




உங்களை எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு;)
Posted by Sathiya at 8:05 AM 0 comments
Labels: Nation, சமூகம், பொது சிந்தனை, போட்டி, விழிப்புணர்வு
வவாசங்க இரண்டாவது ஆண்டு விழா போட்டியில கலந்துக்க இரண்டு வாரமா 'இரண்டு மனம் வேண்டும்'னு பாடிகிட்டே யோசிச்சு யோசிச்சு ரொம்ப கொழம்பி போயிட்டேன். கொறஞ்சது இரண்டு பதிவாவது போடனும்னு பார்த்தேன். இதுக்கு மேல யோசிச்சா தலையில இரண்டு முடிதான் இருக்கும். சரி இப்போ இரண்டு நிமிஷம் என் மொக்கைய படிங்க.
சரியா இரண்டு மணிக்கு ரங்கா தன் 2G ரெயின்போ காலனி வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருக்க மகளிர் கல்லூரியை நோக்கி கிளம்பினான். இரண்டு முப்பதுக்கு மகளிர் கல்லூரி விடும் நேரம். அதனால் கல்லூரி விடும் நேரத்தில் அங்கு போய் நின்று இரண்டு சூப்பர் பிகரையாவது பார்த்து லுக் விட வில்லை என்றால் அவனுக்கு இரவு இரண்டு மணியானாலும் தூக்கம் வராது. இரண்டும் கெட்டாம் வயசு பாருங்க. இவனுக்கு கல்லூரி விடுமுறை விட்டு இரண்டு வாரம் ஆவதால், இந்த இரண்டு வாரமாக இதே வேலை தான் இவனுக்கு.
இரண்டு பத்துக்கு அந்த கல்லூரியின் முன் ஆஜராகி விட்டான் ரங்கா. இன்னும் சரியாக இரண்டு பத்து நிமிடம் (அதாங்க இருபது நிமிடம்;) அவன் காத்திருக்க வேண்டும். அதுவரை என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு கடலை உருண்டையை வாங்கி மென்று கொண்டிருந்தான். கடலை உருண்டை என்றால் அவனுக்கு இரண்டு வயசுல (அட்ரா அட்ரா;) இருந்தே பிடிக்கும்.
சரியாக மணி இரண்டு முப்பது. கல்லூரியில் இரண்டு தடவை மணி அடித்த ஓசை நன்றாக கேட்டது. ரங்கா பக்கத்தில் இருந்த ஒரு இரண்டு சக்கர வாகனத்தின் கண்ணாடியில் தன் தலை முடியை சரி செய்து கொண்டு ஆவலாக கல்லூரி வாசலையே வழி மேல் தன் இரண்டு விழிகளையும் வைத்து காத்து கொண்டிருந்தான்.
இரண்டு, மூன்று, நான்கு என்று கும்பல் கும்பலாக மாணவிகள் வெளியில் வர தொடங்கினார். வழக்கம் போல ரங்காவை ஒருவரும் கண்டு கொள்ளவே இல்லை. ரங்காவும் சற்றும் சளைக்காமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவதென நின்று கொண்டிருந்தான்.
பெரும்பாலான மாணவிகள் சென்று விட்டனர். சிறு சிறு இடைவெளி விட்டு ஒன்று, இரண்டு பேராக வந்துக்கொண்டிருந்தனர். ரங்கன் இன்னும் மனம் தளரவில்லை. அப்போது கல்லூரி வாயிலில் இருந்து சற்று தொலைவில் இரட்டை ஜடை போட்டுக்கொண்டு இரண்டு அழகான மாணவிகள் வந்து கொண்டிருப்பதை ரங்கன் கவனித்தான். அவர்களையே சற்று உத்து நோக்கலானான். வாயில் அருகே வந்ததும் அந்த இரண்டு மாணவிகளும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு ரங்கனை பார்த்தனர்.
ரங்கனுக்கு இரண்டு கையும் ஓடலை, இரண்டு காலும் ஓடலை. அவ்வளவு சந்தோஷம் அவன் மனதுக்குள். அந்த சந்தோஷத்தை அவன் எவ்வளவு கட்டு படுத்த முயன்றும் முடியாமல் அவனது முகம் காட்டிக்கொடுத்தது. அவன் சிரிப்பதை பார்த்த அந்த இரண்டு மாணவிகளும் தங்களுக்குள் ஏதோ சொல்லிக்கொண்டு சிரித்தனர். அப்படியே பேசிக்கொண்டே ரங்கனை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ரங்கனுக்கு தலை கால் புரியலை. என்ன செய்வது, எப்படி ரியாக்ட் பண்ணுவதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான். மனது படக் படக் என்று நொடிக்கு இரண்டு முறை அடித்துக் கொண்டிருந்தது அவனுக்கு.
அந்த இரண்டு மாணவிகளும் அவனை மிகவும் நெருங்கி விட்டனர். ரங்கன் ஒரு முடிவு எடுத்தவனை போல் அவர்களிடம் ஏதோ இரண்டு வார்த்தை பேச முயன்றான். அப்போது திடீல் என்று அவன் முதுகில் யாரோ படார் என்று அடித்தனர். காரியம் கை கூடி வரும் வேளையில் சட்டி உடைந்தது போல் ஆகிவிட்டதால் வந்த கோபத்தோடு, 'த்த்த...எவண்டா அது' என்று கூறிக்கொண்டே திரும்பி பார்த்தான் ரங்கன். தனது நெருங்கிய நண்பர்கள் இருவரில் யாரோ ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்த ரங்கனுக்கு ஒரே அதிர்ச்சி.
பின்னால் நின்று கொண்டிருந்தது அவனது அப்பா. 'இரண்டு வாரமா அம்மா சொல்ற வேலை ஒன்னையும் செய்யாம துரை இதை தான் செஞ்சிகிட்டிருக்கீங்களா?' என்று திட்டிக்கொண்டே தலையில் இரண்டு போட்டு ரங்கனை வீட்டுக்கு இழுத்துச் சென்றார்.
இந்த கதையில் 'இரண்டு' அல்லது இரண்டு என்று பொருள் தரும் வார்த்தையை எத்தனை முறை உபயோகித்துள்ளேன் என்று சரியாக சொல்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இரண்டே ரெண்டு தான், 'இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பொருமைங்க; நீங்க ரொம்ப நல்லவங்க;)'
இது வவாசங்க போட்டிக்காக எழுதிய கதை அல்ல நிஜம், ஆனால் ரங்கன் நானல்ல...நம்புங்க, நெசமாத்தான் சொல்றேன்!;)
Posted by Sathiya at 11:40 PM 5 comments
என் நண்பர் ஒருவர் மின் அஞ்சல் மூலம் இதை எனக்கு அனுப்பி இருந்தார். பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியலை. அதான் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்னு இங்க போட்டுட்டேன்.
நம்ம ஆளுங்களுக்கு கற்பனை குதிரை கன்னா பின்னானு பறக்குது. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரு. நல்ல வேலை நம்ம கருப்பு எம்.ஜி.ஆர்(அப்படிதான் சொல்லிக்கறாங்க) இதில் போட்டுருக்குற வேடங்களுக்கு சொந்தகாரங்க இப்போ உசுரோட இல்லை. இருந்து இதை பார்த்திருந்தாங்கனா தேவை இல்லாத கொலை பழி கேப்டனுக்கு வந்திருக்கும்.
இந்த போஸ்டரை செஞ்சவங்க உண்மையிலேயே இவர் கட்சி தானா? பின்ன எதுக்கு இவர வச்சு இப்படி காமெடி பண்றாங்க?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...இப்பவே கண்ண கட்டுதே! டமிலன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!
Posted by Sathiya at 10:54 AM 9 comments
27% இடஒதுக்கீடு சட்டத்தில் 'கிரீமி லேயர்' (Creamy Layer) அளவு கோலை அடியோடு நீக்க வேண்டும் என்று ராமதாஸ், திருமாவளவன், சி.பி.ஐ தலைவர் ராஜா போன்றோர் கூறியுள்ளனர்.
என்ன இது புது பிரச்சனை? அட இது புது பிரச்சனை இல்லைங்க. ரொம்ப நாளாவே இருக்கு. இந்த 'கிரீமி லேயர்' என்பது சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் செயல் என திருமாவளவன் கூறியுள்ளார். அப்படி என்ன சமூக நீதி இதனால் பாதிக்கப் படும்? என்ன பிரச்சனை நடந்தாலும் இந்த மாதிரி ஒரு நாலு வார்த்தை (சமூக நீதி, இந்திய இறையாண்மை, சட்ட விரோதம்) வச்சுக்கிட்டு அதை கூட சேர்த்து ஒரு அறிக்கை விட்டுடறாங்க. அதனால என்ன பிரச்சனை, எப்படி பாதிப்பு ஏற்படும் அப்படீன்னு விவரமா சொன்னா தானே புரியும்.
கிரீமி லேயர் என்பது பொருளாதார அளவு கோல். அதாவது ஒருவர் பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்தாலும் முன்னேறிய வகுப்பில் உள்ளவர்களுக்கு சமமான சமூக, பொருளாதார நிலையை அடைந்திருந்தால் அவர்கள் கிரீமி லேயர் எனப்படும் வட்டத்துக்குள் அடங்குவர். இவர்களால் இட ஒதுக்கீடு பெறுவோர் பட்டியலில் இடம் பெற முடியாது. பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகளை பெற முடியாது. (Creamy Layer definition by Government of India: The Government of India has evolved the criteria for exclusion of certain socially advanced persons/sections from the benefits of reservation available to OBCs in civil posts and services under the Government of India and this is called the "Creamy Layer criteria".)
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் என்னை பொறுத்த வரை இந்த கிரீமி லேயர் என்கிற அளவு கோலும் வரவேற்கத்தக்கது தான். இந்த இட ஒதுக்கீடு என்பதே தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் முன்னேற வேண்டும், சமூகத்தில் நல்ல நிலையை அடைய வேண்டும், ஏற்ற தாழ்வு மறைய வேண்டும் என்பதற்காகவே வகுக்கப்பட்டது. சமூகத்தில் ஏற்கனவே இந்த அந்தஸ்தை பெற்றவர்களுக்கு எதற்கு இந்த இட ஒதுக்கீடு? ஆக மொத்தத்தில் இந்த 27 சதவீத இட ஒதுக்கீடு என்பது இந்த கிரீமி லேயரில் இல்லாத பிற்படுத்தப்பட்ட ஜாதியில் உள்ளவர்களுக்கு தானே கிடைக்கபோகிறது. இது நல்லது தானே?
இந்த இட ஒதுக்கீட்டை பலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். காசு கொடுத்தா நமக்கு நம்முடைய மரண சான்றிதழே கிடைக்கும். இப்படி இருக்கும் போது இந்த கிரீமி லேயர் சட்டம் இது போல போலி ஜாதி சான்றிதழ் வாங்கி ஏமாற்ற நினைப்பவர்களை ஓரளவுக்கு தவிர்க்கும் என்பதே என்னுடைய கருத்து.
இதை காரணம் காட்டி தான் வட இந்தியாவில் இந்த இட ஒதுக்கீட்டு சட்டத்துக்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இந்த தீர்ப்பை எதிர்த்தும் சிலர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.
நல்ல மதிப்பெண்கள் பெற்றும் ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் அரசு கல்லூரிகளில் படிக்க வாய்ப்பை இழந்த முன்னேற்றிய வகுப்பில் உள்ள பலரை பார்த்திருக்கிறேன். அவர்களால் தனியார் கல்லூரியில் படிக்க வசதி இல்லாமல் ஆர்ட்ஸ் கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். ஆனால் ஏனோ தானோவென்று படித்து விட்டு மிக குறைவாக மதிப்பெண்கள் பெற்றும் அதே அரசு கல்லூரியில் மிக எளிதாக இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் சேர்ந்து விடுவார்கள் பலர். இதை பார்க்கும் பொழுது முன்னேறிய வகுப்பில் உள்ளவர்களுக்கு கோவம் வருவது நியாயம்தான். அதற்கான பதில் தான் இந்த கிரீமி லேயர் என்பது என் கருத்து. இதுக்கு அப்புறமும் அவர்கள் எதிர்த்தால் அது நியாயம் இல்லை.
பிற்படுத்தப்பட்டவர்கள் படும் பாடும் கொஞ்ச நஞ்சமில்லை. அவர்களுக்கு இந்த படிப்பு தான் உயர்வையும், மதிப்பையும் தரும். சிறு வயதில் என் நண்பனின் வீட்டில் நான் உக்கார்ந்த இடத்தை கழுவ சொன்ன என் நண்பனின் பாட்டியை கண்டு மனம் நொந்த அனுபவத்தை நான் இன்னும் மறக்கவில்லை. இத்தனைக்கும் நான் ஒண்ணும் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன் கிடையாது. எனக்கே இப்படி என்றால் அவர்கள் படும் பாடு எப்படி என்பதை நினைத்தாலே பாவமாக இருக்கும். இன்றைய இளைய தலைமுறையினரால் அந்த நிலைமை மாறி வருகிறது என்பது உண்மை.
Posted by Sathiya at 1:44 PM 3 comments
Labels: அரசியல்
முதல் நபர்: திரும்பவும் என்னங்க அங்க பிரச்சனை? எதுக்கு எல்லாரும் கூட்டமா கோஷம் போட்டுக்கிட்டு இருக்காங்க?
இரண்டாம் நபர்: ஒகேனக்கல்ல யாரோ ஒரு பிரபல கட்டிட கான்டிராக்டர் நூறு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, ஒவ்வொரு இல்லத்திற்கும் தனித்தனி தண்ணி தொட்டி கட்ட போறாராம். அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் இந்த போராட்டமாம்.
முதல் நபர்: இது கொஞ்சம் ஓவருங்க. அப்ப நான் இன்னிக்கும் அரசி பார்க்க முடியாதா?
Posted by Sathiya at 8:55 AM 0 comments
நம்ம நடிகர் திலகம் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி பார்த்து இருக்கீங்களா? அவர் நிஜமாவே ஆடி இருக்காருங்க. பாபு என்ற படத்துல வர "வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா" என்ற பாட்டு தான் எனக்கு தெரிஞ்சி அவர் ஆடுன குத்து பாட்டு. சரியான குட்டு பட்டு அது.
அந்த பாட்ட வச்சு இப்போ வந்துருக்குற கத்தாழ கண்ணால பாட்டோட இணைச்சி ஒரு ரீமிக்ஸ் வீடியோ பண்ணி இருக்கேன். நான் இதுக்கு முன்னாடி பண்ண பாக்யராஜ், விஜயகாந்த் ரீமிக்ஸ் அளவுக்கு இது சரியா வரல இருந்தாலும் ஓகே.
என்ன நேயர்களே! நடிகர் சிவாஜி கணேசன் பங்கு பெற்ற இந்த சிறப்பு ரீமிக்ஸ் வீடியோவை நீங்கலாம் பார்த்து ரொம்பவே ரசிச்சிருப்பீங்க. உங்கள்ல சில பேருக்கு இது புடிச்சி சந்தோஷமா பார்த்துருப்பீங்க. ஒரு சில பேருக்கு இதுவும் புடிக்காம சின்ன வருத்தத்தோடையும், கோவத்தோடையும் பார்த்துருப்பீங்க. நான் வேற என்னங்க சொல்ல போறேன். ப்ளீஸ் இது உங்களுக்கான பதிவு. உங்களால ஓடிகிட்டிருக்க பதிவு. முயற்சி பண்ணுங்க, நிச்சயமா ஒரு நாளைக்கு உங்களுக்கும் இந்த மொக்கை பிடிக்குங்க. இந்த மாதிரி ரீமிக்ஸ் பதிவுகள் அதுத்த மாதமும் தொடரும், உங்களுக்காக. மீண்டும் அடுத்த ரீமிக்ஸ்ஸோட, வேற நாள்ல, வேற நேரத்துல உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து வடை சாரி விடை பெறுவது உங்கள் (பெப்சி) சத்தியா.
இதனுடைய யு-டியுப் லிங்க் இங்கே.
Posted by Sathiya at 2:04 PM 2 comments
தம் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ஸாரி சத்தியா மீண்டும் PIT புகைப்படப் போட்டிக்காக தன் படத்தை பதிவிட்டான்;)
காஞ்சிபோன பூமி எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போயிட்டா? துன்ப படரவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா அந்த தெய்வமே கலங்கி நின்னா, அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?
போட்டில கலந்துக்குற நாங்கெல்லாம் எங்க படத்த விமர்சனம் செய்ய அந்த நடுவர்கள் கிட்ட முறையிடுவோம், ஆனா அந்த நடுவர்களே களத்துல இறங்குனா, இந்த கத்துகுட்டிகளுக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்;) ரொம்ப பேசிட்டேனோ? ரைட் விடு ஜூட்!மேலே உள்ள படம் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.
Posted by Sathiya at 10:49 AM 6 comments
Labels: Photo Contest, நிழற்படம், படங்கள், போட்டி
கீழ இருக்கறது எல்லாம் இன்னைக்கு மட்டும் வந்த தலைப்பு செய்திகள். சும்மா இருந்த நம்ம ஆளுங்களும் களத்துல இறங்கிட்டாங்க. கர்நாடக ரக்ஷணவேதிகே அமைப்பினருக்கு நன்றி! எனக்கு ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்குது. காவிரி தண்ணிக்கு பிரச்சனை பண்ணாங்க சரி. ஒகேனக்கல் குடிநீர் திட்டதால அவங்களுக்கு என்ன பதிப்பு இருக்க போகுது? நாம என்ன தான் இங்க பண்ணாலும் அவங்க தண்ணி திறந்து விடறதுல தான எல்லாமே இருக்கு? யாருக்கும் தெரிஞ்சா சொல்லிட்டு போங்க.
***********
சென்னையில் நாளை உண்ணாவிரதம் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்பட அனைத்து நடிகர், நடிகைகள் பங்கேற்க முடிவு. கன்னடர்களுக்கு எதிராக தமிழ் சினிமா உலகினர் போராட்டம்
கன்னடர்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்
கன்னட நடிகர்கள் ஏட்டிக்கு போட்டி பெங்களூரில் நாளை தர்ணா போராட்டம் அறிவிப்பு
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தடுக்க கர்நாடகம் முயற்சி பிரதமரிடம் தமிழக அரசு புகார் 'உடனே தலையிட்டு நடவடிக்கை எடுங்கள்
பெங்களூரில் தினத்தந்தி அலுவலக பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் தார் பூசி அழிப்பு கன்னடர்கள் போராட்டம்
தமிழக பஸ்களில் கருப்பு மை பூசினார்கள் கர்நாடக ரக்ஷணவேதிகே அமைப்பினர் போராட்டம்
மத்திய அரசின் சட்டங்களை மதிக்காமல் செயல்படும் கர்நாடகம் இந்தியாவில் உள்ள மாநிலமா? பிரிக்கப்பட்ட சுதந்திர நாடா? கி.வீரமணி கேள்வி
பாதுகாப்பு வளையத்தில் ரஜினிகாந்த் வீடு. சென்னையில் கன்னடர்கள் நடத்தும் ஹோட்டல்கள் மீது தாக்குதல்
கன்னட நடிகர்களின் தமிழ் படங்களை திரையிட மாட்டோம். தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் அறிவிப்பு
ஹோசூர் அருகே தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் போராட்டம். தமிழக தலைவர்கள் உருவ பொம்மையை எரித்தனர்
கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிரான சம்பவங்கள்: தமிழர்களின் பொறுமை என்னும் பூட்டை உடைத்து விடாதீர்கள் - விஜய டி ராஜேந்தர் அறிக்கை
***********
இந்த போராட்டம், ஏட்டிக்கு போட்டி இதை எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு இந்த வீடியோ காட்சி தான் ஞாபகத்துக்கு வந்தது. அதான் உடனே பிடிச்சி போட்டுட்டேன். இது தான் இப்போ தமிழ் நாட்டுலையும், கர்நாடகாவிலும் நடந்துட்டு இருக்கு. யாருக்காக இந்த போராட்டத்த ஆரமிச்சாங்களோ அவங்கள பத்தி கொஞ்சம் கூட கவலை படாம நடந்துகிட்டு இருக்காங்க. இதை மக்கள் நல்லா புரிஞ்சிக்கனும்.
Posted by Sathiya at 2:40 PM 0 comments
Labels: சமூகம், நாட்டு நடப்பு, நிகழ்வுகள்
நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா சம்மதம். என்னங்க? ஆச்சரியமா இருக்கா? நீங்க படிக்கறத உங்களாலேயே நம்ப முடியல இல்ல? அப்புறம் எதுக்கு நம்பறீங்க? இந்தியால இருக்குற சுயநல அரசியல்வாதீங்க இருக்கிற வரைக்கும் இது நடக்குற காரியம் இல்ல. இது மாதிரி ஏப்ரல் மாதம் முதல் தேதில, முட்டாள்கள் தினத்துல இந்த மாதிரி செய்திய போட்டு பார்த்துக்க வேண்டியது தான். இல்லனா இந்த பிரச்சனைக்கு தீர்வை என் காலத்துல பார்க்க முடியாதுன்னு நினைக்கிறேன்.
நமக்கு உரிய பங்கு நீரை நாம் திறந்து விட கேட்பதும் அதற்கு அவிங்க மறுப்பதும், மாத்தி மாத்தி வழக்கு போடுறதும், தீர்ப்பு வந்தப்புறம் அதை புறக்கனிக்கறதும் ஒரு தொடர்கதையாவே போயிட்டிருக்கு. இது போதாதுன்னு இப்போ ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கும் எதிர்ப்பு. ஓகனேக்கலே அவங்களுதாம். என்ன கொடுமை மேடம் (சார் சார்னு எத்தனை வாட்டி எழுதறது, அதான் சினிமா இயக்குனர்கள் சொல்ற மாதிரி முற்றிலும் வித்தியாசமாக மேடம்;) இது? வழக்கம் போல மத்திய அரசு இதை பெருசா கண்டுக்கவே இல்ல.
எனக்கு ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்குது. தமிழர்களுக்கு மட்டும் ஏன் நாலா பக்கமும் இடி விழுது? அப்படி என்ன காண்டு நம்ம மேல? வெளிநாடுகளில் இந்தியர்களை மதிக்கும் அளவுக்கு கூட இந்தியாவில் ஒரு மாநிலத்தவர் மற்ற மாநிலத்தவர்களை மதிப்பது கிடையாது. தண்ணீர் பிரச்சனையை விட்டுருவோம். கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டு பஸ்கள் உடைப்பு, கர்நாடகத்துக்கு இயக்கப்படும் தமிழக பேருந்துகள் ரத்து, பெங்களூர் தமிழ்ச் சங்கம் மீது தாக்குதல், தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட 2 தியேட்டர்கள் சூறையாடப்பட்டன போன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு முறையும் பிரச்சனை வரும்போதெல்லாம் தமிழர்கள் குறி வைத்து தாக்க படுகின்றனர். அவர்களின் உடைமைகள் கொளுத்தப்படுகின்றன.
ஏன் இந்த கொலை வெறி? தண்ணி தர முடியாதுன்னா தர முடியாதுன்னு சொல்லுங்க. இந்த மாதிரி தாக்குதல் நடத்துறதால என்னத்த சாதிக்க போறீங்க? இதை எல்லாம் நினைக்கும் பொழுது "மனுஷன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே - இது மாறுவதெப்போ தீறுவதெப்போ நம்ம கவலே" என்ற பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது.
இந்த மாதிரி அடுத்தவங்க கையை எதிர் பார்க்காம, மழை நீர் சேகரித்தல், மரங்கள் வளர்த்தல், குளம் ஏரி தூர் வாருதல், கடல் நீரை குடி நீராக்கல் போன்ற திட்டங்களின் மூலம் தமிழ் நாட்டு மக்களின் தேவையை நாமாக தீர்த்துக்கொள்ள தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
Posted by Sathiya at 4:16 PM 0 comments
Labels: Nation, நாட்டு நடப்பு, நிகழ்வுகள், பொது சிந்தனை