Wednesday, March 19, 2008

மார்க் ஆண்டனி - ரகுவரன்

நடிகர் ரகுவரன் காலமான செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருந்துச்சு. எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் எந்த ரோலில் நடித்தாலும் அந்த பாத்திரத்தில் ஒன்றி விடுவார். பிரகாஷ் ராஜ் போன்ற வில்லன் நடிகர்களுக்கு இவர் ஒரு முன்னோடி. கத்தியின்றி, ரத்தமின்றி, பெருசா சண்டையும் இன்றி வில்லனாக நடித்த இவர் ஒரு 'Trend Setter'.

பாட்ஷா படத்தில் மாணிக் பாட்ஷா எப்படி பிரபலமோ அந்த அளவுக்கு மார்க் ஆண்டனியும் பிரபலம். ரொம்ப நல்லா பண்ணியிருப்பார். ஆனா எனக்கு இவரு வில்லனா நடிச்சத விட குணசித்திர வேடங்களில் நடித்த படங்கள் தான் ரொம்ப பிடிக்கும்.

என் பொம்மகுட்டி அம்மாவுக்கு, சம்சாரம் அது மின்சாரம், லவ் டுடே, அஞ்சலி, முகவரி, ரோஜா கூட்டம், ரன் போன்ற பல படங்களில் இவர் குணசித்திர வேடங்களில் வாழ்ந்து காட்டியிருப்பார். அதிலும் ரன், முகவரி ஆகிய படங்களில் இவரது நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இவர் சேர்ந்து நடிக்காத ஒரே நடிகர் கமல் என்று படித்தும் எனக்கு கொஞ்சம் சங்கடமா இருந்தது. கமல் எப்பொழுதும் நல்ல நடிகர்களை தன் படங்களில் போடுவார், எப்படி இவர் மிஸ் ஆனார்னு புரியலை. நான் ஸ்கூல் படிக்கும் போது இருந்து இவர் நடிப்ப பார்த்திருக்கேன். ஆரம்பத்துல இவர எனக்கு புடிக்காது. ஒரே வில்லத்தனமான பாத்திரங்களா பண்ணிக்கிட்டு இருப்பாரு.

ஒரு தடவை தூர்தர்ஷன்ல ஒரு அமெரிக்க வாலிபரின் பேட்டி போட்டாங்க. வணக்கம் தமிழகம் மாதிரி ஒரு நிகழ்ச்சி அது. அப்ப கொஞ்சம் பிரபலமான வாலிபர் அவர், ஆனா இப்போ பேரு மறந்து போச்சு எனக்கு. இதுல விசேஷம் என்னன்னா அந்த அமெரிக்க வாலிபர் முழுக்க முழுக்க தமிழ்ல பேட்டி கொடுத்தார். திருக்குறள் எல்லாம் சொன்னார். மதுரை தமிழ் சங்கத்துல தமிழ் படிச்சாராம். கேக்கவே ரொம்ப பெருமையா இருந்துச்சு. அதுல அவர் கிட்ட அவருக்கு தமிழ்ல பிடிச்ச நடிகர் யாருன்னு கேட்டாங்க. நான் அவர் ரஜினி, கமல், சிவாஜி இப்படி யாரையாவது சொல்ல போறார்னு நெனச்சேன். ஆனா அவர் தனக்கு பிடித்த நடிகர் ரகுவரன்னு சொன்னாரு. அப்ப ரகுவரன் அந்த அளவுக்கு பிரபலம் கிடையாது. உடனே எல்லார் மனசுலயும் இருந்த கேள்விய அந்த வாலிபரை பார்த்து கேட்டாங்க, "ஏன் அவரை பிடிக்கும்?". உடனே அவர் ரகுவரனுடைய கண்கள் மிகவும் வலிமையானவை, அவர் பாடி லாங்குவேஜ் அசத்தலா இருக்கும், அவர் வசனம் பேசாமலேயே அவர் என்ன நினைக்கிறார்னு தன் கண்களாலேயே சொல்லிடுவார்னு ரகுவரனை பத்தி சொன்னாரு.

இதுக்கப்புறம் தான் ரகுவரனை பார்க்க ஆரமித்தேன். அந்த அமெரிக்க வாலிபர் ரகுவரனை பத்தி சொன்னது அவ்வளவும் உண்மைன்னு புரிஞ்சிகிட்டேன். அதுக்கப்புறம் என் பொம்மகுட்டி அம்மாவுக்கு படம் பார்த்தடுக்கப்புறம் தான் அவரை ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுது. அந்த படத்துல சத்யராஜ், சுஹாசினியை விட இவர் தான் மனசுல நின்னார். இந்த படம் வந்த போது எனக்கு பத்து வயசு. அந்த வயசுல இருந்தே இவரை எனக்கு பிடிக்கும்.

அப்புறம் இவர் சின்ன திரையில் வாழ்ந்து காட்டுன "இது ஒரு மனிதனின் கதை" யை யாரும் மறந்திருக்க முடியாது. அதில் வருவது போலவே அவரது உண்மை வாழ்க்கையிலும் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவில்லை. தனது இன்னுயிரை நீத்து இறைவனடி சேர்ந்த இவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

ரகுவரனுடைய விகி(wiki) பக்கம் இங்கே.

1 comments:

Anonymous said...

Dhina: rombo nalla ezuthiyirundhaa, i liked his family photo very much, if he had a good character he could have ended up as a Legendary Actor, now he will not get that much importance, i feel he has done a big injustice to his family and sweet son, in that way i do not have much respect for him. the one which will be the most strong on someone's mind is, his role in "ithu oru manithanin kathai". the avm logo music and the title song of that movie still rings in my ears. when i ever i hear that avm logo music that serial comes to my mind. i am sure that he did not act in that serial it was quite real and i even smelt alcohol while watching that serial. i think it was a serial which attracted people so much even though story was not that entertaining. i think everybody watched that serial with lot of hopes that he will discontinue alcohol and become a good man. oh, i started talking too much i think, anyway, past is past, let his soul rest in peace...