Saturday, January 19, 2008

சிரிக்கப் படாது!

நாடு ரொம்ப கெட்டு கெடக்குதுங்க. நம்ம பய புள்ளைங்க வர வர எந்த விஷயத்தையுமே சீரியஸா எடுத்துக்கறதில்ல. எது சொன்னாலும் ஒரு நக்கலு, நய்யாண்டி, ஏகத்தாளம்...என்னத்த சொல்ல. நான் போன வாரம் வந்த சில செய்திய நண்பர்கள் கிட்ட சொன்னா நக்கலா சிரிக்கிறாங்க. எவ்வளவு சீரியஸான மேட்டர். சரி, நீங்களாச்சும் சிரிக்காம இந்த விஷயத்தை எல்லாம் கொஞ்சம் படிங்க. இதெல்லாம் போன வாரம் சில தலைவர்களால் விடப்பட்ட அறிக்கைகளில் இருந்து எடுக்கப்பட்டவை.

அதிமுக கட்சி தலைவி கூறியதில் இருந்து சில வரிகள்:

எப்போது அதிமுக ஆட்சி என் தலைமையில் மலரும் என்று மக்கள் கேட்க தொடங்கி விட்டார்கள்.
(அப்படியா. சொல்லவே இல்ல. எப்போ? என் காதுல விழவே இல்லையே?)

தற்போது, சில புதிய கட்சிகள் புற்றீசல்கள் போல வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பற்றி எல்லாம் நாம் கவலைபட தேவையில்லை. மக்களும் அக்கட்சிகளை பற்றி பொருட்படுத்தவும் இல்லை.
(இதையும் சொல்லவே இல்ல? எங்களை பத்தி எங்களை விட உங்களுக்கு நல்லா தெரியுதுங்கோ!)

எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு 20 ஆண்டு காலம் கழித்து இன்று தான் நான் ராமாவரம் தோட்டத்திற்கு வந்திருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்திருக்கிறது. ஆனால் அத்தகைய செய்திகள் தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு 1995-ம் ஆண்டு நான் முதல் அமைச்சராக இருந்த போது ஜானகி அம்மாவை சந்திப்பதற்கு இந்த இல்லத்திற்கு வந்திருந்தேன். அதன் பிறகு 1996-ம் ஆண்டில் ஜானகி அம்மையார் மறைந்து விட்டார் என்ற செய்தி கேள்விபட்டதும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நான் இங்கே வந்திருந்தேன்.
(அதான. எதுக்கு இப்படி தப்பு தாப்பா செய்தி போடறாங்களோ தெரியல. ராஸ்கோல்ஸ்! நீங்க தான் ரெகுலரா பத்து வருஷத்துக்கு ஒரு வாட்டி போயிட்டு வந்துடறீங்களே!)

சில பேர் எம்.ஜிஆர். போலவே அரசியலில் வந்துவிடலாம் என்று எண்ணி திடீர் திடீர் என்று கட்சிகளை தொடங்குகிறார்கள். இன்ஸ்டன்ட் காப்பி தயாரித்து விடலாம். இன்ஸ்டன்ட் தலைவர்களை தயாரிக்க முடியாது. இவ்வாறு முயற்சி செய்வதை பார்க்கும் போது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம் அந்த கதைதான் நினைவுக்கு வருகிறது. எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசுகள் நாம்தான். வேறு யாராவது நாங்கள் தான் எம்.ஜி.ஆர். வாரிசு என்று சொன்னால் மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.
(ஹா ஹா ஹா ஹா ஹா! எள்ளி நகையாடிவிட்டேன். என்ன ஒரு உவமை. நீங்க சொல்றது சரி தான். நீங்க சொல்றதுல ஒருத்தர் ஒடம்பு முழுக்க சூடு போட்ட மாதிரி தான் இருப்பார். ஆனா ரொம்ப கோவக்காரர். அநியாயம் நடக்கறத பார்த்தா பல்ல தட்டி கேப்பார். அப்படியும் ஒண்ணும் ஆகலைன்னா பேசியே சாகடிச்சிடுவார். படத்துல தாங்க.)

சிலருக்கு சில நேரங்களில் பித்தம் ஏறுவது இயற்கை. பித்தம் தலைக்கு ஏறியது தெளிய வேண்டும் என்றால் சிறிது நேரம் ஆட விடவேண்டும்.
(ஆஹா! இது வேறயா. ஆடுங்கைய்யா, ஆடுங்க)


**********************

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சொன்னதில் இருந்து சில வரிகள்:

புற்றீசல்கள் போல பெருகி வரும் கட்சிகளை கண்டு அதிமுகவினர் பயப்பட வேண்டாம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அவரின் இந்த அறிக்கையில் இருந்தே அவர் பயப்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.அவர் எம்.ஜி.ஆர். பயறை சொல்லி மக்களை ஏமாற்ற பார்க்கிறார். கருப்பு என்.ஜி.ஆர். என்று சொல்லி வருகிறார்கள். யாரும் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது. நான் சிறு வயதில் இருந்தே என்.ஜி.ஆரை முன் உதாரணமாக கொண்டு வாழ்ந்து வருகிறேன். அவர் வழியில் செயல்பட்டு, தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதற்கு பாடுபடுவேன்.
(முதல சொன்னது பாயிண்ட். ஆனா கடைசில நீங்களும் அவர் பேரையே சொல்றீங்களே. இன்னும் எத்தனை பேருயா இது மாதிரி கெளம்பி இருக்கீங்க?)

**********************

நடராஜன் அறிக்கையில் இருந்து சில வரிகள்:

இன்னும் 3 மாதத்தில் நீ திருந்தாவிட்டால் புதிய கட்சி தொடங்கி உன்னை சந்திப்பேன். நீ அரசியலை விட்டு விலகி ஹைதராபாத் ஓட இருந்ததை ஒரு காலத்தில் தடுத்த நான், இப்போது உன்னை எச்சரிக்கிறேன். இன்னும் 3 மாதத்தில் நீ திருந்தாவிட்டால் புதிய கட்சி தொடங்கி உன்னை சந்திப்பேன். ஆட்சியை தீர்மானிப்பது பெரும்பான்மையினர் என்பது கருணாநிதிக்குத் தெரியும் என்பதால் அவர் எச்சரிக்கையாக இருக்கிறார். நீ வீட்டை விட்டே வெளியே வர மாட்டாய். நான் மக்களோடு மக்களாக இருப்பவன்.
(அட்ரா அட்ரா! சபாஷ். சரியான போட்டி! ஆனா, நான் உங்களை மக்களோடு மக்களாக பார்த்ததே இல்லையா?)

உன்னை உருவாக்கிய எம்ஜிஆரை மறந்துவிட்டு ஜெயா டிவி, ஜெயா பிளஸ் டிவிக்களை துவங்குகிறார். விரைவில் நான் எம்ஜிஆர் டிவியை துவங்குவேன். என் தலையை அடகு வைத்தாவது அதை நடத்துவேன்.
(இது பாயிண்ட். இது இவ்வளவு நாளா எனக்கு தோனவே இல்லையே! ஆமாம். நீங்களும் கெளம்பிட்டீங்களா? அவர் ஒருத்தர் பேர வச்சு இன்னும் எத்தனை பேருயா?)
**********************
ஸ்ஸ்ஸ்...அப்பாடா...கண்ண கட்டுதே. எனக்கு எப்பவெல்லாம் மனசு சரியில்லாம இருக்கோ அப்பவெல்லாம் இந்த மாதிரி செய்திய படிச்சி மனச தேதிக்குவேன்! ஹும்!

1 comments:

Anonymous said...

engirunthu daa ithellam pidikkiraa? amazing!!!

-Dhina