Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Saturday, March 21, 2009

என்ன அழகு எத்தனை அழகு!

அனைவருக்கும் வணக்கம்! ஒரு நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் போடும் பதிவு இது. முதல் பதிவே இந்த மாதிரி போடனுமானு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்'னு பெரியவங்க சொல்லிவிட்டு போயிருக்கறதால தவிர்க்க முடியல. அது மட்டும் இல்லாம என்னை மாதிரியே இவரும் நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் வந்திருக்காரு.

இன்னமும் இளமை மாறாமல் எப்படி அம்சமா இருக்காருன்னு பாருங்க. இந்த படங்களை பார்த்தாலே தெரியுது படம் சூப்பர் ஹிட் ஆயிடும்னு. அதனால எல்லாரும் இப்போவே டிக்கெட் புக் பண்ணி வச்சுக்குங்க.

இந்த படங்களை நான் மும்மூரமா வேலை செஞ்சிட்டிருந்த போது ஒருத்தன் ஈமெயில் பண்ணினான். பார்த்ததும் அப்படியே ஆனந்த கண்ணீர் வந்திருச்சி. சரின்னு அப்படியே எனக்கு தெரிஞ்சவங்களுக்கெல்லாம் அனுப்பி விட்டேன். பதிலுக்கு அவங்க கோவத்துல அனுப்பின வார்த்தைகளை பார்த்ததும் இரத்த கண்ணீரே வந்திருச்சிங்க:(




Saturday, November 1, 2008

இவங்க இன்னும் திருந்தலையா?

ஆபீஸ்ல ஆணி புடுங்கற வேலை ஜாஸ்தியா போச்சு! அதான் வலைப்பூ பக்கம் வர முடியல. தினமும் இந்த பேங்க் ஊத்திகிச்சு, அந்த பேங்க் ஊத்திகிச்சுன்னு சொல்லி பீதிய வேற கிளப்பறாங்க. அடுத்த வருஷம் இதை விட மோசமா இருக்கும்னு வேற சொல்றாங்க. இந்த மாதிரி நிலமையில ஓபாமா வந்து என்ன செய்ய போறாரோ?


இப்போவெல்லாம் டிவி கூட அவ்வளவோ பார்க்கறது இல்ல. அப்படியே பார்த்தாலும் விஜய் டிவி தான். சரி, சன் டிவி பார்த்து ரொம்ப நாள் ஆச்சே, எப்படி போயிட்டிருக்குன்னு பார்ப்போம்னு ஒரு நாள் சும்மா சேனலை மாத்தி பார்த்தேன். ஏதோ ஒரு மெகா சீரியல் போயிட்டிருந்துது. ஒரு அம்மா கீழ ஒக்காந்துட்டு அழுதுகிட்டு இருந்தாங்க. அவங்க பையன் அவங்களை சாப்பிட கூப்பிடறான். அதுக்கு அந்த அம்மா, "அக்கா ஜெயில்ல இருக்கும் போது எப்படிடா சாப்பிட முடியும்?னு" சொன்னாங்களோ இல்லையோ, வுடுங்கடா சாமின்னு சேனலை மாத்திட்டேன்!


அடப்பாவீங்களா....இன்னும் இந்த மாதிரி தான் ஓட்டிட்டு இருக்கீங்களா? கீழ இருக்க இந்த வீடியோ காட்சியை பாருங்க. இதுல பேசிட்டு இருக்கறது ஒரு பாட்டியும் அவங்க பேத்தியும். இரண்டு பேறும் கணவனை இழந்தவர்கள். ஆனா இரண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியுதா? இதுவும் இன்னும் மாறலைங்க;)


Saturday, July 26, 2008

1992ல் ஒரு நாள்

அம்மா காலைல ஏழு மணிக்கு சரியா எழுப்பிடுங்கனு சொல்லிட்டு தூங்க சென்றான் ராமு. அவன் சென்ற அடுத்த நிமிடம், அவன் சொன்னதை டிவி பார்த்து கொண்டே கேட்டு கொண்டிருந்த அவனது அண்ணன் சோமு தன் அம்மாவிடம் ஓடி வந்து, "அம்மா என்னையும் ஏழு மணிக்கு எழுப்பிடுங்க" என்று சொல்லிவிட்டு தூங்க சென்றான்.

மறுநாள் காலை தனது உள்ளுணர்வு எழுப்பி விட 6.45 மணிக்கே எழுந்து விட்டான் சோமு. பின்னர் அம்மா வந்து எழுப்பியதும் எழுந்த ராமு, சோமு ஏற்கனவே எழுந்து விட்டதை பார்த்து கடுப்பாகி போனான். இவர்களை காம்பிளான் குடிப்பதற்காக பல் துலக்க சொல்லி அம்மா எவ்வளோ சொல்லியும் கேட்காமல் மிகவும் பரபரப்பாக அங்கும் இங்கும் உலாத்தி கொண்டிருந்தார்கள்.

கடிகாரத்தையும் வீட்டு வாசலையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்ல செல்ல அவர்களின் முகத்தில் தெரியும் பரபரப்பும் அதிகரித்து கொண்டே இருந்தது.

ராமு சற்று வேகமாக இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தான். அடிக்கடி தனது இறந்து கால்களையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பின்னி கொண்டு நின்றிருந்தான். ஆத்திரத்தை அடக்க முடியும் ஆனால் அவசரத்தை(புரியுதில்ல?) அடக்க முடியாதுன்னு சொல்வாங்க இல்ல, ஆனால் ராமு அவனது இந்த உத்தியின் மூலம் அதையும் அடக்கி கொண்டு நின்றிருந்தான்.

சிறிது நேரம் கழித்து வாசலில் சைக்கிள் மணியோசை அடிக்கும் சப்தம் கேட்டு இருவரும் விழுந்ததித்து கொண்டு கேட்டை நோக்கி ஓடுகிறார்கள். முட்டி மோதிக்கொண்டு, ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கொண்டு ஓடி சென்றவர்கள் அதே வேகத்தில் உள்ளே ஓடி வருகிறார்கள். முதலில் வந்த சோமு(பெரியவன் ஆயிற்றே) ஒரு ரூமுக்குள் சென்று கதவை தாளிட்டு கொள்கிறான்.

தனக்கிருந்த முழு கடுப்பில் அழுது கொண்டே அம்மாவிடம் சென்று முறையிட்டான் ராமு, "அம்மா! பாரும்மா சிறுவர் மலரை சோமு எடுத்துகிட்டு ரூமுக்குள்ள போயிட்டாமா. தர சொல்லுங்கம்மா!"

(பி.கு. இதுல வர அந்த சோமு நான்தாங்க. இந்த சிறுவர் மலருக்காகவே எங்க அப்பா கிட்ட கேட்டு, அந்த ஒரு நாள் மட்டும் தின மலர் வாங்குவோம். அதுக்கு அப்படி ஒரு சண்டை போடுவோம்;)

Monday, July 21, 2008

ஒரு சமூக சேவகரின் டைரி குறிப்பில்...

ஒரு நல்ல கிரிக்கெட் பிளேயரின் திறமையும் சரி, ஒரு நல்ல நடிகர் அல்லது பாடகரின் திறமையும் சரி, அவர்களின் சிறு வயதிலேயே வெளிப்படும். அது போல் ஊருக்கு உழைக்கும் ஒரு சமூக சேவகரின் சமூக சேவையும் அவரது சிறு வயதில் இருந்தே தொடங்கிவிடும். அப்படி பட்ட ஒரு சமூக சேவகரின் சிறு வயதில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வினை பற்றி இப்போது பார்ப்போம்.

இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சிங்கார சென்னையில் தான். இவரது ஊருக்கு உழைக்கும் பணி சிறு வயதில் இருந்தே தொடங்கிற்று. இவர் வசித்து வந்த தெருவில் யாருக்கு என்ன வேலை ஆக வேண்டி இருந்தாலும் இவரை கூப்பிட்டு தான் செய்ய சொல்லுவார்கள்.

காய்கறி அங்காடிக்கு சென்று கை கறிகள் வாங்க வேண்டுமா, மாவு மில்லுக்கு சென்று மாவு அரைத்து கொண்டு வரவேண்டுமா, ரேஷன் கடைக்கு சென்று பொருகள் வாங்க வேண்டுமா, இவை அனைத்திற்கும் அத்தெருவில் இருப்பவர்களின் நினைவிற்கு முதலில் வருபவர் இவர் தான். தான் விளையாடிக்கொண்டிருந்தாலும் அவர்கள் பேச்சை தட்ட முடியாமல் விளையாட்டை நிறுத்தி விட்டு சென்று அந்த வேலைகளை முடிப்பார். அவர்கள் புகழ்ந்து கூறும் இரு வார்த்தைகளே இவருக்கு டானிக். தன் அம்மாவே எத்தனையோ முறை கண்டித்தும் இவரது இந்த பணி தொடர்ந்து கொண்டிருந்தது.

இவர் இவ்வளவு உதவிகள் செய்தும், மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்த உதவி இது தான்:

ஒரு நாள் இவரது வீட்டிற்கு பக்கத்து தெருவில் உள்ள நண்பர் ஒருவர் அனுப்பிய ஆள், இவர் வீட்டிற்கு வந்து இவரது அம்மாவிடம் நூறு ரூபாய் கொடுத்தால் ரேஷன் கடையில் இருந்து அட்டை இல்லாமல் சர்க்கரையும், மண்ணெண்ணையும் வாங்கி தருவதாக சொன்னார். அவர் அந்த ரேஷன் கடையில் வேலை பார்ப்பவர் ஒருவரின் சொந்தக்காரர் என்பதால் அது சாத்தியம் என்றார். அப்பொழுதெல்லாம் ரேஷன் கடையில் சர்க்கரையும், மண்ணெண்ணையும் தான் ரொம்ப டிமான்ட். எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி வச்சுக்குவாங்க.

சரி என்று இவரது அம்மாவும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அந்த நபரிடம் நூறு ரூபாய் பணம் கொடுத்து, ஒரு மஞ்சா பை மற்றும் கிருஷ்ணாயில் கேனுடன் தன் மகனையும் உடன் அனுப்பி வைத்தார். சிறிது தூரம் சென்றதும் அந்த நபர் அச்சிறுவனிடம் வேறு யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் கூட அவர்களுக்கும் வாங்கி கொடுக்கலாம் என்றார். நம்ம ஆள் தான் ஊருக்கு உழைப்பவர் ஆயிற்றே. அக்கம் பக்கத்தில் இருக்கும் தெரிந்தவர்களின் வீட்டிற்கு எல்லாம் அழைத்து சென்று அனைவரிடமும் பணமும், கிருஷ்ணாயில் கேனும், பையும் வாங்கி கொண்டார்கள். அனைவருக்கும் உதவி செய்வதை நினைத்து பெருமையுடன் ரேஷன் கடையை நோக்கி நடை போட்டார்.

ரேஷன் கடை நெருங்கியதும், அந்த நபர் இவரிடம் உள்ள கேன் மற்றும் பைகளை வாங்கி கொண்டு இவரை வீட்டிற்கு செல்லுமாறு கூறினான். இவர் உடன் வந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்பதால் அவ்வாறு கூறினான். அனைவருக்கும் உதவிய மன நிறைவில் இவர் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டார்.

விளையாடி முடித்து ஆறு மணிக்கு மேல் வீட்டிற்கு கிளம்பினார். வீட்டில் இன்று தனக்கு தனி மரியாதை கிடைக்கும் என்ற பெருமிதத்துடன் சென்றார். அப்பாவும், அம்மாவும் இவருக்காக கேட்டின் அருகிலேயே காத்து கொண்டிருந்தனர். இவரை கண்டதும், இவரின் அப்பா "எங்கடா போன இவ்வளோ நேரமா?" என்று கேட்டார். இவரும் கிரிக்கெட் விளையாடி விட்டு வருவதாக சொன்னார். பின் உள்ளே வாடா என்று சொல்லி விட்டு போன தந்தையை பின் தொடர்ந்தார்.

இவர் உதவி செய்த யாரோ ஒருவர் இவரை பார்க்க உள்ளே இருக்கார் போல என்று ஆவலாக சென்றார். உள்ளே சென்று தன் தந்தையிடம் அறை மணி நேரம் ரிவிட் வாங்கிய பின் தான் இவருக்கு அந்த ரேஷன் கடை நபர் ஒரு ஏமாத்து பேர் வழி என்று தெரிந்தது. அம்பையே இந்த வாங்கு வாங்குறாரே அப்பா, எய்த வில்லை என்னா வாங்கு வாங்கி இருப்பார் என்று பரிதாபமாக பக்கத்தில் நின்று கொண்டிருந்த தன் அம்மாவை நினைத்து மனதை தேற்றி கொண்டார்.

இதுக்கப்புறமாவது இவரிடம் வேலை வாங்குவதை நிறுத்தினார்களா? இல்லை. இவரால் ஏமாந்து போனதால் அதை சரி கட்டுவது போல் இன்னும் அதிகமாக வேலை வாங்க ஆரமித்து விட்டார்கள். இப்படி தன் சிறு வயதிலேயே தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்தி கொண்ட அந்த தியாகி வேறு யாரும் இல்லை, அடியேன் தாங்க!

பி.கு. மொக்கைக்கு மன்னிக்கவும்;)

Tuesday, July 1, 2008

அரசியல் பயிற்சி பள்ளி

சினிமா, கணினி, பேஷன் என எல்லா துறைக்கும் தனி தனியா பல பயிற்சி பள்ளிகள் இருக்கும் போது, இந்த அரசியலுக்கு மட்டும் ஏன் ஒரு பயிற்சி பள்ளி கிடையாது? ஒரு வேலை நம்ம ஊருல எல்லா விஷயத்துலயும் அரசியல கொண்டாந்து நுழைக்கிறதால அதுக்கு தனியா பயிற்சி வேண்டாம்னு நெனசிட்டாங்களோ?

அப்படியே இந்த மாதிரி யாராச்சும் ஒரு அரசியல் பயிற்சி பள்ளியை ஆரமிசாங்கனா அதுல என்ன சொல்லி தருவாய்ங்கன்னு வெட்டியா யோசிச்சு பார்த்தேன். அந்த கற்பனை தாங்க இந்த பதிவு.

இந்த பள்ளியில் சேர குறைந்த பட்சம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அவசியம்:

1. கண்டிப்பாக எட்டாம் வகுப்புக்கு மேல் பதித்திருக்க கூடாது. அதற்கு மேல் படித்திருப்போர் அரசியல் வாதிகளின் கார் டிரைவர், எடுபுடி போன்ற வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டால் தபால் மூலம் தெரிவிக்கப்படும்.

2. குறைந்த பட்சம் ஒரு பத்து கெட்ட வார்த்தைகளாவது தெரிந்திருக்க வேண்டும். இது பெண்களுக்கும் பொருந்தும்.

3. இளைஞர் அணியில் சேர பயிற்சி பெற விரும்புவோர் குறைந்த பட்சம் ஐன்பது வயதை கடந்தவராக இருக்க வேண்டும்.

4. அனைவரும் கண்டிப்பாக ஏதாவது ஜாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.

5. மேலே உள்ள அனைத்தும் சரியாக இருந்தால், ஒரு நேர்காணல் மூலம் தேர்ந்தேடுக்கப்படுவர். ஏதாவது கிரிமினல் வழக்குகளில் சம்பந்தம் உள்ளோர் அந்த F.I.R காபியுடன் வந்தால் நேர்காணல் இல்லாமலேயே சேர்த்து கொள்ளப்படுவர்.

சரி இப்போ இந்த பள்ளியில் என்னன்ன பயிற்சி தருவோம்னு பார்ப்போம்.

1. அரசியலில் சேர விரும்புவோருக்கு வெ.மா.சு.சொ. அறவே இருக்க கூடாது. (அதாவது வெற்றியின்மையால் சோர்வடைவது, மாநாட்டுக்கு லேட்டா வருவது, சுங்க வரி ஏய்ப்பு, சொத்து குவிப்பு...அப்பாடா!). இதற்காக தீவிர பயிற்சி அளிக்கப்படும். அனைவருக்கும் சாப்பாட்டில் உப்பையும், காரத்தையும் குறைத்து விடுவோம்.

2. தினமும் ஒரு பத்து பேரை சுற்றி நிக்க வைத்து தூய சென்னை பாஷையில் எவ்வளோ முடியுமோ அவ்வளோ அசிங்கமா திட்ட விடுவோம். ஆனா கொஞ்சம் கூட அசராமல் சிரித்து கொண்டே இருக்க வேண்டும். "மனதை திருடிவிட்டாய்" படத்தில் பிரபு தேவா திட்டு வாங்கிட்டு சிரிச்சி கிட்டே இருப்பாரே அந்த மாதிரி. மக்கள் எல்லாரும் 'இவன் எவ்வளோ திட்டுனாலும் வாங்கிக்கராண்டா, இவன் ரொம்ப நல்லவண்டான்னு' சொல்லணும். இதான் இந்த பயிற்சியினுடைய குறிக்கோள்.

3. அனைவரையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவரை நியமித்து, இருவருக்கும் இடையே சண்டை மூட்டி விடுவோம். அவர்கள் இடையே கைகலப்பு உண்டாகும் அளவுக்கு சூழ்நிலையை உருவாக்குவோம். பிறகு ஒரு பிரிவில் இருந்து யாராச்சும் வேறு ஒருத்தரை தேர்ந்தெடுத்து மூன்றாவது பிரிவை உண்டாக்குவோம். இப்போ அந்த முதல் இரண்டு பிரிவின் தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து இந்த மூன்றாவது அணியினை எதிர்க்க வேண்டும். இப்படியே பயிற்சி முடியிற வரை தினமும் போயிட்டிருக்கும். கடைசியா நிலைச்சு நிக்கிற ரெண்டு அணியின் தலைவர்கள் தான் திறமையான அரசியல்வாதிகள்னு ஒரு சிறப்பு பரிசு கொடுப்போம். ஸ்ஸப்பா!

4. தினமும் ஒரு பட்டிமன்றம் நடத்துவோம். அதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு தலைப்பை கொடுப்போம். அவர்கள் அந்த தலைப்பை வைத்து இன்னைக்கு ஒன்று பேசணும், நாளைக்கு ஒன்று பேசணும். (இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா!)

5. அனைவருக்கும் நடிப்பு பயிற்சி வழங்கப்படும். இதனால் இவர்கள் சினிமாவுக்குள் நுழைய வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். சினிமாவில் நடித்து விட்டால் ஒன்னாவது வாய்ப்பாடல் தெரியாவிட்டால் கூட அரசியலில் நுழைந்து விடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. ராமநாராயணன் படத்தில் நடித்த குரங்கு, நாய், யானை, பாம்பு இவைகள் வந்து தேர்தல்ல நின்னா கூட நம்ம மக்கள் ஜெயிக்க வச்சுடுவாங்க. அவ்வளோ நல்லவங்க!

6. அரசியல் வாதீங்களுக்கு கெட்ட வார்த்தை தெரிஞ்சிருக்கறது எவ்வளோ முக்கியம்னு உங்களுக்கே தெரியும். தெரியலைன்னா ஒரு பொது கூட்டத்துக்கு போய் பாருங்க. (ஒரு தடவை அப்படிதான் இரவு ஒரு பத்து மணிக்கு நான் வேலை விட்டு வீட்டுக்கு திரும்பும் போது ஒரு பெண் வேட்பாளர் பேசறதை கேட்டு என் காதுல 'சேம் பிளட்'). ஆகையால் அனைவருக்கும் திரு. ஆடு வெட்டி ஆறுமுகம் எழுதிய "கம்ப்ளீட் கெட்ட வார்த்தை அகராதி" மற்றும் "ஒரே வாரத்தில் பத்தாயிரம் கெட்ட வார்த்தைகள்" என்னும் நூல்களை கொடுத்து படிக்க செய்வோம்.

7. அடுத்து சட்டசபை பயிற்சி. இதில் கையில் கிடைக்கும் பொருளை எடுத்து எப்படி சரியாக குறி வைத்து எதிரியை தாக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி தருகிறோம். சீனாவில் இருந்து ஜெட் லீயிடம் பணிபுரிந்த ஒருவரை இதற்கான பயிற்சி அளிக்க இங்கு வரவழைக்க இருக்கிறோம். இதற்காக பல வகையான நாற்காலிகளை வரவழைத்திருக்கிறோம்.

8. பிறகு சட்ட சபையில் இருந்து எப்படி எல்லாம் நொண்டி சாக்கு சொல்லி விட்டு வெளிநடப்பு செய்யலாம் என்பதற்கான பிரத்யேக பயிற்சி அளிக்கப்படும். இதற்காக ஒரு மூத்த அரசியல் வாதியை நியமித்திருக்கிறோம். இவர் இதுவரை கலந்து கொண்ட எட்டு சட்ட சபை கூட்டங்களில், ஏழு தடவை வெளி நடப்பு செய்திருக்கிறாராம். (அந்த ஒரு தடவை, அசதியாக இருந்ததால் கண் அயர்ந்து விட்டாராம்).

9. அனைவரும் தினமும் காலில்விழாசனம் என்ற ஆசனத்தை செய்ய வேண்டும். இது பின்னாளில் அரசியலில் இறங்கியவுடன் பெரிதும் பயன்படும். இந்த ஆசனத்தை இருபது வருடங்களாக செய்து வரும் ஒரு எதிர் கட்சி தலைவரை இதற்கான பயிற்சி அளிக்க வரவழைக்க இருக்கிறோம். இது பிரம்மாஸ்திரத்தை விட வலிமையானதாம். இந்த ஒன்னை மட்டும் கற்று கொண்டாலே அரசியலில் சாதித்து விடலாம் என்கிறார்கள்.

10. விடுமுறை நாட்களில் பல ஊர்களுக்கு சுற்றுலா அழைத்து செல்வோம். அப்போது எப்படி ஜாதி கலவரம் செய்ய வேண்டும் என்பதை நேரில் செய்து காண்பிப்போம். இதற்காக நாலு ஜாதி கட்சி தலைவர்கள் உடன் வருவார்கள்.

11. அடுத்து ஒரு சின்ன விஷயத்தை எப்படி ஊதி பெருசாக்க வேண்டும், ஒரு பெரிய விஷயத்தை எப்படி தூசி மாதிரி ஊதி தள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்படும். இதற்காக சட்ட நுணுக்கங்கள் தெரிந்த சில திறமையான வக்கீல்களை நாங்கள் நியமித்திருக்கிறோம். திரு சு. சுவாமி அவர்கள் எப்படி சம்பந்தமே இல்லாம ஒரு அறிக்கையை விட்டு பிரபலமாவது என்பதை இங்கு வந்து மாணவர்களுக்கு விளக்குவார்.

12. கடைசியாக கட்சி நடத்துவதே தனது லட்சியமாக கொண்டிருக்கும் அந்த தாடி நடிகர் மாணவர்களுக்காக ஒரு சிறப்புரை ஆற்றுவார். இதை கேட்ட பின் மாணவர்களுக்கு (இவர் எல்லாம் கட்சி நடத்தும் போது நாம் ஏன் அரசியலில் இறங்க கூடாது என்று) ஒரு தன்னம்பிக்கை உருவாகும் என்று நம்புகிறோம்.

இன்னும் எதுக்கு காத்துகிட்டு இருக்கீங்க? உடனே கிளம்பி வாங்க! விண்ணப்பத்தாளை வாங்கிட்டு போங்க!

Wednesday, May 7, 2008

பூனை குசும்பு!

சில பேரை திட்டும் போது பூனை குசும்பன்னு சொல்லி திட்டுவாங்களே கேள்வி பட்டிருக்கீங்களா? அப்படீன்னா என்னன்னு தெரியுமா? தெரியலைன்னா இந்த வீடியோ காட்சியை பாருங்கள். உங்களுக்கே புரியும்;)

Wednesday, April 23, 2008

இரண்டக்க இரண்டக்க...

வவாசங்க இரண்டாவது ஆண்டு விழா போட்டியில கலந்துக்க இரண்டு வாரமா 'இரண்டு மனம் வேண்டும்'னு பாடிகிட்டே யோசிச்சு யோசிச்சு ரொம்ப கொழம்பி போயிட்டேன். கொறஞ்சது இரண்டு பதிவாவது போடனும்னு பார்த்தேன். இதுக்கு மேல யோசிச்சா தலையில இரண்டு முடிதான் இருக்கும். சரி இப்போ இரண்டு நிமிஷம் என் மொக்கைய படிங்க.

சரியா இரண்டு மணிக்கு ரங்கா தன் 2G ரெயின்போ காலனி வீட்டில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருக்க மகளிர் கல்லூரியை நோக்கி கிளம்பினான். இரண்டு முப்பதுக்கு மகளிர் கல்லூரி விடும் நேரம். அதனால் கல்லூரி விடும் நேரத்தில் அங்கு போய் நின்று இரண்டு சூப்பர் பிகரையாவது பார்த்து லுக் விட வில்லை என்றால் அவனுக்கு இரவு இரண்டு மணியானாலும் தூக்கம் வராது. இரண்டும் கெட்டாம் வயசு பாருங்க. இவனுக்கு கல்லூரி விடுமுறை விட்டு இரண்டு வாரம் ஆவதால், இந்த இரண்டு வாரமாக இதே வேலை தான் இவனுக்கு.

இரண்டு பத்துக்கு அந்த கல்லூரியின் முன் ஆஜராகி விட்டான் ரங்கா. இன்னும் சரியாக இரண்டு பத்து நிமிடம் (அதாங்க இருபது நிமிடம்;) அவன் காத்திருக்க வேண்டும். அதுவரை என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு கடலை உருண்டையை வாங்கி மென்று கொண்டிருந்தான். கடலை உருண்டை என்றால் அவனுக்கு இரண்டு வயசுல (அட்ரா அட்ரா;) இருந்தே பிடிக்கும்.

சரியாக மணி இரண்டு முப்பது. கல்லூரியில் இரண்டு தடவை மணி அடித்த ஓசை நன்றாக கேட்டது. ரங்கா பக்கத்தில் இருந்த ஒரு இரண்டு சக்கர வாகனத்தின் கண்ணாடியில் தன் தலை முடியை சரி செய்து கொண்டு ஆவலாக கல்லூரி வாசலையே வழி மேல் தன் இரண்டு விழிகளையும் வைத்து காத்து கொண்டிருந்தான்.

இரண்டு, மூன்று, நான்கு என்று கும்பல் கும்பலாக மாணவிகள் வெளியில் வர தொடங்கினார். வழக்கம் போல ரங்காவை ஒருவரும் கண்டு கொள்ளவே இல்லை. ரங்காவும் சற்றும் சளைக்காமல் இரண்டில் ஒன்று பார்த்து விடுவதென நின்று கொண்டிருந்தான்.

பெரும்பாலான மாணவிகள் சென்று விட்டனர். சிறு சிறு இடைவெளி விட்டு ஒன்று, இரண்டு பேராக வந்துக்கொண்டிருந்தனர். ரங்கன் இன்னும் மனம் தளரவில்லை. அப்போது கல்லூரி வாயிலில் இருந்து சற்று தொலைவில் இரட்டை ஜடை போட்டுக்கொண்டு இரண்டு அழகான மாணவிகள் வந்து கொண்டிருப்பதை ரங்கன் கவனித்தான். அவர்களையே சற்று உத்து நோக்கலானான். வாயில் அருகே வந்ததும் அந்த இரண்டு மாணவிகளும் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு ரங்கனை பார்த்தனர்.

ரங்கனுக்கு இரண்டு கையும் ஓடலை, இரண்டு காலும் ஓடலை. அவ்வளவு சந்தோஷம் அவன் மனதுக்குள். அந்த சந்தோஷத்தை அவன் எவ்வளவு கட்டு படுத்த முயன்றும் முடியாமல் அவனது முகம் காட்டிக்கொடுத்தது. அவன் சிரிப்பதை பார்த்த அந்த இரண்டு மாணவிகளும் தங்களுக்குள் ஏதோ சொல்லிக்கொண்டு சிரித்தனர். அப்படியே பேசிக்கொண்டே ரங்கனை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ரங்கனுக்கு தலை கால் புரியலை. என்ன செய்வது, எப்படி ரியாக்ட் பண்ணுவதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான். மனது படக் படக் என்று நொடிக்கு இரண்டு முறை அடித்துக் கொண்டிருந்தது அவனுக்கு.

அந்த இரண்டு மாணவிகளும் அவனை மிகவும் நெருங்கி விட்டனர். ரங்கன் ஒரு முடிவு எடுத்தவனை போல் அவர்களிடம் ஏதோ இரண்டு வார்த்தை பேச முயன்றான். அப்போது திடீல் என்று அவன் முதுகில் யாரோ படார் என்று அடித்தனர். காரியம் கை கூடி வரும் வேளையில் சட்டி உடைந்தது போல் ஆகிவிட்டதால் வந்த கோபத்தோடு, 'த்த்த...எவண்டா அது' என்று கூறிக்கொண்டே திரும்பி பார்த்தான் ரங்கன். தனது நெருங்கிய நண்பர்கள் இருவரில் யாரோ ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்த ரங்கனுக்கு ஒரே அதிர்ச்சி.

பின்னால் நின்று கொண்டிருந்தது அவனது அப்பா. 'இரண்டு வாரமா அம்மா சொல்ற வேலை ஒன்னையும் செய்யாம துரை இதை தான் செஞ்சிகிட்டிருக்கீங்களா?' என்று திட்டிக்கொண்டே தலையில் இரண்டு போட்டு ரங்கனை வீட்டுக்கு இழுத்துச் சென்றார்.

இந்த கதையில் 'இரண்டு' அல்லது இரண்டு என்று பொருள் தரும் வார்த்தையை எத்தனை முறை உபயோகித்துள்ளேன் என்று சரியாக சொல்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் இரண்டே ரெண்டு தான், 'இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பொருமைங்க; நீங்க ரொம்ப நல்லவங்க;)'

இது
வவாசங்க போட்டிக்காக எழுதிய கதை அல்ல நிஜம், ஆனால் ரங்கன் நானல்ல...நம்புங்க, நெசமாத்தான் சொல்றேன்!;)

Thursday, April 17, 2008

விஜயகாந்த் ஐந்து வேடங்களில் கலக்கும்...


என் நண்பர் ஒருவர் மின் அஞ்சல் மூலம் இதை எனக்கு அனுப்பி இருந்தார். பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியலை. அதான் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்னு இங்க போட்டுட்டேன்.

நம்ம ஆளுங்களுக்கு கற்பனை குதிரை கன்னா பின்னானு பறக்குது. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரு. நல்ல வேலை நம்ம கருப்பு எம்.ஜி.ஆர்(அப்படிதான் சொல்லிக்கறாங்க) இதில் போட்டுருக்குற வேடங்களுக்கு சொந்தகாரங்க இப்போ உசுரோட இல்லை. இருந்து இதை பார்த்திருந்தாங்கனா தேவை இல்லாத கொலை பழி கேப்டனுக்கு வந்திருக்கும்.

இந்த போஸ்டரை செஞ்சவங்க உண்மையிலேயே இவர் கட்சி தானா? பின்ன எதுக்கு இவர வச்சு இப்படி காமெடி பண்றாங்க?

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...இப்பவே கண்ண கட்டுதே! டமிலன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!

Thursday, April 10, 2008

இவங்கள வச்சு வேற என்ன பண்ண முடியும்?

முதல் நபர்: திரும்பவும் என்னங்க அங்க பிரச்சனை? எதுக்கு எல்லாரும் கூட்டமா கோஷம் போட்டுக்கிட்டு இருக்காங்க?
இரண்டாம் நபர்: ஒகேனக்கல்ல யாரோ ஒரு பிரபல கட்டிட கான்டிராக்டர் நூறு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி, ஒவ்வொரு இல்லத்திற்கும் தனித்தனி தண்ணி தொட்டி கட்ட போறாராம். அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் இந்த போராட்டமாம்.
முதல் நபர்: இது கொஞ்சம் ஓவருங்க. அப்ப நான் இன்னிக்கும் அரசி பார்க்க முடியாதா?

*****

முதல் நபர்: என்னங்க ஆச்சரியமா இருக்கு? திடீல்னு எதுக்கு கன்னட திரைப்பட துறையினர் ஒகேனக்கல் திட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சி தர்ணா போராட்டம் அறிவிச்சி இருக்காங்க.
இரண்டாம் நபர்: இதுவும் ஏட்டிக்கு போட்டி தாங்க. இவங்கள நல்லா புரிஞ்சி வச்சு இருக்குற தமிழ் நடிகர்கள் சங்கம், ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சி உண்ணா விரதம் இருக்க போறதா சும்மா ஒரு வதந்திய பரப்பி விட்டாங்க. அதான்.

*****
ஓகேனக்கல் விவகாரத்தில் சென்னையில் திரைப்படத் துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் ரஜினி பேசியதற்கு கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், ரஜினி புதியதாக ஒரு மாற்று அறிக்கையை தயார் செய்து இருக்கிறார்:

இது ஒரு வித்யாசமான சந்திப்பு என்று சொல்ல மாட்டேன். மிகவும் அதிகமா பேசி திட்டு வங்கறதும் சுலபம், குறைவாக பேசி திட்டு வங்கறதும் சுலபம். இங்கு பேசியவர்கள் எல்லாரும் உணர்ச்சி இல்லாமல் பேசினார்கள். நியாயம்தான். நடந்துள்ள விஷயங்கள் அனைத்தும் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக உள்ளன. குறிப்பாக கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்க பட்டதுக்கு என் மனதார பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்கு காரணமானவர்களை வாழ்த்துகிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பே ஓகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும் என ஒதுக்கப்பட்டுவிட்டது. நமக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து நாம தண்ணி எடுத்துக்க திட்டம் போட்டா அதை எடுக்கக் கூடாதுன்னு தடுத்தா பாராட்ட வேண்டாமா?

இதை எப்பவுமே அவங்க பண்ணிக்கிட்டு இருக்காங்க....விடுங்க. சரி, எனக்கு இதுல என்ன குஷின்னு சொன்னா, ஒரு தேசிய கட்சி, மிக பெரிய தேசிய கட்சி, அந்த மாநிலத்தின் அந்த கட்சியோட மிகப்பெரிய தலைவராக இருந்தவர், இருப்பவர், இப்ப வந்து இந்த விஷயத்தை ரிப்பன் கட் பண்ணாம ஆரம்பித்து வைத்திருக்கிறார். என்ன பெருந்தன்மை பாருங்க.

சரி, இப்போ பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம். ஒரு பெரிய தலைவர் வந்து இதை ஆதரிக்கிறார். எதுக்கு? நம்ம நல்லதுக்கு தான். அந்த தேசியக் கட்சியைச் சேர்ந்தவங்க, இங்க நம்ம மாநிலத்தில் இருக்கறவங்க எல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்காங்க. அவங்களும் இந்த மாதிரி ஏதாச்சும் செய்ய வேண்டாம்?

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். மும்பையிலிருந்து இப்ப வந்துட்டு, இந்தப் பிரச்சினைக்கெல்லாம் அதாவது இந்த வைரஸ் உருவாகக் காரணமே, கலைஞர்தான்னு சொல்றார். என்ன தியாகம் இது. மக்கள் என்ன புத்திசாலிகளா? அவர்களுக்கு ஒண்ணுமே தெரியாது. மக்கள் எங்கிருந்தாலும் அது கர்நாடகமோ தமிழகமோ... அவங்க புத்திசாலிகள் அல்ல...

அரசியல்வாதிகளே பொய்ப் பேசுங்க. உடான்ஸ் விடுங்க. சுயநினைவு இல்லாம பேசுங்க. (வாயில் கை வைத்து) இங்க இருந்து பேசணும்...அவன் பாத்துக்கிட்டே இருக்கான். தெய்வம் அவன்.
சும்மா எல்லாரும் எலெக்ஷனுக்காக ஆட்டம் போடாம மக்களுக்கு நல்லது பண்ணிக்கிட்டு இருக்காங்க. இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் அங்கே விரைவில் வரப்போகிற தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள்.

நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவகவுடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா, தரம்சிங், கார்கே, அனந்தமூர்த்தி போன்றவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்காக நல்லது செய்யாதீர்கள்... அதன் விளைவு மோசமாக இருக்கும். உங்களையே அழிச்சிடும்.

இதை மீண்டும் மீண்டும் வளர விடுங்கள், காவிரி பிரச்சினை மாதிரி. அறிவோட செயல்படாதீங்க தயவு செஞ்சு. இங்கே, கலைஞர் மற்றும் எல்லாருக்கும் எனது வேண்டுகோள்... இது கோடலியால் வெட்டினாலும் தீராத பிரச்சனை. இதை இப்போது விட்டுவிட்டு சரியான நேரம் வரும்போது நகத்தால் கிள்ளி எரிந்து விடலாம். இப்பவே, இந்த நிமிஷமே இந்த வேலையை கைவிட வேண்டும். இதைவிட வேறு பெரிய பிரச்சினை இருக்கு.

உங்களது இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது யாரும் இல்லை. எனவே இம்மாதிரி உணர்வுப்பூர்வமான விஷயங்களை அரசியலாக்குங்கள், தயவுசெய்து இந்த விஷயத்துக்கு இப்பவே முடிவு கட்டிடாதீங்க...

*****
முதல் நபர்: உங்களுக்கு எஸ்.ஜ. சூர்யா பத்தி ஒரு சந்தோஷமான விஷயம் தெரியமா?
இரண்டாம் நபர்: என்ன அவர் இனிமே நடிக்கிறதில்லைனு முடிவு பண்ணிட்டாரா?
முதல் நபர்: இல்ல, அவர் நடிப்புக்காக கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி, தன் வாழ்க்கையையே நமக்காக தியாகம் பண்ணி இருக்கார்.
இரண்டாம் நபர்: அடப்பாவி, இதுவா சந்தோஷமான விஷயம்? அதே தியாகத்த நான் செஞ்சா, அவர் நடிக்கரத நிறுத்திப்பாரா?

Saturday, March 22, 2008

குட்டீஸ் ஸ்பெஷல் - குங்குமம்...

இந்த வாரம்....ஜோதிகாவால் மட்டும் தான் நிமிஷத்துக்கு பத்து ரியாக்க்ஷன் காட்ட முடியுமா? குமுறுகிறார் இந்த கொழுக் மொழுக் குழந்தை ரோஹன்!
தனக்கு நடிக்கவும் தெரியும் என்று சொல்லும் இந்த பத்து மாத சுட்டி, சூப்பர் ஸ்டார் போலவும், சியான் விக்ரம் போலவும் நடித்தும் காண்பிக்கிறது...

**********
கண்ணத்தில் முத்தமிட்டால் குட்டீஸ் ரீமேக்...



Monday, March 17, 2008

கேடி நம்பர் ஒன்

அய்யய்யோ மன்னிச்சிக்குங்க, நான் சொல்ல வந்தது கேடி நம்பர் ஒன் இல்ல ஜோடி நம்பர் ஒன். சின்ன திரையுலகில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சி ஒரு அஞ்சு வருஷத்துக்கப்புறம் எப்படி இருக்கும்னு நான் ஒரு சின்ன கற்பனை பண்ணி பார்த்தேன். அதை தான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். நான் சொல்ற நிறைய விஷயம் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறவங்களுக்கு தான் புரியும்.

*****************

தொகுப்பாளர்: வெல்கம் பேக் டு தி நாயர் டீ கடை ஜோடி நம்பர் ஒன் சீசன் இருபத்தி ஐந்தின், ஐம்பதாவது எபிசோட். இதுவரை இல்லாத அளவுக்கு இதில் இருபத்தி ஐந்து ஜோடிகள் இடம் பெற்றிருப்பது ஒரு மிகப்பெரிய சாதனை. மொத்தம் நூத்தி ஐம்பது எபிசோட், மற்றும் பத்து ஒயில்ட் கார்டு ரவுண்டுகள் இடம்பெற உள்ளன.

***

தொகுப்பாளர்: போன வாரம் நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் நடந்த அடிதடியை முன்னிட்டு விஜய் டிவி முதல் முறையாக கனல் கண்ணன் மாஸ்டரை ஜோடி நம்பர் 1 ஸ்டண்ட் மாஸ்டரா நியமிச்சி இருக்கு. லெட் ஹஸ் வெல்கம் கனல் கண்ணன் மாஸ்டர் டு தி ஸ்டேஜ்.

***

தொகுப்பாளர்: மிஸ்டர் ஜட்ஜ் இன்னைக்கு நீங்க எங்க ஒக்கார போறீங்க?
ஜட்ஜ்: நான் எங்க ஒக்கார போறேன்னா?


ஒளிப்பதிவாளர்: சார், இந்த தடவை நீங்க என் பக்கத்துல ஒக்காருங்க சார். அப்ப தான் நீங்க பண்ற கொடுமையெல்லாம் சகிச்சு கிட்டு நான் எவ்வளவு பொறுமையா எப்படி கஷ்டப்பட்டு ஒளிப்பதிவு செய்யறேன்னு எல்லாருக்கும் தெரியும்.

***

தொகுப்பாளர்: இந்த ஐன்பதாவது எபிசோட பார்த்து எல்லாரும் நல்லா என்ஜாய் பண்ணி இருப்பீங்க. நீங்க எல்லாரும் ஆவலோடு எதிர் பார்த்துகிட்டிருக்க அடுத்த வார எபிசோட்ல நம்ம ஜோடிகள் இந்த சீசன்ல முதல் முறையா நடனம் ஆட போறாங்க. சோ, மிஸ் பண்ணாம கண்டிப்பா பாருங்க! மீட் யு ஆல் அகைன் இன் நாயர் டீ கடை ஜோடி நம்பர் ஒன், சீசன் 25.


***


தொகுப்பாளர்: லெட் ஹஸ் வெல்கம் ஹவர் ஸ்பெஷல் கெஸ்ட். சொல்லுங்க நீங்க இந்த நிகழ்ச்சியை பத்தி என்ன நினைக்கிறீங்க?


ஸ்பெஷல் ஜட்ஜ்: இது என்கு ரொம்ப புட்ச்ச நிகல்ச்சி. இதை நான் டெய்லி மறக்காம பார்ப்பேன். இதுல எல்லாரும் ரொம்ப நல்லா நடிக்கறாங்க. நான் இதுல ஒரு ஜட்ஜா வர வேண்டியது. பட் என்கு சரியா அல(ழ) வர்லேன்னு ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. ஆனா இப்போ ஸ்பெஷல் ஜட்ஜா வந்து இருக்குது ரொம்ப ஹாப்பி.


***

தொகுப்பாளர்: இன்னிக்கி நாயர் டீ கடை ஜோடி நம்பர் ஒன்ல மாட்டு பொங்கல் ஸ்பெஷல். இதுக்காக ஸ்பெஷலா ரெண்டு டெல்லி எருமை, நாலு பசு மாட்ட ஸ்டேஜ்ல கட்டி போட்டுருக்கோம். நம்ம ஜோடிகள் எல்லாம் ரெண்டு குழுவா பிரிஞ்சி யார் நல்லா பாட்டு பாடிக்கிட்டே நிறைய பால் கரக்கறாங்கனு போட்டி போட போறாங்க. மக்கள் நாயகன் ராமராஜன் இதுக்கு ஸ்பெஷல் ஜட்ஜா வந்துருக்காரு. அவரு பால் கறக்கரத பத்தி நம்ம ஜோடிகளுக்கு நிறைய டிப்ஸ் கொடுத்து இருக்காரு. சரி வாங்க நிகழ்ச்சிக்கு போவோம்.


***

தொகுப்பாளர்: போன வாரம் எழுந்து மேடைக்கு வந்த போது ஜோடிகள் அவரு கால்ல விழலைன்னு கோவிச்சுகிட்டு போன ஜட்ஜ நாங்க ஏர்போர்ட் வரைக்கும் போயி சமாதான பதுத்தி, ஏர்போர்ட்லேயே நம்ம ஜோடிகள் எல்லாம் டான்ஸ் ஆடி அத பார்க்க முடியாம ஏர்போர்ட் மேனேஜர் ஓடி வந்து ஜட்ஜ் கால்ல விழுந்து கேட்டு, ஒரு வழியா சமாளிச்சு அவர கூட்டிட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. அதை பத்தி இப்போ ஒரு சின்ன ரிகாப் பார்ப்போம்.


***

தொகுப்பாளர்: ஒவ்வொரு வாரமும் ஒரு ஜோடி தன் ஜோடியோட சண்டை போட்டுக்கிட்டு வேற ஜோடி கூட்டிட்டு வந்து ஆடுறதால, இருபது வாரம் ஆகியும் இன்னும் ஒருத்தர் கூட எளிமினேட் ஆகல. அதனால இனிமேல் யாரும் தன் ஜோடிய மாத்த கூடாதுன்னு நம்ம ஜட்ஜ்ஸ் கெஞ்சி கேட்டுகிட்டிருக்காங்க.


***

தொகுப்பாளர்: இந்த வார ரியாலிட்டி ஷோல, முதல்ல நம்ம ஜோடி குப்புசாமி வழக்கமா பீடா வாங்குற கடையோட பீடா கடைக்காரர் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா?


பீடா கடைக்காரர்: அந்த புள்ள பீடா வாங்கி போடறத பார்க்கும் போதே அது ஒரு நல்ல டான்சரா வரும்னு எனக்கு தெரியும்.....ஏங்க, கொஞ்ச இந்த பக்கம் வாங்க, நான் பீடா போட்டு துப்பர எடத்துல நிக்கிறீங்க.


தொகுப்பாளர்: அய்யய்யோ, சாரிங்க. சரி இப்போ இங்க இருக்க பீடா கடைக்கரங்க எல்லாம் சேர்ந்து ஒரு சின்ன ஷோ பண்ண போறாங்க. அதுக்கு ஜட்ஜ் நம்ம ஜோடி குப்புசாமி.


***

தொகுப்பாளர்: விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன்னுக்கு சின்ன திரையில இருந்து யாருமே ஆட வராததால பொது மக்கள் நேர்முக தேர்வு நடந்துக்கிட்டுருக்கு. வாங்க போயி யார் கிட்டயாவது மொக்கையை போடுவோம். ஹலோ, உங்க பேர் என்ன?


தேர்வாளர்: என் பேர் ரவி காந்த்.


தொகுப்பாளர்: எப்படி இருக்கு இந்த அனுபவம் உங்களுக்கு?


தேர்வாளர்: என்னங்க இது. ரெண்டு நாளா வரிசைல நிக்கறேன். இன்னும் இரண்டு நாள் ஆகும்னு சொல்றாங்க. திருப்பதிக்கு கூட நான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணது கிடையாது. வெயிட் பண்ணிகிட்டிருக்கவங்க எல்லாம் அழறதுக்கு பயிற்சி பண்ணி பார்த்து கிட்டு இருக்காங்க. ஏதோ எழவு வீட்டுக்கு வந்துருக்கற மாதிரி இருக்குது எனக்கு.

தொகுப்பாளர்: சரி நீங்க எப்படி பயிற்சி பண்ணி இருக்கீங்க?

தேர்வாளர்: ஒரு வாரமா ஒக்காந்து எல்லா மெகா சீரியலையும் பார்த்தேன். இப்போ நீங்க ஹும்னு சொன்னவுடனேயே என்னால அழ முடியும்.


***

ஜட்ஜ்: என்ன, நீல நிறத்துல டிரஸ் பண்ணிக்கிட்டு வந்து இருக்கீங்க? நீங்க நினைவுகளா? ஹா ஹா ஹா!


ஜோடி: சார், போன வாரம் வெள்ளை நிறத்துல போட்டோம் உடனே தேவதைகளானு கேட்டீங்க? இப்போ இப்படி கேக்கறீங்க. நாங்களே நீங்க எடுத்த அந்த படத்த பத்தி மறக்கனும்னு நினைக்கிறோம். நீங்க விடாம நினைவு படுத்தி கிட்டே இருக்கீங்களே சார். இது நினைவுகள் இல்ல சார் கொடுமைகள்.


***

ஜட்ஜ்: நீங்க ரெண்டு பெரும் நல்லா ஆடி இருந்தீங்க. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயாலஜி மூணுமே இருந்தது. ஆனா நீங்க செலக்ட் பண்ண பாட்ட பாடுனவரோட வாய்ஸ் சரி இல்ல. அதனால இந்த வாரம் நான் உங்களுக்கு கொடுக்குற மார்க் -3.


ஜோடி: எதுக்கு சார் -3? நாங்க ரெண்டு பேரும் தான் நல்ல ஆடுனோமே சார்?

ஜட்ஜ்: இப்போ பாருங்க. ஒரு வண்டி மேட்டு மேல ஏறும் போது ஆக்ஸ்லேடர் வொர்க் ஆகலைன்னா வண்டி ஊரு போயி சேராது. பின்னால தான் போகும்.


ஜோடி: பட் நாங்க ஊருக்கே போகலையே சார். டான்ஸ் ஆட தான வந்து இருக்கோம். நாங்க ஆடுனதுக்கு அட்லீஸ்ட் நீங்க 0 மார்க் ஆவது கண்டிப்பா கொடுக்கணும் சார்.


***


ஜோடி: எங்களுக்கு இந்த ஜோடி நம்பர் 1ல வந்து ஆடி பரிசு வாங்கனும்னு எல்லாம் ஒண்ணும் இல்ல சார். எங்க வீட்டு ஜிம்மி எப்ப ஜோடி நம்பர் ஒன் போட்டாலும் வந்து டிவி முன்னாடி நின்னுகிட்டு முதல்ல உங்கள பார்த்து குறைக்கும் அப்புறம் எங்கள பார்த்து குறைக்கும். அப்பவே அது எங்கள உங்க முன்னாடி ஆடி உங்க கிட்ட இருந்து நல்ல பேர் வாங்கனும்னு சொல்றது எங்களுக்கு புரிஞ்சிது. இப்போ ஜிம்மி எங்களோட இல்ல சார்.


ஜட்ஜ்: எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. உங்களுக்கு என்னோட மார்க் 10. நான் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. நான் நெனச்சத செய்வேன். சரி உங்க ஜிம்மிக்கு என்ன ஆச்சு?


ஜோடி: பிரசவத்துக்கு அவங்க மாமியார் வீட்டுக்கு போயிருக்கு சார்.


***

இயக்குனர்: பேசிகிட்டிருக்கும் போதே நீங்க கோவம் வந்து உங்க ஜோடிய பளார்னு ஒரு அரை விடறீங்க.


பெண் ஜோடி: என்ன சார். அவர் என்ன அரஞ்சா என் இமேஜ் என்ன ஆகும் சார்?


இயக்குனர்: கவலை படாதீங்க. நீங்க அடுத்த எபிசோட்ல பத்து பேரோட போயி அவர பின்னி பிடல் எடுக்கறீங்க.


பெண் ஜோடி: அப்ப ஓகே சார்.


***

விஜய் டிவி விளம்பரம்:


உங்களுக்கு நல்லா கை தட்ட வருமா? யாரவது அழுவதை பார்த்தா, உடனே அழ வருமா? சும்மா ஒக்கார்ந்து வேடிக்கை பார்க்க உங்களுக்கு ஐந்நூறு ரூபாய் பணமும், சிக்கன் பிரியாணியும் வேணுமா? உடனே விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் நேயர்கள் நேர்முக தேர்வுக்கு விண்ணப்பியுங்கள்.

Friday, February 22, 2008

ஆன்சைட் டிராவல்

ஆன்சைட் டிராவல்னாலே எல்லாரும் ரொம்ப ஆவலா இருப்போம். எப்படா நம்மள அனுப்புவாங்கலோனு காத்துகினு இருப்போம். ஆனா எங்க டீம்ல அப்படி இல்லைங்க. எங்கடா நம்மள ஆன்சைட் அனுப்பிட போறாங்கலோனு பயந்துகிட்டே இருப்பாங்க. எதுக்குன்னு பாக்கறீங்களா? வேற ஒண்ணும் இல்ல, ஆன்சைட்னாலே அது சப்போர்ட் வேலைக்காக தான் இருக்கும். சப்போர்ட் வேலைன்னா சும்மா இல்ல பென்ட் கயண்டிடும். காத்தால ஏழு மணிக்கு போனா நைட் எட்டு மணி வரைக்கும் வேலை பார்க்கணும். அதுவும் இந்த டிரேடிங் பன்றவங்களுக்கு மத்தில. இது தெரியாம ஒருத்தன் புதுசா வந்து எங்க டீம்ல சேர்ந்தான்.

அவன் சேர்ந்த கொஞ்ச நாள்ல ஆன்சைட் வாய்ப்பு வந்தது. ஏற்கனவே போயிட்டு வந்த இரண்டு பேர்ல ஒருத்தர அனுப்பலாம்னு கேட்டாங்க. முதலாம் நபர், "நான் இப்போ தான போயிட்டு வந்தேன். நீ போயிட்டு வாயேன்னு" இரண்டாம் நபரை பார்த்து சொன்னார். இரண்டாம் நபர், "நான் தான் ஏற்கனவே போயிருக்கேனே. இவரு போயிட்டு வரட்டுமே. ஒரு நல்ல அனுபவமா இருக்கும்" அப்படீன்னு புதுசா சேர்ந்தவரை பார்த்து சொன்னார். புதுசா வந்து சேர்ந்தவருக்கு தலை கால் புரியல. என்னடா இவங்க எல்லாம் இவ்வளோ நல்லவங்களா இருக்காய்ங்க. தனக்கு வந்த வாய்ப்ப இப்படி நமக்கு விட்டு தராங்களேனு ஒரே வியப்பு அவருக்கு. இவ்வளவு நல்லவங்கள நான் பார்த்ததே இல்லையே, 'கிரி' வடிவேலுவ இவங்க மிஞ்சிட்டாங்கனு அவரு நெனச்சது அவரு முகத்துல தெரிஞ்சது.

ரொம்ப சந்தோஷமா சரின்னு தலை ஆட்டுன அவர் எல்லாருக்கும் தன் நன்றியை வாரி இறைச்சார். எஸ்கேப் ஆன இரண்டு பேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சிகிட்டாங்க. அப்பாடா எப்படியோ எஸ்கேப் ஆகிட்டோம்னு நெனச்சிகிட்டாங்க. அந்த புது நபர ஊர், ஹோட்டல், அலுவலகம், ஊர் சுத்தும் இடம் எல்லாத்தை பத்தியும் சொல்லி ரொம்ப ஜாக்கிரதையா பலி ஆட்டுக்கு நல்லா தீனிய போட்டு ரெடி பண்ற மாதிரி ரெடி பண்ணி அனுப்பினாங்க. அவரும் ரொம்ப கெத்தா இந்த மாதிரி கெளம்பி போனாரு:


இரண்டு வாரமா அவரு கிட்ட இருந்து ஒரு போன் கால் கூட வரல. இரண்டு வாரம் கழிச்சி மனுஷன் திரும்பி வந்தாரு. எப்படி வந்தாரு தெரியுமா? இப்படி தான், அந்த கொடுமைய நீங்களே பாருங்க!


என்ன என்ஜாய் பண்ணீங்களா? ட்ரிப் எப்படி இருந்ததுன்னு எல்லாரும் கேட்டதுக்கு ஒண்ணும் பேசாம இப்படி ஒரு முறை முறைச்சாரு:

எங்க எல்லாருக்கும் சிப்பு தாங்கல. சாரி பார் தி பிரேக்னு சொல்லிட்டு ஆணிய பிடுங்க ஆரமிசிட்டோம். இவரை சிபாரிசு செய்த அந்த இரண்டு பேரையும் மேலயும், கீழயும் ஒரு லுக் விட்டார். "கடைசீல என்ன 'கிரி' வடிவேலு மாதிரி ஆக்கிட்டீங்கலேடான்னு" அவரு இப்போ நெனக்கிறது நல்லா தெரியுது;)

துணுக்கு மூட்டை

விஜயகாந்த் தனது கட்சிக்காக புதுசா டிவி சானல் தொடங்க போறாராம். என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சிகிட்டிருக்காறாம். அதுக்கு எதுக்கு ரோசனை? 'கேப்டன்' டிவின்னு ஆரமிச்சிட வேண்டியதுதானே? இதுதவிர முழுக்க முழுக்க அரசியல்மயமான பத்திரிக்கையையும் அவர் தொடாங்கவிருக்கிறாராம். அப்போ காமெடி பத்திரிக்கையா? ஹையா;)


*****

நம்ம அமீர் எதுத்த பருத்தி வீரன் படத்தோட புகழ் உலகம் முழுசா பரவுதுங்க. ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் 58-வது சர்வதேச படவிழாவில் திரையிட இந்தியாவில் இருந்து பருத்தி வீரன் படமும் ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படமும் தேர்வாகி இருக்காம். பருத்தி வீரன் சரி, அது எப்படி ஓம் சாந்தி ஓம் படத்த தேர்வு பண்ணாங்க? அது முழுக்க முழுக்க மசாலா படம். தாரே சமீன் பர் மாதிரி நல்ல படம் எல்லாம் இருக்கும் போது இதை போய் தேர்வு பண்ணி இருக்காங்க? அடக் கடவுளே!

*****
இந்த செய்திய படிச்சதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. "இந்தி நடிகர் ஷாருக்கான், கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரின் தபால் தலைகள் வெளியிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது." அடப்பாவிங்களா? என்ன இப்படி இறங்கிட்டீங்க? டெண்டுல்கர் சரி, சானியா நேத்து பெய்த மழைல இன்னைக்கு முளைச்ச காளான் - சாதிக்க இன்னும் நிறைய இருக்கு, ஷாருக்கான் எனக்கு தெரிஞ்சி ஒண்ணுமே செய்யல நாட்டுக்கு. போற போக்குல விஜய்க்கு 'தமிழன்' படத்துல தபால் தலை வெளியிடுவாங்களே அது நிறைவேறிடும் போல;)

*****

என் அலுவலகத்துல கூட வேலை பார்க்குற நண்பர் ஒருத்தர் விழுந்து விழுந்து வேலை பார்ப்பார். எப்போ அவருக்கு மீட்டிங் ரிக்குவெஸ்ட் போடலாம்னு பார்த்தாலும் அவர் காலண்டர் பிசியாவே இருக்கும். பயங்கரமா வேலை செய்யறார் போலன்னு நாங்களும் நெனசிப்போம். ஒரு தடவை அவர் அவரது கணினியை லாக் பண்ணாம எங்கேயோ போயிருந்தார். அப்போன்னு பார்த்து ஒரு மீட்டிங் ரிமைன்டர் கிளிங்னு சத்ததோட அவர் கணினியில இருந்து வந்தது. நானும் ஏதாச்சும் முக்கியமான மீட்டிங் இருக்க போகுதுன்னு உடனே எழுந்து போயி பார்த்தா, இதாங்க அந்த மீட்டிங் ரிக்குவெஸ்ட், "India Times + Rediff Newspaper". இந்த கொடுமைய எங்கிட்டு போயி சொல்ல?

Sunday, February 3, 2008

விஜயகாந்த்-மைக்கேல் ஜாக்சன் ரீமிக்ஸ்!

இது என்னோட இரண்டாவது ரீமிக்ஸ். இதுல கேப்டன் விஜயகாந்த் மைக்கேல் ஜாக்சனின் Dangerous பாட்டுக்கு ஆடியிருக்கார். பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.



இதனுடைய youtube லிங்க்: http://www.youtube.com/watch?v=Gggr-H7eyLM

Saturday, January 26, 2008

ஊர் வம்பு!

ஏசுதாஸ்: அடுத்து யாருடைய பாட்ட ரீமிக்ஸ் பண்ண போறாங்கலாம்?
எம்.ஸ்.வி: அந்த எழவ எவன் கண்டான்?
ஏசுதாஸ்: உங்கப்பா பாட்ட கூட ரீமிக்ஸ் பண்ண போறாங்களாமே?
சிவசிதம்பரம்: ரீமிக்ஸ்ஸா... அடங்கப்பா கப்பு தாங்கல!
*****

பாலச்சந்தர்: ஏம்மா, கேஸ் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு?
குஸ்பூ: அத ஏன் சார் கேக்கறீங்க? இப்போவெல்லாம் நான் டாய்லெட் கூட செருப்பு போட்டுக்கிட்டு போறதில்ல.

*****

ஷங்கர்: ஸ்ரியாவ பார்த்தீங்களா? சிவாஜில கூட இப்படி காஸ்ட்யும் கொடுக்கலையே அவங்களுக்கு? மிஸ் பண்ணிட்டோமா?

*****

ரஜினி: ஆமா, கமல் உங்க பொண்ணு ஹீரோயினா நடிக்குதாமே? சொல்லவே இல்ல?
கமல்: இல்ல ரஜினி! நீங்க உங்க அடுத்த படத்துக்கு ஹீரோயின் தேடுறீங்கன்னு சொன்னாங்க. அதன் சொல்லல!
கமல்: கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ?
ரஜினி: ச்சே! தெரியாத்தனமா கேட்டுட்டோமோ?
பிரபு: கேட்டீங்களா விஷயத்த? கமல் ரஜினி ஸார நக்கல் அடிசிட்டாராம்.
கமல்: ஏதோ, தெரியாம மனசுல இருந்தத அப்படியே பேசிட்டேன். நீங்க தான் ரஜினிய சமாதானம் பண்ணனும்.
பாலச்சந்தர்: ஏதோ, தெரிஞ்சோ தெரியாமலோ உண்மைய சொல்லிட்ட. நான் பார்த்துக்குறேன், விடு!

Saturday, December 22, 2007

ரீரீமிக்ஸ்...

இப்போ டிவில எல்லாரும் பழைய நடிகர்கள் புதிய பாடல்களுக்கு ஆடி இருந்தால் எப்படி இருக்கும்னு கற்பனை செஞ்சி அவங்களே ஆடி காட்டறாங்க. பார்க்க நகைச்சுவையாக இருக்கும். நான் நிஜமாவே பழைய நடிகர் ஒருத்தர் ஒரு லேட்டஸ்ட் பாட்டுக்கு ஆடி இருந்தால் எப்படி இருக்கும்னு ரீமிக்ஸ் செய்து பார்த்தேன். நல்லாத்தான் இருக்குனு நினைக்கிறேன். நீங்களும் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இதுல 'உங்கள்' பாக்யராஜ் இப்போ வந்த விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்துல வர 'பொன்மகள் வந்தால்' ரீமிக்ஸ் பாட்டுக்கு ஆடி இருக்கார். மறக்காம ஸ்பீக்கர ஆன் பண்ணிட்டு பாருங்க. இதனுடைய youtube லிங்க்: http://www.youtube.com/watch?v=eaN_GJZo6ck

Saturday, September 29, 2007

ஸ்வீட்ஸ்...

இப்போவெல்லாம் ஊருக்கு போயிட்டு வரும்போது வீட்டுல கொடுத்து அனுப்புற ஸ்வீட்ஸ் ஒரு வாரம் ஆனாலும் காலி ஆகாம அப்படியே இருக்கு. ஆனா நான் சின்ன புள்ளையா இருந்தப்ப அப்படி இல்ல. அப்ப ஸ்வீட்ஸ்னா எனக்கு உசுரு! எவ்வளவு கொடுத்தாலும் ஒரே நாள் தான்! அப்போ ஸ்வீட்ஸ் கிடைக்கிறது ரொம்ப அபூர்வம். பண்டிகை நாள் இல்ல விருந்தாளிங்க வந்தாதான். எங்கப்பா வாரத்துல ஒரு நாள் அவருக்கு ஆப்பீஸ்ல கொடுக்குற ஸ்வீட்டையும் எங்களுக்கு கொண்டு வந்து கொடுத்துடுவாரு. அந்த அளவுக்கு ஸ்வீட்னா அலையுவோம். இப்ப நம்மாலயே எவ்வளவு ஸ்வீட் வேணும்னாலும் வாங்கிக்க முடியும், ஆனா சாப்பிட பிடிக்கல. நான் கூட சின்ன வயசுல நம்ம பணம் சம்பாதிச்சா எல்லாம் வந்துடும்னு நினைச்சேன், ஆனால் அப்ப இருந்த அந்த கவலை இல்லாத வாழ்க்கையும் சந்தோஷமும் போயிடும்னு தெரியல. ஆனா ஒன்னு மட்டும் புரிஞ்சிகிட்டேன், உண்மையான சந்தோஷமே மத்தவங்கள சந்தோஷப் படுத்தி பார்க்கிறதுலதான்னு (ரொம்ப மொக்கய போட்டுட்டேனா;)

சரி இப்ப இந்த ஸ்வீட்ஸ்காக சின்ன வயசுல நான் பட்ட கஷ்டத்த எல்லாம் பார்ப்போம்...நீங்க கூட இதெல்லாம் அனுபவிச்சி இருக்கலாம்.

காட்சி 1:

நம்ம வீட்டுக்கு விருந்தாளிங்க வரும் போது ஏதாச்சும் வாங்கிட்டு வருவாங்க. நானும் யாராச்சும் வந்தா உடனே ஓடி போயி மொதல்ல அவங்க கையில என்ன இருக்குன்னு பார்த்துட்டுதான், அவங்க முகத்தையே பார்ப்பேன். அப்புறம் ஓடி போயி அப்பா கிட்ட சொல்லுவேன்...சிங்காரவேலன் கொண்டமணி மாதிரி "மனோ யாரு வந்துருக்கா பாரு, கருவாடு வந்துருக்கு"னு இல்லங்க!

வந்த விருந்தாளிங்க உடனே என்ன கூப்பிட்டு அவங்க வாங்கிட்டு வந்த ஸ்வீட்ஸ என் கையில கொடுப்பாங்க. நான் உடனே என் அப்பா முகத்த பார்ப்பேன். அப்பா உடனே, "எதுக்குங்க இங்க பார்மாலிடி எல்லாம்?" வந்தவங்க, "இருக்கட்டுங்க. பசங்க இருக்காங்க இல்ல" நானும் உடனே ரொம்ப நல்ல பிள்ளையா, "இல்ல வேண்டாம், இல்ல வேண்டாம்"னு நடிச்சிட்டிருப்பேன். அப்படியே எப்படா அப்பா வாங்கிக்க சொல்லுவாருன்னு அவரு வாயையே பார்த்துகிட்டு இருப்பேன்! அப்பா வாங்கிக்கோன்னு சொன்ன உடனே, கபால்னு வாங்கிப்பேன். அப்படியே நைஸா கொஞ்சம் தள்ளி போய் அத பிரிக்கலாம்னு பார்ப்பேன்...அங்க இருந்து அப்பா என்ன கோபமா ஒரு பார்வை பார்ப்பார் பாருங்க...அவ்வளோதான்...கம்னு அத அங்கயே வச்சுடுவேன். மனசுக்குள்ள, "கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போயிடுச்சே! ஏன்பா, அவங்ககிட்ட பேசறத விட்டுட்டு என் கையில இருக்க ஸ்வீட்ஸயே ஏன் பார்க்குற...அது எனக்கு தான கொடுத்தாங்க?" அப்படீன்னு நெனசிகிட்டு உள்ளே போடுவேன்.

அரைச்ச மாவ எல்லாம் அரைச்சிட்டு வந்தவங்க கிளம்புவாங்க. அப்ப ஒரு சந்தோஷம் வரும் பாருங்க...அட அட அட...அப்பா அம்மா அவங்கள வழி அனுப்ப வாசலுக்கு போவாங்க, நான் ஸ்வீட்ஸ எடுத்துகிட்டு சமையக்கட்டுக்கு பொயிருவேன்!

காட்சி 2:

இந்த பண்டிகை நாள் வந்தா போதுங்க. எங்கம்மா பெரியம்மா எல்லாம் சேர்ந்து குந்திகின்னு பலகாரம் செய்யவாங்க. அதுவும் விதவிதமாய். அதிரசம், முறுக்கு, சோமாஸ், சீடை, லட்டு, எல்லடை இப்படி பல. ஆனா எங்கள கிட்ட நெருங்க விட மாட்டாங்க. கேட்டா எல்லாம் சாமி் கும்மி்ட்ட அப்புறம் தான்னு சொல்லி விரட்டிடுவாங்க. பாவம் இல்ல நான், இந்த சின்ன பிஞ்சுக்கு அதெல்லாம் எங்க தெரியும்!

நானும் சரி எல்லாம் எங்க போயிடப் போகுது, நம்ம கிட்ட தான வந்தாகனும்னு கம்னு போயிருவேன். வழக்கம் போல பூசை லேட்டாகவே முடியும். பசில காது கீதெல்லாம் அடைச்சிருக்கும். அப்பவும் இந்த பாழாப்போன காக்கா வாய வச்சா தான் சாப்பிடனுமாம். அதுங்க எல்லா வீட்டுலயும் நல்லா மூக்க பிடிக்க தின்னுட்டு நாங்க கூப்பிடும் போது வராதுங்க. அதுங்குள கூப்பிட கத்தி கத்தி இருந்த கொஞ்ச நஞ்ச பிராணமும் போயிடும். (இதுல இன்னொரு விஷயம் சொல்லனும். நான் சின்ன வயசுல தாத்தா/பாட்டி எல்லாம் எங்கனு அம்மாட்ட கேட்டா, அவங்க எல்லாம் சொற்கத்துல இருக்காங்கனு சொல்லுவாங்க. வீட்டுல பேரனோ பேத்தியோ பிறந்தா உடனே உங்க தாத்தா/பாட்டி தான்டா வந்து பிறந்திருக்காங்கனு சொல்லுவாங்க. நான் நைட்ல பேய் பிசாச பார்த்து பயந்தா உடனே உங்க தாத்தா/பாட்டி எல்லாம் உன்ன சுத்திகிட்டே இருப்பாங்கடா, உன்ன பத்திரமா பார்த்துக்குவாங்கனு சொல்லுவாங்க. இத எல்லாத்த விட இந்த பண்டிகை நாள்ல காக்காய்ங்க வந்து சாப்பிடும் போது ஒரு அண்டங்காக்கா வரும். அத பார்த்தவுடனே உங்க தாத்தா வந்துட்டாருன்னு சொல்லுவாங்க. எங்க தாத்தா எத்தன ஆக்ட் கொடுக்குறாரு பார்த்தீங்களா;)

கடைசியா ஏதாச்சும் ஒரு காக்கா எங்கள பார்த்து பரிதாப பட்டு வந்து வடைய மட்டும் எடுத்துட்டு போகும். உடனே, ஓடு குடு குடுன்னு வீட்டுக்குள்ள. இருக்குற பசில முதல்ல சோத்த கொட்டிக்குவேன். அப்புறம் கொஞ்சமா பலகாரம் சாப்பிடுவேன். மி்ச்சத்த அப்புறம் சாப்பிடலாம்னு விட்டுருவேன். அப்ப எங்கம்மா, பெரியம்மா எல்லாம் திரும்பி ஒன்னு கூடுவாங்க. செஞ்ச பலகாரத்தை எல்லாம் பங்கு பங்கா பிரிப்பாங்க. அத பார்த்தவுடனே எனக்கு தூக்கி வாரி போடும். யாருக்குமான்னு கேட்டா அக்கம் பக்கத்துல இருக்கவங்களுக்கும், சொந்தக்காரவங்களுக்கும்னு சொல்லுவாங்க. அவங்க ஒவ்வொரு பங்கா பிரிக்கும் போதும், அப்படியே அடிச்சிக்கும் என் இதயம், எப்படா நிறுத்துவாய்ங்கன்னு. அப்ப அப்ப கிட்ட போயி இவங்க வீட்டுக்கு எதுக்குமா இவ்வளவு, அவங்க வீட்டுல இரண்டு பேரு தான, அப்படின்னு இப்படின்னு சொல்லி என்னால முடிஞ்ச வரைக்கும் பங்கை குறைப்பேன். ஒரு வழியா எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம் போயி பார்த்தா தமாதூண்டு தான் மி்ச்சம் இருக்கும். "ஆஹா, இப்படி நம்ம கதை இலவு காத்த கிளி மாதிரி ஆயிடுச்சே"! இருக்குற ஸ்வீட்ஸ் இரண்டு நாள்ல காலி ஆயிடும். அப்புறம் கிடைக்குற 25 காசு 50 காச வச்சு தேன் மி்ட்டாய் இல்ல பல்லி மி்ட்டாய் வாங்கி தின்னுக்குவேன்! அவ்வ்ங்!

காட்சி 3:

அப்ப எங்க வீட்டுல ஏதோ விஷேசம். சொந்தக்காரவங்க எல்லாம் வந்திருந்தாங்க. அதுல சில வாண்டுகளும் உண்டு. ஒரு குட்டி வாண்டு கையில ஏதோ சாக்லேட் வச்சு தின்னுக்கிட்டு இருந்தது. அங்க உட்கார்த்திருந்த சில சொந்தக்காரங்க, "டேய் எங்களுக்கு டா? நீ மட்டும் சாப்பிடற!" அப்படின்னு வழக்கமா சொல்ற டைலாக்க சொல்லி இருக்காங்க. உடனே அந்த வாண்டு ஓடிப் போயி அங்க உட்கார்ந்திருந்த எல்லாருக்கும் சாக்லேட் வாங்கியாந்து கொடுத்துட்டான்.

இதெல்லாம் எதுவும் தெரியாம நான் உள்ள நுழையறேன். உடனே அங்கிருந்த சொந்தக்காரங்கள்ல ஒருத்தவங்க என்ன பார்த்து, "டேய் பார்த்தியா? நீயும் இருக்கியே. எப்பவாவது எங்களுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்திருக்கியா? குழந்தய பாரு கேட்ட உடனே வாங்கியாந்து கொடுத்துட்டான்". எனக்கா சரியான கடுப்பு. அந்த வாண்ட பார்த்து முறைச்சிக்கிட்டே, "டேய், எனக்குடா சாக்லேட்டு?"அவன் குடு குடுன்னு ஓடறான். பின்னாலயே நானும் ஓடினேன். நேரா என் ரூமுக்குள்ள போறான். எனக்கு ஒன்னும் புரியல. என் ரூமுக்கு எதுக்கு போறான்னு ஒரே குழப்பம். போனவன் என் கப்போர்ட திறந்து என் உண்டிய எடுத்தான். அத தல கீழ கவுத்து குச்சி வச்சு நோண்டி காச எடுத்தான். (இந்த உண்டில தான் நான் அப்ப அப்ப ஸ்வீட் வாங்கி சாப்பிட காசு சேர்த்து வைப்பேன்:( காச எடுத்தவன் நேரா வீட்டு கோடியில இருக்க கடைக்கு போயி சாக்லேட் வாங்கியாந்து என் கிட்டயே கொடுத்தான். உடனே என் சொந்தக்காரங்க எல்லாம் திரும்பவும் அவன புகழ்ந்து தள்ளிட்டாங்க. எனக்கு வந்துச்சே கோவம்....அப்படியே ராசா...எப்படி ராசா இதெல்லாம்னு கேட்டு கிட்டே அவன அப்படியே தூக்கிகிட்டு வீட்டு மொட்டை மாடிக்கு போயிட்டேன். அப்புறம் என்ன...கும்மாங்கோ கும்மாங்கோ கொக்கரக்கோ கும்மாங்கோ தான்.

Wednesday, August 29, 2007

மழலைப் பட்டாளம்!

ஒரு நாள் எங்க வீட்டுக்கு சில விருந்தாளிங்க வந்திருந்தாங்க. அதுல சில பொடிசுகளும் உண்டு. எனக்கு கொஞ்சம் போர் அடிச்சதுனால ஒரு பொடியன கூப்பிட்டு பேச்சு கொடுத்தேன்.

நான், "டேய், இங்க வாடா!"

பொடியன், "என்ன?"

நான், "இங்க வாடா சொல்றேன்"

அவனும் கிட்ட வந்தான். கொஞ்ச நேரம் அவன் கிட்ட வழக்கம் போல, பேரு என்ன, என்ன படிக்கிற, நல்லா படிப்பியான்னு மொக்கைய பொட்டுட்டு...சரி, ஒரு கதை சொல்லுடானு கேட்டேன். அவனும் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, கதை சொல்ல ஆரமி்ச்சான்.

நான், "நல்ல காமடி கதையா சொல்லு"

பொடியன், "சரி...ஒரு ஊர்ல ஒரு ஆளு இருந்தானா. அவன் ஒரு நாள் ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தானா..."

திடீல்னு கதைய நிறுத்திட்டு பொடியன் என்கிட்ட, "'ஹும்' சொல்லுங்க..."
நான், "'ஹும்' சொல்லனுமா? எதுக்கு?"

பொடியன், "என் பாட்டி அப்படி சொல்ல சொல்லி தான் கதை சொல்லுவாங்க"
நான், "உன் பாட்டி நீ எங்க தூங்கிடப் போறியோன்னு அப்படி சொல்லி இருப்பாங்க"

பொடியன், "அதெல்லாம் இல்ல...நீங்க ஹும் சொன்னா தான் நான் கதை சொல்லுவேன்"

நான், "சரி, ஹும்"

பொடியன், "எங்க விட்டேன்?"

நான், "அதான் அந்த ஆளு ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தானே"

பொடியன், "ஆமா...அவன் ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தானா..."

நான், "ஹும்"

பொடியன், "அப்படியே நடந்துகிட்டே இருந்தானா..."

நான், "ஹும்"

பொடியன், "ரொம்ப தூரமா நடந்து போயிட்டு இருந்தானா"

நான், "சரி எவ்வளவு நேரம் தான் நடப்பான்...அப்புறம் சொல்லு?"

பொடியன், "அப்போ திடீல்னு ஒரு வாழபயம் தோல் மேல கால வச்சி வழுக்கி விழுந்துட்டான்" அப்படின்னு சொல்லிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறான் அந்த பொடியன்.

நான், "ஹும் அப்புறம்?"

பொடியன், "அவ்வளோதான்! நீங்களும் சிரீங்க!"

நான், "அடப்பாவி இதுக்காடா இத்தன கிலோ மீட்டர் அந்த ஆள நடக்க வச்ச?"

நான் மனசுக்குள், "உனக்கு வேனும்டா...உனக்கு வேனும். கதையா கேக்குற கதை?"


**********

என் பிரண்ட் வீட்டு மாடில ஒரு டியுஷண் சென்டர் இருந்தது. அங்க முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள பசங்களுக்கு டியுஷன் எடுப்பாய்ங்க.

ஒரு நாள் அங்க டியுஷன் படிக்க வந்த இரண்டு குட்டி பசங்க, அவங்க கிலாஸ் மி்ஸ்ஸ பத்தி பெருமையா பேசிக்கிட்டு...இல்ல சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. என் மி்ஸ் தான் சூப்பர், என் மி்ஸ் அடிக்கவே மாட்டாங்கனு...அப்படி இப்படின்னு! என் பிரண்டு அதுல ஒரு பயன கூப்பிட்டான்.

பிரண்ட்: உன் பேரு என்னடா?

பையன்: சந்திரமொவ்லி

பிரண்ட்: எந்த ஸ்கூல்?

பையன்: அலகப்பா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல்

பிரண்ட்: எந்த கிலாஸ் படிக்குற?

பையன்: 1ஸ்ட் ஸ்டாண்டர்ட்

பிரண்ட்: உங்க கிலாஸ் மி்ஸ் பேரு என்ன?

பையன்: லதா

பிரண்ட்: உங்க மி்ஸ் அழகா இருப்பாங்களா?

பையன்: ஹும்...நல்ல இருப்பாங்க!...நான் போகனும்!

பிரண்ட்: இருடா...உங்க மி்ஸ்ஸுக்கு கல்யாணம் அயிடுச்சா?

பையன்: தெரியாது!

பிரண்ட்: என்னாடா நீ...இது கூட தெரியாம இருக்க...சரி நாளைக்கு கேட்டுட்டு வறியா?

பையன்: சரி!

பிரண்ட்: என்ன போட்டு கொடுத்துடாதே உங்க மி்ஸ் கிட்ட...நான் உனக்கு சாக்லேட் வாங்கி தர்றேன். சரியா?

பையன்: ஆங்...சரி!

பிரண்ட்: ஆமா...எப்படி மி்ஸ்ஸுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு தெரிஞ்சிப்ப?

பையன்: அதுவா...எங்க மி்ஸ்ஸோட பையன் என்கூட தான் படிக்கிறான் . . . அவன் கிட்ட கேட்டு சொல்றேன். சரி...நான் போயிட்டு வரேன் அங்கிள்!

பிரண்ட் என்கிட்ட: ஹவ்வ்வ்வ்....சாய்ச்சி புட்டாங்க மச்சான்!


***********

ஒரு நாள் என் பிரண்ட் அவன் பையன பிளே ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர போயிட்டு இருந்தான். என்ன வழியில பார்த்துட்டு என்னையும் கூட வர சொன்னான். இல்லடா நான் வரலன்னு சொன்னாலும் அவன் கேக்கவே இல்ல. சரின்னு நானும் கூட போனேன்.

ஸ்கூல் உள்ள போனோம். அப்ப தான் ஸ்கூல் விட்டு எல்லாம் வீட்டுக்கு போயிட்டிருந்தாங்க. என் பிரண்டோட பையன் வந்தான். என் பிரண்ட் உடனே அவனுக்கு 'கிவ் பைவ்' கொடுத்தான். இப்போ எல்லா சின்ன பசங்களும் இதைத்தான் செய்றாங்க. ஒன்னும் இல்ல, நம்ம இரண்டு கைய நீட்டுனா, மற்றவர் அவங்க இரண்டு கையால நம்ம கைய தட்டுவாய்ங்க. அவ்வளோதான்!

என் பிரண்டு என்னையும் 'கிவ் பைவ்' கொடுக்க சொன்னான். நானும் அப்படியே உட்காந்து, அவனுக்கு 'கிவ் பைவ்' கொடுத்தேன். கொடுத்துட்டு எழுந்து பார்த்தா, ஒரு இருபது இருபத்தைந்து பசங்க வேகமா என்ன பார்த்து ஓடி வராங்க. எனக்கு ஒன்னுமே புரியல. எல்லாரும் கிட்ட வந்த உடனே என்னன்னு கேட்டா, எல்லாருக்கும் 'கிவ் பைவ்' கொடுக்கனுமாம் நான். எல்லாம் என் பிரண்ட் பையனோட கிலாஸ் மேட்ஸாம். ஒரு பதினைந்து நிமி்ஷம், உக்காந்து எல்லாருக்கும் என் கை சிவக்க சிவக்க 'கிவ் பைவ்' கொடுத்தேன்:(

சரி எல்லாம் முடிச்சுதுன்னு நம்பி எழுந்தா, இன்னு ஒரு அஞ்சி பேரு...அவங்க ஆச தீர எங்கிட்ட 'கிவ் பைவ்' வாங்கிட்டாங்க!

இதெல்லாம் பக்கத்துல நின்னு பார்த்து என் பிரண்ட் ரசிச்சிக்கிட்டிருக்கான்! நான், "டேய் நான் தான் அப்பவே வர மாட்டேன்னு சொன்னனேடா . . . கேட்டியா? ஒரு சிங்கத்த கூட்டியாந்து, சின்னாபின்னமாக்கிட்டியேடா"

Wednesday, August 22, 2007

அரசியல் கூத்து!

நம்ம ஊரு அரசியல்வாதீங்க எல்லாம் சேர்ந்து பேசிகிட்டா எப்படி இருக்கும்? அதுவும் தமி்ழ் சினிமாவுல வர பன்ச் டைலாக்ஸ் யூஸ் பண்ணி பேசினா எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை. இது வெறும் நகைச்சுவைக்காக செய்த கற்பனை தான்.

கலைஞர்: சமீபத்துல லயோலா கல்லூரி நடத்துன கருத்து கணிப்புல எங்க தி.மு.கழகம் தான் முதல் இடத்துல இருக்கு!

ஜெயலலிதா: ஆண்டவன் கெட்டவங்களுக்கு நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான். நல்லவங்கள நிறைய சோதிப்பான் ஆனா கை விட மாட்டான்

கலைஞர்: அப்ப, நீங்க நல்லவரா கெட்டவரா? ஹா ஹா ஹா!

ஜெயலலிதா: லூசாப்பா நீ? இது எப்படி இருக்கு? ஹி ஹி ஹி!

விஜயகாந்த்: நிறுத்துங்க! அரசியலுக்கு வந்தவுடனே பழச மறக்கறீங்க, ஜெயிசிட்டா மக்கள மறந்துட்டு இப்படி சண்டை போட்டுக்கறீங்க!

கலைஞர்: கேக்கறவன் கேனப்பயலா இருந்தா கே.பி. சுந்தராம்பாள் ஆர்.பி.சவுத்ரி படத்துல ஹிரோயினா நடிக்குதுனு சொல்லுவியே!

விஜயகாந்த்: அப்படீன்னா?

கலைஞர்: பழமொழி சொன்னா அனுபவிக்கனும்...ஆராயக்கூடாது...

(ராமதாஸ் உள்ளே வருகிறார்)

ராமதாஸ்: ஷாமீ! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!

விஜயகாந்த்: என்ன? நீங்க வெறும் தாஸா இல்ல லார்ட் லபக் தாஸான்னா?

ராமதாஸ்: ஏய்ய்...வேண்டாம்! புயல் அடிச்சி கூட எழுந்துடலாம், ஆனா இந்த தாஸ் அடிச்சு எழுந்ததா சரித்திரமே இல்ல!

விஜயகாந்த்: நீ அடிச்சா பீஸு, நான் அடிச்சா மாஸு!

ராமதாஸ்: ஏய் மாஸு! உயிருக்கு பயப்படாத என் முன்னாடி நீ தூசு!

விஜயகாந்த்: நான் பார்க்க தான் தூசு! சூடானேன் சுளுக்கெடுத்துடுவேன்!

(கார்த்திக் உள்ளே வருகிறார்)

கார்த்திக்: ஹாய்! ஹாய்! ஹாய்! ஹாய்! ஹாய்!

ஜெயலலிதா: நீ எங்கே வந்த? பட்டது போதாதா?

கார்த்திக்: ஹாய் செல்லம்! அதெல்லாம் நீ ஏன் பேசர? அதெல்லாம் நீ பேச கூடாது!

கலைஞர்: அது!

கார்த்திக்: ஆமாம் விஜய், நீங்க கூட்டணி வைக்க மாட்டேன், வைக்க மாட்டேன்னு அடிக்கடி சொல்றீங்களே, நிஜமாகவா?

விஜயகாந்த்: துளசி கூட வாசம் மாறலாம், ஆனா இந்த விஜய்காந்த் வார்த்தை மாறமட்டான்

ஜெயலலிதா: இப்போ தான கொஞ்ச நாள் முன்னாடி வேற மாதிரி சொன்னீங்க?

விஜயகாந்த்: அது போன மாசம்! அய்ங்!

கார்த்திக்: பனம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு, அதுக்கு ஏன்யா இந்த புனிதமான அரசியல பயன் படுத்தறீங்க?

விஜயகாந்த்: ஹி ஹி ஹி! கார்த்திக் நீ ஒன்னும் காமடி கீமடி பண்ணலயே?

கலைஞர்: ஆட்சி முடியிற நாள் தெரிஞ்சிட்டா, ஆட்சி நடத்துற நாள் நரகமாயிடும். ஸுருட்டரது தாங்க முக்கியம்!

ராமதாஸ்: கார்த்திக், நீங்க எங்க கூட்டணி கட்சியில சேர்ந்துக்கறீங்களா?

கார்த்திக்: என்னது? கூட்டணியா? அய்யோ, ஆளை விடுங்க!

ராமதாஸ்: ஏன்?

கார்த்திக்: கட்சி போனா வரும், உயிர் போனா வருமாங்க?

ஜெயலலிதா ராமதாஸிடம்: நீங்க இப்ப எல்லாம் என் எதிரி கிட்ட நேர்ல பேசறத விட பத்திரிக்கை மூலமா தான் நிறைய பேசறீங்க போல?

ராமதாஸ்: அவங்க ஒரு அறிக்கை விட்டா, நாங்க நூறு அறிக்கை விடுவோம்!

ஜெயலலிதா: அப்போ எதுக்கு அந்த பக்கம் போனீங்க? இங்க வந்து இருக்கலாம்ல?

ராமதாஸ்: நீங்க விரும்புற கட்சிய விட, உங்கள விரும்பற கட்சியில சேர்ந்தா உங்க கட்சி நல்லா இருக்கும்னு ஒருத்தர் சொன்னாரு...

ஜெயலலிதா: சரி இப்போ வாங்க?

ராமதாஸ்: புலி பசிச்சாலும் புள்ள திண்ணாது!

(திருமா உள்ளே வருகிறார்)

திருமா: யாரு அது எங்க கட்சி பேர இழுக்கறது?

ராமதாஸ்: எவன் அவன்?

திருமா: யாரு அடிச்சா பொறி கிளம்பி பூமி் அதிர்றது ஒடம்புல தெரியுமோ அவன்....

கலைஞர்: எந்த மி்ருகத்து பேர சொன்னாலும் நான் தான் நான் தான்னு வந்துடறியே பா, அவரு சொன்னது புலி, சிறுத்தை இல்ல!

ராமதாஸ்: வாங்க திருமா!

கார்த்திக்: ஆமாம் தாஸன்னே, இப்போவெல்லாம் நீங்க இவங்களோட பழைய மாதிரி நட்பா இல்லையே?

ராமதாஸ்: அவரு சினிமாவுல நடிக்க போயிட்டாரு...அதான் கொஞ்சம் ஒதுங்கி இருக்கேன். இல்லனா அப்புறம் சினிமாவ விமர்சனம் பண்ண முடியாதுல்ல?

திருமா: அவருக்கு முன்னாடியே சினிமாவ விமர்சனம் பண்ணி, தமி்ழ காப்பாத்த போராட்டம் பண்ணவங்க நாங்க.

ராமதாஸ்: யாரு முதல்ல ஆரமி்க்கறாங்க என்பது முக்கியம் இல்ல, கடைசியா யாரு முடிக்கறாங்கன்றது தான் முக்கியம்.

கார்த்திக்: எல்லாரும் மக்களுக்கு என்ன நல்லது செய்லாம்னு யோசிச்சா, நீங்க மட்டும் தினமும் ஒரு படம் பார்த்து...அத விமர்சன பண்றதையே பொழப்பா வச்சு இருக்கீங்களே இது சரியா?

ராமதாஸ்: என் வழி தனி வழி!

கார்த்திக்: நீங்க மாறவே மாட்டீங்களா?

ராமதாஸ்: ஆண்டவன் சொல்றான், ராமதாஸ் செய்றான்!

கார்த்திக் கலைஞரிடம்: பார்த்தீங்களா? இவங்க பேச்செல்லாம் கேட்டு நீங்க உங்க பேரனையே வெளிய அனுப்பிட்டீங்களே? தப்பில்லையா?

கலைஞர்: நாலு பேரு நல்லா இருக்கனும்னா, எதுவுமே தப்பில்லை!

கார்த்திக்: யாரு அந்த நாலு பேரு?

(இதை கேட்டுக் கொண்டே வைகோ உள்ளே வருகிறார்)

வைகோ: வேற யாரு? அவரு, அவரோட மகன் ஸ்டாலின், பொன்னு கனிமொழி, இன்னொரு மகன் அழகிரி

கார்த்திக்: இது யாருப்பா?

வைகோ: சொல்லி அடிச்சா கில்லி, சொல்லாம அடிச்சா திருப்பாச்சி, சொல்லியும் சொல்லாம அடிச்சா சிவகாசி...அதான் இந்த வைகோ!

கலைஞர்: தோற்று விட்டு இருக்கற இடமே தெரியாம இருக்க, அப்பவும் புத்தி வரல்லையா?

வைகோ: வாழ்க்கை ஒரு வட்டம், அதுல ஜெயிக்கறவன் தோப்பான் தோக்குறவன் ஜெயிப்பான்.

கார்த்திக்: ஆமாம், ஏன் கலைஞர விட்டுட்டு திடீல்னு போயிட்டீங்க?

கலைஞர்: கிளிக்கு இறக்கை முலைச்சிடுச்சு, அதான் விட்டுட்டு பறந்து போயிடுச்சு!

வைகோ: என்னோட அரசியல் வாழ்க்கையில நான் செஞ்ச பெரிய தப்பே இவங்களோட கூட்டணி வச்சுகிட்டதுதான்...

கார்த்திக்: ஆமா ஆமா, நீங்க ஒழுங்கா ஜெயில்ல இருந்தப்பவே தினமும் உங்க செய்தி பேப்பர்ல வரும்...இப்ப ஒன்னுத்தயும் காணோம்!

கார்த்திக் கலைஞரிடம்: இவரு மனசு மாறி வந்தா, உங்க கட்சியில சேர்த்துக்குவீங்களா?

கலைஞர்: கதம், கதம்!

ஜெயலலிதா: ஹா ஹா ஹா! என்ன விட்டா இப்போ வேற கதி இல்ல அவருக்கு!

கார்த்திக்: நீங்க ஏன், கலைஞர் பேர கேட்டாலே கோவப்படறீங்க? தமி்ழ் நாட்ட தவிர மத்த ஊர்ல எல்லாம், ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் இப்படியா இருக்காங்க?

ஜெயலலிதா: கலைஞர், தமி்ழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த!

கலைஞர்: அதிகமா ஆச படற ஆம்பலையும், அளவுக்கு மீறி கோவப்படற பொம்பலையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல!

கார்த்திக்: சும்மா அதிருதில்ல!

ஜெயலலிதா: ரொம்ப பேசாதீங்க! இன்னைக்கு தோற்றா, நாளைக்கு பால்...சாரி ஆப்பு!

கார்த்திக்: ஆமா ப்ரெசிடென்ட் எலக்ஷன்ல எல்லாரயும் ஓட்டு போட சொல்லிட்டு நீங்க மட்டும் ஏன் போடல?

ஜெயலலிதா: நான் ஒரு வாட்டி முடிவு பன்னிட்டா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்!

விஜயகாந்த்: அவங்க அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

கலைஞர்: என்ன கொடும சேர் இது? இந்த மாதிரி கத்து குட்டிங்களோட அரசியல் பண்றது என் தலை எழுத்து!

விஜயகாந்த்: பிள்ளையாரே பெருச்சாலில போறாராம், பூசாரிக்கு புள்ளட் கேட்குதாம்!

ஜெயலலிதா: ஏன் இப்படி சம்பந்தமே இல்லாம உலர்றீங்க? தண்ணி அடிச்சிட்டு வந்து இருக்கீங்களா?

விஜயகாந்த்: வீனா என் வம்புக்கு வராதீங்க. நான் பிரச்சனை பன்னா தாங்க மாட்டீங்க.

ஜெயலலிதா: நாங்க எல்லாம் பிரச்சனையே பெட்சீட்டா போட்டு படுக்கறவங்க!

கார்த்திக்: விஜய், நீங்க உங்க வரவு செலவு எல்லாம் கணக்கே வச்சுக்கறது இல்லையாமே?

விஜயகாந்த்: கூட்டி கழிச்சு பாரு, கணக்கு சரியா வரும்!

கார்த்திக்: அடங்கப்பா! நீங்க கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்ல மாட்டீங்களா?

விஜயகாந்த்: நான் கேட்டதயும் சொல்லுவேன், கேக்காததயும் சொல்லுவேன்! நான் என்ன சொல்வேன், எப்படி சொல்வேனு யாருக்கும் தெரியாது. ஆனா சொல்ல வேண்டிய நேரத்துல...

கார்த்திக்: கரெக்டா சொதப்புவீங்க!

விஜயகாந்த்: என்னையே கலாய்க்காதீங்க...பாருங்க ராம்தாஸ் சும்மா தான் இருக்காரு!

ராமதாஸ்: என்ன ஏன் இதுல இழுக்கறீங்க? நீங்க அடங்கவே மாட்டீங்களா?

விஜயகாந்த்: நான் அடங்கிப் போறவன் இல்ல, அடக்கிட்டு போறவன்!

கார்த்திக்: அய்யயோ! அதெல்லாம் வேண்டாம்...பாத்ரூம் ப்ரீயாதான் இருக்கு...உடனே போங்க!

விஜயகாந்த் வெளியே போகிறார். இதான் சாக்குனு அனைவரும் எஸ்கேப் ஆகிறார்கள்!

Tuesday, August 21, 2007

Movie Dialogues

இவர்கள் இப்படி சொல்லி இருந்தால்?
(Movie: Nayagan)

கமல் தன் மகளிடம்: நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவுமே தப்பில்லை டா!

கமலின் மகள்: இப்படி சொல்லி சொல்லியே 40 பேருக்கு மேல போட்டு தள்ளியாச்சு. யாருபா அந்த நாலு பேரு?

கமல்: நான், நீ, உன் அண்ணண் அப்புறம்......ஜனகராஜ்!

(Movie: Kreedom)

வில்லன் ராஜ்கிரனிடம்:
ஒரு சாதாரன போலீஸ், நீ என் மேல கைய வசுட்டியா?

ராஜ்கிரன்:
டேய் நாயே! உன் மேல கைய வைக்க ஒரு டாக்டர் இல்ல என்ஜினியரா வருவாங்க?

(Movie: Ramana)

விஜயகாந்த்: தமி்ழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்த, மண்ணிப்பு!

வில்லன்: தமி்ழ்ல உனக்கு வராத ஒரே எழுத்து, "ழ"

(Movie: Dhalapathi)

ரஜினி: ஏன்?

வில்லன்: தேவா!

ரஜினி: அவருக்கு தான் இந்த படத்துல சான்ஸ் தரலியே...அப்புறம் ஏன்?

வில்லன்: போயா லூசு!

(Movie: Pokkiri)

விஜய்: நான் ஒரு தடவை முடிவு பன்னிட்டா, என் பேச்ச நானே கேக்க மாட்டேன்!

வில்லன்: உன் பேச்ச ஒரு நாயும் கேக்காதுன்னு சொன்னாங்க...அது சரி தான் போல!

(Movie: Dharmapuri)

விஜயகாந்த்: நான் அடங்கி போறவன் இல்ல, அடக்கிட்டு போறவன்!

வில்லன்: இப்படி சொல்லி சொல்லியே எங்க காஸ்ட்யும்ஸ்ஸ எல்லாம் நாறடிச்சிட்ட!