Saturday, March 21, 2009

என்ன அழகு எத்தனை அழகு!

அனைவருக்கும் வணக்கம்! ஒரு நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் போடும் பதிவு இது. முதல் பதிவே இந்த மாதிரி போடனுமானு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்'னு பெரியவங்க சொல்லிவிட்டு போயிருக்கறதால தவிர்க்க முடியல. அது மட்டும் இல்லாம என்னை மாதிரியே இவரும் நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் வந்திருக்காரு.

இன்னமும் இளமை மாறாமல் எப்படி அம்சமா இருக்காருன்னு பாருங்க. இந்த படங்களை பார்த்தாலே தெரியுது படம் சூப்பர் ஹிட் ஆயிடும்னு. அதனால எல்லாரும் இப்போவே டிக்கெட் புக் பண்ணி வச்சுக்குங்க.

இந்த படங்களை நான் மும்மூரமா வேலை செஞ்சிட்டிருந்த போது ஒருத்தன் ஈமெயில் பண்ணினான். பார்த்ததும் அப்படியே ஆனந்த கண்ணீர் வந்திருச்சி. சரின்னு அப்படியே எனக்கு தெரிஞ்சவங்களுக்கெல்லாம் அனுப்பி விட்டேன். பதிலுக்கு அவங்க கோவத்துல அனுப்பின வார்த்தைகளை பார்த்ததும் இரத்த கண்ணீரே வந்திருச்சிங்க:(