). மொத்தத்துல பில்லா கண்டிப்பா பார்க்க வேண்டிய படம். எனக்கே இன்னொரு வாட்டி பார்க்கணும் போல இருக்கு (நான் அஜித் விசிறி கிடையாது)!

Monday, December 3, 2007

என்சேன்டெட், ஆஜா நாச்லே திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: அமி அடம்ஸ் (Amy Adams), பாட்ரிக் தேம்ப்செய் (Patrick Dempsey), ஜேம்ஸ் மார்ஸ்டென் (James Marsden), திமோதி ஸ்பால் (Timothy Spall

இயக்குனர்: கெவின் லிமா (Kevin Lima)

தயாரிப்பு: வால்ட் டிஸ்நி பிக்சர்ஸ் (Walt Disney Pictures)

எனக்கு பேரி டேல் (Fairy Tale) கதைன்னா சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும். அதான் இந்த படம் ரிலீஸ் ஆனவுடனே போய் பார்க்கணும்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா கதாநாயகிய போஸ்டர்ல பார்த்தா அவ்வளவா பிடிக்கல. (அது என்னவோ நாம எப்ப படத்துக்கு போனாலும் யார் நடிக்கிரான்னு கேட்டுட்டு தான் போவோம். யார் டைரக்டர்னு இப்போ தான் கொஞ்ச நாளா கேக்க ஆரமிச்சிருக்கோம்) இருந்தாலும் படத்துக்கு போனேன். ரொம்ப நல்லா இருந்தது. எனக்கு படம் ரொம்ப பிடிச்சதுக்கு காரணமே கதாநாயகியோட(Amy Adams) நடிப்பு தாங்க. கலக்கிட்டாங்க. ஒரு வெகுளித்தனமான, அப்பாவியான பெண்ணாக ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க. சூப்பர்!

கதைல இவங்க பேரி டேல் உலகத்துல இருந்து நம்மளோட நிஜ உலகத்துக்கு வந்துடறாங்க. அப்புறம் என்ன நடக்குதுன்றது தான் கதை. படத்துல நல்ல காமெடி, காதல் மற்றும் பாட்டெல்லாம் இருக்கு. சில காட்சிகள்ல நம்ம இந்திய படம் பார்க்குற மாதிரி இருக்கும். ஆக மொத்தத்துல இது எல்லாரும் பார்க்க கூடிய ஒரு நல்ல பொழுது போக்கான படம். கண்டிப்பா பாருங்க!

நடிகர்கள்: மாதுரி தீக்ஷிட், அக்ஷய் கண்ணா, குனால் கபூர், கொன்கொனா சென் ஷர்மா, திவ்யா தட்டா, இர்பான் கான்

இயக்குனர்: அனில் மேத்தா

இசை: சலீம் சுலைமான்

தயாரிப்பு: ஆதித்ய சோப்ரா

இது மாதுரி தீக்ஷிட் சினிமாவில் மறுபிரவேசம் செய்திருக்கும் படம். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி இருக்கும் இப்படம் ஓரளவே வெற்றி கண்டுள்ளது.

கதைன்னு சொல்ல போனா பெருசா ஒண்ணும் இல்லீங்க. அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மாதுரி தனது கிராமத்தில் தான் நடனம் பயின்ற அரங்கினை தன் குருநாதர் மறைவிற்கு பின் இடிக்க நினைப்பவர்களிடம் இருந்து அதை அழியாமல் காப்பாற்றுவதே கதை. இதுக்காக ஒரு பந்தயம் போட்டு அந்த கிராமத்துல இருக்கவங்கள வச்சே ஒரு நடன நிகழ்ச்சி நடத்தி காட்டுவாங்க மாதுரி. படத்தை பூராவும் அழகாக கிராமத்திலேயே எடுத்திருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயம். இப்பொழுதெல்லாம் ஹிந்தி படங்களை வெளிநாட்டில் தான் எடுக்கிறார்கள். அவ்வப்போது இப்படம் 'ஸ்வதேஸ்' மற்றும் 'லகான்' திரைப்படங்களை நினைவூட்டும்.


இப்படம் ஓடுவதற்கு முக்கிய காரணம் மாதுரி தான். அப்பா! என்ன ஒரு நடனம்? சும்மா பிச்சு ஒதரிட்டாங்க. இப்போ இருக்கும் இளம் வயது நாயகிகள் கூட இப்படி ஆட முடியாது. திருவிளையாடல் ஸ்டைல்ல 'டான்ஸுக்கு மதுரின்னு' சொல்ல வச்சுட்டாங்க! என்னை ரொம்ப கவர்ந்தது கொன்கொனா சென்னுடைய (Konkona Sen) நடிப்பு தான். வழக்கம் போல இந்த படத்துலயும் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டுட்டாங்க, நடிப்புல. நடன தேர்வுக்காக இவங்க ஒரு காட்சியில ஆடி கட்டுவாங்க பாருங்க.... சான்ஸே இல்ல! ஆட தெரியாத ஒருத்தர் எப்படி ஆடுவரோ அதே மாதிரி மிகவும் நேர்த்தியா பண்ணி இருப்பாங்க. அப்புறம் அக்ஷய் கண்ணா. இவரும் வழக்கம் போல மிகவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பு எனக்கு எப்பவுமே ரொம்ப பிடிக்கும். இர்பான் கான் இதுல வெறும் நட்பிற்காக வந்து போகிறார், அதனால நடிக்க பெருசா வாய்ப்பில்லை. எனக்கு தெரிந்து ஹிந்தில நானா படேகர்க்கு(Nana Patekar) அடுத்து இவர்தான்.

சரி விஷயத்துக்கு வருவோம். நீங்க மதுரியோட விசிறியா இருந்தீங்கனா மட்டும் இந்த படத்தை பாருங்க! இல்லைன்னா உங்களுக்கு போர் அடிக்கும்!

Wednesday, November 28, 2007

கட்டாய கிராமப்புற சேவை திட்டம்!

இந்த விஷயம் ஒரு வாரமா பரபரப்பா தமிழ் நாட்டுல நடந்துக்கிட்டிருக்கு. மருத்துவ படிப்பு காலத்தை 51/2 ஆண்டில் இருந்து 61/2 ஆண்டாக உயர்த்துவதை எதிர்த்து தமிழ் நாட்டுல இருக்க எல்லா அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்திட்டு இருக்காங்க. இந்த விஷயத்தை சில பேர் அரசியலாக்கி ஆதாயம் தேடுறாங்க.

ஆனா உண்மையிலேயே மாணவர்களுக்கு என்ன பிரச்சனை? மருத்துவ படிப்பு காலம் 51/2 ஆண்டில் இருந்து 61/2 ஆண்டாக உயர்த்தப்படுவதாக இருந்தால் அவர்களின் போராட்டம் சரியே. ஆனால் உண்மை இதுவல்ல என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையானால், 51/2 ஆண்டு படிப்பு முடிந்த பின் 1 வருடம் அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் திட்டமே இது. அதுவும் முதல் 4 மாதம் கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அடுத்த 4 மாதம் தாலுகா மருத்துவமனையிலும், கடைசி 4 மாதம் மாவட்ட மருத்துவமனையிலும் பணியாற்ற வேண்டும் என்று 'அறிக்கை' தாஸ் (டாக்டர் ராமதாஸ்) சொல்கிறார். இதுல 4 மாதம் மட்டும் தான் கிராமத்தில் பணி புரிய வேண்டுமாம். இத செய்ய இவங்களுக்கு என்னவாம்? இவங்களுக்கு கிராமத்துல கிடைக்கிற அனுபவம் வேற எங்க கிடைக்கும்!

அது மட்டும் இல்லாம ரூ. 8,000 ஊக்கத் தொகையாக வேற தராங்களாம். அப்புறம் என்னங்க பிரச்சனை இவங்களுக்கு? எனக்கு தெரிஞ்சு நிறைய எம்.பி.பி.எஸ் படிச்ச டாக்டருங்க வேலை கிடைக்காம சுத்திட்டு இருக்காங்க. இன்னும் நிறைய பேர் ரொம்ப கம்மியான சம்பளத்துல சின்ன சின்ன வேலை பார்த்துட்டு இருக்காங்க. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, மெரிட்ல சீட் வாங்கி படிக்க வந்த எந்த மாணவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எம்.பி.பி.எஸ் படிக்க பல லட்சம் பணம் செலவு செய்து விட்டு, படித்து முடித்தவுடன் மேல் படிப்பிற்காக மேலை நாடுகள் செல்ல திட்ட மிட்டிருக்கும் மாணவர்கள் தான் இதை எதிர்ப்பவர்கள் என்று நினைக்கிறேன். எம்.பி.ஏ படிக்க இரண்டு வருடம் வேலை அனுபவம் கேட்கிறார்களே, அது போல இவங்களுக்கு ஒன்னும் கிடையாதா? இதை விசாரிக்க சாம்பசிவராவ் குழுன்னு ஒன்னு அமைச்சு இருக்காங்களாம். அவங்க பல ஊர்ல கருத்து கேட்டுட்டு இங்க வந்து, தமிழ் நாட்ட தவிர வேற எங்கேயும் இந்த மாதிரி எதிர்ப்பு தெரிவிக்கலைன்னு சொல்றாங்க.

இந்த திட்டம் இன்னும் சட்டமாக கொண்டு வரலை, அதுக்குள்ள எதுக்கு இந்த போராட்டம்? அப்படியே வந்தாலும், அது இனிமே எம்.பி.பி.எஸ் படிக்க வரவங்களுக்கு தானே பொருந்தும்? இதை எல்லாம் முதல்ல அரசாங்கம் தெளிவுப் படுத்தனும். அப்படி தெளிவு படுத்துன பிறகும் இந்த போராட்டம் தொடர்ந்துச்சுனா இந்த பய புள்ளைங்க வேலைக்கு ஆக மாட்டாய்ங்க! இதுல எனக்குத் தெரியாத மறைந்து கிடக்கும் ரகசியம் ஏதாவது இருந்தால் சொல்லுங்க. கேட்டுக்கறேன்!

Friday, November 23, 2007

அரைத்த மாவு!

100 ஆண்டு கால இந்திய சினிமாவில் நிறைய சாதனைகள் உள்ளன. இந்திய சினிமா ஜூலை 7, 1896 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ் சினிமா ஆரம்பித்து 75 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதில் தனி மனித சாதனைகள் ஏராளம். அதை எல்லாம் பற்றி நான் இங்கு பேசப் போவதில்லை.

இத்தனை வருட காலத்திலும் ஒரு சில விஷயங்களை காட்சிகளை பல படங்களில் ஒரே மாதிரி தான் எடுக்கிறார்கள். இதில் சில இன்றும் தொடர்கிறது. இது போல காட்சிகள் வரும்போது அடுத்து என்ன நடக்கும்னு சின்ன பசங்களுக்கு கூட தெரியும். அவற்றை பற்றி தான் நான் இங்கு சொல்லப் போகிறேன். இதுல நிறைய 70-80 களில் வந்தவையே.

காட்சி 1: யாராச்சும் ஒருத்தர் படுத்த படுக்கையா இருப்பார். ஏதோ உண்மைய சொல்ல பல நாளா முயற்சி பண்ணுவார். கடைசியா பாதி மட்டேற சொல்லிட்டு உயிரை விட்டுருவார். ஹய்யோ ஹய்யோ!

காட்சி 2: இது ரொம்ப பிரபலம். சின்ன வயசுல இந்த மாதிரி படம் ஆரமிச்சுதுனா ரொம்ப ஆவலா குந்திகின்னு பார்ப்போம். எதுத்த உடனேயே ஒரு கொள்ளை கார கும்பல் வந்து ஒரு வீட்டுல இருக்கற எல்லாரையும் போட்டு தள்ளிடுவாங்க. அதுல ஒரே ஒரு சின்ன பயனோ பொன்னோ மட்டும் தப்பிச்சு போயிடுவாங்க. இவங்க தான் படத்தோட கதாநாயகன் அல்லது கதாநாயகி. இன்னும் சில படத்துல தப்பிச்சி போனவங்க கூட ஏதாச்சும் வீட்டு அல்லது காட்டு விலங்கும் சேர்ந்துக்கும். ஹ்ம்ம்... ஆத்தாளுக்கு ஒரு மாத்தாளு, அடுப்பு கட்டைக்கு ஒரு தொடப்ப கட்ட! இந்த பழ மொழிய எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. இத ரொம்ப நாளா உபயோகிக்கனும்னு பார்த்தேன்...அதான்;)

காட்சி 3: அப்புறம் இந்த இரட்டை வேடம் போட்டு ஹீரோ நடிக்கும் படத்துல பார்த்தீங்கனா, அவங்க சகோதரர்களா வந்தா படம் ஆரமிக்கும் போதே பிரிஞ்சுடுவாங்க. அப்புறம் கடைசியில ரொம்ப கஷ்டப்பட்டு ஒன்னு சேருவாங்க. அப்ப கூட யாருக்காச்சும் ஜோடி இல்லனா அவங்கள கொன்னுடுவாங்க. அவ்வ்வ்வுங்!

காட்சி 4: ஒரு பயங்கர வில்லன காட்டுவாங்க. அவன எதிர்த்து யார் பேசினாலும் அவங்கள உடனே பேச்சே இல்லாம கொன்னுடுவான் வில்லன். ஆனா நம்ம ஹீரோ பேசினா மட்டும் முதல மாத்தி மாத்தி டயலாக் தான். அப்புறம் எப்படியாவது ஹீரோவ பிடிசிடுவான் வில்லன். ஆனா உடனே சாகடிக்க மாட்டான். ஹீரோவ ஒரு ரூம்ல வச்சு கட்டி(ரொம்ப ஈசியா அவுக்குற மாதிரி) ஒரு குண்டு வச்சுட்டு(அதுக்கும் வெடிக்க நேரம் ஜாஸ்தியா வச்சு ட்டு) போயிடுவான். ஹீரோ தப்பிச்சு வந்து வில்லன கொன்னுடுவாரு. இஸ்ஸ்ஸப்பா! இப்பவே கண்ண கட்டுதே!


காட்சி 5: ஒரு படத்துல ஹீரோ நல்லா பொண்ணுகள கிண்டல் பண்ணி பாட்டு எல்லாம் பாடுவாரு. இத ரொம்ப ஜாலியா காட்டுவாய்ங்க. இன்னொரு படம். அதே காட்சி. ஆனா இப்போ ஹீரோக்கு பதில் வில்லன். அப்புறம் என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும். என்ன கொடுமை இது?

காட்சி 6: இது காலா காலத்துக்கும் நடந்துட்டு வருது. ஹீரோயின்னுக்கும் வேறு ஒருத்தருக்கும் கல்யாணம் நிச்சயம் ஆயிடும். ஆனா கடைசியில நம்ம ஹீரோ பொண்ண தட்டிட்டு போயிடுவாரு. இதுக்காக நல்லவரா இருந்த முதல்ல நிச்சயமானவர கெட்டவரா மாத்திடுவாங்க. ரைட்டு விடு!

காட்சி 7: இதான் எனக்கு தெரிந்த காட்சிகள்லயே டாப்புங்க. படத்துல யாராச்சும் ரெண்டு பேரு ரொம்ப நல்லா அன்யோன்யமா இருப்பாங்க. திடீல்னு அவங்களுக்குள்ள ஒரு பெரிய பிரச்சனை வரும். ஆனா மெய்யாலுமே என்ன நடந்ததுன்னு ஒருத்தருக்கு தெரியாது. இன்னொருத்தர் அதை சொல்ல வருவார். அப்ப இவரு:

"வேண்டாம்! நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். உன்ன பார்க்கவே எனக்கு பிடிக்கல. இங்க இருந்து போயிடு"

"நீ என்ன சொல்லப்போறேன்னு எனக்கு தெரியும். வேண்டாம்! போயிடு!"

இப்படி இல்லனா, பக்கத்துல இருக்க ஒருத்தர பார்த்து, "அவன இங்க இருந்து போகச் சொல்லு. இல்ல நான் மனுஷனா இருக்க மாட்டேன்", இப்படி எல்லாம் சொல்லி அனுப்பிடுவாரு.

இதுல இன்னும் கொடுமை என்னன்னா, உண்மைய சொல்ல முயற்சி பண்றவர், கடைசி வரைக்கும் "நான் என்ன சொல்ல வரன்னா, நான் என்ன சொல்ல வரன்னா" இப்படி சொல்லியே நேரத்த ஓட்டிடுவார். அவரு சொல்ல வர உண்மை "நான் என்ன சொல்ல வரன்னா"வை விட சின்னதா தான் இருக்கும்!

அப்புறம் படத்தோட கடைசியில ஒரு சின்ன குழந்தையோ அல்லது சம்பந்தமே இல்லாத ஒருத்தரோ உண்மைய சொல்ல இவங்க ஒன்னு சேர்ந்துடுவாங்க. சொல்ல போனா இந்த மேட்டர வச்சு தான் முழு கதையே! லைட்டா வலிக்குதா?

இஸ்ஸப்பாடா......என் மனசுல இருந்தத எல்லாம் கொட்டிட்டேன்!

Wednesday, November 21, 2007

நான் சமீபத்தில் எடுத்ததில் எனக்கு பிடித்த சில படங்கள்...

















Monday, November 19, 2007

சாவரியா...

இல்லீங்கோ நான் உங்கள சாக சொல்லலீங்கோ...இது இப்போ வந்து இருக்குற ஹிந்தி படத்தோட டைட்டில். ஆனா இந்த படத்தை பார்த்தா நீங்க அந்த முடிவுக்கு தான் வருவீங்கன்னு பயலுக சொல்றாய்ங்க. அத கேட்டுட்டு தான் நான் என் முடிவ மாத்திகிட்டு ஷாருக்கான் படத்துக்கு போனேன்.

இன்னைக்கு என் கூட வேலை பாக்குற வட இந்திய பையன் ஒருத்தன் சாவரியா படத்தோட கதைய சொன்னான். அவன் கதைய சொல்ல சொல்ல அது எனக்கு ஏற்கனவே பரிட்சியமான கதை மாதிரி இருந்துது.

படத்தோட முடிவ கேட்டவுடனே தான் தெரிஞ்சிது அது நம்ம தமிழ் படம் "இயற்கை". அடப்பாவீங்களா...இதுக்கா இவ்வளவு பில்ட்-அப்? யய்யாடி! இத நான் சஞ்சய் லீலா பான்சாலி கிட்ட இருந்து எதிர் பாக்கல. ஒரு விஷயம் தான் எனக்கு புரியல. இத நம்ம ஆளுங்க கிட்ட கேட்டு வாங்கி எதுத்தாங்களா இல்ல சுட்டுடாங்கலானு! ஏன்னா நம்ம ஆளுங்க கிட்ட இருந்து இன்னும் ஒரு ரியாக்க்ஷனும் காணோம்!

Saturday, November 10, 2007

ஓம் சாந்தி ஓம் திரைப்பட விமர்சனம்

மசாலா கலவை!

தயாரிப்பு: கௌரி கான் (ஷாருக்கான் துணைவி)
இயக்குனர்: பாரா கான் (Farah Khan)
நடிகர்கள்: ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஸ்ரேயாஸ் தல்படே
இசை: விஷால்-சேகர்
ஒளிப்பதிவு: வி. மணிகண்டன்

இது ஒரு முழு நீள மசாலா திரைப்படம். இப்படம் நம் கமல் நடித்த எனக்குள் ஒருவன் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. ஆம் மறுஜென்மம் பற்றிய கதை தான். அதே மாதிரியான பழி வாங்கும் கதை, ஆனால் நகைச்சுவையாக எதுத்திருக்கிறார்கள். லாஜிக் பார்க்காம படத்தை பார்த்தால் நல்லா என்ஜாய் பண்ணலாம்.


ஷாருக்கான் இந்த படத்தில் ஒரு ஜன்மத்தில் சாதிக்க முடியாததை அடுத்த ஜன்மத்தில் சாதித்து காட்டுகிறார். இடைவெளிக்கு முன் வரை 1970களில் நடப்பது போன்று கதையை காட்டி இருக்கிறார்கள். ஷாருக்கானும் அவரது நண்பரும் துணை நடிகர்கள். ஷாருக்கான் தான் ஓம். ஆனால் ஷாருக்கான் ஒரு பெரிய கதாநாயகனாக விரும்புகிறார். அப்போதைய பாலிவுட் டாப் நடிகையாக வருகிறார் இப்படத்தினுடைய நாயகி தீபிகா படுகோனே. இவர் தான் சாந்தி. மிகவும் அழகாக இருக்கிறார், இப்படத்திற்கு பொருத்தமான தேர்வு. அனைவருக்கும் கனவு தேவதையாக திகழும் இவரை ஷாருக்கான் ஒரு தலையாக காதலிக்கிறார், இந்த படத்துல தான், இல்லனா தோணி கொவிச்சுக்குவார். படப்பிடிப்பில் நடக்கும் எதிர்பாராத விபத்து ஒன்றில் இருந்து தீபிகாவை காப்பாற்றி அவரின் நட்பை பெறுகிறார் ஷாருக்கான். பின்னர் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை அறிந்து மனம் ஒடிந்து போகிறார். இவருக்கு எல்லா படத்துலயும் இதே பொழப்பு தான்.

தீபிகாவை வைத்து ஒரு மிகப்பெரிய படத்தை "ஓம் சாந்தி ஓம்" தயாரிக்கிறார் ஒரு பெரிய தயாரிப்பாளர். இவர்தான் அர்ஜுன் ராம்பால், இப்படத்தின் வில்லன். இவர்தான் தீபிகாவை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால் தீபிகா திருமணம் ஆனவர் என்று தெரிந்தால் அவர் எடுக்கும் படம் ஓடாது என்பதால் அவர்களுக்கு நடந்த திருமணத்தை மறைமுகமாக வைத்து இருக்கிறார்கள். அதை ஷாருக்கான் தற்செயலாக தெரிந்து கொள்கிறார். பின்னர் தீபிகா தான் கர்பமாக இருப்பதாகவும் தான் மேலும் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்றும் அர்ஜுனிடம் சொல்கிறார். இதனால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் தீபிகாவை அர்ஜுன் தனது ஓம் சாந்தி ஓம் பட செட்டுக்கு கூட்டி சென்று அங்கேயே அவரை வைத்து அடைத்து செட்டை எரித்து விடுகிறார். அர்ஜுன் அவ்விடத்தை விட்டு சென்ற பிறகு இதை பார்க்கிற ஷாருக், தீபிகாவை காப்பாற்றும் முயற்சியில் தனது உயிரை விடுகிறார்.

உயிரை விடும் ஷாருக் ஒரு பெரிய நடிகருக்கு மகனாய் வந்து பிறக்கிறார். பிறகு அவர் பெரிய நடிராகி, எப்படி அர்ஜுன் ராம்பாலை பழி வாங்குகிறார் என்பது தான் பிற்பாதி கதை. படத்தில் ஒரு பாட்டில் அனைத்து பாலிவுட் ஸ்டார்களும் வந்து போகிறார்கள். ஏகப்பட்ட ஸ்டார் கூட்டம். நல்ல மார்க்கெட்டிங் உத்தி. முதல் பாதியில் ஷாருக் தீபிகாவை கவர தான் ஒரு தென் இந்தியா ஹீரோ என்று கதை விட்டு தமிழில் டயலாக் பேசுகிறார் இல்ல இல்ல கொலை செய்கிறார். பாதி படம் கலக்க போவது யாரு மாதிரி இருக்குது. 1970களில் வந்த படங்களையும், அதில் வரும் டயலாக்குகளையும் நக்கல் விதுவது போல் உள்ளது. படத்தில் செட்டிங்கும், உடைகளும் மிக அருமை. இறந்து போன தீபிகா படுகோனேவும் மறுபடியும் வருகிறார், ஆனால் இவர் மறுஜென்மம் இல்லை. என்ன கொடுமை சார் இது? கதையில் பல காட்சிகளை சுலபமாக யூகித்து விட முடிகிறது.

ஆக மொத்தத்தில் ஒரு மசாலா படத்தை நகைச்சுவையாக அனைவரும் ரசிக்கும் படியும் கொடுத்து இருக்கிறார்கள். இப்படத்தை ஷாருக்கை தவிர வேறு யார் செய்து இருந்தாலும் சுமாராகத்தான் ஓடி இருக்கும். இப்படத்திற்கு rediff 3.5 ரேடிங் கொடுத்தது கொஞ்சம் ஓவர் தான். ஷாருக்கான் படம் எப்படி இருந்தாலும் புகழ்றாங்கப்பா!

Wednesday, November 7, 2007

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி வால் தனம் பண்ணாம...




இந்த மாதிரி அழகா பத்திரமா கொண்டாடுங்க!!!

Saturday, November 3, 2007

கனா காணும் காலங்கள்

இந்த விஜய் டிவி வந்ததுக்கப்புறம் சன் டிவி பக்கமே இப்போவெல்லாம் போறது இல்ல. சன் டிவில போடற அழுகாச்சி மெகா சீரியல்ல இருந்து ஒரு வழியா வெளிய வந்தாச்சு, வந்து ஒரு ஆறு மாசம் இருக்கும். ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் சிங்கப்பூர்ல விஜய் டிவி ஒளிபரப்ப ஆரமிச்சாங்க. இந்த கால யூத், குழந்தைகள், பெரியவர்கள் எல்லாரும் ரசித்து பார்க்குற மாதிரி எல்லாமே நல்ல நல்ல ப்ரோக்றாம்ஸ்.


இதுல என்ன ரொம்ப கவர்ந்த ஒரு ப்ரோக்ராம்னா அது கனா காணும் காலங்கள் தான். நம்மளுடைய பள்ளி பருவத்த அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்து காட்றாங்க. ஆபீஸ் விட்டு வந்ததுக்கப்புறம் ஒரு அரை மணி நேரம் நல்லா சிரிக்க முடியுது. இந்த மாதிரி ஒரு சீரியல தான் நான் இவ்வளவு நாள் எதிர் பார்த்துக்கிட்டு இருந்தேன். இந்த கனா காணும் காலங்களோட இயக்குனர உண்மையிலேயே பாராட்டனும். நல்லா ரசிச்சி, அனுபவிச்சு எடுக்கறாரு. ஒவ்வொரு கேரக்டருக்கும் பொருத்தமா ஆளை பிடிச்சி போட்டுருக்காரு. எல்லாருமே நல்லா யதார்த்தமா நடிக்கிறாங்க.

சரி ஆறு மாசம் ஆச்சே நம்ம சன் டிவி சீரியல் எல்லாம் எந்த நிலைமைல இருக்குன்னு பார்க்கலாம்னு கொஞ்சம் சேனல மாத்தி பார்த்தேன். ஆனந்தம்ல நம்ம சுகன்யா ஆன்டி அவங்க மாமியார் சவத்த வச்சு வில்லியோட ஏதோ மத்தியஸ்தம் பண்ணி கிட்டு இருந்தாங்க. கொடுமைடானு மாத்திட்டேன். அப்புறம் கோலங்கள். ஒரு வழியா இரண்டு வருஷ எபிசோடுக்கப்புறம் நம்ம தேவயானிக்கு அவங்க அப்பா யாருன்னு தெரிஞ்சிடுச்சி போல. ஆனா இதுல பார்த்தீங்கனா ஒருத்தியும் அவ புருஷனோட இருக்க மாட்டா. இத பார்த்தா எப்படீங்க குடும்பம் உருப்படும்? அடுத்து நம்ம ராதிகாவோட அரசி. ராதிகாக்கு எதுக்கு இந்த வயசுல இதெல்லாம்? அதுவும் டபுள் ஆக்ஷன் வேற. அரசி என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்னு மாத்தி ஒரு இரண்டு நிமிஷம் தான் இருக்கும், அதுக்குள்ள ஒரு பாம் வெடிச்சு அம்மா ராதிகா ஹாஸ்பிடல்ல இருக்காங்க. என்ன கொடுமை சார் இது? அந்த சினிமாக்காரங்க தான் அப்படீன்னா இங்கயுமா? ஆனா ஒரு விஷயங்க. இந்த சீரியல் எல்லாம் எத்தனை நாள் கழிச்சு பார்த்தாலும் எங்க விட்டமோ அங்கயேதான் இருக்கு.

இதெல்லாம் பார்த்துட்டு கனா காணும் காலங்கள் மாதிரி ஒரு நல்ல சீரியல பார்த்தவுடனே பாராட்டணும்னு தோணுச்சு. அதான் இந்த பதிவு. இதுல வெறும் சிரிக்க மட்டும் வைக்காம எப்படி கடமைக்காக படிக்காம காதலிச்சு படிக்கனும்னு அழகா சொல்லி தராங்க. ஆனா அந்த வயசுல யாருங்க படிப்ப காதலிப்பா;)

Saturday, September 29, 2007

ஸ்வீட்ஸ்...

இப்போவெல்லாம் ஊருக்கு போயிட்டு வரும்போது வீட்டுல கொடுத்து அனுப்புற ஸ்வீட்ஸ் ஒரு வாரம் ஆனாலும் காலி ஆகாம அப்படியே இருக்கு. ஆனா நான் சின்ன புள்ளையா இருந்தப்ப அப்படி இல்ல. அப்ப ஸ்வீட்ஸ்னா எனக்கு உசுரு! எவ்வளவு கொடுத்தாலும் ஒரே நாள் தான்! அப்போ ஸ்வீட்ஸ் கிடைக்கிறது ரொம்ப அபூர்வம். பண்டிகை நாள் இல்ல விருந்தாளிங்க வந்தாதான். எங்கப்பா வாரத்துல ஒரு நாள் அவருக்கு ஆப்பீஸ்ல கொடுக்குற ஸ்வீட்டையும் எங்களுக்கு கொண்டு வந்து கொடுத்துடுவாரு. அந்த அளவுக்கு ஸ்வீட்னா அலையுவோம். இப்ப நம்மாலயே எவ்வளவு ஸ்வீட் வேணும்னாலும் வாங்கிக்க முடியும், ஆனா சாப்பிட பிடிக்கல. நான் கூட சின்ன வயசுல நம்ம பணம் சம்பாதிச்சா எல்லாம் வந்துடும்னு நினைச்சேன், ஆனால் அப்ப இருந்த அந்த கவலை இல்லாத வாழ்க்கையும் சந்தோஷமும் போயிடும்னு தெரியல. ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சிகிட்டேன், உண்மையான சந்தோஷமே மத்தவங்கள சந்தோஷப் படுத்தி பார்க்கிறதுலதான்னு (ரொம்ப மொக்கய போட்டுட்டேனா;)

சரி இப்ப இந்த ஸ்வீட்ஸ்காக சின்ன வயசுல நான் பட்ட கஷ்டத்த எல்லாம் பார்ப்போம்...நீங்க கூட இதெல்லாம் அனுபவிச்சி இருக்கலாம்.

காட்சி 1:

நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வரும் போது ஏதாச்சும் வாங்கிட்டு வருவாங்க. நானும் யாராச்சும் வந்தா உடனே ஓடி போயி மொதல்ல அவங்க கையில என்ன இருக்குன்னு பார்த்துட்டுதான், அவங்க முகத்தையே பார்ப்பேன். அப்புறம் ஓடி போயி அப்பா கிட்ட சொல்லுவேன்...சிங்காரவேலன் கொண்டமணி மாதிரி "மனோ யாரு வந்துருக்கா பாரு, கருவாடு வந்துருக்கு"னு இல்லங்க!

வந்த விருந்தாளிங்க உடனே என்ன கூப்பிட்டு அவங்க வாங்கிட்டு வந்த ஸ்வீட்ஸ என் கையில கொடுப்பாங்க. நான் உடனே என் அப்பா முகத்த பார்ப்பேன். அப்பா உடனே, "எதுக்குங்க இங்க பார்மாலிடி எல்லாம்?" வந்தவங்க, "இருக்கட்டுங்க. பசங்க இருக்காங்க இல்ல" நானும் உடனே ரொம்ப நல்ல பிள்ளையா, "இல்ல வேண்டாம், இல்ல வேண்டாம்"னு நடிச்சிட்டிருப்பேன். அப்படியே எப்படா அப்பா வாங்கிக்க சொல்லுவாருன்னு அவரு வாயையே பார்த்துகிட்டு இருப்பேன்! அப்பா வாங்கிக்கோன்னு சொன்ன உடனே, கபால்னு வாங்கிப்பேன். அப்படியே நைஸா கொஞ்சம் தள்ளி போய் அத பிரிக்கலாம்னு பார்ப்பேன்...அங்க இருந்து அப்பா என்ன கோபமா ஒரு பார்வை பார்ப்பார் பாருங்க...அவ்வளோதான்...கம்னு அத அங்கயே வச்சுடுவேன். மனசுக்குள்ள, "கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போயிடுச்சே! ஏன்பா, அவங்ககிட்ட பேசறத விட்டுட்டு என் கையில இருக்க ஸ்வீட்ஸயே ஏன் பார்க்குற...அது எனக்கு தான கொடுத்தாங்க?" அப்படீன்னு நெனசிகிட்டு உள்ளே போடுவேன்.

அரைச்ச மாவ எல்லாம் அரைச்சிட்டு வந்தவங்க கிளம்புவாங்க. அப்ப ஒரு சந்தோஷம் வரும் பாருங்க...அட அட அட...அப்பா அம்மா அவங்கள வழி அனுப்ப வாசலுக்கு போவாங்க, நான் ஸ்வீட்ஸ எடுத்துகிட்டு சமையக்கட்டுக்கு பொயிருவேன்!

காட்சி 2:

இந்த பண்டிகை நாள் வந்தா போதுங்க. எங்கம்மா பெரியம்மா எல்லாம் சேர்ந்து குந்திகின்னு பலகாரம் செய்யவாங்க. அதுவும் விதவிதமாய். அதிரசம், முறுக்கு, சோமாஸ், சீடை, லட்டு, எல்லடை இப்படி பல. ஆனா எங்கள கிட்ட நெருங்க விட மாட்டாங்க. கேட்டா எல்லாம் சாமி் கும்மி்ட்ட அப்புறம் தான்னு சொல்லி விரட்டிடுவாங்க. பாவம் இல்ல நான், இந்த சின்ன பிஞ்சுக்கு அதெல்லாம் எங்க தெரியும்!

நானும் சரி எல்லாம் எங்க போயிடப் போகுது, நம்ம கிட்ட தான வந்தாகனும்னு கம்னு போயிருவேன். வழக்கம் போல பூசை லேட்டாகவே முடியும். பசில காது கீதெல்லாம் அடைச்சிருக்கும். அப்பவும் இந்த பாழாப்போன காக்கா வாய வச்சா தான் சாப்பிடனுமாம். அதுங்க எல்லா வீட்டுலயும் நல்லா மூக்க பிடிக்க தின்னுட்டு நாங்க கூப்பிடும் போது வராதுங்க. அதுங்குள கூப்பிட கத்தி கத்தி இருந்த கொஞ்ச நஞ்ச பிராணமும் போயிடும். (இதுல இன்னொரு விஷயம் சொல்லனும். நான் சின்ன வயசுல தாத்தா/பாட்டி எல்லாம் எங்கனு அம்மாட்ட கேட்டா, அவங்க எல்லாம் சொற்கத்துல இருக்காங்கனு சொல்லுவாங்க. வீட்டுல பேரனோ பேத்தியோ பிறந்தா உடனே உங்க தாத்தா/பாட்டி தான்டா வந்து பிறந்திருக்காங்கனு சொல்லுவாங்க. நான் நைட்ல பேய் பிசாச பார்த்து பயந்தா உடனே உங்க தாத்தா/பாட்டி எல்லாம் உன்ன சுத்திகிட்டே இருப்பாங்கடா, உன்ன பத்திரமா பார்த்துக்குவாங்கனு சொல்லுவாங்க. இத எல்லாத்த விட இந்த பண்டிகை நாள்ல காக்காய்ங்க வந்து சாப்பிடும் போது ஒரு அண்டங்காக்கா வரும். அத பார்த்தவுடனே உங்க தாத்தா வந்துட்டாருன்னு சொல்லுவாங்க. எங்க தாத்தா எத்தன ஆக்ட் கொடுக்குறாரு பார்த்தீங்களா;)

கடைசியா ஏதாச்சும் ஒரு காக்கா எங்கள பார்த்து பரிதாப பட்டு வந்து வடைய மட்டும் எடுத்துட்டு போகும். உடனே, ஓடு குடு குடுன்னு வீட்டுக்குள்ள. இருக்குற பசில முதல்ல சோத்த கொட்டிக்குவேன். அப்புறம் கொஞ்சமா பலகாரம் சாப்பிடுவேன். மி்ச்சத்த அப்புறம் சாப்பிடலாம்னு விட்டுருவேன். அப்ப எங்கம்மா, பெரியம்மா எல்லாம் திரும்பி ஒன்னு கூடுவாங்க. செஞ்ச பலகாரத்தை எல்லாம் பங்கு பங்கா பிரிப்பாங்க. அத பார்த்தவுடனே எனக்கு தூக்கி வாரி போடும். யாருக்குமான்னு கேட்டா அக்கம் பக்கத்துல இருக்கவங்களுக்கும், சொந்தக்காரவங்களுக்கும்னு சொல்லுவாங்க. அவங்க ஒவ்வொரு பங்கா பிரிக்கும் போதும், அப்படியே அடிச்சிக்கும் என் இதயம், எப்படா நிறுத்துவாய்ங்கன்னு. அப்ப அப்ப கிட்ட போயி இவங்க வீட்டுக்கு எதுக்குமா இவ்வளவு, அவங்க வீட்டுல இரண்டு பேரு தான, அப்படின்னு இப்படின்னு சொல்லி என்னால முடிஞ்ச வரைக்கும் பங்கை குறைப்பேன். ஒரு வழியா எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் போயி பார்த்தா தமாதூண்டு தான் மி்ச்சம் இருக்கும். "ஆஹா, இப்படி நம்ம கதை இலவு காத்த கிளி மாதிரி ஆயிடுச்சே"! இருக்குற ஸ்வீட்ஸ் இரண்டு நாள்ல காலி ஆயிடும். அப்புறம் கிடைக்குற 25 காசு 50 காச வச்சு தேன் மி்ட்டாய் இல்ல பல்லி மி்ட்டாய் வாங்கி தின்னுக்குவேன்! அவ்வ்ங்!

காட்சி 3:

அப்ப எங்க வீட்டுல ஏதோ விஷேசம். சொந்தக்காரவங்க எல்லாம் வந்திருந்தாங்க. அதுல சில வாண்டுகளும் உண்டு. ஒரு குட்டி வாண்டு கையில ஏதோ சாக்லேட் வச்சு தின்னுக்கிட்டு இருந்தது. அங்க உட்கார்த்திருந்த சில சொந்தக்காரங்க, "டேய் எங்களுக்கு டா? நீ மட்டும் சாப்பிடற!" அப்படின்னு வழக்கமா சொல்ற டைலாக்க சொல்லி இருக்காங்க. உடனே அந்த வாண்டு ஓடிப் போயி அங்க உட்கார்ந்திருந்த எல்லாருக்கும் சாக்லேட் வாங்கியாந்து கொடுத்துட்டான்.

இதெல்லாம் எதுவும் தெரியாம நான் உள்ள நுழையறேன். உடனே அங்கிருந்த சொந்தக்காரங்கள்ல ஒருத்தவங்க என்ன பார்த்து, "டேய் பார்த்தியா? நீயும் இருக்கியே. எப்பவாவது எங்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்திருக்கியா? குழந்தய பாரு கேட்ட உடனே வாங்கியாந்து கொடுத்துட்டான்". எனக்கா சரியான கடுப்பு. அந்த வாண்ட பார்த்து முறைச்சிக்கிட்டே, "டேய், எனக்குடா சாக்லேட்டு?"அவன் குடு குடுன்னு ஓடறான். பின்னாலயே நானும் ஓடினேன். நேரா என் ரூமுக்குள்ள போறான். எனக்கு ஒன்னும் புரியல. என் ரூமுக்கு எதுக்கு போறான்னு ஒரே குழப்பம். போனவன் என் கப்போர்ட திறந்து என் உண்டிய எடுத்தான். அத தல கீழ கவுத்து குச்சி வச்சு நோண்டி காச எடுத்தான். (இந்த உண்டில தான் நான் அப்ப அப்ப ஸ்வீட் வாங்கி சாப்பிட காசு சேர்த்து வைப்பேன்:( காச எடுத்தவன் நேரா வீட்டு கோடியில இருக்க கடைக்கு போயி சாக்லேட் வாங்கியாந்து என் கிட்டயே கொடுத்தான். உடனே என் சொந்தக்காரங்க எல்லாம் திரும்பவும் அவன புகழ்ந்து தள்ளிட்டாங்க. எனக்கு வந்துச்சே கோவம்....அப்படியே ராசா...எப்படி ராசா இதெல்லாம்னு கேட்டு கிட்டே அவன அப்படியே தூக்கிகிட்டு வீட்டு மொட்டை மாடிக்கு போயிட்டேன். அப்புறம் என்ன...கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ தான்.

Wednesday, August 29, 2007

மழலைப் பட்டாளம்!

ஒரு நாள் எங்க வீட்டுக்கு சில விருந்தாளிங்க வந்திருந்தாங்க. அதுல சில பொடிசுகளும் உண்டு. எனக்கு கொஞ்சம் போர் அடிச்சதுனால ஒரு பொடியன கூப்பிட்டு பேச்சு கொடுத்தேன்.

நான், "டேய், இங்க வாடா!"

பொடியன், "என்ன?"

நான், "இங்க வாடா சொல்றேன்"

அவனும் கிட்ட வந்தான். கொஞ்ச நேரம் அவன் கிட்ட வழக்கம் போல, பேரு என்ன, என்ன படிக்கிற, நல்லா படிப்பியான்னு மொக்கைய பொட்டுட்டு...சரி, ஒரு கதை சொல்லுடானு கேட்டேன். அவனும் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, கதை சொல்ல ஆரமி்ச்சான்.

நான், "நல்ல காமடி கதையா சொல்லு"

பொடியன், "சரி...ஒரு ஊர்ல ஒரு ஆளு இருந்தானா. அவன் ஒரு நாள் ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தானா..."

திடீல்னு கதைய நிறுத்திட்டு பொடியன் என்கிட்ட, "'ஹும்' சொல்லுங்க..."
நான், "'ஹும்' சொல்லனுமா? எதுக்கு?"

பொடியன், "என் பாட்டி அப்படி சொல்ல சொல்லி தான் கதை சொல்லுவாங்க"
நான், "உன் பாட்டி நீ எங்க தூங்கிடப் போறியோன்னு அப்படி சொல்லி இருப்பாங்க"

பொடியன், "அதெல்லாம் இல்ல...நீங்க ஹும் சொன்னா தான் நான் கதை சொல்லுவேன்"

நான், "சரி, ஹும்"

பொடியன், "எங்க விட்டேன்?"

நான், "அதான் அந்த ஆளு ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தானே"

பொடியன், "ஆமா...அவன் ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தானா..."

நான், "ஹும்"

பொடியன், "அப்படியே நடந்துகிட்டே இருந்தானா..."

நான், "ஹும்"

பொடியன், "ரொம்ப தூரமா நடந்து போயிட்டு இருந்தானா"

நான், "சரி எவ்வளவு நேரம் தான் நடப்பான்...அப்புறம் சொல்லு?"

பொடியன், "அப்போ திடீல்னு ஒரு வாழபயம் தோல் மேல கால வச்சி வழுக்கி விழுந்துட்டான்" அப்படின்னு சொல்லிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறான் அந்த பொடியன்.

நான், "ஹும் அப்புறம்?"

பொடியன், "அவ்வளோதான்! நீங்களும் சிரீங்க!"

நான், "அடப்பாவி இதுக்காடா இத்தன கிலோ மீட்டர் அந்த ஆள நடக்க வச்ச?"

நான் மனசுக்குள், "உனக்கு வேனும்டா...உனக்கு வேனும். கதையா கேக்குற கதை?"


**********

என் பிரண்ட் வீட்டு மாடில ஒரு டியுஷண் சென்டர் இருந்தது. அங்க முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள பசங்களுக்கு டியுஷன் எடுப்பாய்ங்க.

ஒரு நாள் அங்க டியுஷன் படிக்க வந்த இரண்டு குட்டி பசங்க, அவங்க கிலாஸ் மி்ஸ்ஸ பத்தி பெருமையா பேசிக்கிட்டு...இல்ல சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. என் மி்ஸ் தான் சூப்பர், என் மி்ஸ் அடிக்கவே மாட்டாங்கனு...அப்படி இப்படின்னு! என் பிரண்டு அதுல ஒரு பயன கூப்பிட்டான்.

பிரண்ட்: உன் பேரு என்னடா?

பையன்: சந்திரமொவ்லி

பிரண்ட்: எந்த ஸ்கூல்?

பையன்: அலகப்பா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல்

பிரண்ட்: எந்த கிலாஸ் படிக்குற?

பையன்: 1ஸ்ட் ஸ்டாண்டர்ட்

பிரண்ட்: உங்க கிலாஸ் மி்ஸ் பேரு என்ன?

பையன்: லதா

பிரண்ட்: உங்க மி்ஸ் அழகா இருப்பாங்களா?

பையன்: ஹும்...நல்ல இருப்பாங்க!...நான் போகனும்!

பிரண்ட்: இருடா...உங்க மி்ஸ்ஸுக்கு கல்யாணம் அயிடுச்சா?

பையன்: தெரியாது!

பிரண்ட்: என்னாடா நீ...இது கூட தெரியாம இருக்க...சரி நாளைக்கு கேட்டுட்டு வறியா?

பையன்: சரி!

பிரண்ட்: என்ன போட்டு கொடுத்துடாதே உங்க மி்ஸ் கிட்ட...நான் உனக்கு சாக்லேட் வாங்கி தர்றேன். சரியா?

பையன்: ஆங்...சரி!

பிரண்ட்: ஆமா...எப்படி மி்ஸ்ஸுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு தெரிஞ்சிப்ப?

பையன்: அதுவா...எங்க மி்ஸ்ஸோட பையன் என்கூட தான் படிக்கிறான் . . . அவன் கிட்ட கேட்டு சொல்றேன். சரி...நான் போயிட்டு வரேன் அங்கிள்!

பிரண்ட் என்கிட்ட: ஹவ்வ்வ்வ்....சாய்ச்சி புட்டாங்க மச்சான்!


***********

ஒரு நாள் என் பிரண்ட் அவன் பையன பிளே ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர போயிட்டு இருந்தான். என்ன வழியில பார்த்துட்டு என்னையும் கூட வர சொன்னான். இல்லடா நான் வரலன்னு சொன்னாலும் அவன் கேக்கவே இல்ல. சரின்னு நானும் கூட போனேன்.

ஸ்கூல் உள்ள போனோம். அப்ப தான் ஸ்கூல் விட்டு எல்லாம் வீட்டுக்கு போயிட்டிருந்தாங்க. என் பிரண்டோட பையன் வந்தான். என் பிரண்ட் உடனே அவனுக்கு 'கிவ் பைவ்' கொடுத்தான். இப்போ எல்லா சின்ன பசங்களும் இதைத்தான் செய்றாங்க. ஒன்னும் இல்ல, நம்ம இரண்டு கைய நீட்டுனா, மற்றவர் அவங்க இரண்டு கையால நம்ம கைய தட்டுவாய்ங்க. அவ்வளோதான்!

என் பிரண்டு என்னையும் 'கிவ் பைவ்' கொடுக்க சொன்னான். நானும் அப்படியே உட்காந்து, அவனுக்கு 'கிவ் பைவ்' கொடுத்தேன். கொடுத்துட்டு எழுந்து பார்த்தா, ஒரு இருபது இருபத்தைந்து பசங்க வேகமா என்ன பார்த்து ஓடி வராங்க. எனக்கு ஒன்னுமே புரியல. எல்லாரும் கிட்ட வந்த உடனே என்னன்னு கேட்டா, எல்லாருக்கும் 'கிவ் பைவ்' கொடுக்கனுமாம் நான். எல்லாம் என் பிரண்ட் பையனோட கிலாஸ் மேட்ஸாம். ஒரு பதினைந்து நிமி்ஷம், உக்காந்து எல்லாருக்கும் என் கை சிவக்க சிவக்க 'கிவ் பைவ்' கொடுத்தேன்:(

சரி எல்லாம் முடிச்சுதுன்னு நம்பி எழுந்தா, இன்னு ஒரு அஞ்சி பேரு...அவங்க ஆச தீர எங்கிட்ட 'கிவ் பைவ்' வாங்கிட்டாங்க!

இதெல்லாம் பக்கத்துல நின்னு பார்த்து என் பிரண்ட் ரசிச்சிக்கிட்டிருக்கான்! நான், "டேய் நான் தான் அப்பவே வர மாட்டேன்னு சொன்னனேடா . . . கேட்டியா? ஒரு சிங்கத்த கூட்டியாந்து, சின்னாபின்னமாக்கிட்டியேடா"

Monday, August 27, 2007

அஞ்சலி!

இது போன்ற சம்பவங்கள் சில அடிஅடிக்கடி நடந்து நமக்கு மரணம் தவிற்கமுடியாதது என்பதை நினைவூட்டுகிறது. இது வரை வடக்கில் தான் இது போன்ற குண்டு வெடிப்புகள் நடைபெரும் என்று நினைத்திருந்தவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி ஆகும். நமது தமி்ழ் நாட்டிலும் இது நடைபெறக்கூடும்.

நான் சுற்றித்திறிந்த இடத்தில் குண்டு வெடித்ததை அறிந்து அடைந்த பீதியை விட, அதில் சிக்கி மாண்டவரின் விதியை நினைக்கும் பொழுது ஏற்படும் மனத்துயரம் மேலோங்கி நிற்கிறது!


எதுவும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது சரிதான். இது போன்று பற்பலச் சம்பவங்கள் இன்றும் கேஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அவை எல்லாம் நமக்கு வெறும் செய்தியாகத்தான் இருக்கின்றன. மரணம் நம்மை எப்பொழுதும் சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது. அது எக்கணமும் நம்மை வந்து கவ்விக்கொள்ளும், ஆகையால் சற்று கவனமாக இருப்பீர்களாக!

புனிதப்போர் என்று சொல்லி இப்படி பொது மக்களை கொன்று குவிக்கும் இவர்கள் எப்பொழுது தான் திருந்துவார்களோ?

ஹைதராபாத்தில் நேற்று நடந்த இந்த குண்டுவெடிப்பில் தங்களின் இன்னுயிரை நீத்து இறைவனடி சேர்ந்த அனைவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். அவர் தம் குடும்பத்திற்கு ஆண்டவன் ஆறுதலை வழங்கட்டும்.

Saturday, August 25, 2007

எனது ஐயப்பாடுகள்!

1. பாவம் செய்தவர்கள் தான் இந்த பூமி்யில் மனிதனாய் வந்து பிறக்கிறார்களா? அப்படியானால் அவ்வையார் சொன்ன, "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்பது தவறா?

2. நாம் உயிர் நீத்த பின் நமது ஆத்மா எங்கு செல்கிறது? நிறைவேறாத ஆசைகளோடு இறப்பவர்களின் ஆத்மா ஆவியாக அலைவது உண்மையா? அப்படியானால் நாட்டில் முக்கால் வாசி பேர் ஆவியாகத்தான் அலைவார்கள் இல்லையா? மேலும் மற்ற உயிரினங்களின் ஆத்மாக்கள் எங்கு செல்கிறது?

3. வாயாடி, விதவை, மலடி, வேசி இதற்கெல்லாம் ஆன்பால் என்ன?

4. ஆண்டவனின் படைப்பில் அனைத்திற்கும் ஓர் அர்த்தமுண்டு. ஆயினும், மனிதனைத் தவிர மற்ற அனைத்து (பெரும்பாலும்) உயிரினங்களுக்கும் பிறவியிலேயே நீந்தத் தெரிகிறதே, ஏன்?

5. இராமாயணம் உண்மையா? அப்படியானால் இராவணனுக்கு பத்து தலை இருந்தது உண்மையா? அல்லது பத்து கிரீடமா? பத்து தலை இருந்தது உண்மையானால், அவரால் ஒரே நேரத்தில் பத்து பேரிடம் வெவ்வேறு விஷயத்தை பேச முடியுமா? அவர் தினமும் பத்து தலையில் இருக்கும் பற்களையும் துலக்குவாரா? நான் இராமாயணம் படித்ததில்லை ... தொலைக்காட்சியில் பார்த்ததுதான்;)

இப்போதைக்கு இவ்வளவுதான். இது ஒன்றும் கடினமான கேள்விகள் இல்லை என்று நினைக்கிறேன். யாராவது எனது சந்தேகங்களை கண்டிப்பாக தீர்த்து வைப்பார்கள் என்று நம்புகிறேன்.

என்ன? இதுல சில கேள்விகளை பார்த்தா சிறிப்பு வருதில்ல? ஆனா சில கேள்விகள் யோசிக்க வைக்குதில்ல? இதுக்கு பேரு தான் சிரிக்க வச்சு, சிந்திக்க வைக்கிறது;)

Wednesday, August 22, 2007

அரசியல் கூத்து!

நம்ம ஊரு அரசியல்வாதீங்க எல்லாம் சேர்ந்து பேசிகிட்டா எப்படி இருக்கும்? அதுவும் தமி்ழ் சினிமாவுல வர பன்ச் டைலாக்ஸ் யூஸ் பண்ணி பேசினா எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை. இது வெறும் நகைச்சுவைக்காக செய்த கற்பனை தான்.

கலைஞர்: சமீபத்துல லயோலா கல்லூரி நடத்துன கருத்து கணிப்புல எங்க தி.மு.கழகம் தான் முதல் இடத்துல இருக்கு!

ஜெயலலிதா: ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான். நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கை விட மாட்டான்

கலைஞர்: அப்ப, நீங்க நல்லவரா கெட்டவரா? ஹா ஹா ஹா!

ஜெயலலிதா: லூசாப்பா நீ? இது எப்படி இருக்கு? ஹி ஹி ஹி!

விஜயகாந்த்: நிறுத்துங்க! அரசியலுக்கு வந்தவுடனே பழச மறக்கறீங்க, ஜெயிசிட்டா மக்கள மறந்துட்டு இப்படி சண்டை போட்டுக்கறீங்க!

கலைஞர்: கேக்கறவன் கேனப்பயலா இருந்தா கே.பி. சுந்தராம்பாள் ஆர்.பி.சவுத்ரி படத்துல ஹிரோயினா நடிக்குதுனு சொல்லுவியே!

விஜயகாந்த்: அப்படீன்னா?

கலைஞர்: பழமொழி சொன்னா அனுபவிக்கனும்...ஆராயக்கூடாது...

(ராமதாஸ் உள்ளே வருகிறார்)

ராமதாஸ்: ஷாமீ! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!

விஜயகாந்த்: என்ன? நீங்க வெறும் தாஸா இல்ல லார்ட் லபக் தாஸான்னா?

ராமதாஸ்: ஏய்ய்...வேண்டாம்! புயல் அடிச்சி கூட எழுந்துடலாம், ஆனா இந்த தாஸ் அடிச்சு எழுந்ததா சரித்திரமே இல்ல!

விஜயகாந்த்: நீ அடிச்சா பீஸு, நான் அடிச்சா மாஸு!

ராமதாஸ்: ஏய் மாஸு! உயிருக்கு பயப்படாத என் முன்னாடி நீ தூசு!

விஜயகாந்த்: நான் பார்க்க தான் தூசு! சூடானேன் சுளுக்கெடுத்துடுவேன்!

(கார்த்திக் உள்ளே வருகிறார்)

கார்த்திக்: ஹாய்! ஹாய்! ஹாய்! ஹாய்! ஹாய்!

ஜெயலலிதா: நீ எங்கே வந்த? பட்டது போதாதா?

கார்த்திக்: ஹாய் செல்லம்! அதெல்லாம் நீ ஏன் பேசர? அதெல்லாம் நீ பேச கூடாது!

கலைஞர்: அது!

கார்த்திக்: ஆமாம் விஜய், நீங்க கூட்டணி வைக்க மாட்டேன், வைக்க மாட்டேன்னு அடிக்கடி சொல்றீங்களே, நிஜமாகவா?

விஜயகாந்த்: துளசி கூட வாசம் மாறலாம், ஆனா இந்த விஜய்காந்த் வார்த்தை மாறமட்டான்

ஜெயலலிதா: இப்போ தான கொஞ்ச நாள் முன்னாடி வேற மாதிரி சொன்னீங்க?

விஜயகாந்த்: அது போன மாசம்! அய்ங்!

கார்த்திக்: பனம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு, அதுக்கு ஏன்யா இந்த புனிதமான அரசியல பயன் படுத்தறீங்க?

விஜயகாந்த்: ஹி ஹி ஹி! கார்த்திக் நீ ஒன்னும் காமடி கீமடி பண்ணலயே?

கலைஞர்: ஆட்சி முடியிற நாள் தெரிஞ்சிட்டா, ஆட்சி நடத்துற நாள் நரகமாயிடும். ஸுருட்டரது தாங்க முக்கியம்!

ராமதாஸ்: கார்த்திக், நீங்க எங்க கூட்டணி கட்சியில சேர்ந்துக்கறீங்களா?

கார்த்திக்: என்னது? கூட்டணியா? அய்யோ, ஆளை விடுங்க!

ராமதாஸ்: ஏன்?

கார்த்திக்: கட்சி போனா வரும், உயிர் போனா வருமாங்க?

ஜெயலலிதா ராமதாஸிடம்: நீங்க இப்ப எல்லாம் என் எதிரி கிட்ட நேர்ல பேசறத விட பத்திரிக்கை மூலமா தான் நிறைய பேசறீங்க போல?

ராமதாஸ்: அவங்க ஒரு அறிக்கை விட்டா, நாங்க நூறு அறிக்கை விடுவோம்!

ஜெயலலிதா: அப்போ எதுக்கு அந்த பக்கம் போனீங்க? இங்க வந்து இருக்கலாம்ல?

ராமதாஸ்: நீங்க விரும்புற கட்சிய விட, உங்கள விரும்பற கட்சியில சேர்ந்தா உங்க கட்சி நல்லா இருக்கும்னு ஒருத்தர் சொன்னாரு...

ஜெயலலிதா: சரி இப்போ வாங்க?

ராமதாஸ்: புலி பசிச்சாலும் புள்ள திண்ணாது!

(திருமா உள்ளே வருகிறார்)

திருமா: யாரு அது எங்க கட்சி பேர இழுக்கறது?

ராமதாஸ்: எவன் அவன்?

திருமா: யாரு அடிச்சா பொறி கிளம்பி பூமி் அதிர்றது ஒடம்புல தெரியுமோ அவன்....

கலைஞர்: எந்த மி்ருகத்து பேர சொன்னாலும் நான் தான் நான் தான்னு வந்துடறியே பா, அவரு சொன்னது புலி, சிறுத்தை இல்ல!

ராமதாஸ்: வாங்க திருமா!

கார்த்திக்: ஆமாம் தாஸன்னே, இப்போவெல்லாம் நீங்க இவங்களோட பழைய மாதிரி நட்பா இல்லையே?

ராமதாஸ்: அவரு சினிமாவுல நடிக்க போயிட்டாரு...அதான் கொஞ்சம் ஒதுங்கி இருக்கேன். இல்லனா அப்புறம் சினிமாவ விமர்சனம் பண்ண முடியாதுல்ல?

திருமா: அவருக்கு முன்னாடியே சினிமாவ விமர்சனம் பண்ணி, தமி்ழ காப்பாத்த போராட்டம் பண்ணவங்க நாங்க.

ராமதாஸ்: யாரு முதல்ல ஆரமி்க்கறாங்க என்பது முக்கியம் இல்ல, கடைசியா யாரு முடிக்கறாங்கன்றது தான் முக்கியம்.

கார்த்திக்: எல்லாரும் மக்களுக்கு என்ன நல்லது செய்லாம்னு யோசிச்சா, நீங்க மட்டும் தினமும் ஒரு படம் பார்த்து...அத விமர்சன பண்றதையே பொழப்பா வச்சு இருக்கீங்களே இது சரியா?

ராமதாஸ்: என் வழி தனி வழி!

கார்த்திக்: நீங்க மாறவே மாட்டீங்களா?

ராமதாஸ்: ஆண்டவன் சொல்றான், ராமதாஸ் செய்றான்!

கார்த்திக் கலைஞரிடம்: பார்த்தீங்களா? இவங்க பேச்செல்லாம் கேட்டு நீங்க உங்க பேரனையே வெளிய அனுப்பிட்டீங்களே? தப்பில்லையா?

கலைஞர்: நாலு பேரு நல்லா இருக்கனும்னா, எதுவுமே தப்பில்லை!

கார்த்திக்: யாரு அந்த நாலு பேரு?

(இதை கேட்டுக் கொண்டே வைகோ உள்ளே வருகிறார்)

வைகோ: வேற யாரு? அவரு, அவரோட மகன் ஸ்டாலின், பொன்னு கனிமொழி, இன்னொரு மகன் அழகிரி

கார்த்திக்: இது யாருப்பா?

வைகோ: சொல்லி அடிச்சா கில்லி, சொல்லாம அடிச்சா திருப்பாச்சி, சொல்லியும் சொல்லாம அடிச்சா சிவகாசி...அதான் இந்த வைகோ!

கலைஞர்: தோற்று விட்டு இருக்கற இடமே தெரியாம இருக்க, அப்பவும் புத்தி வரல்லையா?

வைகோ: வாழ்க்கை ஒரு வட்டம், அதுல ஜெயிக்கறவன் தோப்பான் தோக்குறவன் ஜெயிப்பான்.

கார்த்திக்: ஆமாம், ஏன் கலைஞர விட்டுட்டு திடீல்னு போயிட்டீங்க?

கலைஞர்: கிளிக்கு இறக்கை முலைச்சிடுச்சு, அதான் விட்டுட்டு பறந்து போயிடுச்சு!

வைகோ: என்னோட அரசியல் வாழ்க்கையில நான் செஞ்ச பெரிய தப்பே இவங்களோட கூட்டணி வச்சுகிட்டதுதான்...

கார்த்திக்: ஆமா ஆமா, நீங்க ஒழுங்கா ஜெயில்ல இருந்தப்பவே தினமும் உங்க செய்தி பேப்பர்ல வரும்...இப்ப ஒன்னுத்தயும் காணோம்!

கார்த்திக் கலைஞரிடம்: இவரு மனசு மாறி வந்தா, உங்க கட்சியில சேர்த்துக்குவீங்களா?

கலைஞர்: கதம், கதம்!

ஜெயலலிதா: ஹா ஹா ஹா! என்ன விட்டா இப்போ வேற கதி இல்ல அவருக்கு!

கார்த்திக்: நீங்க ஏன், கலைஞர் பேர கேட்டாலே கோவப்படறீங்க? தமி்ழ் நாட்ட தவிர மத்த ஊர்ல எல்லாம், ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் இப்படியா இருக்காங்க?

ஜெயலலிதா: கலைஞர், தமி்ழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த!

கலைஞர்: அதிகமா ஆச படற ஆம்பலையும், அளவுக்கு மீறி கோவப்படற பொம்பலையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல!

கார்த்திக்: சும்மா அதிருதில்ல!

ஜெயலலிதா: ரொம்ப பேசாதீங்க! இன்னைக்கு தோற்றா, நாளைக்கு பால்...சாரி ஆப்பு!

கார்த்திக்: ஆமா ப்ரெசிடென்ட் எலக்ஷன்ல எல்லாரயும் ஓட்டு போட சொல்லிட்டு நீங்க மட்டும் ஏன் போடல?

ஜெயலலிதா: நான் ஒரு வாட்டி முடிவு பன்னிட்டா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்!

விஜயகாந்த்: அவங்க அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

கலைஞர்: என்ன கொடும சேர் இது? இந்த மாதிரி கத்து குட்டிங்களோட அரசியல் பண்றது என் தலை எழுத்து!

விஜயகாந்த்: பிள்ளையாரே பெருச்சாலில போறாராம், பூசாரிக்கு புள்ளட் கேட்குதாம்!

ஜெயலலிதா: ஏன் இப்படி சம்பந்தமே இல்லாம உலர்றீங்க? தண்ணி அடிச்சிட்டு வந்து இருக்கீங்களா?

விஜயகாந்த்: வீனா என் வம்புக்கு வராதீங்க. நான் பிரச்சனை பன்னா தாங்க மாட்டீங்க.

ஜெயலலிதா: நாங்க எல்லாம் பிரச்சனையே பெட்சீட்டா போட்டு படுக்கறவங்க!

கார்த்திக்: விஜய், நீங்க உங்க வரவு செலவு எல்லாம் கணக்கே வச்சுக்கறது இல்லையாமே?

விஜயகாந்த்: கூட்டி கழிச்சு பாரு, கணக்கு சரியா வரும்!

கார்த்திக்: அடங்கப்பா! நீங்க கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல மாட்டீங்களா?

விஜயகாந்த்: நான் கேட்டதயும் சொல்லுவேன், கேக்காததயும் சொல்லுவேன்! நான் என்ன சொல்வேன், எப்படி சொல்வேனு யாருக்கும் தெரியாது. ஆனா சொல்ல வேண்டிய நேரத்துல...

கார்த்திக்: கரெக்டா சொதப்புவீங்க!

விஜயகாந்த்: என்னையே கலாய்க்காதீங்க...பாருங்க ராம்தாஸ் சும்மா தான் இருக்காரு!

ராமதாஸ்: என்ன ஏன் இதுல இழுக்கறீங்க? நீங்க அடங்கவே மாட்டீங்களா?

விஜயகாந்த்: நான் அடங்கிப் போறவன் இல்ல, அடக்கிட்டு போறவன்!

கார்த்திக்: அய்யயோ! அதெல்லாம் வேண்டாம்...பாத்ரூம் ப்ரீயாதான் இருக்கு...உடனே போங்க!

விஜயகாந்த் வெளியே போகிறார். இதான் சாக்குனு அனைவரும் எஸ்கேப் ஆகிறார்கள்!

Tuesday, August 21, 2007

Movie Dialogues

இவர்கள் இப்படி சொல்லி இருந்தால்?
(Movie: Nayagan)

கமல் தன் மகளிடம்: நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவுமே தப்பில்லை டா!

கமலின் மகள்: இப்படி சொல்லி சொல்லியே 40 பேருக்கு மேல போட்டு தள்ளியாச்சு. யாருபா அந்த நாலு பேரு?

கமல்: நான், நீ, உன் அண்ணண் அப்புறம்......ஜனகராஜ்!

(Movie: Kreedom)

வில்லன் ராஜ்கிரனிடம்:
ஒரு சாதாரன போலீஸ், நீ என் மேல கைய வசுட்டியா?

ராஜ்கிரன்:
டேய் நாயே! உன் மேல கைய வைக்க ஒரு டாக்டர் இல்ல என்ஜினியரா வருவாங்க?

(Movie: Ramana)

விஜயகாந்த்: தமி்ழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த, மண்ணிப்பு!

வில்லன்: தமி்ழ்ல உனக்கு வராத ஒரே எழுத்து, "ழ"

(Movie: Dhalapathi)

ரஜினி: ஏன்?

வில்லன்: தேவா!

ரஜினி: அவருக்கு தான் இந்த படத்துல சான்ஸ் தரலியே...அப்புறம் ஏன்?

வில்லன்: போயா லூசு!

(Movie: Pokkiri)

விஜய்: நான் ஒரு தடவை முடிவு பன்னிட்டா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்!

வில்லன்: உன் பேச்ச ஒரு நாயும் கேக்காதுன்னு சொன்னாங்க...அது சரி தான் போல!

(Movie: Dharmapuri)

விஜயகாந்த்: நான் அடங்கி போறவன் இல்ல, அடக்கிட்டு போறவன்!

வில்லன்: இப்படி சொல்லி சொல்லியே எங்க காஸ்ட்யும்ஸ்ஸ எல்லாம் நாறடிச்சிட்ட!

Thursday, August 16, 2007

கொட்லு கோபால்...


அது என்னமோ தெரியல, சிறு வயதிலிருந்தே நமக்கு சண்டை என்றால் மி்கவும் பிடித்துவிடுகிறது. நான் கூட எனது பள்ளிப் பருவத்தில் படம் பார்க்கும் பொழுது, முதலில் "சன்டைப் பயிற்சி" என்று டைட்டிலில் வருகிறதா என்று பார்த்துவிட்டு தான் படத்தையே பார்ப்பேன். அதிலும் தேவர் பிலிம்ஸ் என்றால் சொல்லவே வேண்டாம்.

படம் பார்த்து விட்டு என் அப்பாவிடம் சென்று, எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் சண்டை வச்சா யாருப்பா ஜெயிப்பான்னு கேட்டு வாங்கி கட்டிப்பேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் நமக்கு இந்த சண்டை பிடிக்கிறதா? கண்டிப்பாக இல்லை. நிஜ வாழ்க்கையில் நாம் எல்லாம் கைப்புள்ள(வின்னர் பட வடிவேலு) மாதிரி தான். ஒரு சண்டை நடந்தால் அதை நின்று பார்க்கும் பொழுதே நமக்கு அல்லு விட்ரும்(பயம் வந்துவிடும்). இருந்தாலும் அந்த பயத்தை வெளியே காட்டிக்கொள்ள மாட்டோம். ஒத்துக்கறேன், பயத்தை வெளியே காட்டாதவன் தான் வீரன் ஆனால் களத்தில் இறங்க மாவீரனாக இருக்க வேண்டும்.

இப்படித்தான் எங்களுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் கோபால். அப்படியே கைப்புள்ள வடிவேலு மாதிரி. ஏதாச்சும் சண்டையைப் பார்த்தால் உடனே எங்களிடம் சப்ப பஸங்க டா மச்சி, சும்மானா பிலிம் காட்டுராய்ங்கனு சொல்லுவான். அடிக்கடி எங்களிடம் இது மாதிரி அடிதடி கதையா சொல்லுவான். எனக்கு அவன தெரியும் இவன தெரியும், பசங்க கிட்ட சொன்னா அவன பிரிச்சி மேய்ந்துடுவாங்கனு ஒரே பந்தா பண்ணுவான். நாங்களும் இத நம்பி அவன் கூட ஸ்கூல்ல சுத்தும் போது எல்லாம் கொஞ்சம் தெணாவெட்டா சுத்துவோம்.

ஒரு நாள் ஸ்கூல் முடிந்து நானும் எனது மற்றொரு நண்பனும் டியுஷன் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது மணி சுமார் ஏழு இருக்கும். சற்று இருட்டி இருந்தது. டியுஷன் சென்டருக்கு சற்று அருகில் இருவர் எங்களை வழி மறித்தனர். அதில் ஒருவன் எங்களுடன் டியுஷன் படிப்பவன் வேற ஸ்கூல், ஆனால் எங்களை விட சீனியர். அவனுடன் வந்திருந்தவன் அந்த ஏரியா சிறிய ரவுடிகளில் ஒருவன்.

சீனியர்: என்னங்கடா தீபாவ ரொம்ப கலாய்க்கிறீங்க போல?
நான்: எந்த தீபாங்க?
சீனியர்: தெரியாத மாதிரி நடிக்காத டா. அதான் உங்க கிலாஸ் படிக்குதே, அந்த தீபா.
என் நண்பன்: அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க!
ரவுடி: என்னடா இல்ல? அவ கிட்ட கொஞ்சம் அளவோட வச்சுக்குங்க, ஏன்னா தீபா இவன் ஆளு.
நான்: இது தீபாக்கு தெரியுமுங்களா?
சீனியர்: டேய்! நீ ரொன்ப பேசற. சொல்லறத மட்டும் செய்டா.
என் நண்பன்: இல்லீங்க, நாங்க பார்த்துக்கறோம். நீங்க கவலைப் படாதீங்க.
ரவுடி: அதான்டா எங்க கவலையே. ஒழுங்கா அவகிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பன்னுங்க. இல்லைன்னா ஒரு வழி ஆயிடுவீங்க.

இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் கோபால் அங்கு வருகிறான். நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு நேராக எங்களை நோக்கி வருகிறான். அவனை பார்த்தவுடன் எங்களுக்கும் கொஞ்சம் தைரியம் தலை தூக்கியது. வேகமாக வந்த கோபால் எங்களைப் பார்த்து...

கோபால்: மச்சி, என்ன ஆச்சுடா?

அப்பொழுது சற்றும் எதிர்பாராத விதமாக, அந்த ரவுடி கோபாலின் கண்ணத்தில் பளார் என்று ஒரு அரை விடுகிறான். (என்ன கோபமோ தெரியல ஆனா சரியான அடி) அடி வாங்கிய அதிர்ச்சியில் விழிக்கிறான் கோபால்!

ரவுடி: யாருடா நீ? பெரிய பருப்பா?
கோபால்(பரிதாபமாக): இல்ல.....ப்ரெண்ட்ஸ்...
ரவுடி: ப்ரெண்ட்ஸா இருந்தா? நாங்க பேசிகிட்டு இருக்கோம்ல? போடா அங்கிட்டு!

கோபால் வந்த வேகத்தில் கண்ணத்தில் கையை வைத்து தடவிக்கொண்டு திரும்பி செல்வதைக் கண்டு, எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இருப்பினும் முகத்தை சீரியஸாகவும், அப்பவித்தனமாகவும் வைத்துக்கொண்டு அவர்களிடம் பேசி அனுப்பிவிட்டோம்.

பிறகு நாங்கள் கோபாலை கலாய்த்ததை அவன் இன்றும் மறந்திருக்க மாட்டான். அன்றையில் இருந்து கோபால், "கொட்லு கோபால்" (கதை விடுபவன்) என்று எங்களால் செல்லமாக அழைக்கப்பட்டான்;)

Wednesday, August 15, 2007

Evolution of Indian Flag!








இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

Remembering the Independence (1947 to 1950)

On 3 June 1947, Viscount Lord Louis Mountbatten, the last British Governor-General of India, announced the partitioning of the British Indian Empire into a secular India and a Muslim Pakistan. On 14 August 1947, Pakistan was declared a separate nation. At midnight, on 15 August 1947, India became an independent nation. Violent clashes between Hindus, Muslims, and Sikhs followed. Prime Minister Nehru and Deputy Prime Minister Sardar Vallabhbhai Patel invited Lord Mountbatten to continue as Governor General of India. He was replaced in June 1948 by Chakravarti Rajagopalachari. Patel took on the responsibility of unifying 565 princely states, steering efforts by his “iron fist in a velvet glove” policies, exemplified by the use of military force to integrate Junagadh, Jammu and Kashmir, and Hyderabad state into India.

The Constituent Assembly completed the work of drafting the constitution on 26 November 1949; on 26 January 1950 the Republic of India was officially proclaimed. The Constituent Assembly elected Dr. Rajendra Prasad as the first President of India, taking over from Governor General Rajgopalachari. Subsequently, a free and sovereign India absorbed two other territories: Goa (from Portuguese control in 1961) and Pondicherry (which the French ceded in 1953–1954). In 1952, India held its first general elections, with a voter turnout exceeding 62%; this made it the world’s largest democracy.
(source: wikipedia)

Sunday, August 12, 2007

திராவிடன்?


இது வெட்டிப்பயல் வலைப்பதிவில் வெளியானது. என் மனதிலும் இந்த சந்தேகங்கள் இருந்தன. அதற்கான அருமையான விளக்கத்தை ஒரு நண்பர் அளித்திருக்கிறார். எனவே அதை இங்கே உங்களுக்காக பதிக்கிறேன்.

(source: http://vettipaiyal.blogspot.com)

1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா?அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள் கிடையாதா?

திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றை வணங்குவதற்கு திராவிடர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. திராவிட இயக்க சிந்தனை உள்ளவர்களில் கடவுள் நம்பிக்கையை மறைப்பவர்கள் உண்டு. அதற்கு காரணமும் உண்டு. திராவிட இயக்கத்தில் உள்ளவர்கள் அல்லது திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே திராவிடர்களல்ல.தன்மதம் தான் உயர்ந்தது என்ற மூடநம்பிக்கை கொண்டிருப்பவன் தன்மதம் சார்ந்தவன் வேறொரு மதத்தை பின்பற்றினால் ஆத்திரமடைகிறான். இந்திய மதங்களைப் பின்பற்றி இந்தியக்கடவுளை வணங்கும் திராவிடர்களுக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் கடவுள்களிடத்திலும் வெறுப்பு இல்லை. எனவே மதமாற்றத்தில் கூட அவர்களுக்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் மதங்களை உருவாக்கி அதில் பிழைப்பு நடத்தும் ஆரியர்களுக்கு ஆத்திரம் வருகிறது.ஆரிய அடிவருடிகள் என்ன செய்கிறார்கள்? பிற மதங்களைப் பழிப்பதையே முதன்மையாக செயல்படுத்தி வருகிறார்கள். தங்கள் மதத்தின் தவறுகளை கண்டு கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அந்தத் தவறுகள் அவர்களால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டவை என்பதால் அதை மறைக்க பிற மதங்களின் மீது சேற்றை வாரி இறைப்பதைத் தவிர வேறு வழியில்லை.திராவிடர்கள் ஏன் இந்து மதத்தையே குறை கூறுகிறார்கள் என்பது வழக்கமாக முன்வைக்கப்படும் இன்னொரு கேள்வி. ஏனென்றால் அவர்களும் அதே கடவுள்களை வணங்குபவர்கள் தான். தன் வீட்டை சுத்தம் செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அழுக்காக இருக்கும் தன்வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய கடமையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்து மத பிரச்சினைகளை திராவிடர்கள் அலசுகிறார்கள். ஏன்பிற மத பிரச்சினைகளை பேசுவதில்லை என்பதற்கும் இதுவே பதில். அடுத்தவன் வீட்டை சுத்தம் செய்ய அவன் அழைக்காமல் நாமாகப் போக முடியுமா?ஆரியர்கள் அதைத்தான் செய்கிறார்கள். அடுத்தவன் வீடு அழுக்காக இருக்கிறதே என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.

2) ஈ.வே.ரா பிள்ளையார் சிலைக்கு செருப்பு மாலைப் போட்டது சரியா? உங்களுக்கு நம்பிக்கை இல்லனா யாரும் நம்ப கூடாதா? இது கொள்கை திணிப்பு அல்லவா?இந்தி திணிப்பு எந்த அளவிற்கு தவறோ அதே அளவிற்கு கொள்கை திணிப்பும் தவறல்லவா?

பெரியார் ஏன் கடவுள் இல்லை என்றார். கடவுள் சிலைகளை அவமரியாதை செய்தார்.இது ஒரு உளவியல் செயல்பாடு. பெரியாரே கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதை நான் நம்பவில்லை. பின்னாளில் பெரியார் ரகசியமாக கடவுள் வழிபாடு செய்தார் என்று சிலர் சொல்வதில் கூட உண்மை இருக்கலாம். பெரியாரின் செயல்பாடுகளைப் பார்த்தால் அதன் காரணமும் விளங்கும். தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை இல்லை என்பதால் அவர்களுக்காக ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியவர் பெரியார். ஆனால் அதில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் மனதில் கடவுளை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கமும் கடவுள் அருள் தங்களுக்குக் கிடைக்க வழியில்லையே என்ற கலக்கமும் இருப்பதை உணர்ந்தார். அவர்களை மனத்தளவில் தளர்விலிருந்து மீட்க அவர் செய்த உளவியல் சிகிட்சையே கடவுள் மறுப்புப் போராட்டம்.மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பது அவ்வை சொன்னது. கடவுளின் வாசல் திறக்கவில்லையா. கடவுளே இல்லை என்று சொல். இல்லாத கடவுளிடத்தில் நீ ஏன் போகிறாய். உன்னையே நீ நம்பு என்பது அவர் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த உளவியல் பாடம்.இந்தப்பாடம் சரியாக சென்று சேர, சேர்ப்பிக்க ஒரு இளைஞர்படையை இந்த நம்பிக்கையோடு அவர் தயார் செய்ய வேண்டியிருந்தது. அதுதான் திராவிட இயக்கம். இதை சாதிக்க சில புனித நம்பிக்கைகளை உடைக்க வேண்டியிருந்தது. அதுதான் செருப்பு மாலை உள்ளிட்ட ஷாக் டிரீட்மென்ட். அவரது நோக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டதால் பிற இந்(திய)து தமிழர்களுக்கு கோபம் வரவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை உணர்ந்து கொண்டால் யார் பாதிக்கப்படுவார்களோ அந்த ஆரியர்களுக்குத்தான் கோபம் வந்தது. இப்போதும் வருகிறது.

3) காமராஜர் தோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன?

காமராஜர் தோல்வி அடைந்ததற்கான காரணம் அவர் அரசியல் மாற்றங்களை சரியாகப் புரிந்து கொள்ளாதது தான். ஆடம்பரமும் சொல்லலங்காரமும் மிக்க அரசியல் சூழல் வளர்ந்து வருவதை உணர்ந்து கொள்ளாமல் அவர் உண்மையான மக்கள் சேவை மட்டும் போதும் என்று நினைத்ததால் தோல்விகண்டார்.

திராவிட இயக்கம் ஒரு இலட்சியத்துக்காக உருவானது. திராவிட முன்னேற்றக்கழகமோ அரசியல் ஆதாயத்துக்காகவே உருவானது. எனவே இரண்டையும் குழப்பிக்கொள்ள தேவையில்லை.

Friday, August 10, 2007

Chak De India - Movie Review

Banner: Yash Raj Films
Cast: Shahrukh Khan, Vidya Malvade
Direction: Shimit Amin
Production: Aditya Chopra
Music: Salim Merchant, Sulaiman Merchant



Right Movie at the Right Time!

Not everyone of us had come out of the shocking worldcup exit of India. I still hear many people say that they stopped watching cricket and this is the right time for the release of this movie. I feel it's high time that we stop focussing only on cricket in India and let's promote other games as well, especially our national game Hockey which is all this movie is about.

I'm sure many people wouldn't even know that Hockey is our national game. We used to be the world champions in Hockey once and now we're in 4th or 5th position. Chuk De India is not the usual Sharukh Khan type of movie. For those who would want to see a Triangular love story or Sharukh stealing other's fiancee or wife, then this movie is not for you;) There are no big star cast other than Sharukh in this movie and he doesn't even have a pair. Sharukh, as usual has given a brilliant performance but this would have been more challenging for him. The character selection was good and it looked like a real hockey team. Everyone performed well.

The movie starts with a Worldcup Hockey match final between India and Pakistan. Sharukh is the captain of the Indian team and he is one of the best centre forward player for India. Unfortunately, India loses the worldcup to Pakistan due to a penalty stroke missed by Sharukh which is projected by the media as if Sharukh has made a deal with Pakistan and it goes out of control. This keeps him out of Hockey for 7 years. Then he returns as a Coach for the Indian Women Hockey team. He takes up the challenge of coaching them for the world cup though the board is not very keen to concentrate on Women's team. Whether Sharukh succeeds as a coach and regains his fame is the rest of the story.

This movie has a message for everyone,
Senior players: who tries to form groups or dominate others
Board/Management: who doesn't provide the right kind of support and is not concerned about women's sport
People: who simply worship their favorite players and will attack their houses if they fail to succeed. I personally hate those people. If they really have the guts, they should attack the sports minister and the selectio committee.
Media: which creates unncessary hype for players and creates stories to sell their products
Parents: who doesn't support their daughters who are interested in sports

It's a 3 hr movie and there was no break in between(in the theatre where I saw) but I still didn't see people getting out of their seats except 1 or 2 until the movie was over. Since I was seated at the center, I had to control myself for full 3 hrs to go and Walk the Dog;)

It's a must watch movie for all those who love sports. After seeing this movie, I can feel how difficult it is being a coach for an Indian team. It's really a tough job.

Cinematography was extremely good but music wasn't that impressive. I don't remember even one song as opposed to the other Sharukh movies. I really appreciate Sharukh for doing this movie as he can pull out mass audience to the theatre. This movie is not going to change everything upside down but it's a good initiative. If this movie fails in box office, I really pity Sharukh.

Thursday, August 9, 2007

வாழ்க்கை

வாழ்க்கையில் பணமும் புகழும் கடலைப் போன்றது

யார் எவ்வளவு எடுத்தாலும் என்றும் வற்றாதது

ஆகையால் மற்றவர் அடையும் புகழையும் செல்வத்தையும் கண்டு பொறாமைக் கொள்வதை விடுத்து

உண்மையாக உழைத்தால் நாம் நிணைத்ததை அடைய வழியுண்டு!

கவிதை எழுதலாம்னு முயற்சி செய்து...இந்த மாதிரி ஏதோ வந்துச்சு...யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வய்யகம்;)

என்னத்த சொல்ல?

வேண்டும் என்று தேடி அலைகின்ற பொழுது அது நமக்கு கிட்டாது

எங்கே, எப்பொழுது, யார் மீது வரும் என்று யாருக்கும் தெரியாது

நமக்குள் அது வந்து விட்டால் சாகும் வரை நம்மை விட்டு போகாது

அது என்ன? (ரொம்ப சுலபம்...பத்து படம் ரிலீஸ் ஆனா அதுல எட்டு படம் இத பத்தி தான் இருக்கும்;)

கண்டுபிடிச்சிட்டீங்களா? ஆமாம் அதே தான். நான் கூட டி ராஜேந்தர் படம், நம்ம விஜயோட பூவே உனக்காக இந்த படத்த எல்லாம் பார்த்துட்டு இப்படி தான் நினைச்சி கிட்டு இருந்தேன். ஆனா இப்ப கரன் ஜோஹர் படத்த பார்த்து பார்த்து இதெல்லாம் பொய்யோன்னு தோனுது? நீங்க என்ன நினைக்கிறீங்க?

Tuesday, August 7, 2007

Pressure Cooker!


இது என் குலோஸ் ப்ரென்ட் என் கிட்ட சொன்னது. என் ப்ரென்ட் அப்போ ஹைட்ராபாட்ல ஒரு கம்பனில வொர்க் பன்னி கிட்டு இருந்தான். அவன் கூட வொர்க் பன்ற ஒரு 3 ப்ரென்ட்ஸோட சேர்ந்து ரூம் எடுத்து தங்கி இருந்தான். அது ஒரு ப்லாட். என் ப்ரென்ட்ஸ தவிர அவங்க ரூம சுத்தி எல்லாரும் பேமி்லியொட இருந்தாங்க.

ஒரு நாள் மதியம் என் ப்ரென்டும் இன்னும் 2 பேரும் சேர்ந்து சமையல் பன்னிகிட்டு இருந்தாங்க. அன்றைக்கு எல்லோருக்கும் நைட் ஷிப்ட். பாசெலர் பசங்க ரூம்ல எப்படி இருப்பாங்கனு உங்களுக்கே தெரியும். ஒருத்தன் வெரும் டவல் கட்டி கிட்டு இருந்தான். இன்னொருத்தன் ஒரு சின்ன ஜட்டி போட்டுகிட்டு எக்ஸர்சைஸ் பன்னிகிட்டு இருந்தான். என் ப்ரென்ட் ஷார்ட்ஸ் போட்டுகிட்டு இருந்தான். இதுல வேற அவங்க கதவ எப்பவும் லாக் பன்னி வக்க மாட்டாங்க.

ஸ்டவ்ல ப்ரெஷ்ஷர் குக்கர்ல பருப்பு வேகிட்டு இருந்தது. அப்போ டிடீல்னு ஒரு பயங்கர சத்ததோட ஸ்டவ்ல இருந்த குக்கர் எகிரி கீழ வந்து விழுந்திடுச்சு. வீடெல்லாம் ஒரே புகை மன்டலமா இருந்துச்சு. நல்ல வேலையா யாருக்கும் ஒன்னும் ஆகல. இந்த சத்தம் கேட்டவுடனே அக்கம் பக்கத்து வீட்டுல இருந்து ஒரு நாலு அஞ்சு ஆண்டீஸும் அவங்க பொன்னுங்க ரெண்டு பேரும் திடு திப்புனு இவங்க வீட்டுக்குல்ல வந்துட்டாங்க. வந்தவங்க என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு கேட்டுக்கிட்டே நேரா கிட்செனுக்கு போயிட்டாங்க. பசங்களுக்கு குக்கர் இப்படி ஆனத விட இவங்க எல்லோரயும் பார்த்தவுடனே பயங்கர ஷாக். பசங்க ஜட்டி/டவலோட நிக்கறத பார்த்து அந்த ரெண்டு பொன்னுங்க மட்டும் நைசா நழுவிட்டாங்க. ஆண்டீஸ் மட்டும் அங்கயே நின்னு பேசிகிட்டு இருந்தாங்க.

ஒவ்வொரு பசங்களா அப்படியே அசடு வழிஞ்ஜுகிட்டே நைசா நழுவி ரூமுக்கு போறதுக்குல்ல போதும் போதும்னு ஆகிடுச்சாம்! எல்லாம் அந்த குக்கரால வந்த வினை!

Monday, August 6, 2007

The French Teacher!


This is one of the incident during my school days that I would never forget!

After our 10th school holidays, the school just reopened. We were really happy to come back to school after the long holidays and were happy to see our friends back.


Till that year we had only Tamil, Hindi and Sanskrit as second language but that year they introduced French in our school. They appointed a new teacher for teaching French. There were only a few to take up French since they were hesitant whether they could score good marks.

The French teacher looked very modern and students(especially boys;) were trying to impress her. On the second day evening after the French teacher joined our school, I was walking towards my home with my friends. There was this guy whose house was just nearby our school and he was in commerce group. He came up to us in his cycle and asked us how to wish 'Good Evening' in French as one my friend has taken French. His second language was Hindi but he still wanted to speak to the French teacher and show-off.

My friend suddenly told him that 'Good Evening' means 'Gowri' in French. We saw the French teacher coming out of the school after her work and we started moving. He said thanks to us and started driving towards the school. He was driving the cycle like Siddarth used to drive in the Movie 'Boys' to impress Genelia. As he went near the French teacher, he smiled at her and then slightly bent his head down and said 'Gowri' at the top of his voice and moved on. The French teacher showed a confused and angry look at him but didn't say a word. Seeing her angry look this guy was perplexed.

He took a round and came back to us again. He asked us innocently why the French teacher didn't say anything and showed angry face. By this time all of us burst into laughter for atleast 5 mins and slowly one of us told him that the French teacher's name was 'Gowri'! You should have seen his face that time;) (he scolded us for atleast 10 mins continuously with all the bad words he know).


Why Rajnikanth is a Superstar?

These Pictures speak a thousand words....hence no comments from me!




Monday, July 30, 2007

My Favorite movies

The Movies that touched me:

1. Anand (Hindi)
2. Anbe Sivam (Tamil)
3. Mahanadhi (Tamil)
4. Aa Naluguru (Telugu)
5. Varumaiyin Niram Sivappu (Tamil)
6. Kudumbam Oru Kadambam (Tamil)
7. Thanneer Thanneer (Tamil)
8. Unnal Mudiyum Thambi (Tamil)
9. Titanic (English)
10. Blood Diamond (English)
11. Swades (Hindi)
12. Anandam (Tamil)

13. Thavamai Thavamirundhu (Tamil)
14. Black (Hindi)
15. Sethu (Tamil)


The Movies that I liked very much:

1. Sabash Meena (Tamil)
2. Maaya Bazaar (Tamil)
3. Alibabavum Naarpadhu Thirudargalum (Tamil)
4. Neer Kumizhi (Tamil)
5. Edhir Neechal (Tamil)
6. Bhama Vijayam (Tamil)
7. Thiruvilayadal (Tamil)
8. Thillu Mullu (Tamil) or Golmaal (Hindi)
9. Aanpaavam (Tamil)
10. Kanavane Kankanda Deivam (Tamil)
11. Manal Kayiru (Tamil)
12. Paruthi Veeran (Tamil)
13. Sholay (Hindi)
14. Inru Poi Naalai Vaa (Tamil)
15. Okkadu (Telugu)
16. Arya (Telugu)
17. Amma Naana Okka Tamil Ammai (Telugu)
18. Bommarillu (Telugu)
19. Pithamagan (Tamil)
20. Pesum Padam (Tamil)

21. Boologha Rambai (Tamil)
22. Autograph (Tamil)
23. Ramana (Tamil)
24. Vaanathai Pola (Tamil)
25. Thenali (Tamil)
26. Avvai Shanmughi (Tamil)
27. Moondram Pirai (Tamil)
28. Kaadalikka Neramillai (Tamil)
29. Mannan (Tamil)
30. Kannathil Muthamittal (Tamil)
31. Simla Special (Tamil)
32. Vedam Pudhidhu (Tamil)
33. Nadigan (Tamil)

Kreedom - Movie Review


Cast: Ajith, Trisha, Raj Kiran, Vivek, Saranya, Haneefa, Santhanam, Ajay Kumar
Direction: AL Vijay
Music: GV. Prakash
Production: Suresh Balaji


Kreedom (to some extent) can help Ajith retain his Stardom

Kreedom is not a typical Ajith film as he is not a larger-than-life hero in this movie. This movie is about a father who dreams of making his son a Sub-Inspector before he retires as a head-constable. The father character is excellently played by Raj Kiran with Ajith as his son. It's a usual story with a different climax which may not be liked by Ajith fans. But as far as I've read, it seems that Ajith fans are happy with the movie.

This movie is said to be a remake of the Mohanlal's Malayalam film which came in the 80's with the same title. Mohanlal has got a special jury national award for this movie. Though I haven't seen this original movie, I guess it would have been much better than the tamil Kreedom. Though Ajith has performed well in this movie it may not be an award winning performance and not his best too as compared to Dheena or Valee.

Raj Kiran is a sincere head-constable in Tiruchi who lives with his wife (Saranya), two daughter's and two son's elder being Ajith. Vivek is his son-in-law who is jobless and stays in his house. Raj Kiran wants to see his son as a Sub-Inspector before he retires from work. Ajith plays an obedient son who works hard to fulfill his father's dream. Trisha comes as a colleage girl and plays Ajith's love interest in this movie. The movie goes on like this in the first half as Ajith clears the SI exam and goes for the interview. Meanwhile, Raj Kiran hits a MLAs son in an untoward incident because of which he gets transfered to a village called Kodiakkarai which is ruled by a local Rowdy (played by Ajay). Now you would have guessed what would have happened next? Yes, the story goes in that usual way as you guessed. As Ajith is waiting for his SI posting after having cleared the interview he gets into trouble by beating the Villian to save his father in a Market incident. This changes Ajith's life as the Villian wants to take revenge on Ajith and create problems for him. Now whether Raj Kiran's dream came true and if Ajith has become a Sub-Inspector forms the rest of the story.

Ajith has enacted his role well as a obedient son. The way he expresses his love to Trisha is interesting. He has got two introduction scene's in this movie, one of which is a dream of Raj Kiran in which he comes as a SI and bash up the goondas and the second one is the actual introduction where he meets Trisha. Both were not impressive and concept of stealing the idol of Ganesh from Trisha's house is not convincing.

Raj Kiran has lived up to the expectation. Saranya has done a great job as a mother. Raj Kiran and Saranya are going to be the most sought after Father and Mother in South Indian Cinema (as Raj Kiran has already grabbed a role in a Telugu movie). Trisha looks good and has justified her role. She does a bit of comedy too. Vivek fails to impress after giving a good performance in Sivaji. I would say 'Lollu Sabha' Santhanam outdid Vivek in this movie though he comes only in a few scenes. GV Prakash's music is not so impressive as compared to his 'Veyil'.

On the whole, I would say Kreedom would be a moderate hit. As I was about to publish this review, I read a news that the veteran actor/producer Balaji (who's son is the producer for this movie) has announced that the Kreedom's climax would be modified according to people wish and reviews. All theatres screening Kreedom would have a different climax starting from today. And this is a good news. In case you don't know, Balaji has produced many movies with negative climax like Thee, Vazhve Maayam etc.