Friday, April 25, 2008

ரெண்டே ரெண்டு ஆசைதான்...

சிலருக்கு தன் ஜோடியுடன் இருவர் மட்டும் தனிமையில் அமர்ந்து இயற்கையை ரசிக்க ஆசை.....
சிலருக்கு ஒரே நேரத்தில் இரண்டு ஐஸ் க்ரீம் சாப்பிட ஆசை...
இன்னும் சிலருக்கு ஒரே கோனில் இரண்டு ஐஸ் க்ரீம் ஸ்கூப் வைத்து சாப்பிட ஆசை...
சிலருக்கு ஒரே மிதிவண்டியை இரண்டு பேர் ஓட்டி செல்ல ஆசை...
இன்னும் சிலருக்கு தனித்தனியாக இரண்டு மிதிவண்டியில் ஜோடியாக செல்ல ஆசை....

சிலருக்கு புகை படத்திற்கு தன் இரண்டு விரலை காட்டி போஸ் கொடுக்க ஆசை...
சிலருக்கு இரண்டு நாய்கள் வளர்க்க ஆசை...சிலருக்கு இரண்டு உறுஞ்சு குழாய் வைத்து குளிர்பானம் குடிக்க ஆசை...
சிலருக்கு இரண்டு லென்ஸ் வைத்துக் கொண்டு விதவிதமாக படம் பிடிக்க ஆசை...
சிலருக்கு இரண்டு கிளாஸில் பீர் ஊற்றி ஒரே கல்ப்பில் அடிக்க ஆசை...
சிலருக்கு இரண்டு முட்டையுடன் சோறு தின்ன ஆசை...
சிலருக்கு இரண்டு கால் சட்டை அணிந்து கொள்ள ஆசை...

அதே போல் இவர்களின் ஆசையும் ரெண்டே ரெண்டுதான்....உண்ண உணவும், உடுக்க உடையும்!


இது வவாசங்க போட்டிக்கான என்னுடைய இரண்டாவது பதிவு. முதல் பதிவு இங்கே.

0 comments: