Monday, August 27, 2007

அஞ்சலி!

இது போன்ற சம்பவங்கள் சில அடிஅடிக்கடி நடந்து நமக்கு மரணம் தவிற்கமுடியாதது என்பதை நினைவூட்டுகிறது. இது வரை வடக்கில் தான் இது போன்ற குண்டு வெடிப்புகள் நடைபெரும் என்று நினைத்திருந்தவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி ஆகும். நமது தமி்ழ் நாட்டிலும் இது நடைபெறக்கூடும்.

நான் சுற்றித்திறிந்த இடத்தில் குண்டு வெடித்ததை அறிந்து அடைந்த பீதியை விட, அதில் சிக்கி மாண்டவரின் விதியை நினைக்கும் பொழுது ஏற்படும் மனத்துயரம் மேலோங்கி நிற்கிறது!


எதுவும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது சரிதான். இது போன்று பற்பலச் சம்பவங்கள் இன்றும் கேஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அவை எல்லாம் நமக்கு வெறும் செய்தியாகத்தான் இருக்கின்றன. மரணம் நம்மை எப்பொழுதும் சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது. அது எக்கணமும் நம்மை வந்து கவ்விக்கொள்ளும், ஆகையால் சற்று கவனமாக இருப்பீர்களாக!

புனிதப்போர் என்று சொல்லி இப்படி பொது மக்களை கொன்று குவிக்கும் இவர்கள் எப்பொழுது தான் திருந்துவார்களோ?

ஹைதராபாத்தில் நேற்று நடந்த இந்த குண்டுவெடிப்பில் தங்களின் இன்னுயிரை நீத்து இறைவனடி சேர்ந்த அனைவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன். அவர் தம் குடும்பத்திற்கு ஆண்டவன் ஆறுதலை வழங்கட்டும்.

0 comments: