அனைவருக்கும் வணக்கம்! ஒரு நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் போடும் பதிவு இது. முதல் பதிவே இந்த மாதிரி போடனுமானு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்'னு பெரியவங்க சொல்லிவிட்டு போயிருக்கறதால தவிர்க்க முடியல. அது மட்டும் இல்லாம என்னை மாதிரியே இவரும் நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் வந்திருக்காரு.
இன்னமும் இளமை மாறாமல் எப்படி அம்சமா இருக்காருன்னு பாருங்க. இந்த படங்களை பார்த்தாலே தெரியுது படம் சூப்பர் ஹிட் ஆயிடும்னு. அதனால எல்லாரும் இப்போவே டிக்கெட் புக் பண்ணி வச்சுக்குங்க.
இந்த படங்களை நான் மும்மூரமா வேலை செஞ்சிட்டிருந்த போது ஒருத்தன் ஈமெயில் பண்ணினான். பார்த்ததும் அப்படியே ஆனந்த கண்ணீர் வந்திருச்சி. சரின்னு அப்படியே எனக்கு தெரிஞ்சவங்களுக்கெல்லாம் அனுப்பி விட்டேன். பதிலுக்கு அவங்க கோவத்துல அனுப்பின வார்த்தைகளை பார்த்ததும் இரத்த கண்ணீரே வந்திருச்சிங்க:(




Saturday, March 21, 2009
என்ன அழகு எத்தனை அழகு!
Saturday, November 1, 2008
இவங்க இன்னும் திருந்தலையா?
ஆபீஸ்ல ஆணி புடுங்கற வேலை ஜாஸ்தியா போச்சு! அதான் வலைப்பூ பக்கம் வர முடியல. தினமும் இந்த பேங்க் ஊத்திகிச்சு, அந்த பேங்க் ஊத்திகிச்சுன்னு சொல்லி பீதிய வேற கிளப்பறாங்க. அடுத்த வருஷம் இதை விட மோசமா இருக்கும்னு வேற சொல்றாங்க. இந்த மாதிரி நிலமையில ஓபாமா வந்து என்ன செய்ய போறாரோ?
இப்போவெல்லாம் டிவி கூட அவ்வளவோ பார்க்கறது இல்ல. அப்படியே பார்த்தாலும் விஜய் டிவி தான். சரி, சன் டிவி பார்த்து ரொம்ப நாள் ஆச்சே, எப்படி போயிட்டிருக்குன்னு பார்ப்போம்னு ஒரு நாள் சும்மா சேனலை மாத்தி பார்த்தேன். ஏதோ ஒரு மெகா சீரியல் போயிட்டிருந்துது. ஒரு அம்மா கீழ ஒக்காந்துட்டு அழுதுகிட்டு இருந்தாங்க. அவங்க பையன் அவங்களை சாப்பிட கூப்பிடறான். அதுக்கு அந்த அம்மா, "அக்கா ஜெயில்ல இருக்கும் போது எப்படிடா சாப்பிட முடியும்?னு" சொன்னாங்களோ இல்லையோ, வுடுங்கடா சாமின்னு சேனலை மாத்திட்டேன்!
அடப்பாவீங்களா....இன்னும் இந்த மாதிரி தான் ஓட்டிட்டு இருக்கீங்களா? கீழ இருக்க இந்த வீடியோ காட்சியை பாருங்க. இதுல பேசிட்டு இருக்கறது ஒரு பாட்டியும் அவங்க பேத்தியும். இரண்டு பேறும் கணவனை இழந்தவர்கள். ஆனா இரண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியுதா? இதுவும் இன்னும் மாறலைங்க;)
Posted by Sathiya at 7:55 AM 8 comments
Labels: Comedy, சின்னத்திரை, நகைச்சுவை, மொக்கை, வீடியோ
Saturday, July 26, 2008
1992ல் ஒரு நாள்
அம்மா காலைல ஏழு மணிக்கு சரியா எழுப்பிடுங்கனு சொல்லிட்டு தூங்க சென்றான் ராமு. அவன் சென்ற அடுத்த நிமிடம், அவன் சொன்னதை டிவி பார்த்து கொண்டே கேட்டு கொண்டிருந்த அவனது அண்ணன் சோமு தன் அம்மாவிடம் ஓடி வந்து, "அம்மா என்னையும் ஏழு மணிக்கு எழுப்பிடுங்க" என்று சொல்லிவிட்டு தூங்க சென்றான்.
மறுநாள் காலை தனது உள்ளுணர்வு எழுப்பி விட 6.45 மணிக்கே எழுந்து விட்டான் சோமு. பின்னர் அம்மா வந்து எழுப்பியதும் எழுந்த ராமு, சோமு ஏற்கனவே எழுந்து விட்டதை பார்த்து கடுப்பாகி போனான். இவர்களை காம்பிளான் குடிப்பதற்காக பல் துலக்க சொல்லி அம்மா எவ்வளோ சொல்லியும் கேட்காமல் மிகவும் பரபரப்பாக அங்கும் இங்கும் உலாத்தி கொண்டிருந்தார்கள்.
கடிகாரத்தையும் வீட்டு வாசலையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்ல செல்ல அவர்களின் முகத்தில் தெரியும் பரபரப்பும் அதிகரித்து கொண்டே இருந்தது.
ராமு சற்று வேகமாக இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தான். அடிக்கடி தனது இறந்து கால்களையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பின்னி கொண்டு நின்றிருந்தான். ஆத்திரத்தை அடக்க முடியும் ஆனால் அவசரத்தை(புரியுதில்ல?) அடக்க முடியாதுன்னு சொல்வாங்க இல்ல, ஆனால் ராமு அவனது இந்த உத்தியின் மூலம் அதையும் அடக்கி கொண்டு நின்றிருந்தான்.
சிறிது நேரம் கழித்து வாசலில் சைக்கிள் மணியோசை அடிக்கும் சப்தம் கேட்டு இருவரும் விழுந்ததித்து கொண்டு கேட்டை நோக்கி ஓடுகிறார்கள். முட்டி மோதிக்கொண்டு, ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கொண்டு ஓடி சென்றவர்கள் அதே வேகத்தில் உள்ளே ஓடி வருகிறார்கள். முதலில் வந்த சோமு(பெரியவன் ஆயிற்றே) ஒரு ரூமுக்குள் சென்று கதவை தாளிட்டு கொள்கிறான்.
தனக்கிருந்த முழு கடுப்பில் அழுது கொண்டே அம்மாவிடம் சென்று முறையிட்டான் ராமு, "அம்மா! பாரும்மா சிறுவர் மலரை சோமு எடுத்துகிட்டு ரூமுக்குள்ள போயிட்டாமா. தர சொல்லுங்கம்மா!"
(பி.கு. இதுல வர அந்த சோமு நான்தாங்க. இந்த சிறுவர் மலருக்காகவே எங்க அப்பா கிட்ட கேட்டு, அந்த ஒரு நாள் மட்டும் தின மலர் வாங்குவோம். அதுக்கு அப்படி ஒரு சண்டை போடுவோம்;)
Tuesday, July 1, 2008
அரசியல் பயிற்சி பள்ளி
சினிமா, கணினி, பேஷன் என எல்லா துறைக்கும் தனி தனியா பல பயிற்சி பள்ளிகள் இருக்கும் போது, இந்த அரசியலுக்கு மட்டும் ஏன் ஒரு பயிற்சி பள்ளி கிடையாது? ஒரு வேலை நம்ம ஊருல எல்லா விஷயத்துலயும் அரசியல கொண்டாந்து நுழைக்கிறதால அதுக்கு தனியா பயிற்சி வேண்டாம்னு நெனசிட்டாங்களோ?
அப்படியே இந்த மாதிரி யாராச்சும் ஒரு அரசியல் பயிற்சி பள்ளியை ஆரமிசாங்கனா அதுல என்ன சொல்லி தருவாய்ங்கன்னு வெட்டியா யோசிச்சு பார்த்தேன். அந்த கற்பனை தாங்க இந்த பதிவு.
இந்த பள்ளியில் சேர குறைந்த பட்சம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அவசியம்:
1. கண்டிப்பாக எட்டாம் வகுப்புக்கு மேல் பதித்திருக்க கூடாது. அதற்கு மேல் படித்திருப்போர் அரசியல் வாதிகளின் கார் டிரைவர், எடுபுடி போன்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டால் தபால் மூலம் தெரிவிக்கப்படும்.
2. குறைந்த பட்சம் ஒரு பத்து கெட்ட வார்த்தைகளாவது தெரிந்திருக்க வேண்டும். இது பெண்களுக்கும் பொருந்தும்.
3. இளைஞர் அணியில் சேர பயிற்சி பெற விரும்புவோர் குறைந்த பட்சம் ஐன்பது வயதை கடந்தவராக இருக்க வேண்டும்.
4. அனைவரும் கண்டிப்பாக ஏதாவது ஜாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.
5. மேலே உள்ள அனைத்தும் சரியாக இருந்தால், ஒரு நேர்காணல் மூலம் தேர்ந்தேடுக்கப்படுவர். ஏதாவது கிரிமினல் வழக்குகளில் சம்பந்தம் உள்ளோர் அந்த F.I.R காபியுடன் வந்தால் நேர்காணல் இல்லாமலேயே சேர்த்து கொள்ளப்படுவர்.
சரி இப்போ இந்த பள்ளியில் என்னன்ன பயிற்சி தருவோம்னு பார்ப்போம்.
1. அரசியலில் சேர விரும்புவோருக்கு வெ.மா.சு.சொ. அறவே இருக்க கூடாது. (அதாவது வெற்றியின்மையால் சோர்வடைவது, மாநாட்டுக்கு லேட்டா வருவது, சுங்க வரி ஏய்ப்பு, சொத்து குவிப்பு...அப்பாடா!). இதற்காக தீவிர பயிற்சி அளிக்கப்படும். அனைவருக்கும் சாப்பாட்டில் உப்பையும், காரத்தையும் குறைத்து விடுவோம்.
2. தினமும் ஒரு பத்து பேரை சுற்றி நிக்க வைத்து தூய சென்னை பாஷையில் எவ்வளோ முடியுமோ அவ்வளோ அசிங்கமா திட்ட விடுவோம். ஆனா கொஞ்சம் கூட அசராமல் சிரித்து கொண்டே இருக்க வேண்டும். "மனதை திருடிவிட்டாய்" படத்தில் பிரபு தேவா திட்டு வாங்கிட்டு சிரிச்சி கிட்டே இருப்பாரே அந்த மாதிரி. மக்கள் எல்லாரும் 'இவன் எவ்வளோ திட்டுனாலும் வாங்கிக்கராண்டா, இவன் ரொம்ப நல்லவண்டான்னு' சொல்லணும். இதான் இந்த பயிற்சியினுடைய குறிக்கோள்.
3. அனைவரையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவரை நியமித்து, இருவருக்கும் இடையே சண்டை மூட்டி விடுவோம். அவர்கள் இடையே கைகலப்பு உண்டாகும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்குவோம். பிறகு ஒரு பிரிவில் இருந்து யாராச்சும் வேறு ஒருத்தரை தேர்ந்தெடுத்து மூன்றாவது பிரிவை உண்டாக்குவோம். இப்போ அந்த முதல் இரண்டு பிரிவின் தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து இந்த மூன்றாவது அணியினை எதிர்க்க வேண்டும். இப்படியே பயிற்சி முடியிற வரை தினமும் போயிட்டிருக்கும். கடைசியா நிலைச்சு நிக்கிற ரெண்டு அணியின் தலைவர்கள் தான் திறமையான அரசியல்வாதிகள்னு ஒரு சிறப்பு பரிசு கொடுப்போம். ஸ்ஸப்பா!
4. தினமும் ஒரு பட்டிமன்றம் நடத்துவோம். அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு தலைப்பை கொடுப்போம். அவர்கள் அந்த தலைப்பை வைத்து இன்னைக்கு ஒன்று பேசணும், நாளைக்கு ஒன்று பேசணும். (இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா!)
5. அனைவருக்கும் நடிப்பு பயிற்சி வழங்கப்படும். இதனால் இவர்கள் சினிமாவுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். சினிமாவில் நடித்து விட்டால் ஒன்னாவது வாய்ப்பாடல் தெரியாவிட்டால் கூட அரசியலில் நுழைந்து விடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ராமநாராயணன் படத்தில் நடித்த குரங்கு, நாய், யானை, பாம்பு இவைகள் வந்து தேர்தல்ல நின்னா கூட நம்ம மக்கள் ஜெயிக்க வச்சுடுவாங்க. அவ்வளோ நல்லவங்க!
6. அரசியல் வாதீங்களுக்கு கெட்ட வார்த்தை தெரிஞ்சிருக்கறது எவ்வளோ முக்கியம்னு உங்களுக்கே தெரியும். தெரியலைன்னா ஒரு பொது கூட்டத்துக்கு போய் பாருங்க. (ஒரு தடவை அப்படிதான் இரவு ஒரு பத்து மணிக்கு நான் வேலை விட்டு வீட்டுக்கு திரும்பும் போது ஒரு பெண் வேட்பாளர் பேசறதை கேட்டு என் காதுல 'சேம் பிளட்'). ஆகையால் அனைவருக்கும் திரு. ஆடு வெட்டி ஆறுமுகம் எழுதிய "கம்ப்ளீட் கெட்ட வார்த்தை அகராதி" மற்றும் "ஒரே வாரத்தில் பத்தாயிரம் கெட்ட வார்த்தைகள்" என்னும் நூல்களை கொடுத்து படிக்க செய்வோம்.
7. அடுத்து சட்டசபை பயிற்சி. இதில் கையில் கிடைக்கும் பொருளை எடுத்து எப்படி சரியாக குறி வைத்து எதிரியை தாக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி தருகிறோம். சீனாவில் இருந்து ஜெட் லீயிடம் பணிபுரிந்த ஒருவரை இதற்கான பயிற்சி அளிக்க இங்கு வரவழைக்க இருக்கிறோம். இதற்காக பல வகையான நாற்காலிகளை வரவழைத்திருக்கிறோம்.
8. பிறகு சட்ட சபையில் இருந்து எப்படி எல்லாம் நொண்டி சாக்கு சொல்லி விட்டு வெளிநடப்பு செய்யலாம் என்பதற்கான பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஒரு மூத்த அரசியல் வாதியை நியமித்திருக்கிறோம். இவர் இதுவரை கலந்து கொண்ட எட்டு சட்ட சபை கூட்டங்களில், ஏழு தடவை வெளி நடப்பு செய்திருக்கிறாராம். (அந்த ஒரு தடவை, அசதியாக இருந்ததால் கண் அயர்ந்து விட்டாராம்).
9. அனைவரும் தினமும் காலில்விழாசனம் என்ற ஆசனத்தை செய்ய வேண்டும். இது பின்னாளில் அரசியலில் இறங்கியவுடன் பெரிதும் பயன்படும். இந்த ஆசனத்தை இருபது வருடங்களாக செய்து வரும் ஒரு எதிர் கட்சி தலைவரை இதற்கான பயிற்சி அளிக்க வரவழைக்க இருக்கிறோம். இது பிரம்மாஸ்திரத்தை விட வலிமையானதாம். இந்த ஒன்னை மட்டும் கற்று கொண்டாலே அரசியலில் சாதித்து விடலாம் என்கிறார்கள்.
10. விடுமுறை நாட்களில் பல ஊர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்வோம். அப்போது எப்படி ஜாதி கலவரம் செய்ய வேண்டும் என்பதை நேரில் செய்து காண்பிப்போம். இதற்காக நாலு ஜாதி கட்சி தலைவர்கள் உடன் வருவார்கள்.
11. அடுத்து ஒரு சின்ன விஷயத்தை எப்படி ஊதி பெருசாக்க வேண்டும், ஒரு பெரிய விஷயத்தை எப்படி தூசி மாதிரி ஊதி தள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படும். இதற்காக சட்ட நுணுக்கங்கள் தெரிந்த சில திறமையான வக்கீல்களை நாங்கள் நியமித்திருக்கிறோம். திரு சு. சுவாமி அவர்கள் எப்படி சம்பந்தமே இல்லாம ஒரு அறிக்கையை விட்டு பிரபலமாவது என்பதை இங்கு வந்து மாணவர்களுக்கு விளக்குவார்.
12. கடைசியாக கட்சி நடத்துவதே தனது லட்சியமாக கொண்டிருக்கும் அந்த தாடி நடிகர் மாணவர்களுக்காக ஒரு சிறப்புரை ஆற்றுவார். இதை கேட்ட பின் மாணவர்களுக்கு (இவர் எல்லாம் கட்சி நடத்தும் போது நாம் ஏன் அரசியலில் இறங்க கூடாது என்று) ஒரு தன்னம்பிக்கை உருவாகும் என்று நம்புகிறோம்.
இன்னும் எதுக்கு காத்துகிட்டு இருக்கீங்க? உடனே கிளம்பி வாங்க! விண்ணப்பத்தாளை வாங்கிட்டு போங்க!
Posted by Sathiya at 1:54 PM 8 comments
Labels: Comedy, Nation, Political Views, அரசியல், நகைச்சுவை
Monday, June 9, 2008
பப்பு கான்ட் டான்ஸ் பட் டி.ஆர் கேன்
ஏ.ஆர். ரஹ்மானுடைய சமீபத்திய பாட்டு கேட்டீங்களா? ஒரு ஹிந்தி படத்துக்கு போட்டிருக்கார். பாட்டெல்லாம் சும்மா டக்கரா இருக்கு. அதுல ஒரு பாட்டு தான் 'பப்பு கான்ட் டான்ஸ் சாலா' என்கிற பாட்டு. சரியான பார்ட்டி(Party) சாங் இது. பாட்டுகளை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
அமீர் கான் தயாரிச்ச படம் இது. ஜெனிலியா தான் ஹீரோயின். ஹீரோ இம்ரான் கான் அமீர்கானுடைய சொந்தம். படத்தின் பெயரை சொல்லவே இல்லையே. படத்தின் பெயர் 'ஜானே து யா ஜானே நா'(Jaane Tu Ya Jaane Na), அப்படீனா 'உனக்கு தெரியுமோ தெரியாதோ'.
படம் எப்படி இருக்கும்னுலாம் தெரியல. இதுல வர அந்த 'பப்பு கான்ட் டான்ஸ்' பாட்டுக்கு நம்ம டி.ஆர் டான்ஸ் ஆடுனா எப்படி இருக்கும்னு நெனச்சி பார்த்தேன். அதை அப்படியே எடிட்டும் பண்ணிட்டேன். சும்மா சொல்ல கூடாது, இந்த வயசுலயும் மனுஷன் என்னமா டான்ஸ் ஆடறார். அதான் குட்டி முப்பத்திரெண்டு அடி பாயுது போல. பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
Thursday, June 5, 2008
டி.ஆரும் என் சண்டையும்
கடந்த ஞாயிற்று கிழமை காலையில் இருந்து கால்பந்து போட்டி(ஜெயித்தும் விட்டோம்), பார்ட்டி என பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. எல்லாம் முடிந்து ஒரு நாலு மணிக்கு வீடு திரும்பினோம். சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டு நானும் தங்கமணியும் பேசத் தொடங்கினோம். இந்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே சண்டையில் வந்து முடிந்தது.
அதன் பின் இருவரும் எதுவும் பேசாமல் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தோம். நல்ல வேளையாக டிவி ரிமோட் என்னிடம் இருந்தது. இந்த மாதிரி ஏற்கனவே சண்டையில் இருக்கும் போது நாங்கள் இருவரும் ரிமோட்டுக்காக சண்டை போடுவதில்லை. நானும் சன் டிவி, விஜய் டிவி என மாற்றி மாற்றி வைத்துக் கொண்டிருந்தேன், நிகழவிருக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை பற்றி சற்றும் அறியாதவனாய். அப்போ தாங்க அந்த சம்பவம் நடந்தது. சன் டிவியில் ஏதோ படம் ஆரம்பித்தது. சரி, இதையாவது பார்ப்போமே என்று ஆவலாக ஒலியை ஏற்றி வைத்தால், அது நம்ம டிஆரின் 'வீராசாமி'யாம். எனக்கு தூக்கி வாரி போட்டது. தமிழ்மணத்தில் ஒருவர் விட்டிருந்த எச்சரிக்கை எனக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது.
இதுதாங்க அந்த அறிமுக பாடல்:
இந்த பாட்டுல என்னமா டான்ஸ் ஆடி இருக்கார் பாருங்க. விரைவில் இவர் ஜோடி நம்பர் 1னில் நடுவரா கூட வரலாம். எதுக்கும் தயாராகிக்கோங்க.
இந்த பாட்டுல அவருடைய ஸ்டைலும், அழகும் வெளிப்படும். பில்லா படத்த அஜித்துக்கு பதில் இவர் பண்ணி இருந்தா, இன்னும் டக்கரா இருந்திருக்கும் இல்ல? அதை நெனச்சாலே எனக்கு வார்த்தை வரமாட்டேங்குது.
படையப்பா படத்துல ரஜினி, ரம்யா கிருஷ்ணன் முன்னாடி ஊஞ்சல இழுத்து போட்டு ஒக்காருவாறே, அந்த காட்சி ஞாபகம் இருக்கா? இப்போ இந்த காட்சிய பாருங்க, அதை விட எவ்வளவு பிரமாதமா செஞ்சி இருக்கார் பாருங்க டி.ஆர்.
இதுல டி.ஆரின் தங்கச்சியை காதலிக்கும் இன்னொரு ஹீரோ படம் பூராவும் காதில் ஒரு சாம்பிராணி பத்தியை சொருகி கொண்டிருப்பார். படம் முடியறதுக்குள்ள அதை யாராவது கொளுத்துவாங்கனு எதிர்பார்த்தேன். கடைசி வரை யாரும் அதை கொளுத்தவே இல்லை:( எங்க இருந்து தான் இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் பிடிப்பாரோ?இப்போ நம்ம கதைக்கு வருவோம். இந்த மாதிரி தங்கமணியோட சண்டைல இருக்கும் போது, எப்பவுமே கஷ்டப்பட்டு முகத்த இறுக்கமாகவே வச்சுக்கிட்டு இருக்கணும். இல்லைனா நான் சண்டைல தோத்தது போல ஆகிவிடும். இதுக்காகவே எவ்வளவோ கஷ்டப்பட்டு என் சிரிப்பை எல்லாம் அடக்கி கொண்டு இந்த படத்தை பார்த்துகிட்டிருந்தேன். ஆனால் இந்த காட்சிகளை பார்த்துவிட்டு என்னால் தாங்க முடியாமல் சிரித்து விட்டேன். உங்களால சிரிக்காம இருக்க முடியுதானு முயற்சி பண்ணி பாருங்க.
நல்ல வேளை, பாஸ்கர் இவர பிடிச்சிருக்காரு, இல்லனா....யய்யாடி!
இந்த படத்தோட சேர்த்து இவர் மொத்தம் நாற்பதொன்பது தங்கச்சிகளை மார்மேலையும், தோள்மேலையும் போட்டு வளர்த்திருக்கார். அடுத்த படத்தோட அரை சதம் அடித்து விடுவார்.
இதை பார்த்து விட்டு தங்கமணியின் கைகள் தலைவலி தைலத்தை நோக்கி எட்டியது. நான் சிரித்ததை பார்த்த தங்கமணி, ஜெயித்து விட்ட தோரணையோடு என்னை பார்த்து "மரியாதையா சேனலை மாத்துரியானு" அன்பு கட்டளை இட்டார். நானும் படம் முடியபோவுது, கிளைமாக்ஸ் பார்த்துட்டு மாத்திடறேனு சொல்லிட்டு அந்த கொடுமையையும் பார்த்தேன். இதுக்கு மேலயும் தாங்க முடியாதுன்னு தங்கமணி எழுந்து சமயகட்டுக்குள்ள காபி போட போயிட்டாங்க. அப்பாடா எப்படியோ சண்டை தீர்ந்தது, ஆனா ஒரு சண்டே இப்படி வீணாகி போச்சே!
Posted by Sathiya at 12:21 AM 4 comments
Labels: Comedy, சினிமா, நிகழ்வுகள், வீடியோ
Wednesday, May 7, 2008
பூனை குசும்பு!
சில பேரை திட்டும் போது பூனை குசும்பன்னு சொல்லி திட்டுவாங்களே கேள்வி பட்டிருக்கீங்களா? அப்படீன்னா என்னன்னு தெரியுமா? தெரியலைன்னா இந்த வீடியோ காட்சியை பாருங்கள். உங்களுக்கே புரியும்;)
Posted by Sathiya at 6:58 PM 3 comments
Thursday, April 10, 2008
இவங்கள வச்சு வேற என்ன பண்ண முடியும்?
முதல் நபர்: திரும்பவும் என்னங்க அங்க பிரச்சனை? எதுக்கு எல்லாரும் கூட்டமா கோஷம் போட்டுக்கிட்டு இருக்காங்க?
இரண்டாம் நபர்: ஒகேனக்கல்ல யாரோ ஒரு பிரபல கட்டிட கான்டிராக்டர் நூறு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, ஒவ்வொரு இல்லத்திற்கும் தனித்தனி தண்ணி தொட்டி கட்ட போறாராம். அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் இந்த போராட்டமாம்.
முதல் நபர்: இது கொஞ்சம் ஓவருங்க. அப்ப நான் இன்னிக்கும் அரசி பார்க்க முடியாதா?
முதல் நபர்: என்னங்க ஆச்சரியமா இருக்கு? திடீல்னு எதுக்கு கன்னட திரைப்பட துறையினர் ஒகேனக்கல் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சி தர்ணா போராட்டம் அறிவிச்சி இருக்காங்க.
இரண்டாம் நபர்: இதுவும் ஏட்டிக்கு போட்டி தாங்க. இவங்கள நல்லா புரிஞ்சி வச்சு இருக்குற தமிழ் நடிகர்கள் சங்கம், ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சி உண்ணா விரதம் இருக்க போறதா சும்மா ஒரு வதந்திய பரப்பி விட்டாங்க. அதான்.
இது ஒரு வித்யாசமான சந்திப்பு என்று சொல்ல மாட்டேன். மிகவும் அதிகமா பேசி திட்டு வங்கறதும் சுலபம், குறைவாக பேசி திட்டு வங்கறதும் சுலபம். இங்கு பேசியவர்கள் எல்லாரும் உணர்ச்சி இல்லாமல் பேசினார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக உள்ளன. குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்க பட்டதுக்கு என் மனதார பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்கு காரணமானவர்களை வாழ்த்துகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும் என ஒதுக்கப்பட்டுவிட்டது. நமக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து நாம தண்ணி எடுத்துக்க திட்டம் போட்டா அதை எடுக்கக் கூடாதுன்னு தடுத்தா பாராட்ட வேண்டாமா?
இதை எப்பவுமே அவங்க பண்ணிக்கிட்டு இருக்காங்க....விடுங்க. சரி, எனக்கு இதுல என்ன குஷின்னு சொன்னா, ஒரு தேசிய கட்சி, மிக பெரிய தேசிய கட்சி, அந்த மாநிலத்தின் அந்த கட்சியோட மிகப்பெரிய தலைவராக இருந்தவர், இருப்பவர், இப்ப வந்து இந்த விஷயத்தை ரிப்பன் கட் பண்ணாம ஆரம்பித்து வைத்திருக்கிறார். என்ன பெருந்தன்மை பாருங்க.
சரி, இப்போ பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம். ஒரு பெரிய தலைவர் வந்து இதை ஆதரிக்கிறார். எதுக்கு? நம்ம நல்லதுக்கு தான். அந்த தேசியக் கட்சியைச் சேர்ந்தவங்க, இங்க நம்ம மாநிலத்தில் இருக்கறவங்க எல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்காங்க. அவங்களும் இந்த மாதிரி ஏதாச்சும் செய்ய வேண்டாம்?
கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். மும்பையிலிருந்து இப்ப வந்துட்டு, இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அதாவது இந்த வைரஸ் உருவாகக் காரணமே, கலைஞர்தான்னு சொல்றார். என்ன தியாகம் இது. மக்கள் என்ன புத்திசாலிகளா? அவர்களுக்கு ஒண்ணுமே தெரியாது. மக்கள் எங்கிருந்தாலும் அது கர்நாடகமோ தமிழகமோ... அவங்க புத்திசாலிகள் அல்ல...
அரசியல்வாதிகளே பொய்ப் பேசுங்க. உடான்ஸ் விடுங்க. சுயநினைவு இல்லாம பேசுங்க. (வாயில் கை வைத்து) இங்க இருந்து பேசணும்...அவன் பாத்துக்கிட்டே இருக்கான். தெய்வம் அவன்.
சும்மா எல்லாரும் எலெக்ஷனுக்காக ஆட்டம் போடாம மக்களுக்கு நல்லது பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் அங்கே விரைவில் வரப்போகிற தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள்.
நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவகவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, தரம்சிங், கார்கே, அனந்தமூர்த்தி போன்றவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக நல்லது செய்யாதீர்கள்... அதன் விளைவு மோசமாக இருக்கும். உங்களையே அழிச்சிடும்.
இதை மீண்டும் மீண்டும் வளர விடுங்கள், காவிரி பிரச்சினை மாதிரி. அறிவோட செயல்படாதீங்க தயவு செஞ்சு. இங்கே, கலைஞர் மற்றும் எல்லாருக்கும் எனது வேண்டுகோள்... இது கோடலியால் வெட்டினாலும் தீராத பிரச்சனை. இதை இப்போது விட்டுவிட்டு சரியான நேரம் வரும்போது நகத்தால் கிள்ளி எரிந்து விடலாம். இப்பவே, இந்த நிமிஷமே இந்த வேலையை கைவிட வேண்டும். இதைவிட வேறு பெரிய பிரச்சினை இருக்கு.
உங்களது இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது யாரும் இல்லை. எனவே இம்மாதிரி உணர்வுப்பூர்வமான விஷயங்களை அரசியலாக்குங்கள், தயவுசெய்து இந்த விஷயத்துக்கு இப்பவே முடிவு கட்டிடாதீங்க...
Posted by Sathiya at 8:55 AM 0 comments
Saturday, April 5, 2008
கத்தாழ கண்ணால பாட்டுக்கு சிவாஜி நடனம்
நம்ம நடிகர் திலகம் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி பார்த்து இருக்கீங்களா? அவர் நிஜமாவே ஆடி இருக்காருங்க. பாபு என்ற படத்துல வர "வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா" என்ற பாட்டு தான் எனக்கு தெரிஞ்சி அவர் ஆடுன குத்து பாட்டு. சரியான குட்டு பட்டு அது.
அந்த பாட்ட வச்சு இப்போ வந்துருக்குற கத்தாழ கண்ணால பாட்டோட இணைச்சி ஒரு ரீமிக்ஸ் வீடியோ பண்ணி இருக்கேன். நான் இதுக்கு முன்னாடி பண்ண பாக்யராஜ், விஜயகாந்த் ரீமிக்ஸ் அளவுக்கு இது சரியா வரல இருந்தாலும் ஓகே.
என்ன நேயர்களே! நடிகர் சிவாஜி கணேசன் பங்கு பெற்ற இந்த சிறப்பு ரீமிக்ஸ் வீடியோவை நீங்கலாம் பார்த்து ரொம்பவே ரசிச்சிருப்பீங்க. உங்கள்ல சில பேருக்கு இது புடிச்சி சந்தோஷமா பார்த்துருப்பீங்க. ஒரு சில பேருக்கு இதுவும் புடிக்காம சின்ன வருத்தத்தோடையும், கோவத்தோடையும் பார்த்துருப்பீங்க. நான் வேற என்னங்க சொல்ல போறேன். ப்ளீஸ் இது உங்களுக்கான பதிவு. உங்களால ஓடிகிட்டிருக்க பதிவு. முயற்சி பண்ணுங்க, நிச்சயமா ஒரு நாளைக்கு உங்களுக்கும் இந்த மொக்கை பிடிக்குங்க. இந்த மாதிரி ரீமிக்ஸ் பதிவுகள் அதுத்த மாதமும் தொடரும், உங்களுக்காக. மீண்டும் அடுத்த ரீமிக்ஸ்ஸோட, வேற நாள்ல, வேற நேரத்துல உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து வடை சாரி விடை பெறுவது உங்கள் (பெப்சி) சத்தியா.
இதனுடைய யு-டியுப் லிங்க் இங்கே.
Posted by Sathiya at 2:04 PM 2 comments
Monday, March 17, 2008
கேடி நம்பர் ஒன்
அய்யய்யோ மன்னிச்சிக்குங்க, நான் சொல்ல வந்தது கேடி நம்பர் ஒன் இல்ல ஜோடி நம்பர் ஒன். சின்ன திரையுலகில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சி ஒரு அஞ்சு வருஷத்துக்கப்புறம் எப்படி இருக்கும்னு நான் ஒரு சின்ன கற்பனை பண்ணி பார்த்தேன். அதை தான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். நான் சொல்ற நிறைய விஷயம் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறவங்களுக்கு தான் புரியும்.
*****************
தொகுப்பாளர்: வெல்கம் பேக் டு தி நாயர் டீ கடை ஜோடி நம்பர் ஒன் சீசன் இருபத்தி ஐந்தின், ஐம்பதாவது எபிசோட். இதுவரை இல்லாத அளவுக்கு இதில் இருபத்தி ஐந்து ஜோடிகள் இடம் பெற்றிருப்பது ஒரு மிகப்பெரிய சாதனை. மொத்தம் நூத்தி ஐம்பது எபிசோட், மற்றும் பத்து ஒயில்ட் கார்டு ரவுண்டுகள் இடம்பெற உள்ளன.
***
தொகுப்பாளர்: போன வாரம் நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் நடந்த அடிதடியை முன்னிட்டு விஜய் டிவி முதல் முறையாக கனல் கண்ணன் மாஸ்டரை ஜோடி நம்பர் 1 ஸ்டண்ட் மாஸ்டரா நியமிச்சி இருக்கு. லெட் ஹஸ் வெல்கம் கனல் கண்ணன் மாஸ்டர் டு தி ஸ்டேஜ்.
***
தொகுப்பாளர்: மிஸ்டர் ஜட்ஜ் இன்னைக்கு நீங்க எங்க ஒக்கார போறீங்க?
ஜட்ஜ்: நான் எங்க ஒக்கார போறேன்னா?
ஒளிப்பதிவாளர்: சார், இந்த தடவை நீங்க என் பக்கத்துல ஒக்காருங்க சார். அப்ப தான் நீங்க பண்ற கொடுமையெல்லாம் சகிச்சு கிட்டு நான் எவ்வளவு பொறுமையா எப்படி கஷ்டப்பட்டு ஒளிப்பதிவு செய்யறேன்னு எல்லாருக்கும் தெரியும்.
***
தொகுப்பாளர்: இந்த ஐன்பதாவது எபிசோட பார்த்து எல்லாரும் நல்லா என்ஜாய் பண்ணி இருப்பீங்க. நீங்க எல்லாரும் ஆவலோடு எதிர் பார்த்துகிட்டிருக்க அடுத்த வார எபிசோட்ல நம்ம ஜோடிகள் இந்த சீசன்ல முதல் முறையா நடனம் ஆட போறாங்க. சோ, மிஸ் பண்ணாம கண்டிப்பா பாருங்க! மீட் யு ஆல் அகைன் இன் நாயர் டீ கடை ஜோடி நம்பர் ஒன், சீசன் 25.
***
தொகுப்பாளர்: லெட் ஹஸ் வெல்கம் ஹவர் ஸ்பெஷல் கெஸ்ட். சொல்லுங்க நீங்க இந்த நிகழ்ச்சியை பத்தி என்ன நினைக்கிறீங்க?
ஸ்பெஷல் ஜட்ஜ்: இது என்கு ரொம்ப புட்ச்ச நிகல்ச்சி. இதை நான் டெய்லி மறக்காம பார்ப்பேன். இதுல எல்லாரும் ரொம்ப நல்லா நடிக்கறாங்க. நான் இதுல ஒரு ஜட்ஜா வர வேண்டியது. பட் என்கு சரியா அல(ழ) வர்லேன்னு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. ஆனா இப்போ ஸ்பெஷல் ஜட்ஜா வந்து இருக்குது ரொம்ப ஹாப்பி.
***
தொகுப்பாளர்: இன்னிக்கி நாயர் டீ கடை ஜோடி நம்பர் ஒன்ல மாட்டு பொங்கல் ஸ்பெஷல். இதுக்காக ஸ்பெஷலா ரெண்டு டெல்லி எருமை, நாலு பசு மாட்ட ஸ்டேஜ்ல கட்டி போட்டுருக்கோம். நம்ம ஜோடிகள் எல்லாம் ரெண்டு குழுவா பிரிஞ்சி யார் நல்லா பாட்டு பாடிக்கிட்டே நிறைய பால் கரக்கறாங்கனு போட்டி போட போறாங்க. மக்கள் நாயகன் ராமராஜன் இதுக்கு ஸ்பெஷல் ஜட்ஜா வந்துருக்காரு. அவரு பால் கறக்கரத பத்தி நம்ம ஜோடிகளுக்கு நிறைய டிப்ஸ் கொடுத்து இருக்காரு. சரி வாங்க நிகழ்ச்சிக்கு போவோம்.
***
தொகுப்பாளர்: போன வாரம் எழுந்து மேடைக்கு வந்த போது ஜோடிகள் அவரு கால்ல விழலைன்னு கோவிச்சுகிட்டு போன ஜட்ஜ நாங்க ஏர்போர்ட் வரைக்கும் போயி சமாதான பதுத்தி, ஏர்போர்ட்லேயே நம்ம ஜோடிகள் எல்லாம் டான்ஸ் ஆடி அத பார்க்க முடியாம ஏர்போர்ட் மேனேஜர் ஓடி வந்து ஜட்ஜ் கால்ல விழுந்து கேட்டு, ஒரு வழியா சமாளிச்சு அவர கூட்டிட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. அதை பத்தி இப்போ ஒரு சின்ன ரிகாப் பார்ப்போம்.
***
தொகுப்பாளர்: ஒவ்வொரு வாரமும் ஒரு ஜோடி தன் ஜோடியோட சண்டை போட்டுக்கிட்டு வேற ஜோடி கூட்டிட்டு வந்து ஆடுறதால, இருபது வாரம் ஆகியும் இன்னும் ஒருத்தர் கூட எளிமினேட் ஆகல. அதனால இனிமேல் யாரும் தன் ஜோடிய மாத்த கூடாதுன்னு நம்ம ஜட்ஜ்ஸ் கெஞ்சி கேட்டுகிட்டிருக்காங்க.
***
தொகுப்பாளர்: இந்த வார ரியாலிட்டி ஷோல, முதல்ல நம்ம ஜோடி குப்புசாமி வழக்கமா பீடா வாங்குற கடையோட பீடா கடைக்காரர் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா?
பீடா கடைக்காரர்: அந்த புள்ள பீடா வாங்கி போடறத பார்க்கும் போதே அது ஒரு நல்ல டான்சரா வரும்னு எனக்கு தெரியும்.....ஏங்க, கொஞ்ச இந்த பக்கம் வாங்க, நான் பீடா போட்டு துப்பர எடத்துல நிக்கிறீங்க.
தொகுப்பாளர்: அய்யய்யோ, சாரிங்க. சரி இப்போ இங்க இருக்க பீடா கடைக்கரங்க எல்லாம் சேர்ந்து ஒரு சின்ன ஷோ பண்ண போறாங்க. அதுக்கு ஜட்ஜ் நம்ம ஜோடி குப்புசாமி.
***
தொகுப்பாளர்: விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன்னுக்கு சின்ன திரையில இருந்து யாருமே ஆட வராததால பொது மக்கள் நேர்முக தேர்வு நடந்துக்கிட்டுருக்கு. வாங்க போயி யார் கிட்டயாவது மொக்கையை போடுவோம். ஹலோ, உங்க பேர் என்ன?
தேர்வாளர்: என் பேர் ரவி காந்த்.
தொகுப்பாளர்: எப்படி இருக்கு இந்த அனுபவம் உங்களுக்கு?
தேர்வாளர்: என்னங்க இது. ரெண்டு நாளா வரிசைல நிக்கறேன். இன்னும் இரண்டு நாள் ஆகும்னு சொல்றாங்க. திருப்பதிக்கு கூட நான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணது கிடையாது. வெயிட் பண்ணிகிட்டிருக்கவங்க எல்லாம் அழறதுக்கு பயிற்சி பண்ணி பார்த்து கிட்டு இருக்காங்க. ஏதோ எழவு வீட்டுக்கு வந்துருக்கற மாதிரி இருக்குது எனக்கு.
தொகுப்பாளர்: சரி நீங்க எப்படி பயிற்சி பண்ணி இருக்கீங்க?
தேர்வாளர்: ஒரு வாரமா ஒக்காந்து எல்லா மெகா சீரியலையும் பார்த்தேன். இப்போ நீங்க ஹும்னு சொன்னவுடனேயே என்னால அழ முடியும்.
***
ஜட்ஜ்: என்ன, நீல நிறத்துல டிரஸ் பண்ணிக்கிட்டு வந்து இருக்கீங்க? நீங்க நினைவுகளா? ஹா ஹா ஹா!
ஜோடி: சார், போன வாரம் வெள்ளை நிறத்துல போட்டோம் உடனே தேவதைகளானு கேட்டீங்க? இப்போ இப்படி கேக்கறீங்க. நாங்களே நீங்க எடுத்த அந்த படத்த பத்தி மறக்கனும்னு நினைக்கிறோம். நீங்க விடாம நினைவு படுத்தி கிட்டே இருக்கீங்களே சார். இது நினைவுகள் இல்ல சார் கொடுமைகள்.
***
ஜட்ஜ்: நீங்க ரெண்டு பெரும் நல்லா ஆடி இருந்தீங்க. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி மூணுமே இருந்தது. ஆனா நீங்க செலக்ட் பண்ண பாட்ட பாடுனவரோட வாய்ஸ் சரி இல்ல. அதனால இந்த வாரம் நான் உங்களுக்கு கொடுக்குற மார்க் -3.
ஜோடி: எதுக்கு சார் -3? நாங்க ரெண்டு பேரும் தான் நல்ல ஆடுனோமே சார்?
ஜட்ஜ்: இப்போ பாருங்க. ஒரு வண்டி மேட்டு மேல ஏறும் போது ஆக்ஸ்லேடர் வொர்க் ஆகலைன்னா வண்டி ஊரு போயி சேராது. பின்னால தான் போகும்.
ஜோடி: பட் நாங்க ஊருக்கே போகலையே சார். டான்ஸ் ஆட தான வந்து இருக்கோம். நாங்க ஆடுனதுக்கு அட்லீஸ்ட் நீங்க 0 மார்க் ஆவது கண்டிப்பா கொடுக்கணும் சார்.
***
ஜோடி: எங்களுக்கு இந்த ஜோடி நம்பர் 1ல வந்து ஆடி பரிசு வாங்கனும்னு எல்லாம் ஒண்ணும் இல்ல சார். எங்க வீட்டு ஜிம்மி எப்ப ஜோடி நம்பர் ஒன் போட்டாலும் வந்து டிவி முன்னாடி நின்னுகிட்டு முதல்ல உங்கள பார்த்து குறைக்கும் அப்புறம் எங்கள பார்த்து குறைக்கும். அப்பவே அது எங்கள உங்க முன்னாடி ஆடி உங்க கிட்ட இருந்து நல்ல பேர் வாங்கனும்னு சொல்றது எங்களுக்கு புரிஞ்சிது. இப்போ ஜிம்மி எங்களோட இல்ல சார்.
ஜட்ஜ்: எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. உங்களுக்கு என்னோட மார்க் 10. நான் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. நான் நெனச்சத செய்வேன். சரி உங்க ஜிம்மிக்கு என்ன ஆச்சு?
ஜோடி: பிரசவத்துக்கு அவங்க மாமியார் வீட்டுக்கு போயிருக்கு சார்.
***
இயக்குனர்: பேசிகிட்டிருக்கும் போதே நீங்க கோவம் வந்து உங்க ஜோடிய பளார்னு ஒரு அரை விடறீங்க.
பெண் ஜோடி: என்ன சார். அவர் என்ன அரஞ்சா என் இமேஜ் என்ன ஆகும் சார்?
இயக்குனர்: கவலை படாதீங்க. நீங்க அடுத்த எபிசோட்ல பத்து பேரோட போயி அவர பின்னி பிடல் எடுக்கறீங்க.
பெண் ஜோடி: அப்ப ஓகே சார்.
***
விஜய் டிவி விளம்பரம்:
உங்களுக்கு நல்லா கை தட்ட வருமா? யாரவது அழுவதை பார்த்தா, உடனே அழ வருமா? சும்மா ஒக்கார்ந்து வேடிக்கை பார்க்க உங்களுக்கு ஐந்நூறு ரூபாய் பணமும், சிக்கன் பிரியாணியும் வேணுமா? உடனே விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் நேயர்கள் நேர்முக தேர்வுக்கு விண்ணப்பியுங்கள்.
Posted by Sathiya at 8:42 AM 2 comments
Labels: Comedy, சின்னத்திரை, நகைச்சுவை
Friday, February 22, 2008
துணுக்கு மூட்டை
விஜயகாந்த் தனது கட்சிக்காக புதுசா டிவி சானல் தொடங்க போறாராம். என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சிகிட்டிருக்காறாம். அதுக்கு எதுக்கு ரோசனை? 'கேப்டன்' டிவின்னு ஆரமிச்சிட வேண்டியதுதானே? இதுதவிர முழுக்க முழுக்க அரசியல்மயமான பத்திரிக்கையையும் அவர் தொடாங்கவிருக்கிறாராம். அப்போ காமெடி பத்திரிக்கையா? ஹையா;)
*****
நம்ம அமீர் எதுத்த பருத்தி வீரன் படத்தோட புகழ் உலகம் முழுசா பரவுதுங்க. ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் 58-வது சர்வதேச படவிழாவில் திரையிட இந்தியாவில் இருந்து பருத்தி வீரன் படமும் ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படமும் தேர்வாகி இருக்காம். பருத்தி வீரன் சரி, அது எப்படி ஓம் சாந்தி ஓம் படத்த தேர்வு பண்ணாங்க? அது முழுக்க முழுக்க மசாலா படம். தாரே சமீன் பர் மாதிரி நல்ல படம் எல்லாம் இருக்கும் போது இதை போய் தேர்வு பண்ணி இருக்காங்க? அடக் கடவுளே!
என் அலுவலகத்துல கூட வேலை பார்க்குற நண்பர் ஒருத்தர் விழுந்து விழுந்து வேலை பார்ப்பார். எப்போ அவருக்கு மீட்டிங் ரிக்குவெஸ்ட் போடலாம்னு பார்த்தாலும் அவர் காலண்டர் பிசியாவே இருக்கும். பயங்கரமா வேலை செய்யறார் போலன்னு நாங்களும் நெனசிப்போம். ஒரு தடவை அவர் அவரது கணினியை லாக் பண்ணாம எங்கேயோ போயிருந்தார். அப்போன்னு பார்த்து ஒரு மீட்டிங் ரிமைன்டர் கிளிங்னு சத்ததோட அவர் கணினியில இருந்து வந்தது. நானும் ஏதாச்சும் முக்கியமான மீட்டிங் இருக்க போகுதுன்னு உடனே எழுந்து போயி பார்த்தா, இதாங்க அந்த மீட்டிங் ரிக்குவெஸ்ட், "India Times + Rediff Newspaper". இந்த கொடுமைய எங்கிட்டு போயி சொல்ல?
Posted by Sathiya at 8:05 PM 2 comments
Labels: Comedy, நகைச்சுவை, நாட்டு நடப்பு
Sunday, February 3, 2008
விஜயகாந்த்-மைக்கேல் ஜாக்சன் ரீமிக்ஸ்!
இது என்னோட இரண்டாவது ரீமிக்ஸ். இதுல கேப்டன் விஜயகாந்த் மைக்கேல் ஜாக்சனின் Dangerous பாட்டுக்கு ஆடியிருக்கார். பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
இதனுடைய youtube லிங்க்: http://www.youtube.com/watch?v=Gggr-H7eyLM
