Saturday, November 1, 2008

இவங்க இன்னும் திருந்தலையா?

ஆபீஸ்ல ஆணி புடுங்கற வேலை ஜாஸ்தியா போச்சு! அதான் வலைப்பூ பக்கம் வர முடியல. தினமும் இந்த பேங்க் ஊத்திகிச்சு, அந்த பேங்க் ஊத்திகிச்சுன்னு சொல்லி பீதிய வேற கிளப்பறாங்க. அடுத்த வருஷம் இதை விட மோசமா இருக்கும்னு வேற சொல்றாங்க. இந்த மாதிரி நிலமையில ஓபாமா வந்து என்ன செய்ய போறாரோ?


இப்போவெல்லாம் டிவி கூட அவ்வளவோ பார்க்கறது இல்ல. அப்படியே பார்த்தாலும் விஜய் டிவி தான். சரி, சன் டிவி பார்த்து ரொம்ப நாள் ஆச்சே, எப்படி போயிட்டிருக்குன்னு பார்ப்போம்னு ஒரு நாள் சும்மா சேனலை மாத்தி பார்த்தேன். ஏதோ ஒரு மெகா சீரியல் போயிட்டிருந்துது. ஒரு அம்மா கீழ ஒக்காந்துட்டு அழுதுகிட்டு இருந்தாங்க. அவங்க பையன் அவங்களை சாப்பிட கூப்பிடறான். அதுக்கு அந்த அம்மா, "அக்கா ஜெயில்ல இருக்கும் போது எப்படிடா சாப்பிட முடியும்?னு" சொன்னாங்களோ இல்லையோ, வுடுங்கடா சாமின்னு சேனலை மாத்திட்டேன்!


அடப்பாவீங்களா....இன்னும் இந்த மாதிரி தான் ஓட்டிட்டு இருக்கீங்களா? கீழ இருக்க இந்த வீடியோ காட்சியை பாருங்க. இதுல பேசிட்டு இருக்கறது ஒரு பாட்டியும் அவங்க பேத்தியும். இரண்டு பேறும் கணவனை இழந்தவர்கள். ஆனா இரண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியுதா? இதுவும் இன்னும் மாறலைங்க;)


8 comments:

கப்பி | Kappi said...

//ஆனா இரண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியுதா? இதுவும் இன்னும் மாறலைங்க//

சத்தியமா தெரிலீங்ண்ணா..நீங்களே சொல்லிடுங்க...அதைக் கண்டுபுடிக்க இந்த க்ளிப்பை ஒரு 4-5 முறை பார்த்து கண்ணெல்லாம் கலங்கிருச்சு..ம்ம்முடியல

Sathiya said...

//அதைக் கண்டுபுடிக்க இந்த க்ளிப்பை ஒரு 4-5 முறை பார்த்து கண்ணெல்லாம் கலங்கிருச்சு//
கப்பி இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப இளகிய மனசு:)))

அவிங்க போட்டிருக்க உடை தான் அந்த வித்தியாசம். பேத்தி வெள்ளை புடவை, பாட்டி கலர் புடவை....இந்த வெள்ளை புடவை கட்டிட்டு வர மாதிரி காட்டுறதை எப்போ நிறுத்துவாங்கன்னு தெரியல;)

Anonymous said...

hello.. enna stress a release panna sun tv a? pls don't do it.. v almsot stopped watching it..but still havign it..jus oru sun tv illaengara feeling irukka koodathungarathukkaga.. LOL

Sathiya said...

//enna stress a release panna sun tv a?//
Yes, adhedhaan;) Ippovellaam Kalakka Povadhu Yaarai vida, indha maadhiri mega serial'a paarthaa, ore Sirippaa varudhu;)

//jus oru sun tv illaengara feeling irukka koodathungarathukkaga//
Ingeyum adhe dhaan:)

Srikitchen said...

hi anna
mega serial ellam partha athoda namma mandai mudiku ellam bye solla vendiyathu thaan
kadhai odum odum varusha kanaka
apuram mudika theriyama oru naal nipatiduvanga
oru mudivey irukadhu
partha naama than avan enna aanan ivan enna aanannu thalai pichukamnum
chumma waste pa

oru visayathuley naan unga katchi vijay tv parkurathuley

வாழவந்தான் said...

யப்பா நம்ம கவுண்டர் டெரர் மூஞ்ச பாத்ததும் சிப்பு வந்திடிச்சு..
அதான் யாருடா அந்த காரியத்த பண்ணினதுன்னு பாக்கலாம்னு வந்தேன்..

பதிவெல்லாம் படிச்சுட்டு அப்பால கமண்டறேன்..........

எசுஸ்மீ.... அது வடக்குபட்டி ராமசாமி வடுகபட்டு ராமசாமி இல்ல

Sathiya said...

வாங்க வாழவந்தான்! உங்கள் கருத்தை எதிர் நோக்கி காத்து கொண்டிருக்கிறேன்!
படத்துல அது வடக்குபட்டினு தான் சொல்றாங்க, ஆனா உண்மையிலேயே அது வடக்குபட்டு கிராமம் தான்.

தமிழினி..... said...

sathya,

somehow after 6 months,i managed to post a blog. :)