Wednesday, August 22, 2007

அரசியல் கூத்து!

நம்ம ஊரு அரசியல்வாதீங்க எல்லாம் சேர்ந்து பேசிகிட்டா எப்படி இருக்கும்? அதுவும் தமி்ழ் சினிமாவுல வர பன்ச் டைலாக்ஸ் யூஸ் பண்ணி பேசினா எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை. இது வெறும் நகைச்சுவைக்காக செய்த கற்பனை தான்.

கலைஞர்: சமீபத்துல லயோலா கல்லூரி நடத்துன கருத்து கணிப்புல எங்க தி.மு.கழகம் தான் முதல் இடத்துல இருக்கு!

ஜெயலலிதா: ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான். நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கை விட மாட்டான்

கலைஞர்: அப்ப, நீங்க நல்லவரா கெட்டவரா? ஹா ஹா ஹா!

ஜெயலலிதா: லூசாப்பா நீ? இது எப்படி இருக்கு? ஹி ஹி ஹி!

விஜயகாந்த்: நிறுத்துங்க! அரசியலுக்கு வந்தவுடனே பழச மறக்கறீங்க, ஜெயிசிட்டா மக்கள மறந்துட்டு இப்படி சண்டை போட்டுக்கறீங்க!

கலைஞர்: கேக்கறவன் கேனப்பயலா இருந்தா கே.பி. சுந்தராம்பாள் ஆர்.பி.சவுத்ரி படத்துல ஹிரோயினா நடிக்குதுனு சொல்லுவியே!

விஜயகாந்த்: அப்படீன்னா?

கலைஞர்: பழமொழி சொன்னா அனுபவிக்கனும்...ஆராயக்கூடாது...

(ராமதாஸ் உள்ளே வருகிறார்)

ராமதாஸ்: ஷாமீ! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!

விஜயகாந்த்: என்ன? நீங்க வெறும் தாஸா இல்ல லார்ட் லபக் தாஸான்னா?

ராமதாஸ்: ஏய்ய்...வேண்டாம்! புயல் அடிச்சி கூட எழுந்துடலாம், ஆனா இந்த தாஸ் அடிச்சு எழுந்ததா சரித்திரமே இல்ல!

விஜயகாந்த்: நீ அடிச்சா பீஸு, நான் அடிச்சா மாஸு!

ராமதாஸ்: ஏய் மாஸு! உயிருக்கு பயப்படாத என் முன்னாடி நீ தூசு!

விஜயகாந்த்: நான் பார்க்க தான் தூசு! சூடானேன் சுளுக்கெடுத்துடுவேன்!

(கார்த்திக் உள்ளே வருகிறார்)

கார்த்திக்: ஹாய்! ஹாய்! ஹாய்! ஹாய்! ஹாய்!

ஜெயலலிதா: நீ எங்கே வந்த? பட்டது போதாதா?

கார்த்திக்: ஹாய் செல்லம்! அதெல்லாம் நீ ஏன் பேசர? அதெல்லாம் நீ பேச கூடாது!

கலைஞர்: அது!

கார்த்திக்: ஆமாம் விஜய், நீங்க கூட்டணி வைக்க மாட்டேன், வைக்க மாட்டேன்னு அடிக்கடி சொல்றீங்களே, நிஜமாகவா?

விஜயகாந்த்: துளசி கூட வாசம் மாறலாம், ஆனா இந்த விஜய்காந்த் வார்த்தை மாறமட்டான்

ஜெயலலிதா: இப்போ தான கொஞ்ச நாள் முன்னாடி வேற மாதிரி சொன்னீங்க?

விஜயகாந்த்: அது போன மாசம்! அய்ங்!

கார்த்திக்: பனம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு, அதுக்கு ஏன்யா இந்த புனிதமான அரசியல பயன் படுத்தறீங்க?

விஜயகாந்த்: ஹி ஹி ஹி! கார்த்திக் நீ ஒன்னும் காமடி கீமடி பண்ணலயே?

கலைஞர்: ஆட்சி முடியிற நாள் தெரிஞ்சிட்டா, ஆட்சி நடத்துற நாள் நரகமாயிடும். ஸுருட்டரது தாங்க முக்கியம்!

ராமதாஸ்: கார்த்திக், நீங்க எங்க கூட்டணி கட்சியில சேர்ந்துக்கறீங்களா?

கார்த்திக்: என்னது? கூட்டணியா? அய்யோ, ஆளை விடுங்க!

ராமதாஸ்: ஏன்?

கார்த்திக்: கட்சி போனா வரும், உயிர் போனா வருமாங்க?

ஜெயலலிதா ராமதாஸிடம்: நீங்க இப்ப எல்லாம் என் எதிரி கிட்ட நேர்ல பேசறத விட பத்திரிக்கை மூலமா தான் நிறைய பேசறீங்க போல?

ராமதாஸ்: அவங்க ஒரு அறிக்கை விட்டா, நாங்க நூறு அறிக்கை விடுவோம்!

ஜெயலலிதா: அப்போ எதுக்கு அந்த பக்கம் போனீங்க? இங்க வந்து இருக்கலாம்ல?

ராமதாஸ்: நீங்க விரும்புற கட்சிய விட, உங்கள விரும்பற கட்சியில சேர்ந்தா உங்க கட்சி நல்லா இருக்கும்னு ஒருத்தர் சொன்னாரு...

ஜெயலலிதா: சரி இப்போ வாங்க?

ராமதாஸ்: புலி பசிச்சாலும் புள்ள திண்ணாது!

(திருமா உள்ளே வருகிறார்)

திருமா: யாரு அது எங்க கட்சி பேர இழுக்கறது?

ராமதாஸ்: எவன் அவன்?

திருமா: யாரு அடிச்சா பொறி கிளம்பி பூமி் அதிர்றது ஒடம்புல தெரியுமோ அவன்....

கலைஞர்: எந்த மி்ருகத்து பேர சொன்னாலும் நான் தான் நான் தான்னு வந்துடறியே பா, அவரு சொன்னது புலி, சிறுத்தை இல்ல!

ராமதாஸ்: வாங்க திருமா!

கார்த்திக்: ஆமாம் தாஸன்னே, இப்போவெல்லாம் நீங்க இவங்களோட பழைய மாதிரி நட்பா இல்லையே?

ராமதாஸ்: அவரு சினிமாவுல நடிக்க போயிட்டாரு...அதான் கொஞ்சம் ஒதுங்கி இருக்கேன். இல்லனா அப்புறம் சினிமாவ விமர்சனம் பண்ண முடியாதுல்ல?

திருமா: அவருக்கு முன்னாடியே சினிமாவ விமர்சனம் பண்ணி, தமி்ழ காப்பாத்த போராட்டம் பண்ணவங்க நாங்க.

ராமதாஸ்: யாரு முதல்ல ஆரமி்க்கறாங்க என்பது முக்கியம் இல்ல, கடைசியா யாரு முடிக்கறாங்கன்றது தான் முக்கியம்.

கார்த்திக்: எல்லாரும் மக்களுக்கு என்ன நல்லது செய்லாம்னு யோசிச்சா, நீங்க மட்டும் தினமும் ஒரு படம் பார்த்து...அத விமர்சன பண்றதையே பொழப்பா வச்சு இருக்கீங்களே இது சரியா?

ராமதாஸ்: என் வழி தனி வழி!

கார்த்திக்: நீங்க மாறவே மாட்டீங்களா?

ராமதாஸ்: ஆண்டவன் சொல்றான், ராமதாஸ் செய்றான்!

கார்த்திக் கலைஞரிடம்: பார்த்தீங்களா? இவங்க பேச்செல்லாம் கேட்டு நீங்க உங்க பேரனையே வெளிய அனுப்பிட்டீங்களே? தப்பில்லையா?

கலைஞர்: நாலு பேரு நல்லா இருக்கனும்னா, எதுவுமே தப்பில்லை!

கார்த்திக்: யாரு அந்த நாலு பேரு?

(இதை கேட்டுக் கொண்டே வைகோ உள்ளே வருகிறார்)

வைகோ: வேற யாரு? அவரு, அவரோட மகன் ஸ்டாலின், பொன்னு கனிமொழி, இன்னொரு மகன் அழகிரி

கார்த்திக்: இது யாருப்பா?

வைகோ: சொல்லி அடிச்சா கில்லி, சொல்லாம அடிச்சா திருப்பாச்சி, சொல்லியும் சொல்லாம அடிச்சா சிவகாசி...அதான் இந்த வைகோ!

கலைஞர்: தோற்று விட்டு இருக்கற இடமே தெரியாம இருக்க, அப்பவும் புத்தி வரல்லையா?

வைகோ: வாழ்க்கை ஒரு வட்டம், அதுல ஜெயிக்கறவன் தோப்பான் தோக்குறவன் ஜெயிப்பான்.

கார்த்திக்: ஆமாம், ஏன் கலைஞர விட்டுட்டு திடீல்னு போயிட்டீங்க?

கலைஞர்: கிளிக்கு இறக்கை முலைச்சிடுச்சு, அதான் விட்டுட்டு பறந்து போயிடுச்சு!

வைகோ: என்னோட அரசியல் வாழ்க்கையில நான் செஞ்ச பெரிய தப்பே இவங்களோட கூட்டணி வச்சுகிட்டதுதான்...

கார்த்திக்: ஆமா ஆமா, நீங்க ஒழுங்கா ஜெயில்ல இருந்தப்பவே தினமும் உங்க செய்தி பேப்பர்ல வரும்...இப்ப ஒன்னுத்தயும் காணோம்!

கார்த்திக் கலைஞரிடம்: இவரு மனசு மாறி வந்தா, உங்க கட்சியில சேர்த்துக்குவீங்களா?

கலைஞர்: கதம், கதம்!

ஜெயலலிதா: ஹா ஹா ஹா! என்ன விட்டா இப்போ வேற கதி இல்ல அவருக்கு!

கார்த்திக்: நீங்க ஏன், கலைஞர் பேர கேட்டாலே கோவப்படறீங்க? தமி்ழ் நாட்ட தவிர மத்த ஊர்ல எல்லாம், ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் இப்படியா இருக்காங்க?

ஜெயலலிதா: கலைஞர், தமி்ழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த!

கலைஞர்: அதிகமா ஆச படற ஆம்பலையும், அளவுக்கு மீறி கோவப்படற பொம்பலையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல!

கார்த்திக்: சும்மா அதிருதில்ல!

ஜெயலலிதா: ரொம்ப பேசாதீங்க! இன்னைக்கு தோற்றா, நாளைக்கு பால்...சாரி ஆப்பு!

கார்த்திக்: ஆமா ப்ரெசிடென்ட் எலக்ஷன்ல எல்லாரயும் ஓட்டு போட சொல்லிட்டு நீங்க மட்டும் ஏன் போடல?

ஜெயலலிதா: நான் ஒரு வாட்டி முடிவு பன்னிட்டா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்!

விஜயகாந்த்: அவங்க அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

கலைஞர்: என்ன கொடும சேர் இது? இந்த மாதிரி கத்து குட்டிங்களோட அரசியல் பண்றது என் தலை எழுத்து!

விஜயகாந்த்: பிள்ளையாரே பெருச்சாலில போறாராம், பூசாரிக்கு புள்ளட் கேட்குதாம்!

ஜெயலலிதா: ஏன் இப்படி சம்பந்தமே இல்லாம உலர்றீங்க? தண்ணி அடிச்சிட்டு வந்து இருக்கீங்களா?

விஜயகாந்த்: வீனா என் வம்புக்கு வராதீங்க. நான் பிரச்சனை பன்னா தாங்க மாட்டீங்க.

ஜெயலலிதா: நாங்க எல்லாம் பிரச்சனையே பெட்சீட்டா போட்டு படுக்கறவங்க!

கார்த்திக்: விஜய், நீங்க உங்க வரவு செலவு எல்லாம் கணக்கே வச்சுக்கறது இல்லையாமே?

விஜயகாந்த்: கூட்டி கழிச்சு பாரு, கணக்கு சரியா வரும்!

கார்த்திக்: அடங்கப்பா! நீங்க கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல மாட்டீங்களா?

விஜயகாந்த்: நான் கேட்டதயும் சொல்லுவேன், கேக்காததயும் சொல்லுவேன்! நான் என்ன சொல்வேன், எப்படி சொல்வேனு யாருக்கும் தெரியாது. ஆனா சொல்ல வேண்டிய நேரத்துல...

கார்த்திக்: கரெக்டா சொதப்புவீங்க!

விஜயகாந்த்: என்னையே கலாய்க்காதீங்க...பாருங்க ராம்தாஸ் சும்மா தான் இருக்காரு!

ராமதாஸ்: என்ன ஏன் இதுல இழுக்கறீங்க? நீங்க அடங்கவே மாட்டீங்களா?

விஜயகாந்த்: நான் அடங்கிப் போறவன் இல்ல, அடக்கிட்டு போறவன்!

கார்த்திக்: அய்யயோ! அதெல்லாம் வேண்டாம்...பாத்ரூம் ப்ரீயாதான் இருக்கு...உடனே போங்க!

விஜயகாந்த் வெளியே போகிறார். இதான் சாக்குனு அனைவரும் எஸ்கேப் ஆகிறார்கள்!

3 comments:

L.Kitts said...

Gud collection of statements and gud creativity Sathya... :-)

Sathiya said...

நன்றி கிட்டு!

மொக்கை நம்பர் ஒன் said...

மொக்கை நம்பர் ஒன் அன்புடன் அழைக்கிறது